Jump to content

திரையில் மிளிரும் வரிகள் 1 - காதலும் காமமும்: ஆண்டாள், நம்மாழ்வார், வாலி


Recommended Posts

திரையில் மிளிரும் வரிகள் 1 - காதலும் காமமும்: ஆண்டாள், நம்மாழ்வார், வாலி

 

 
 
ஓவியம்: டாக்டர் ருத்ரன்
ஓவியம்: டாக்டர் ருத்ரன்

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம்தான்

கையோடு நான் அள்ளவோ.

‘தீர்க்க சுமலங்கலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ என்ற பாடலின் அனுபல்லவி வரிகள் இவை. தி. ஜானகிராமனின் ‘இசைப் பயிற்சி’ சிறுகதையில் வரும் மல்லி என்ற கதாபாத்திரம் பவளமல்லி மலரின் காம்புகளைக் கண்ணுறும் போதெல்லாம் தனக்குத் தன்யாசி ராகத்தைப் பாட வேண்டும்போல் தோன்றுகிறது என்று பேசும். இப்பாடலைக் கேட்கையில் மல்லிகைப் பூவை முகர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தவறுவதில்லை.

வான் மேகங்கள்... வெள்ளி ஊஞ்சல்போல்...

திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது

குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி

கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது

என் தேவனே உன் தேவி நான்

இவ்வேளையில் உன் தேவை என்னவோ?

திங்கள் மேனியை மேகம் தாலாட்டும் சுகத்தையும் குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி அனுபவிக்கும் சுகத்தையும் தன்னுடைய நெஞ்சத்தை மஞ்சமாக்கி வழங்குவதற்குக் காதலனை அள்ளிக்கொள்ள அழைக்கிறாள் காதலி. திரைப்பாடல்களில் ஆண்களே பெரும்பாலும் தங்கள் காமத்தை வெளிப்படுத்துவார்கள். இந்தப் பாடலிலோ ஒரு பெண் மனத் தடைகள் ஏதுமின்றித் தன் உணர்வை அழகாக வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. திரைப்படப் பாடல் வரிகள் சட்டெனச் செவ்வியில் கூறுகளைப் பெற்று திக்குமுக்காடச் செய்கின்றன.

வாலியின் வலிமை

பைந்தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்பட்ட கண்ணதாசனால் மட்டுமே ஆழமும் அழகும் கொண்ட பாடல் வரிகளை எழுத முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கண்ணதாசன் திரையுலகில் கோலோச்சிய காலத்திலேயே அவருக்கு இணையான அரியாசனத்தில் அமர்ந்தவர் வாலி. திருவரங்கத்தில் அரங்கராஜனாகப் பிறந்து வாலி என்று பெயர் சூட்டிக்கொண்டு தனக்கு எதிர் நிற்பவர்களின் பலத்தைப் பெற்றுக்கொண்டாரோ என்னவோ, கடைசி காலம் வரை திரையுலகில் வாலியை வீழ்த்த ஆள் இல்லை.

சரணத்தில் வரும் வரிகளான “பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம் மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது” என்று தொடங்குகிறது. காலம் காலமாக ஆணைச் சார்ந்தே பெண்மை உயர்கிறது என்ற பழங்கதை இங்கே மீண்டும் பேசப்படுகிறது.

பாடலைத் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை இசையில் கோர்த்திருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் மல்லிகை மலரின் மணத்தை மூக்கில் நுழைத்து மூளைக்குள் ஏற்றிக் கிறங்க வைக்கிறார். காதலும் காமமும் வெளிப்படும் தன்மையை வாணி ஜெயராமைத் தவிர வேறு யாராவது குரலில் வெளிப்படுத்தியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இந்தப் பாடலில் திருப்பாவை வரிகளின் பாதிப்பு தெரிகிறது.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்

மெத்தன்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்

என்ற பாசுரத்தில் குவலயபீடம் என்ற யானையைக் கொன்று, அதன் தந்தங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிலில், நப்பின்னையின் கொங்கைகளை மெத்தையாகக் கொண்டு சயனித்துக் கிடக்கும் கண்ணனை எழுப்புகிறாள் ஆண்டாள். நப்பின்னையை மணக்க ஏழு எருதுகளைக் கண்ணன் தழுவியதாகப் புராணம். ஆனால் பழைய தமிழ் இலக்கியங்களில் நப்பின்னை என்ற கதாபாத்திரம் இல்லை. அது பின்னால் உருவாக்கப்பட்டது.

“பூசும் சாந்தென் நெஞ்சமே” என்கிறார் பாரங்குசநாயகியாக தன்னை வரித்துக்கொண்டு கண்ணனை நினைத்து உருகும் நம்மாழ்வார். உடலும் உயிரும் இரண்டறக் கலக்கும் ஆலிங்கனத்தை இவ்வளவு அற்புதமாக யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இத்திரைப்படத்தில் நெஞ்சத்தை மஞ்சமாக வழங்குகிறாள் கதாநாயகி.

காலங்கள் மாறினாலும் காதலும் காமமும் வெளிப்படும் விதம் மாறுவதே இல்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/article8227092.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 2: அமுதமும் மோகமுள்ளும்

 

 
archana_2743228f.jpg
 

தி. ஜானகிராமனின் ‘மோகமுள்' நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது இளையராஜா இசையமைத்த ‘சொல்லாயோ வாய் திறந்து' என்ற பாடல் பிரிவின் ஏக்கத்தைப் பாடுகிறது. சண்முகப்பிரியாவின் ரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்துவிட்டார் இசைஞானி. பொதுவாக பக்தியை வெளிப்படுத்தும் பாடலுக்குத்தான் சண்முகப்பிரியாவை எடுத்துக்கொள்வார்கள். அந்த ராகம் பக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்னொரு ராகத்தால் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்களில் காதல் பாடல்கள் சண்முகப்பிரியாவில் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியின் ஒரு வெளிப்பாடுதானே காதலும் காமுமும்.

சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய் திறந்து

நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து

ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை...

மனத்தை ஊஞ்சலோடு ஒப்பிடும் பாடல் வரிகள் ஏற்கெனவே ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் இடம் பெற்றது. ‘ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்' என்று தன்னைக் கைவிட்ட கதாநாயகியைச் சாடுகிறான் கதாநாயகன். ஆனால் மோகமுள் கதாநாயகியின் மனமும் கதாநாயகனின் மனமும் ஒருவரை ஒருவர் தாலாட்டவே ஊஞ்சலாய் அலைந்து மன்றாடுகின்றன.

வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ். ஜானகியும் மலையாளப் பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாரும் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரான அருண்மொழியும் இப்பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அது இடம் பெறவில்லை.

ஆகாய சூரியன் மேற்கினில் சாய

ஏகாந்த வேளையில் மோகமுள் பாய

தூண்டிலில் புழுவாக திருமேனி வாட

தாமதம் இனி ஏனோ இருமேனி கூட

அந்தி வரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்

என்று வரும் இன்ப சுகம் ஊன் உருகும் உருகும் தினம்

நாள் முழுதும் ஓர் பொழுதும் உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்.

சொல்லாயோ வாய் திறந்து

moham_2743227a.jpg

அழகு கொட்டிக் கிடக்கும் இளம் பெண் தங்கம்மாவின் கதறலே இவ்வரிகள். வறுமையின் காரணமாகக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவனோ வாயில் சளுவாய் ஒழுக உறங்கிக்கொண்டிருக்கிறான். கதாநாயகன் பாபு ஏற்கெனவே அவளோடு உறவு கொண்டிருந்தாலும், தற்போது அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விலகி நிற்கிறான். அவன் மனமோ யமுனாவை நினைத்து “சொல்லாயோ வாய் திறந்து” எனப் பாடுகிறது.

‘மாலையும் வந்தது மாயன் வாரான்' என்கிறார் பராங்குசநாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார். பிரிந்திருக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையின் எல்லா சிறந்த விஷயங்களுமே துயரத்தையே தருகின்றன. மாயன் வராததால் மாலை வந்ததற்கான அறிகுறிகளாக பசுக்களும் காளையும் அணைந்து நடக்கையில் தோன்றும் மணி ஓசையும் குழலோசையும், மல்லிகை முல்லை மலர்களில் தேனுண்ட வண்டுகளில் ரீங்காரமும் கடல் ஓதத்தின் ஒலியும் பாரங்குசநாயகிக்குப் பிறிவாற்றாமையை மேலிடச் செய்கின்றன.

தங்கம்மாவோ மோகமுள் தைத்துக் கிடக்கிறாள். தூண்டிற் புழுவைப் போல் துடிக்கிறாள். காதலனின் உருவமும் ஞாபகமும் எந்நேரமும் அவள் நினைவில் அப்பிக் கிடக்கின்றன.

நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவை

பாட

ஏழையை விடலாமோ இதுபோல வாட

வெள்ளிநிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்

நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

ஓர் இதயம் உன்னால் எழுதும் இந்நேரத்தில் கண்ணா உன் மவுனத்தை தவிர்த்து

சொல்லாயோ வாய் திறந்து

பார்வை

 

 

யால் தூது விட்டு விட்டு ஓய்ந்துபோய், “நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட” என்று கேட்கிறாள். கிணற்றில் இருந்து தண்ணீரை இரைத்துத் தன் மேல் ஊற்றிக்கொண்டு காமத்தைத் தணிக்கப்பார்க்கிறாள். கடைசியில் ஊர்க்குளத்தில் அவள் உடல் மிதக்கிறது. அம்பின் வாய் பட்டுத் துடிப்பவர்களைப் போல் காதல் அதன் வயப்பட்டவர்களை வதைக்கிறது. இந்த வேதனை ஆண்டாளுக்கும் உண்டு. அவள் வாயாலே இப்படிக் கூறுகிறாள்:

ஆரே உலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்

காரேறுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும்

கிடப்பேனை

ஆராவமுத மனையான் தன் அமுத வாயிலூறிய

நீர்தான்

கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை

நீக்கிரே

ஆயர்பாடி முழுவதும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற கறுத்த எருது போன்ற கண்ணன் மீது காதல் கொண்டு துன்பப்பட்டுக் கிடப்பதாகப் புலம்புகிறாள் ஆண்டாள். ஏங்கி ஏங்கித் தளர்ந்து முறிந்து கிடக்கும் அவள் இடும்பையைத் தீர்க்க யார் இருக்கிறார்கள்? அதனால் அவளே அதற்கான மருந்தையும் சொல்கிறாள். உண்ண உண்ணத் திகட்டாத அமுதமாகிய ஆராவமுதனின் வாயில் ஊறிய அமுதத்தை எடுத்து வந்து, அது உலர்வதற்கு முன்னதாகவே கொண்டு வந்து பருகக் கொடுத்தால் அவளுடைய வலி அகலுமாம்.

ஒருவேளை கண்ணன் வாயமுது கிடைக்கவில்லையென்றால் அவன் ஊதும் வேய்ங்குழலின் துளையில் ஒழுகும் நீரைக் கொண்டுவந்தாவது முகத்தில் தெளியுங்கள் என்கிறாள் இன்னொரு பாசுரத்தில்.

ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் திருவாய்மொழியோ நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8256961.ece

 

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 3 - யாரிடம் சென்று முறையிடுவது?

 
thaarai_2752448f.jpg
 

பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தின் கதாநாயகியின் பெயர் சூறாவளி. கரகாட்டக்காரியான அவளுடைய காலில் ஆணி குத்தி குருதி பெருக்கெடுத்தோடி நடக்க முடியாத நிலையிலும் சூறாவளி போல் வெறி கொண்டு ஆடிக் கீழே சாய்கிறாள்.

“முதல்ல எம் மாமன சாப்பிட வை. அதுக்கு பசிண்ணு வந்தா நான் அம்மணமாகக்கூட ஆடுவேன்” என்கிறாள். அவளைத் தூக்கிச் சுமக்கிறான் கதாநாயகன் சன்னாசி. பின்னணியில் “பாருருவாய பிறப்பற வேண்டும்.” என்ற திருவாசகப் பதிகம் மாயாமாளவகௌளையில் பெண் குரலில் ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து “பத்திலனேனும் பணிந்தலனேனும்” பதிகம் ஆண் குரலில்.

சூறாவளிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. திருமணத்தின்போது மீண்டும் அதே இரண்டு பதிகங்கள். ஆனால், முதலில் ஆண் குரல். அடுத்த பதிகம் பெண் குரலில்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். சூறாவளியின் கண்களில் தாரையாப் பெருகும் நீரைக் கண்டதும் சன்னாசியின் முகத்தில் வடிந்தோடும் கண்ணீர் ஒரு கணம் பார்வையாளர்களை உலுக்கிவிடுகிறது. திரைப்படக் காட்சிப்படுத்தலின் வலிமையா அல்லது திருவாசக வரிகளின் வலிமையா என்பதை நம்மால் பிரித்தறிய முடியவில்லை. தெரிந்தேதான் திருவாசகத்தை இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. ‘தாரை தப்பட்டை’ அவருடைய ஆயிரமாவது திரைப்படம்.

இசையும் பாடலும் ஒருபுறமிருக்க, தி. ஜானகிராமனின் ‘செய்தி’ வண்ணநிலவனின் ‘ஆடியபாதம்’ ஆகிய சிறுகதைகளைப் படித்தவர்களுக்கு பாலாவின் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எளிது.

செவ்வியல் இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் இடையில் தொடர்ந்து நடக்கும் முரண்களை, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மூலமாகக் கச்சிதமாகக் கதையாக்கியிருக்கும் ஜானகிராமன் இறுதியில் செவ்வியல் இசையின் மேன்மையைச் செய்தியாக்கி முடித்திருப்பார்.

‘ஆடியபாதம்’ முழுக்க முழுக்க நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் ஒன்றாகக் கரகம் ஆடி ஓய்ந்துபோன மரகதமும் சிதம்பரமும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்வான கதை. வறுமையை மட்டுமே இருவரும் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்.

கர்நாடக இசை செழித்து வளர்ந்த தஞ்சைத் தரணியின் வடக்கு வீதியிலும் இன்னும் சில பகுதிகளிலும் ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கிறார்கள். தெருக்களின் ஓரங்கள் முழுவதும் அவர்களின் விளம்பரப் பலகைகள் காணப்படும். ‘தாரை தப்பட்டை’யின் களமும் அதுதான்.

திரைப்படத்தில் இளையராஜா பயன்படுத்திருக்கும் இரண்டு பதிகங்களுமே எண்ணப்பதிகத்தின் கீழ் வருகின்றன. மாணிக்கவாசகர் நாயகி பாவத்திலேயே இப்பதிகங்களைச் செய்து அருளியிருக்கிறார்.

திருவாசகத்துக்கு உரையெழுதிய திருவாவடுதுறை ஆதின வித்வான் ச. தண்டபாணி தேசிகர், “ ‘பாருருவாய பிறப்பற வேண்டும்’ பதிகத்தின் உட்கிடக்கை என்னவென்றால், ‘உன் மெய்யடியார்கள் கூட்டத்தின் நடுவே ஓருருவாக விளங்கும் நின் திருவருளைக் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளவாயாக’ என்பதுதான்” என்கிறார்.

சன்னாசியும் சூறாவளியும் ஒரு குழுவாகத்தான் இருக்கிறார்கள். பச்சை பச்சையாக, இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசுகிறாள் சூறாவளி. பொதுவாகவே கரகாட்டம் ஆடுபவர்கள் பாடுவதும் பேசுவதும் பெரும்பாலும் இரட்டை அர்த்தம் தொனிக்கத்தான் இருக்கும். அவள் தன் உட்கிடக்கையைப் பலமுறை தெரிவித்தும் சன்னாசி கண்டுகொள்ளவில்லை. காலில் காயத்தோடு ஆடிச் சாயும் தருணம் அவளின் காதலை அவன் உணர்ந்துகொள்வதற்கு வகை செய்கிறது. “என்னையும் உய்யக் கொண்டருளே” என மாணிக்கவாசகர் கதறுவது இக்காட்சிக்குப் பொருந்திவருகிறது.

raja_2752449a.jpg

ஆடிப் பிழைப்பதற்காக அந்தமான் வந்த சன்னாசியும் அவன் குழுவினரும் படும் பாட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்பிறவியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று எல்லா மனிதர்களுமே இப்பதிகத்தையே பாடுவார்கள்.

இரண்டாவது பதிகத்தில் “யான் தொடர்ந்துன்னை இனிப்பிறிந்தாற்றேனே” என்கிறார் அடிகள். காதலனைப் பிரிந்து வேறொருனைத் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண் வேறு எதை வேண்டுவாள்? “முதல்வனே இது முறையோ” என்கிறார் மாணிக்கவாசகர். இப்பிறவியில் இனியொரு மானுடனைச் சிந்தையாலும் தொடேன் என்று கங்கணம் கட்டியிருக்கும் சூறாவளியை, வேறொருவனுக்குக் கட்டிவைத்தால் அவள் வேறு யாரிடம் முறையிடுவாள்?

படத்தின் தொடக்கத்திலேயே கிளிக்கண்ணியில் தொடங்கி அப்படியே ‘தாரை தப்பட்டை’ முழக்கத்துக்கு இசையை நகர்த்தும் இளையராஜா, படம் முழுக்க செவ்வியல் இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் பாலம் அமைக்கிறார். இருப்பினும் அவர் இசையில் ஒலிக்கும் திருவாசகப் பதிகங்கள் பக்தி இலக்கியத்தின் கூறுகளை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அதுவும் மாயாமாளகௌளையில் இதுவரை அவர் புரிந்திருக்கும் ஜாலங்களுக்கு (பூங்கதவே தாழ் திறவாய், மருதமரிக்கொழுந்து வாசம், காதல் கவிதைகள் படித்திடும் நேரம், மாசறு பொன்னே வருக, அந்தப்புரத்தில் ஒரு மகராணி) மேலாகவே இப்பதிகங்கள் விளங்குகின்றன. திருவாசகத்தில் இன்னொரு பதிகமான “தந்தது உன்தன்னையில்” “யான் இதற்கு இலனோர் கைம்மாறே” என்கிறார் மாணிக்கவாசகர்.

இளையராஜாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/article8284869.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 4 - வெற்றிலை, கிளியாய்ப் பறக்கும் அதிசயம்!

 

 
sivaji_2762116f.jpg
 

தூதுக்குத் தமிழிலக்கியத்தில் தனி இடம் உண்டு. காதல் வயப்பட்ட இருவர் பிரிந்திருக்கும் வேளையில் அல்லது பிரிக்கப்பட்டிருக்கும் வேளையில் தூதுவர்கள் மூலமாகப் பேசிக்கொள்கிறார்கள். தோழியும் விறலியும் மானும் மயிலும் கிளியும் மேகமும் நதியும் செந்நாரையும் குயிலும் அலையும் தூதுவர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“திருத்தாய் செம்போத்தே” என்று திருமங்கையாழ்வார் செண்பகம் என்னும் செம்போத்துப் பறவையைத் தூது விடுகிறார். பல்லிக் குட்டி, காகம், குயில் ஆகியவற்றையும் தூதுவர்களாக்கி அழகிய மணவாளனிடம் பேசுகிறார்.

நாயகன்-நாயகி பாவங்களில் வெளிப்படும் தூது, அகத்துறை இலக்கியங்களில் தாராளமாகக் காணக் கிடக்கின்றன.

“பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்” என்று சுந்தரரும் திருவாரூர் தியாகேசனுக்கு தூது விடுகிறார்.

“பொன்னுலகாளிரோ புவனிமுழுதாளிரோ” என்று புள்ளினங்களை விளித்துத் தன் நிலையை உரைக்கச் சொல்கிறார் நம்மாழ்வார்.

“பழம்படு பனையின் கிழங்குப் பிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால்நாராய்” என்று கையைக் கொண்டு மெய் போர்த்தி வாடையில் வாடி வதங்கும் சத்திமுத்துப் புலவர் தன் மனைவிக்கு நாரையைத் தூது விடுகிறார்.

காலம் காலமாகத் தொடரும் இந்த இலக்கியத் தூதின் தொடர்ச்சியாகத்தான் “நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களே துள்ளி வரும் முத்துக் கிள்ளைகளே” என்ற பாடலை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தமிழகத்தில் பிரிவுத் துயரால் தவிக்கும் அத்தனை காதலர்களும் மனதுக்குள் இப்பாடலைத்தான் பாடிக் கொண்டிருந்தார்கள்.

“பச்சை வண்ண வெற்றிலை போல் பறந்தோடும்போது பார்ப்பதற்கு வெற்றிலையில் சொன்னால் என்ன தூது?” என்று பொன்னூஞ்சல் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய வரிகள் காலங்காலமாக மனதில் நிற்கும் படிமம்.

இன்றும் திருவில்லிபுத்தூரில் ஆண்டாளின் தோளில் அமரும் கிளிகளை வெற்றிலையைக் கொண்டே உருவாக்குகிறார்கள். அந்த வெற்றிலைகள் கிளிகளாவே மாற்றம் கொண்டு பறக்கும் காட்சி கண்ணதாசனின் மனத்திரையில் விரிகிறது. வெற்றிலை கிளியாவும் கிளி வெற்றிலையாகவும் மாறி மாறி உருக்கொள்வதால், வெற்றிலையில் சேதி சொல்லச் சொல்கிறார்.

அடுத்து வெள்ளத்தைத் தூது விடுகிறான் காதலன்.

“வெள்ளம் ஓடட்டும். பெண்ணிடம் கூறட்டும்.

உள்ளம் வேலிக்கட்டைத் தாண்டி வந்து பூவாகட்டும்.

அந்த மேகங்கள் பாடும் ராகங்கள் வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்”

உடனே கதாநாயகி வயல் வரப்பில் பூத்திருக்கும் மலரை எடுத்துத் தலையில் சூடிக்கொள்கிறாள். கதாநாயகன் அதே போல் ஒரு மலரை எடுத்து மார்பில் சேர்த்துக்கொள்கிறான். இதயங்கள் மலர்களாகின்றன. மிகச் சிறந்த வரிகள் தொடர்ந்து வருகின்றன.

