Jump to content

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சிறிலங்கா இராணுவத்தினரின் நிர்ப்பந்த்தின் மத்தியிலேயே வாழும் நிலையில் தமிழ் பெண்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றொழித்ததோடு, அகப்பட்ட பெரும் தொகுதி தமிழப்;பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கியள்ளதோடு, இத்தகைய அத்துமீறல்களைப் புரிந்த சிறிலங்காவின் படையினர்  பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு மீண்டும் அச்சுறுத்தலாக தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் பெருமளவில் நிலைகொண்டுள்ளனர். குற்றம் புரிந்த இராணுவத்தினர் சுதந்திரத்துடனும், ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பூரண ஆதரவுடனும் நடமாடுவதைக் காணும் இப்பெண்கள் பயப்பிராந்தியும் அவமான உணர்வும் கொண்ட அவல வாழ்வு வாழ்கிறார்கள்.'

இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றொழித்ததோடு, அகப்பட்ட பெரும் தொகுதி தமிழப்;பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கியள்ளதோடு, இத்தகைய அத்துமீறல்களைப் புரிந்த சிறிலங்காவின் படையினர் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு மீண்டும் அச்சுறுத்தலாக தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் பெருமளவில் நிலைகொண்டுள்ளனர். குற்றம் புரிந்த இராணுவத்தினர் சுதந்திரத்துடனும், ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பூரண ஆதரவுடனும் நடமாடுவதைக் காணும் இப்பெண்கள் பயப்பிராந்தியும் அவமான உணர்வும் கொண்ட அவல வாழ்வு வாழ்கிறார்கள்.'

   

'யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கழிந்தும் குற்றம் புரிந்த ஒரு ராணுவச் சிப்பாய்கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக சிறிலங்கா அரசாங்கமானது இராணுவக் குற்றவாளிகளை காப்பாற்றிக்கொள்வதிலேயே கண்ணும்கருத்துமாய் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் அறிவுறுத்தும் நீதி விசாரணையைக்கூட, சிறிலங்கா அரசாங்கம் இராணுவக் குற்றவாளிகளை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் தட்டிக்கழிக்கிறது மேலும். பாரபட்சமற்ற சுயாதீனத் தகவல்களின்படி ஐந்து பொதுமக்களுக்கு ஒரு ராணுவம் என்ற விகிதத்தில் தமிழர் பிரதேசங்களில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். இது உலகெங்கிலும் காணப்படாத அதிகூடிய ராணுவ அடக்கு முறையைப் பிரதிபலிக்கும் ஒரு இராணுவப் பிரசன்னமாகும்.'

 

tamil-women-in-sri-lanka-070316-600-seit

 

மேலும் அவர் கூறுகையில் 'ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்கள் தமது கணவன்மார் மகள் மகன் என தமது சொந்தங்கள் பலரை சிறிலங்கா படையினரிடம் கையளித்தனர். இன்றுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவுமில்லை எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் பெறமுடியாமலுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் சமீபத்தில் கூறும்போது 'கையளிக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை' என கூறியதுடன் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் எதனையும் தர மறுத்து பாதுகாப்புப்படையினரை பாதுகாத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினார்.'

'கணவனை இழந்த மீளாத்துன்பத்தை சுமந்தவண்ணம் தமது பிள்ளைகளை பராமரிக்கவேண்டிய கடின வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இத்தனைக்கும் மேலாக தமது கணவன்மாரை கொன்ற ராணுவத்தினரின் மிரட்டல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகம்கொடுத்து சுமார் 90,000 கைம்பெண்களின் அவல வாழ்க்கை தொடர்கதையாய் தொடர்கிறது.'

 

tamil-women-in-sri-lanka-070316-600-seit

 

தமது சொந்த வீடுகளிலிருந்து பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பல்லாயிரம் குடும்பங்கள் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பசி பட்டினி ஊட்டச்சத்தின்மை சுகாதார சீர்கேடுகள் என பல குறைபாடுகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். தமக்கென ஒரு ஒதுக்குப்புறம் இல்லாததாலும், பாதுகாப்புப் படையினரின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தாலும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச்சேர்ந்த குறிப்பாக பெண்களும், பெண்பிள்ளைகளுமே இத் துன்பச்சுமைகளினால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் ஆவர். மேலும் இவ்விடம்பெயர்ந்த மக்களிடமிருந்து கைப்பற்றிய காணிகளில் குடியேறியுள்ள பாதுகாப்புப் படையினர் அக்காணிகளின் மூலம் கிடைக்கும் பலாபலன்களை அனுபவிப்பதோடு அங்கு ஆடம்பர, வீடுகள், உல்லாசவிடுதிகள், நீச்சல்தடாகங்கள் என கட்டியுள்ளார்கள்.'

சிறிலங்காவில் புதிதாக பதவிக்கு வந்திருக்கும் அரசாங்கத்தின் ஆட்சியில் குறிப்பாக தமிழ்ப்பெண்கள் பெண்பிள்ளைகளின் தொடர்கதையாகும் மேற்கூறிய இன்னல்களைக் கருத்திலெடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் சர்வதேச சமூகத்தை வேண்டிக்கொண்டார்.

நாதம் ஊடகசேவை

http://www.seithy.com/breifNews.php?newsID=152932&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • இதே பொலுசன் பிரச்சனை தமிழ்  நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.