“மஞ்சளுக்கு நாற்று வைத்தால் மணக்காதோ இங்கே மௌனத்திலே சேதி சொன்னால் புரியாதோ அங்கே”

பூவின் மணத்தை வேலி போட்டுத் தடுக்க முடியுமா? புதிதாக நடப்பட்டிருக்கும் மஞ்சள் நாற்றுகள் காற்றில் கலந்து நிற்கின்றன. “முகராதே” என்று யாரைத் தடுக்க முடியும்? ஆயிரம் வார்த்தைகளை விடவும் மௌனம் பொருள் பொதிந்ததன்றோ?. காதலர்கள் மௌனமாய் நின்று கண்களால் சேதி சொல்கையில் பெற்றோர் என்ன ஒற்றனை அனுப்பியா கண்டறிய முடியும்?

தொடர்ந்து பாடும் கதாநாயகி, “தங்க மீன்களே தாமரைப் பூவிலே பொங்கும் தேனுண்டு என்பதை நீவீர் அறிவீர்களோ? அந்தப் பொன் வண்டு இந்தப் பூக்கண்டு இன்பத் தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ?” என்று வினவுகிறாள்.

msv_2762117a.jpg

“தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்

வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்”

என்ற விவேக சிந்தாமணி பாடலை இங்கே நினைவுகூரலாம். தாமரையோடு தடாகத்தில் கிடந்தாலும் தவளைக்கோ மீனுக்கோ தேனின் சுவை தெரியாது. எங்கோ இருக்கும் வண்டுதான் தேன் உண்கிறது. தேனெடுக்கத் தலைவன் வரும் நாளை அவள் எதிர்பார்க்கிறாள்.

அத்துடன் “பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம். பக்கத்திலே நீயிருந்து பறிமாறு கொஞ்சம்” என்ற சுற்றத்தாரின் எண்ணங்களையும் தெளிவுபடுத்துகிறாள்.

எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் இப்பாடல் இன்னவென்று புரிய முடியாத ஒரு உணர்வுகளைக் கேட்பவர்கள் மனதில் உருவாக்குகிறது. குறிப்பாக “ஹோ ஹோ” என்ற கதாநாயகி பாடும் ஹம்மிங் பாடலை வேறொரு தளத்துக்கு உயர்த்துகிறது. பாடுவது டி.எம். சௌந்தர்ராஜனா அல்லது சிவாஜி கணேசனா என்று பிரித்தறிய முடியவில்லை. சுசிலாவின் குரலும் கதாநாயகியான உஷா நந்தினியின் பாவங்களும் அப்படியே.

அதிலும் “பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்” என்ற பாடிக் கொண்டே மனதின் ஏக்கத்தைப் பெருமூச்சு விட்டு வெளிப்படுத்தும் காட்சி, பிரிவால் துயருறும் எல்லாக் காதலர்களின் பெருமூச்சாகவே நம்மைச் சுடுகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8310504.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 5 - ஆசையெனும் தொட்டிலில் ஆடும் மனம்

 
sivaji_2770632f.jpg
 

ஆசையே இந்த உலகத்திலுள்ள துயர்கள் அனைத்துக்கும் காரணம் என்றார் புத்தர். “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசேனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்” என்கிறார் திருமூலர்.

“போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து” என்பது தமிழர் வாழ்வியல் சிந்தனையின் வெளிப்பாடு.

இருப்பினும் ஆசைகளற்ற சமூகம் அடுத்த படிக்கட்டை நோக்கி முன்னேறாது என்பதுதான் உண்மை. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்திப்பட வேண்டும் என்று மனித சமூகம் முடிவு கட்டியிருந்தால் எந்த வளர்ச்சியையும் எட்டிப் பிடித்திருக்க முடியாது. அறிவைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையை வேண்டாம் என்று யாராவது சொல்ல முடியுமா?

இராமாயணத்தைப் பாடுவதற்கு முற்பட்ட கம்பன் தன்னுடைய ஆசையை ‘ஒரு பூசை நக்குபு புக்கென ஆசைபற்றி அலையலுற்றேன்’ என்கிறான். பாற்கடலை உற்றுப் பார்த்த பூனை அதை நக்கி நக்கிக் குடிக்கப்பார்த்த நிலைதான் தன்னுடைய நிலையும் என்கிறது கம்பன் பாடல். கம்பனின் ஆசை மேலிட்டதால்தானே கம்பராமாயணம் தமிழர்களின் சொத்தானது. இருப்பினும் ஆசையும் துயரமும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் மனிதனை அலைக்கழிக்கின்றன.

‘அவன்தான் மனிதன்’ திரைப்படத்தில் “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா; ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு தெருவுக்கு வந்த கதாநாயகன் சிவாஜி கணேசன் பாடுவது போன்ற இப்பாடல் ஒரு தத்துவமாகவே அமைந்துவிட்டது. ஆசை ஆட்டி வைக்கிறது. அதனால் அதைத் தொட்டில் என்கிறார் கண்ணதாசன்.

எல்லாம் அவன் செயல்; நம் கையில் என்ன இருக்கிறது என்று நம்புபவர்கள் தங்களை ஆட்டி வைப்பது இறைவன்தான் என்கிறார்கள்.

அதனால்தான் திருநாவுக்கரசர்,

‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே’

என்று பாடினார்.

அவர் வழியொற்றியே அருட்பிரகாச வள்ளலாரும்,

‘பாட்டுவித்தால் பாடுகின்றேன்

பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்

குழைகின்றேன் குறித்த ஊணை

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்

உறங்குகின்றேன் உறங்கா தென்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே’

என்று தன் செயல்கள் எல்லாவற்றுக்கும் இறைவனையே பொறுப்பாக்குகிறார்.

சைவ மரபில் வந்த இப்பாடல்கள் கண்ணதாசனிடம் வேறொரு வடிவம் பெறுகின்றன. கண்ணனைக் கைகாட்டி,

‘நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு.

என் நிழலில்கூட அனுபவத்தின் சோகம் உண்டு.

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே.

ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே’

என்று அழுகிறார்.

சிவாஜி கணேசனின் பாத்திரம் மகாபாரத கர்ணனுக்கு நிகரானது. பாசத்தையும் நட்பையும் அறுக்க முடியாமல்தானே கர்ணன் வீழ்ந்தான். துரியோதன நட்பும் அவனை செஞ்சோற்றுக் கடனாளியாக்கியது.

‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்

அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்

நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...

என்று போகிறது பாடல். கொடுத்தே பழக்கப்பட்டவன் கர்ணன். உடலோடு ஓட்டிப் பிறந்த கவசத்தையும் காதில் கிடந்த குண்டலத்தையும் குருதி சொட்டச் சொட்ட அறுத்து இந்திரனிடம் கொடுத்துவிட்டுத் துன்பத்தை அனுபவித்தவன். அவன் யாரிடம் சென்று யாசகம் கேட்க முடியும்? நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளத்தையே அவன் கேட்கிறான். அதனால்தானே கிருஷ்ணனே அவனிடம் சென்று யாசகம் கேட்டு அவனை உயர்த்துகிறான்.

எல்லாவற்றையும் இழந்தாலும் அந்த மனம் துயரப்படவில்லை. அந்த நிலையில்தான்,

‘கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

அதை உணர்ந்துகொண்டேன் துன்பம்

எல்லாம் மறையும் கண்ணா’

என்று பாடுகிறான்.

மனமே மனித வாழ்வின் இன்ப துன்பங்களைத் தீர்மானிக்கிறது. தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுக்கொண்டு சஞ்சலம் கொள்கிறது. பெரிதாக ஆசைப்பட்டு ஏங்குகிறது.

அதைக் கட்டுப்படுத்திவிட்டால் துயரம் பறந்தோடுகிறது. சிவபெருமான் கையில் மானை வைத்திருப்பதன் தத்துவமே ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்தி வைப்பதைக் காட்டுவதுதான். ஆசைக்கு அடிமைப்படும் மனம் அமைதிக்காகவும் அலைகிறது. ஆசையை அளவோடும் மனதைத் தன் கட்டிலும் வைத்திருக்கும் மனிதனே மாமனிதனாகிறான்.

msv_2770633a.jpg

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8340579.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரையில் மிளிரும் வரிகள் 6 - டோலக்கும் நதியலையும்

 

 
mgr_2779593f.jpg
 

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நன்னுமியான் சோட்டுமியான் ஆகிய இருவரின் கச்சேரி. டோலக் வாசிப்பதில் இவர்கள் இருவரும் நிகரற்றவர்கள். பாடிக்கொண்டே அவர்கள் வாசித்த முறை சமஸ்தானத்தில் இருந்த அனைவரையும் கட்டிப்போட்டது. ஆனால், லாந்தர் விளக்கைத் துடைக்கும் மாண்பூண்டியா பிள்ளைக்குள் அவர்களின் இசை பெரும் பிரவாகத்தை ஏற்படுத்தியது. அவர் “ஆஹா” என்று தன்னையும் மீறிக் கத்தினார்.

“லாந்தர்க்கார வித்வான் பார்த்தீரா” என்று ஒருவர் கூற அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. இந்த நிகழ்ச்சியை மிருதங்க வித்வான் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லலிதாராம் விரிவாக எழுதி யுள்ளார். இப்படி அவமானப்பட்ட மான்பூண்டியா பிள்ளை அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மாரியப்பத் தவில்காரரிடம் கற்க ஆரம்பித்தார். அந்த வாத்தியத்தில் தனது திறமையை மான்பூண்டியா பிள்ளை வளர்த்துக்கொண்டாலும், அவருக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்ற சந்தேகம் மாரியப்பத் தவில்காரருக்கு இருந்தது. ஆகவே மான்பூண்டியா பிள்ளையிடம் வேறு ஏதாவது தாள வாத்தியத்தை வாசிக்க அறிவுறுத்தினார். ஏற்கெனவே டேப் வாசித்துப் பழக்கப்பட்டிருந்த மான்பூண்டியா பிள்ளை உடும்புத் தோல் போர்த்திய கஞ்சிராவை உருவாக்கினார். இப்படி கர்நாடக இசைக் கச்சேரிக்கு ஒரு புது வாத்தியத்தை அளித்த பெருமை டோலக்குக்கு உண்டு.

அந்த டோலக்கைச் சிறப்பாகப் பயன்படுத்திப் போடப்பட்ட பாடல்தான் ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தில் வரும் “போய் வா நதியலையே, இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா”.

இந்தப் படத்தில் எல்லாமே புதுமை. பாடலை எழுதியவர் புதுக்கவிதை உலகில் தடம்பதித்து ‘கருப்பு மலர்கள்’ எழுதிய நா. காமராசன். எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலத்தில் அவர் அறிமுகம் செய்த பாடலாசிரியர்களில் காமராசனும் ஒருவர். பாடலைப் பாடியவர் டி.கே. கலா. குழந்தையாய் இருந்தபோதே, ‘தாயில் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று அகத்தியர் படத்தில் இடம் பெற்ற பாடலைப் பாடியவர்.

காமராசன் குறித்து விவரமாக எழுதியுள்ள கவிஞர் மகுடேஸ்வரன், மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு என்கிறார்.

அத்துடன் கவிஞனுக்கே உரிய கவுரவத்தோடு, தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக காமராசன் நின்றுகொண்டதாக மகுடேஸ்வரன் தெரிவிக்கிறார். திரைத்துறை அனுபவங்கள் அவருக்குக் கசப்பையே அளித்தன. ஆதனால்தான், ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்றார்.

காமராசனின் முதல் படம் ‘நீதிக்குத் தலைவணங்கு’. ‘கனவுகளே ஆயிரம் கனவுகளே’, ‘போய்வா நதியலையே’, ‘விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்’, ‘ஓ மானே மானே உன்னைத்தானே’, ‘மந்திரப் புன்னகையோ’ என்ற பல அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார்.

‘போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா’ பாடல் நடிகை லதா கனவு காணும் காட்சியாய் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதே நதியலையை வா வா என்று அழைத்து ‘ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா’ என்கிறார்.

அனுபல்லவியில் வரும் ‘கனி தூங்கும் தோட்டம் முகம் பூத்தக் கோலம்’ என்ற வரிகளில் வரும் காட்சியில் அன்றைய இளைஞர்களை தூக்கம் இழக்கச் செய்யும் அழகுடன் தோன்றுவார் லதா. தொடர்ந்து ‘பனிவாடை காண உனைக் காண வேண்டும்’ என்ற வரிகள் ஒலிக்கின்றன.

‘நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம் மழைக்கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்’ என்று கூந்தலில் முகம் புதைக்கிறார் எம்.ஜி.ஆர். ‘இதுபோதும் என்று தடுமாறி இடம் மாறி மாறி சுகம் தேடி’ என்று இருவரும் காதலில் கிறங்கிப்போய், உறவாடும்போது ‘சரிபாதியாகி உயிர் காணும் இன்பம் பல கோடி’ என்கிறார்கள்.

எம்பெருமானது சேர்க்கையால் இன்பம் எய்திய பராங்குச நாயகியாகிய நம்மாழ்வாரும், ‘உன்னது என்னதாவியும் என்னதுன்னதாவியும் இன்ன வண்ணமே நின்றாய்’ என்கிறார். இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாகி சரிபாதியாகக் கலந்து நிற்கும் நிலை.

‘நுரைப்பூவை அள்ளி அலைசிந்த வேண்டும். அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும். வசந்தத்தை வென்று வரும் உன்னைக் கண்டு, மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்’.

நுரையைப் பூவாய் வருணிக்கிறார் கவிஞர். இருப்பினும் வசந்த காலத்தை விடச் சிறந்தவளான காதலியைக் கண்டுதான் வானவில்லின் நிறத்தை வானம் தேர்ந்தெடுத்ததாம். கவிதைக்கு எப்போதுமே பொய் அழகைத் தருகிறது.

“மெதுவாக வந்து இதழ் மூடி, பதமாக அன்பு நதியோடி, மணமேடை கண்டு, புதுமாலை சூடி குலமங்கை வாழ்க நலம்பாடி.” கள் வெறி கொள்ளும் முத்தம் கேட்கவில்லை. சத்தமில்லாமல் வேண்டும் என்கிறார் கவிஞர். டோலக் மட்டும் சத்தமாய்க் கேட்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8369896.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 7 - காதலை அறிவிக்கும் காலடியோசை

gemini_2788465f.jpg
 

கும்பகோணம் வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் இசைத் துறையிலும் பெருந்தடம் பதித்தவர்கள் குடந்தையின் தெருக்களில் உலவினார்கள். பேராசிரியரும் எழுத்தாளருமான இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்து இது குறித்து உரையாடினேன். கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்தவர் தி. ஜானகிராமன்.

ஒருமுறை அவரைச் சந்திப்பதற்காக மகாமகக் குளக்கரைக்குச் சென்றபோது அங்கே கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் எழுதி வந்த நாராயணசாமி, “ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் பாடலை விளக்கி்க்கொண்டிருந்தாரம். வடமொழியில் பெரும்புலமை பெற்று, காளிதாசனின் படைப்புகளையெல்லாம் கசடறக் கற்றிருந்த கரிச்சான் குஞ்சு, “பாரதி பாடலின் வரிகளுக்கு நிகரான வரியை இதுவரை படித்ததில்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தாராம்.

“பாங்கினிற் கையிரண்டும் தீண்டி அறிந்தேன்.

பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்,

ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;

ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்”.

கடலை நோக்கி அமர்ந்திருக்கும் காதலன் காதலியின் கையைத் தீண்டியும் அவள் உடுத்திருக்கும் பட்டுப் புடவையின் மணத்தை முகர்ந்தும் அவன் உள்ளத்தில் பெருகும் மகிழ்ச்சியையும் கொண்டு அவள் வருகையை அறிகின்றான். ஆனால் அதையெல்லாவற்றையும் விட அவள் வந்ததுமே அவனுடைய இதயமும் ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கிறது. இந்த உணர்வைக் கொண்டே காதலி வருகையை அறிந்துவிடுகிறான்.

இந்த வரிகள்தான் பின்னாளில் கண்ணதாசனின் கைவண்ணத்தில், “உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” என்று வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் வெளிப்பட்டது எனலாம். பாடலின் வரிகள், “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று தொடங்கும்.

தமிழ்த் திரைப்பட உலகில் வில்லன்கள் வரிசையில் தனக்கென ஒரு பாணியை வகுத்திருந்த கே.ஏ.அசோகன்தான் காதலர்களின் இந்த தேசிய கீதத்தைப் பாடும் காட்சியில் தோன்றினார் என்பது முக்கியமான விஷயம். இப்பாடலுக்கு இசையமைத்தவர் வேதா. பல இந்திப் பாடல் மெட்டுகளை அப்படியே தமிழில் மாற்றித் தந்தவர் இவர்.

“வெற்றிப் பாடல்களைக் காப்பியடித்து ஜெயம் பெறலாம் என்பதே சினிமாக்காரர்களின் கொள்கை. இதற்குப் பலியானார் வேதா. ஆனால் பாட்டுக்காரனின் கனவைப் பார்த்திபன் கனவில் படரவிட்டார். வல்லவன் படங்களில், இந்தி மெட்டுகளையே தமிழில் வாழும்படி செய்துவிடுவதில் தான் வல்லவர் என்று காட்டினார். இளம் வயதில் காலமானாலும் மக்கள் செவிகளில் இன்றும் கானமாக வலம் வருகிறார்” என்று ‘திரை இசை அலைகள்’ புத்தகத்தில் வேதா குறித்து எழுதியிருக்கிறார் திரைத்துறை ஆய்வாளர் வாமனன்.

“நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்

உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை”

என்று டி.எம். சௌந்தரராஜன் தொகையறா வரிகளை ஓங்கி உச்சரிக்கையில் உலகமெங்கும் இருக்கும் காதல்களின் உள்ளங்களில் அது எதிரொலிக்கிறது. அதிலும் இரவின் அமைதியில் தூக்கத்தைத் தொலைத்துக் கிடக்கும் காதலர்களை மயிலிறகால் வருடுகிறது இப்பாடல்.

காதல்வயப்பட்டுக் கிடப்பவர்கள் எல்லோருமே எல்லாப் பிறவிகளிலுமே ஒன்றாவே இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்கிறார்கள். பக்தி இலக்கியங்களிலும் இக்கருத்து உண்டு.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்”

என்று நம்மாழ்வார் வேண்டுகிறார்.

“எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்”

என்று திருப்பாவையில் ஆண்டாள் சொல்கிறாள். அவளே நாச்சியார் திருமொழியில்

“இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி”

என்கிறாள். பக்தியின் இன்னொரு வடிவம்தானே காதல். அதனால்தான் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் சைவ சமயக் குரவர்களும் நாயகி பாவம் கொண்டு ஆண்டவனை அடைய நினைக்கிறார்கள்.

“இந்த மானிடர் காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்”

ஆணவக் கொலைகள் நடக்கும் காலம் இது. மனித மனங்கள் இணைந்தாலும் மனிதர்கள் அவர்களை வாழ விடுவதில்லை. ஆகவே நிரந்தரத் தன்மையற்ற மானுடக் காதலையும் மலர்களின் வாசனையையும் ஒதுக்கித் தள்ளுகிறான் கவிஞன்.

“இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களைத் தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையில்

ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்.

Obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்த வரிகளைப் பொருத்திக்கொள்ளலாம். தலைவன் நினைவு முழுவதையும் காதலியே ஆக்கிமித்துக் கிடக்கிறாள். உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி அவளின் பூமுகத்தைக் காண்கிறான். காதல் உணர்வின் உச்சம் என்று இதைச் சொல்லலாமா?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/article8396168.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 8 - காதல் கீதமா, குழந்தைப் பாடலா?

 
 
மணமகள்
மணமகள்

பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் காலங்காலமாக இடம் பெற்றுவந்தாலும் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலுக்கு இணையான புகழை வேறு எந்தப் பாடலும் பெற்றுவிடவில்லை எனலாம். இசையறிவு இல்லாதவர்கள்கூட அப்பாடலின் மெட்டைச் சட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இப்பாடலைப் பொறுத்தவரை பாரதியார் பைரவி ராகத்தில்தான் மெட்டமைத்துள்ளதாக பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். ஆனால், இன்று வழக்கத்தில் இருக்கும் ராகமாலிகை மெட்டை அமைத்தவர் திரைப்பட இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பாராமன். ‘மணமகள்’ படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. கண்ணனைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் தொனியில் அமைந்த இப்பாடலின் கடைசி சரணத்தைக் காதலை வெளிப்படுத்தும் வகையில் சுப்பாராமன் அமைத்திருந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த இப்படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதிதான் வசனம்.

பாடல் காட்சியில் பத்மினியும் லலிதாவும் டி.எஸ். பாலையாவும் நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்பாடல் காதல் கீதமாகவே மாறிவிட்டது. “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி” என்னும் வரிகளை மனதுக்குள் பாடிப் பார்க்காத காதலர்கள் யார் இருக்கிறார்கள்?

இது போலத்தான் பாரதிதாசன் எழுதிய ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற தேஷ் ராகப் பாடலும் குழந்தைக்காக எழுதப் பட்டு ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் காதல் பாடலாக மாறிவிட்டது.

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ காபி ராகத்தில் தொடங்கி, ‘ஓடி வருகையிலே கண்ணம்மா’வில் மாண்டுக்கு மாறுகிறது. ‘உச்சிதனை முகர்ந்தால்’ வசந்தாவில் ஒலிக்கிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகள் திலங்குக்கு மாறுகின்றன. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ வரிகள் உருக்கத்தை வெளிப்படுத்தும் நீலமணியில் ஒலிக்கின்றன. திரைப்படத்திலும் பின்னர் கச்சேரி மேடைகளிலும் பாடிப் பிரபலப் படுத்தியவர் எம்.எல். வசந்தகுமாரி. கடைசி சரணத்தை ஆண் குரலில் வி.என். சுந்தரம் பாடினார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் “வெற்றிவடிவேலனே சக்தி உமைபாலனே” என்ற தொகையறாவைப் பாடியவர் சுந்தரம். இப்பாடலை நாகசுரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் வாசித்ததும் அதற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவானபோது தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் சண்முகசுந்தரமும் மோகனாவும் சந்திக்கும் காட்சியில் “சண்முசுந்தரம் மோகனாவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்று பரேதசியாக நடிக்கும் எஸ்.வி.சகஸ்ரநாமம் சொல்கிறார். மோகனாவின் கையைப் பிடித்துப் பெட்டியில் ஏற்றுகையில் பின்னணியில் ‘சின்னஞ்சிறு கிளியே’ கண்ணம்மாவே ஒலிக்கிறது. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளை அந்த மெட்டு வெளிப்படுத்துகிறது.

சென்னையின் திரைப்படத் துறை குறித்து பிரெஞ்சு மொழியில் உருவாகியுள்ள ஆவணப்படத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் உருவாக்கப்பட்ட காட்சியும் இடம்பெற்றுள்ளது. திருவாரூரில் மோகனாம்பாளின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து சண்முகசுந்தரமும் குழுவினரும் வாசிப்பது போன்ற காட்சி. வாசிக்கும் பாட்டு ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’தான். ‘என் கண்ணில் பாவையன்றோ’ என்ற வரிகளை முதலில் சிவாஜி கணேசன் வாசிப்பது போன்ற காட்சி.

பின்னர் திரைப்பட இயக்குநரான ஏ.பி. நாகராஜன் “அங்கே பார்த்திட்டிருந்தீங்க. மோகனாவை” என்று சொல்லிவிட்டு, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிகளைப் பாடிக் காட்டுகிறார்.

1980-களில் எம்,எஸ். விஸ்வநாதன் இசையில் ‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் வேறொரு மெட்டில் இப்பாடல் இடம் பெற்றது. கே.ஜே. யேசுதாசும் ஸ்வர்ணலதாவும் அற்புதமாகப் பாடியிருந்தாலும் தமிழர்களின் மண்டைக்குள் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்றாலே சி.ஆர். சுப்பாராமனின் மெட்டு மட்டுமே ஒலிக்கிறது.

சமீபத்தில் ‘குற்றம் கடிதல்’ படத்தில் சேர்ந்திசையில் பியானோ ஒலிக்க, வரிக்கு வரி இப்பாடலைக் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ வரிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடியின்போது சற்றும் எரிச்சலடையாமல், நிதானம் இழக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கணவன் மணிகண்டனைப் போல் கணவனைப் பெற்றிருக்கும் பெண்கள் பாக்கியவதிகள்தான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-8-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE/article8422286.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரையில் மிளிரும் வரிகள் 9 - எந்த மேகம் தந்த புனலோ?

 
 
sivaji_2806066f.jpg
 

சில நடிகைகள் மட்டுமே எந்த வேடம் கொடுக்கப்பட்டாலும் பாத்திரத்தோடு ஒன்றிணைந்து விடுகிறார்கள். அங்கே நாம் அந்த நடிகையை மறந்துவிட்டுக் கதாபாத்திரத்தை மட்டுமே காண்கிறோம். அது போலத்தான் சில பின்னணிப் பாடகர்களும். அவர்களுக்கென தனித்துவமான குரல் இருந்தாலும் அக்குரல் கதாபாத்திரத்தின் குரலாகவே மாறிவிடுகிறது. இதற்கு உதாரணமாக ‘அவன்தான் மனிதன்’ படத்தில் நடித்திருக்கும் ஜெயலலிதாவையும் அவருக்காக ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ’ என்ற பாடலைப் பாடிய வாணி ஜெயராமையும் குறிப்பிடலாம்.

ஹம்மிங்கில் தொடங்கிப் பாடல் முழுவதும் வாணி ஜெயராம் கோலோச்சுகிறார். அக்காட்சியில் நடித்த ஜெயலலிதாவோ தன்னுடைய பாவனையால் அக்காட்சியை வேறொரு உயர் தளத்துக்கு நகர்த்துகிறார். கண்ணதாசனின் பாடல் வரிகளும் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையும் பாடலை இன்னும் பல படிகள் உயர்த்துகின்றன.

‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ என்ற மிக மெதுவாகத் தொடங்கப்படும் பாடல் வரிகளுக்குப் பின்னணியில் ஒலிக்கும் டிரம்ஸின் தாளங்கள் ஒரு துள்ளல் நடையைக் கொடுக்கின்றன. கேள்வியாகவே இப்பாடல் பாடப்படுகிறது. ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனும் மிதமான பாணியில் நடனமாடுகிறார்கள்.

இப்படத்தில் ரவிகுமாராக வரும் சிவாஜி கணேசன் கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர். கதாநாயகியான ஜெயலலிதாவும் குழந்தை நட்சத்திரமும் அவரின் கொடை உள்ளத்துக்கு செஞ்சோற்றுக் கடன்பட்டவர்கள். அதற்குப் பிரதிபலனாக எதைத் தருவது? காதலை மட்டுமே என்று சொல்கிறது இப்பாடல்.

‘எங்கள் தீபங்களில் ஒளி வந்தது; அது எந்தக் கைகள் தந்த ஒளியோ’ என்று சிவாஜியைப் பார்த்துக்கொண்டு கேள்வியிலேயே ‘நீதான்’ என்ற விடையையும் பார்வையிலேயே பகிர்கிறார் ஜெயலலிதா.

‘தாழங்குடைகள் தழுவும் கொடிகள் தாமரை மலர்களின் கூட்டம்;

மாலை மணிகள் மந்திரக் கனிகள் மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ’

அனுபல்லவியின் வரும் இவ்வரிகள் குருவாயூரின் அற்புதக் காட்சிகளைப் படம் பிடிப்பதாகத் தெரிவிக்கிறார் கவிஞர் காலப்ரியா.

தாழை மடல்களால் செய்யப்பட்ட சிறு குடைகளைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் செல்கிறார்கள். வேலிகளிலும் தோட்டங்களிலும் கொடிகள் மரங்களைத் தழுவி நிற்கின்றன. தாமரை மலர்கள் தலைதூக்கிக் கூட்டமாய்ப் பூத்துக் குலுங்குகின்றன.

அந்தியில் ஆலயத்தின் மணிகள் ஒலிக்கின்றன. மந்திரங்கள் ஓதப்படுகின்றன. எங்கு நோக்கிலும் கண்ணனையொத்த சிறு குழந்தைகள் நிறைந்திருக்கும் இக்கோயிலில்தான் குழந்தைகளுக்குச் ‘சோறு ஊட்டும்’ வழக்கம் உண்டு.

‘குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்,’ என்று பின்னர் கிருஷ்ண கானம் தொகுப்புக்காக கண்ணதாசன் எழுதினார். அதற்கும் இசை எம்.எஸ். விஸ்வநாதன்தான்.

குருவாயூர் காட்சியை முடித்துவிட்டு அப்படியே சிவாஜி இருக்கும் மாளிகைக்கு வருகிறார் ஜெயலலிதா. மாளிகையில் சந்திரனைப் போல் தோற்றப் பொலிவு கொண்டவராகக் கதாநாயகன் நிற்கிறார். அங்கு மாயமாகக் கேட்கும் ஒலி தேவாலயத்தின் மணியோசையா என்று வினவுகிறார் நாயகி. புன்னகையை மட்டுமே பதிலாகத் தருகிறார் நாயகன்.

சரணத்தில்தான் நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த கண்ணதாசன் வெளிப்படுகிறார்.

‘கதிரொளி

தீபம் கலசம் ஏந்த கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன் கண்கள் தூங்காத இரவு

கங்கையிலே புதுப்புனல் வந்தது அது

எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது

எந்த மன்னன் தந்த அனலோ’

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி அப்படியே இங்கே வெளிப்படுகிறது.

‘கதிரொளி தீபம்க லசமு டனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்’

அழகிய இளம் பெண்கள் சூரியனையொத்த ஒளியை உடைய மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் ஏந்திக்கொண்டு வருகையில் வடமதுரையின் மன்னனான கண்ணபிரான் பூமி அதிரும்படியாகப் பாதுகைகளைச் சாத்திக்கொண்டு வருவதாகக் கனவு கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.

நம்முடைய கதாநாயகியும் அதைக் கனவைக் கண்டதாகக் கூறுகிறாள். அத்தகைய கனவு வந்த பெண்ணுக்குத் தூக்கமேது?

‘கங்குலும் பகலும் கண்துயிலறியாள் கண்ணநீர் கண்களால் இறைக்கும்’

கண்ணனை நினைத்துத் தன் பெண் இரவும் பகலும் தூங்காமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதைப் பாராங்குச நாயகியின் தாயார் புலம்பும் தொனியில் நம்மாழ்வார் வடித்துள்ள பாசுரம் இது.

படத்தில் வரும் காட்சியில், கங்கையில் பாய்ந்து வரும் வெள்ளத்தைத் தந்த மேகம் இன்னதென்று பிரித்தறிய முடியுமா? அது போலத்தான் மங்கையிடம் அனலை மூட்டியவரையும் அடையாளம் காண்பது என்று பாடிக்கொண்டே கதாநாயகனைப் பார்க்கிறார் கதாநாயகி. ஒன்றுமே தெரியாதது போல் சிரிக்கிறார் அவர்.

மிகச் சிறந்த நடிகையால் மட்டுமே அத்தகைய பாவனையை அரை நொடியில் வழங்க முடியும். அந்த அரை நொடியில் ஜெயலலிதாவின் கண்களில் ‘பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் அரையில் வண்ணப் பீதக ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே’ என்று பாடிய ஆண்டாள் தோன்றி மறைந்தாள். அவளுடைய தாபத்தைத் தணிக்க, பெருமாள் அணிந்திருக்கும் ஆடையை விசிறியாக வீச வேண்டுமாம்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8B/article8450829.ece

 

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 10: அழுவதற்குக் கண்ணீர் இல்லையா?

 

  • ‘அறுவடைநாள்’ படத்தில் பல்லவி, பிரபு
    ‘அறுவடைநாள்’ படத்தில் பல்லவி, பிரபு
  • raja_2815222g.jpg
     

இலட்சிய வாழ்க்கைக்கும் உலகியல் வாழ்க்கைக்கும் இடையிலே சின்னதொரு கோடு. கயிற்றின் மேல் நடப்பது போல்தான். மனதில் சிறிது சலனம் வந்தாலும் இலட்சியத்தை விட்டுவிட்டு சம்சாரத்தில் உழல வேண்டிவரும். உலகியல் ஆசாபாசங்களும் உடலின் தேவைகளும் எப்போதுமே தூண்டிக்கொண்டிருக்கும். பற்றை அறுப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் நம்மாழ்வாரும் “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்கிறார்.

பற்றை அறுப்பது அத்தனை எளிதா என்ன? முற்றும் துறந்த முனிவர்களும் ஒரு கணம் தடுமாறிய கதைகள் ஏராளம் உண்டு. அப்படி இருக்கையில் கன்னியாஸ்திரியாகச் சேவை செய்யும் இலட்சியம் கொண்டிருக்கும் பெண் பாதை மாறிச் செல்வதில் ஆச்சரியம் இல்லை. தேவனின் அழைப்புக்கும் காதலின் ஈர்ப்புக்கும் இடையே மாட்டிக்கொண்டு துடிக்கும் இளம் பெண்ணின் மனதை ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே” என்ற பாடல் படம் பிடிக்கிறது.

மருத்துவராகப் பட்டம் பெற்ற நிர்மலா கன்னியாஸ்திரியாக மாறுவதற்கு முன்பாக ஒரு கிராமத்துக்குப் பணியாற்ற வருகிறார். அங்கு நிலப்பிரபுவின் மகனான முத்துவேலிடம் மனதைப் பறிகொடுக்கிறார். காதலும் கடமையும் உந்தித் தள்ள அவர் பாடும் டைட்டில் பாடலாக இது இடம்பெறுகிறது. எழுதியவர் கங்கை அமரன். இசை இளையராஜா.

சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஒலித்து முடிந்ததும் பாடல் தொடங்குகிறது. இந்து இளைஞனுக்கும் கிறிஸ்தவப் பெண்ணுக்கும் இடையேயான காதல் என்பதால் இந்த இணைப்பு.

“இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே” என்று பாடுகையில் உயிரின் வேதனை தெரிகிறது. தன் மனம் தன் வயம் இல்லை என்கிறாள்.

பல்லவியும் அனுபல்லவியும் உற்சாகமான பின்னணி இசையில் தோய்க்கப்பட்டிருந்தாலும் பாடல் வரிகள் நெஞ்சைப் பிழிகின்றன.

நானொரு சோக சுமைதாங்கி

துன்பம் தாங்கும் இடிதாங்கி

பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்

தனித்தே வாழும் நாயகி.

இணைவது எல்லாம் பிரிவதற்காக

இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக

மறந்தால்தானே நிம்மதி

“சுமை சுமந்து சோர்ந்திருக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். உங்களுக்கு நான் இளைபாறுதல் தருவேன்” என்கிறது விவிலியம்.

கன்னியாஸ்திரீயாகப் பட்டம் பெற்று, பிறர் பொருட்டுச் சோகத்தையும் துயரையும் தாங்க வேண்டிய கதாநாயகி, தன்னுடைய நிலையை நதிக்கரைக்கு ஒப்பிடுகிறாள். திரைப்படங்களில் ரயில் தண்டவாளங்கள் இணையாத காதலின் உருவகமாகக் காட்டப்பட்டன. சலனம் வந்து காதல் உருக்கொண்ட பின் காதலனை அடைய முடியாத அவளும் நதிக்கரைதான். காதலன் அக்கரையில் நிற்கிறான். இவளோ இக்கரையில். அவர்களை இணைத்துக்கொண்டு நதி ஒடுகிறது.

அதன் பிறகு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாள். இறப்பும் பிறப்பும் எப்படி மாற்ற முடியாமல் மனித வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறதோ அதேபோல் இணைந்திருந்தவர்கள் ஒருநாள் பிரி்ந்தே ஆக வேண்டும். நெஞ்சில் துயரைத் தாங்கி நிற்பதில் அர்த்தமில்லை. மறதி என்பது மட்டும் இல்லையென்றால் துயரை நினைத்து நினைத்து மனித வாழ்வு துன்பக்கடலாகிவிடும்.

சரணத்துக்கு முன்பாக “ஏ ஏ தந்தன தந்தனா” என்று ஹம்மிங்கில் ஒரு சோகம் பொதிந்திருப்பதை உணர முடியும்.

ஒரு வழிப்பாதை என் பயணம்

மனதினில் ஏனோ பல சலனம்

கேட்டால் தருவேன் என்றவன் நீயே

கேட்டேன் ஒன்று தந்தாயா

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்

அழுதிட கண்ணில் நீருக்குப் பஞ்சம்

நானோர் கண்ணீர்க் காதலி

கேட்டேன் ஒன்று தந்தாயா என்ற வரிகளை சித்ரா பாடியிருப்பதைக் கேட்பவர்கள் அவர் அந்த வரிகளை அவர் எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருக்கிறார் என்பதை அறிவார்கள்.

தனியாகப் பயணிப்பவர்களுக்கு எப்போதுமே மனதில் எண்ணற்ற சலனங்கள் தோன்றி மறைகின்றன. ஆறுதல் தேடி மனம் அலைகிறது. அழுதற்கும் கண்ணீரில் நீர் இல்லை என்கிறாள் இக்கண்ணீர்க் காதலி.

பக்தி இலக்கியத்தில் தங்களைக் காதலிகளாக வரித்துக்கொள்பவர்கள் கண்ணீரை உகுக்கிறார்கள். “ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

கண்ணனை நினைத்து “துணைமுலை மேல் துளிசோர” சோர்ந்து விழுகிறாள் திருக்குறுந்தாண்டகத்தில் பரகாலநாயகி. அழது அழுது அவள் மார்பகங்கள் ஈரமாகி்ப் போயின.

அறுவடை நாள் கதாநாயகிக்கு அழுது அழுது கண்ணில் நீர் வற்றிவிட்டதா அல்லது சோகத்தை வெளிப்படுத்த அழுவதற்குக் கண்ணீர் இல்லையா என்பது தெரியவில்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/article8478760.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரையில் மிளிரும் வரிகள் 11: சாலை வழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்

 

 
sridevi_2833457f.jpg
 

பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படமும் அதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் தமிழ்த் திரைப்பட உலகில் பேரும் புகழும் பெற்றன. அதிலும் 16-வயது தேவி கூந்தல் அலைபாய, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு ‘சீமையிலிருந்து கோட்டு சூட்டு போட்டு வரும்’ மணாளனை நினைத்துப் பாடும் ‘செந்தூரப் பூவே’ தமிழில் சிறந்த திரைப்படப் பாடல்களைத் தொகுத்தால் முதல் 25 இடத்தில் கட்டாயம் இடம்பெறும்.

ஆனால், செந்தூரப் பூ என்றொரு பூ கிடையாது. தேவி உட்கார்ந்திருக்கும் மரத்தில் குங்குமும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் காணப்படும் பூவைத்தான் பாடலாசிரியர் கங்கை அமரன் குத்துமதிப்பாக ‘செந்தூரப் பூவே’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். பாடலில் ஒரு கட்டத்தில் அந்த மரத்தின் கிளைகளில் தொங்கியபடியும் பாடுகிறார்.

அந்த மரத்தின் பெயர் முருக்க மரம். புரசு என்றும் குறிப்பிடப்படும் இம்மரம் குறிஞ்சிப் பாட்டில் பலாசம் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் புரசு, பொரசு, புரசை போன்ற பெயர்களைப் பெற்றது. புரசு மரங்கள் செழித்து வளர்ந்திருந்ததால் சென்னையில் உள்ள சிற்றூர் புரசைவாக்கம் என்ற பெயர் பெற்றது. இங்குள்ள கங்காதீஸ்வரர் கோயிலின் தல விருட்சம் புரசு மரம்தான். ஆங்கிலத்தில் இதை Flame of Forest என்று அழைப்பார்கள். இந்த மரம் பூத்துக் குலுங்கும் காலங்களில் வனம் முழுவதும் தீப்பற்றிச் செந்தழலால் சூழப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதால் அப்பெயர். பூவின் வடிவம் கிளியின் அலகையொத்துக் காணப்படும்.

பருவத்தின் வாசலைக் கடந்து நிற்கும் கதாநாயகி செந்தூரப் பூவையும் சில்லெனக் குளிறும் காற்றையும் ‘என் மன்னன் எங்கே’ என்று கேட்டுத் தூது விடுகிறாள்.

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்

கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்

கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே..

என்னை இழுக்குது அந்த நினைவதுவே..\

வண்ணப் பூவே… தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ..

தமிழ் இலக்கியத்தில் தூது இலக்கியத்துக்குச் சிறப்பிடம் உண்டு. நாகணவாய் (மைனா), நாரை, மேகம், வண்டு, அன்னம், மயில், கிளி, தென்றல், விறலி என ஏராளமான தூதுவர்கள் காதலுக்காகக் களமிறங்குகிறார்கள்.

பக்தி இலக்கியத்தில் திருமங்கை யாழ்வார் செம்போத்து, பல்லி, காகம், ஏன் கோழியைக்கூடத் தூது விடுகிறார்.

நம்முடைய கதாநாயகி தென்றலைத் தூது விட்டு சேதிக்காகக் காத்திருக்கிறாள். அது வரும் வரையில் கண்களை மூடிக் காதலனின் தோற்றத்தை உருவகம் செய்து இன்பக் கனவினில் துய்க்கிறாள். கன்னிப் பருவத்தில் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது காதல். அந்தச் சுகந்த நினைவுகள் அவளை இழுக்கின்றன. ‘என்னை இழுக்குது அந்த நினைவதுவே’ என்ற வரிகளைத் தாபம் பொங்கப் பாடுகிறார் எஸ். ஜானகி. அதற்கு தேவியின் முக பாவனைகளும் கச்சிதம். பூவையும் தென்றலையும் மீண்டும் ஒருமுறை அழைத்து, தன்னைத் தேடி சுகம் வருமா என்று வினவுகிறாள்.

புல்லாங்குழல் குயில் போல் பாடும் இடத்திலிருந்து, “நீலக் கருங்குயிலே… தென்னஞ் சோலைக் குருவிகளே” என்று சரணம் தொடங்குகிறது.

மணலில் தடம் பதித்து பின்னர் அதில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூ கொடிகளில் புரள்கிறாள். கடற்கரை மணலில் ஊதா நிறத்தில் பூக்கும் அடுப்பம் பூவும் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றிருக்கிறது.

அடுத்து,

‘கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே

மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்

சாலை வழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்

வண்ணப் பூவே… தென்றல் காற்றே

என்னைத் தேடி சுகம் வருமோ’

என்று கேட்கிறாள்.

மயிலையும் பாடித் திரியும் பறவை களையும் அழைத்து மண மாலை வரும் நாள் குறித்துக் கேட்கிறாள்.

பராங்குச நாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார்,

‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னிலப் புள்ளினங்காள்’

என்று பறவைகளை அழைத்து ‘என் நிலை மையுரத்தே’ என்று பறவைகளைத் தூது விடுகிறார். மணவாளன் வரும் நாளில் சாலையெங்கும் பூவைத் தூவச் சொல்கிறாள் ‘16 வயதினிலே’ நாயகி.

கண்ணனுக்காகத் தூது விட்ட ஆண்டாள், ‘வாரணம் ஆயிரம் வலம் சூழ’ அந்த அரங்கனை மணந்துகொண்டாள். பராங்குசநாயகியும் பரகாலநாயகியும் கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையவர்களாகி அவன் தாள் அடைந்தனர். ஆனால், மயிலையும் குயிலையும் தூது விட்ட நம்முடைய கதாநாயகி மயிலு, சீமையிலிருந்து வந்தவனை நம்பி ஏமாறுகையில் மனம் வலிக்கிறது. அவள் மனதை மட்டுமே விரும்பும் சப்பாணி என்ற கோபாலகிருஷ்ணனுக்காக அவள் காத்திருக்கிறாள்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8536592.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 12: எல்லைக் கோடுகளைத் தகர்த்தெறிந்த இசை!

 

  • old_2842359g.jpg
     
  • ild_2_2842360g.jpg
     

தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் செவிகளை கிறிஸ்தவத் தேவாலயங்களில் இருந்து காற்றில் கலந்து வரும் ஸ்தோத்திரப் பாடல்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் காதுகளை நிரப்பும். ஜிக்கி, ஏ.பி. கோமளா, ஏ.எம். ராஜா, ஜாலி ஆபிரகாம் போன்ற எல்லோருக்கும் தெரிந்த பாடகர்களுடன், முகம் தெரியாத ஏராளமானவர்கள் இயேசுவின் கருணையை இசையோடு இயம்புவார்கள். அந்த இசையிலும் பாடல் வரிகளிலும் ஒரு விதமான வருத்தம் சோகமும் கலந்தே இருக்கும்.

தமிழகத்தின் அழுதே சாதித்தவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். “வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்கிறார் மாணிக்கவாசகர். “ஆடியாடி அகம் கரைந்து இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி” என்று கதறுகிறார் நம்மாழ்வார்.

இருப்பினும் கிறிஸ்தவ சமயப் பாடல்களில் மேற்கத்திய இசையில் தாக்கம் அதிகரிக்கையில் அவை மண்ணின் மணத்தில் இருந்து விலகி நின்று செயற்கைத் தன்மை பெறுகின்றனவோ என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால், திரைப்படங்களில் இடம் பெற்ற கிறித்தவப் பாடல்கள் கர்த்தரை எல்லோருக்கும் பொதுவானவராக்கி கண்ணீர் உகுக்கச் செய்திருக்கின்றன. காரணம், அவை பெரும்பாலும் தமிழக இசை மரபில் உருவாக்கப்பட்டவை.

“பிள்ளை பெறாத பெண்மை தாயானது; அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது” என்ற வரிகளைப் பாட முடியாமல் கண்ணீர் உகுத்துக்கொண்டு நின்றிருந்தார் எஸ். ஜானகி என்பது இன்றும் திரை உலகத்தில் சிலாகித்துப் பேசப்படும் விசயம்.

அச்சாணி’ (1978) திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில்

“மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்”

என்ற பாடலின் ஒரு பகுதிதான் ஜானகியை அப்படி அழ வைத்தது.

“மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே; மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே; மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா மாதா”

என்று அவர் பாடுகையில் புல்லின் நுனியில் துளிர்க்கும் பனித்துளி போல் கண்களில் நீர்த் துளிகள் வெளிப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

அது போலத்தான் ‘புனித அந்தோணியார்’ திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் “மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்; நல்ல மனிதர் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறார்” என்று வாணி ஜெயராம் பாடும் பாடலும் குறிப்பிடத்தக்கது.

துள்ளல் நடையில் ஒலிக்கும் தபேலா வாசிப்போடு வாணி ஜெயராம் பாடுகிறார். அந்தோணியாராக நடிக்கும் முத்துராமன் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கையில் குழந்தைக் கண்ணனைத் தூக்கி வைத்துக்கொள்ளும் நந்தகோபன் அங்கு நிற்கிறான். மதங்களைப் பிரித்து நிற்கும் எல்லைக் கோடுகளை இசை தகர்த்தெறிந்த தருணம் அது.

கண்ணன் குழலூதுகிறான். ஜேசுதாசோ,

“குழலும் யாழும் குரலினில் தொனிக்க

கும்பிடும் வேளையிலே

மழலை இயேசுவை மடியினில் சுமந்து

மாதா வருவாளே”

என்று கிறிஸ்தவத்தை மண்ணின் மதமாக்கி மகிழ்கிறார்.

இறைவனை மருந்தென்பெர். சிவபெருமானுக்கு மருந்தீஸ்வரன் என்ற பெயரும் உண்டு. அந்தோணியாரும்

“ஆனந்தமானது, அற்புதமானது நான் அந்த மருந்தைக் கண்டுகொண்டேன்”

என்று இயேசுநாதரையும் மருந்தெனவே அழைக்கிறார்.

“கடவுள் இல்லமே ஓர் கருணை இல்லமே” பாடலும்.

‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் கிதாரின் பின்னணியில் இளையராஜா இசையமைத்த “தேவன் திருச்சபை மலர்களே; வேதம் ஒலிக்கின்ற மணிகளே” என்ற பாடல் அதி அற்புதமானது. அவர் எனக்கே சொந்தம் என்ற இப்படத்தில் சேர்ந்திசையின் கூறுகளையும் இளையராஜா உள்ளடக்கியிருக்கிறார். அதுபோலத்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் இடம் பெற்ற

கடவுளைச் சாட்சியாக வைத்துக் காதலர்கள் பாடும் பாடலில் கூட அற்புதமான கிறித்தவப் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தூது விட்டதுபோல் அன்னை வேளாங்கண்ணி திரைப்படத்தில் ஜெமினி கணேசனும் ஜெயலலிதாவும் தூது விடுகிறார்கள்.

வானமெனும் வீதியிலே

குளிர் வாடையெனும் தேரினிலே

ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்

என் உறவுக்கு யார் தலைவன் என்று

கேட்டுச் சொல்லுங்கள்

மாதாவைக் கேட்டுச் சொல்லுங்கள்

என்று பாடுகையில் நாச்சியார் திருமொழியில் வேங்கடவர்க்கு ஆண்டாள் விட்ட தூதுமொழிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்,மாவலியை

நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்

உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை

நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே

என்கிறாள் கோதை.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். “தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று ஞானஒளியில் சிவாஜி கதறுவதும் தமிழ் மண் சார்ந்த பக்தி இலக்கியத்தின் ஒரு பரிமாணமே.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/article8564369.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரையில் மிளிரும் வரிகள் 13: நந்தா நீ என் நிலா நிலா...

 

 
 
  • நந்தா நீ என் நிலா - தட்சிணாமூர்த்தி
    நந்தா நீ என் நிலா - தட்சிணாமூர்த்தி
  • ’ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’
    ’ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’

திரை இசைப் பிரியர்கள் ஒரு காலத்தில் தங்களுக்குள்ளும் வாய் விட்டும் பாடிப் பார்த்த பாடலொன்று உண்டு. மிகவும் பிரமாதமாகப் பாடுபவர்கள் கூட ஐம்பது சதவீதம் கூட அப்பாடலின் வீச்சை எட்டிப்பிடிக்க முடிந்ததில்லை. ஏன் அந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியமே திரும்பவும் அதன் உன்னதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

‘நந்தா நீ என் நிலா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நந்தா நீ என் நிலா பாடலுக்கு இசையமைத்தவர் வி. தட்சிணாமூர்த்தி. பாடலின் ராகம் தர்மாவதி. மதுவந்தியின் சாயல் அதிகம் இருப்பதாக வாதிடுபவர்களும் உண்டு.

நெற்றி நிறைய விபூதி. சைவ மடத்தின் ஆதினம் அணிந்திருப்பதைக் காட்டிலும் அதிகமான ருத்திராட்ச மாலைகள் கழுத்தை அலங்கரிக்கும். தட்சிணாமூர்த்தியைத் திரைப்பட உலகில் எல்லோரும் சாமி என்றே அழைப்பார்கள். இசைஞானி இளையராஜா அவரைக் குருநாதர் அந்தஸ்தில் வைத்திருந்தார். அவரும் அவருடைய கிதாரிஸ்ட் சதானந்தமும் சேர்ந்து தட்சிணாமூர்த்தி இசையமைத்த எண்ணற்ற திரைப்படங்களுக்கு வாசித்திருக்கிறார்கள். கடந்த 2013-ல் சாமிகள் சென்னையில் காலமானார்.

மலையாளத் திரைப்பட உலகில் கோலோச்சிய தட்சிணாமூர்த்தி சாமிகள், தமிழில் வெகு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ஏறக்குறைய எல்லாப் பாடல்களுமே அவருடைய முத்திரையைத் தாங்கி நிற்கின்றன.

‘நந்தா என் நிலா’ பாடலுக்கும் பாடல் காட்சிக்கும் சற்றும் பொருத்தமில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். இப்பாடலை எழுதியவர் பாண்டுரங்கன்.

சிதார் இசைப் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் இப்பாடலின் வரிகள் கவிதை நயம் மிக்கவை.

‘ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே.

அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போல பிறந்த வந்தாயே’

என்ற வரிகளை அப்போது சொல்லிப் பார்க்காத காதலனும் உண்டோ?

சரணத்தில் ‘ஆகமம் கண்ட சீதையும் இன்று இராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ; மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் போகத்தில் ஆட இறங்கி வந்தாளோ” சினிமா பாடல் மிகச் சிறந்த கவிதையாக மாறி நிற்கும் தருணத்தை இந்த வரிகளில் உணர முடியும்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாடும்’ என்ற அற்புதமான பாடல் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கிறது.

தட்சிணாமூர்த்தி சாமிகள் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஆலப்புழை என்றாலும் அவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி. திரை இசை அலைகள் புத்தகத்தின் ஆசிரியரான வாமனன், “தட்சிணாமூர்த்தியின் தாத்தா திருவிதாங்கூர் வங்கியில் பணியாற்றியதால் அவர் குடும்பம் கேரளத்துக்குக் குடிபெயர்ந்தது” என்று தெரிவிக்கிறார்.

தட்சிணாமூர்த்தியின் தாய் வழி தாத்தாவான சிவராமகிருஷ்ண ஐயர், தாய். தாய் மாமன்கள் எல்லோருமே இசையில் வல்லவர்கள். அவருடைய தாயார் தங்கையைத் தொட்டிலில் போட்டுப் பாடும்போது கூடவே பாடும் தட்சிணாமூர்த்தி, ஆறு வயதுக்குள் 27 தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடம் செய்திருக்கிறார். இதுவும் வாமனனிடம் அவர் சொன்ன தகவல்.

நம்பியவர்களுக்கு தெய்வம். நம்பாதவர்களுக்கு அது இல்லை. ‘வைக்கத்தப்பா அன்னதான பிரபோ’ என்று எந்நாளும் வைக்கத்தில் எழுந்தருளியுள்ள கடவுளின் பெயரை உச்சரிப்பார் தட்சிணாமூர்த்தி.

“பதினோராவது நாள். இரவு பன்னிரண்டு மணி. பயங்கர மழை. இடியும் மின்னலும். கும்மாளம் போடுறது. கதவு தட்டுற சத்தம் கேட்கிறது. ஏ தட்சிணாமூர்த்தின்னு கடுவா கிருஷ்ணய்யர்னு கஞ்சிரா வித்வான் கூப்பிட்டுண்டு நிக்கிறார். டேய் இப்பவே வைக்கத்துக்கு புறப்படணும்னார். அன்னிக்கு வைக்கத்துக்குப் போன நாளிலேயிருந்து இன்னி வரை வைக்கத்தப்பன் எனக்குப் படி அளந்திண்டிருக்கான். அவன் அன்னதானப் பிரபோதானே” என்று தன் கதையை வாமனன் புத்தகத்தில் இப்படித் தெரிவித்திருக்கிறார்.

அகில இந்திய வானொலியில் வாய்ப்பு கிடைத்ததும் சென்னைக்கு வந்தார். எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இணையாகப் பாடிக்கொண்டிருந்த வசந்த கோகிலத்துக்குப் பாட்டு வாத்தியாராகப் பணியாற்றினார்.

திரைப்பட வாய்ப்பு வந்தது. முதல் திரைப்படம் ‘ஜீவித நௌகா’. இது மலையாளப் பழக்க வழக்கங்களையொட்டி எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்.

’ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆண்டவன் இல்லா உலகம் எது ஐலசா, ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா’ என்ற பாட்டுக்கு இணையான ‘ஓடப் பாடல்’ எதுவும் இல்லை.

அதிலும்

‘நதி இருந்தால் மீனிருக்கும் விதியிருந்தால் சேர்ந்திருக்கும்.

காலம் அதன் கோலம் என்றோ எங்கோ

என்ற வரிகளில் பொதிந்திருக்கும் தத்துவம் சட்டென்று பிடிபடுவதில்லை. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஓய்ந்த இரவு நேரத்தில் திடீரென எப்.எம். ஒலிப்பெருக்கியில் இப்பாடல் ஒலிக்கும்போது உள்ளம் தாவிப் பறந்து காவிரி நதிக்கரையில் சஞ்சாரம் செய்கிறது.

அதே படத்தில் ‘நல்ல மனம் வாழ்க’ என்று வேறொருவனுக்கு மனைவியாகிவிட்ட காதலிக்காகப் பாடும் பாடலும் அருமை. நான்கு படத்தில் இசையமைத்தாலும் நச்சென இசையமைக்க வேண்டும் என்பதை நிரூபித்தவர் தட்சிணாமூர்த்தி சாமிகள்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/article8591571.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 14: கச்சேரி மேடையும் வெள்ளித்திரையும்

 
  • kacheri_2861606g.jpg
     
  • kacheri_2_2861607g.jpg
     

‘கண்ட நாள் முதலாய்’ என்ற திரைப்படத்தின் தலைப்பு அதில் இடம் பெற்ற பாடலின் முதல் வரியே. மதுவந்தி ராகத்தின் சாயலில் மெட்டமைக்கப்பட்ட இப்பாடல் கர்நாடக இசைக் கச்சேரிகளில் மிகவும் பிரபலம். அதிலும் மறைந்த தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனின் குரலில் அதைக் கேட்போர் சொக்கிப்போவார்கள்.

‘கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி; கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை' என்று முருகனின் மீது பாடப்பட்ட பாடல் பரத நாட்டியத்தில் அபிநயம் பிடிப்பதற்கும் மிகவும் ஏற்றது.

இப்படித் திரைப்படத் துறையிலிருந்து கச்சேரி மேடைக்கும் கச்சேரி மேடையிலிருந்து திரைப்படத்துக்கும் எத்தனையோ பாடல்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஏனெனில் திரைப்பட உலகத்துக்கும் கர்நாடக சங்கீத உலகத்துக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. எஸ்.வி. வெங்கட்ராமன், ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா எனப் பெரும்பாலான இசையமைப்பாளர்களும் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர்கள்.

சினிமாவின் தொடக்கத்தில் பெரும்பாலான பாடல்கள் கர்நாடக ராக மெட்டுகளிலேயே இருந்தன. ஜி.என். பாலசுப்பிரமணியம், பாபநாசம் சிவன், எம்.எம். தண்டபாணி தேசிகர், டி.வி. இரத்னம், டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. தியாகராஜ பாகவதர், மதுரை சோமு, எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி, என்.சி. வசந்தகோகிலம், பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜே. ஜேசுதாஸ் எனத் திரைப்படத் துறையில் ஈடுபட்ட கர்நாடக இசைப் பாடகர்களின் பட்டியில் நீள்கிறது.

திரைப்படப் பாடல்கள் ஒரு இசை ரசிகரை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும். இந்தக் கருத்தைத் தீவிரமாக வலியுறுத்தியவர் சென்னை சங்கீத வித்வத் சபையின் (Music Academy) சங்கீத கலாநிதி விருதை 1988-ம் ஆண்டு பெற்ற புல்லாங்குழல் கலைஞர் டி. விஸ்வநாதன். அவர் நாட்டிய மேதை டி. பாலசரஸ்வதியின் தம்பி.

விருது பெறும்போது அவர் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. “திரை இசையைப் புறக்கணிக்காதீர்கள்” என்ற கருத்தை அவர் முன்வைத்தார். சம்பிரதாயத்தை வழுவாமல் பாதுகாக்கும் அகாடமியில் திரை இசையைத் தூக்கிப் பிடித்து அவர் பேசிய பேச்சு வரவேற்பைப் பெற்றது.

“திரைப்படங்களின் வரவுக்கு முன்பாக நாடகத் துறையில் பல கர்நாடக சங்கீதப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாபநாசம் சிவனின் வரவுக்குப் பிறகு ஏராளமான கர்நாடக சங்கீதப் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்றன” என்கிறார் இசைத்துறை ஆராய்ச்சியாளர் வி. ராம்.

ஹிந்தோள ராகத்தில் அமையப் பெற்றுள்ள ‘மா இரமணன் உமா இரமணன்' என்ற பாடல் ‘சேவாசதன்' படத்துக்காக பாபநாசன் சிவனால் எழுதப்பட்டதுதான். அது போல 'மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப்பதமே' பாடல் ‘சாவித்திரி' திரைப்படத்தில்தான் முதலில் இடம்பெற்றது.

தண்டபாணி தேசிகர் நடித்த ‘நந்தனார்' திரைப்படத்தில் பெரும்பாலான பாடல்கள் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியவை. இருப்பினும் சிவன் எழுதிய ‘பிறவா வரம் தாரும் பெம்மானே’, ‘காண வேண்டாமோ இரு கண் இருக்கும்போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ' ஆகிய பாடல்கள் கச்சேரி மேடைகளை இன்றளவும் ஆக்கிரமித்துள்ளன. எளிய வரிகள், ஆனால் பக்தியில் தோய்த்தெடுக்கப்பட்ட வார்த்தைகள், பாபநாசம் சிவனுக்கு தமிழ் தியாகையர் என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தன.

இன்று கச்சேரி மேடைகளில் பாடப்படும் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களும் திரைப்படங்களில் இடம்பெற்று கச்சேரி மேடைக்கு அரங்கேறியவைதான். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘மணப்பெண்’ படத்தில் எம்.எல். வசந்தகுமாரி இப்பாடலைப் பாடினார்.

அது போல் பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற பாடல் தண்டபாணி தேசிகரால் மெட்டமைக்கப்பட்டு, பின்னர் ‘ஓர் இரவு' திரைப்படத்தில் இடம்பெற்றது. ஊத்துக்காடு வேங்கடகவியின் ‘அலைபாயுதே கண்ணா' நிறைய படங்களில் இடம்பெற்றுள்ளது.

‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் கௌரி மனோகரியில் ‘பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடலை இன்றும் கேட்டு சிலிர்க்காதவர் யார்? அதே படத்தில் ராமாலிகையில் அமைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் ‘ஒரு நாள் போதுமா' பாடலை எல்லோரும் ரசிக்கவில்லையா? அடானாவில் ஒலிக்கும் ‘யார் தருவார் இந்த அரியாசனத்தை' இன்றும் வேண்டாதவர் யார்?

தமிழர்களின் நீண்ட இசை மரபு திரைப்படத்திலும் தொடர்ந்தது. இளையராஜா அதற்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தார். காம்போதியில் தியாகராஜர் இயற்றிய ‘மரி மரி நின்னே’ பாடலை சாருமதிக்கு மாற்றும் அளவுக்கு அவருக்குத் தன் இசை மேல் நம்பிக்கை இருந்தது. அப்பாடல் பெரும் உயரத்தை எட்டிப் பிடித்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8625739.ece

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரையில் மிளிரும் வரிகள் 15: காதல் கனிரசமாக மாறிய கீர்த்தனை

 

 
sivaji_2870861f.jpg
 

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். எங்கள் தெரு முத்தாரம்மன் கோயில் கொடைக்கு அம்பாசமுத்திரம் எம்.ஏ. துரைராஜ் நையாண்டி மேளம் வாசித்தார். செங்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த படையாச்சிகள் பரம்பரை பரம்பரையாக நாகசுரம் வாசித்துவருகிறார்கள். தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவரான சட்டநாதனின் தந்தையாரும் நாகசுரம் வாசித்தவர்தான். தென் மாவட்டங்களில் கம்பர், சுண்ணாம்பு பரவர்களுடன் தலித்துகளும் நாகசுரம், தவில் வாசிப்பார்கள்.

உச்சிக் கொடையன்று பாலிடெக்னிக் பகவதியப்ப அண்ணன் துரைராஜிடம், “காதல் கனிரசப் பாட்டுகளை” எடுத்து விடுமாறு கூறினான். சட்டென “காதல் கனிரசமே” என்று வாசித்தார்.

‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்தில் பி.யு. சின்னப்பா நடித்து, பாடிய பாடல் இது. சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த இப்பாடல் தியாகராஜ சுவாமிகள் இயற்றிய “நாதம் தனும் அனுசம்” கீர்த்தனையையொட்டியே அமைந்துள்ளது. வரிக்கு வரி அதே சாயல். அதே சிட்ட ஸ்வரங்கள்.

செவ்வியல் இசையில் கோலோச்சிய எல்லோருக்கும் இணையாக அப்பாடலை சரம் பாடியிருப்பார் சின்னப்பா. பாடல் முடிந்ததும் சோவென்று மழை பெய்து ஓய்திருப்பது போன்ற தோற்றம். யூடியூபில் இப்பாடலைக் கேட்டுக் களிக்கலாம்.

சென்னையில் இசை விழாக்களில் குறிப்பாக மியூசிக் அகாடமியில் இசை விழா தொடங்கும்போது “நாத தனும் அனிசம்” பாடலைத்தான் பாடுவார்கள். “காதல் கனிரச”த்தை மட்டுமே கேட்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. சுத்த கர்நாடக சங்கீதத்தை எந்த வித சமரசமும் இல்லாமல் வரிகளை மாற்றித் திரைப்படத்தில் இடம்பெற செய்து வெற்றி பெற முடிந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

“தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சகலாகலாவல்லவன் சின்னப்பாதான். குஸ்தி, சிலம்பம், பாட்டு, நடிப்பு, இரட்டை மற்றும் மூன்று வேடங்கள் என எல்லாவற்றிலும் மகா கில்லாடி” என்கிறார் திரையிசை ஆராய்ச்சியாளர் வாமனன்.

சின்னப்பாவின் சமகாலத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். படங்களில் காட்சிக்குக் காட்சி பாடல்கள் இடம்பெற்ற காலம். “தியாகராஜ பாகவதரின் பாடல்கள் பளிச்சென இருக்கும். சின்னப்பாவைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகளை உணர்ந்துபாடுவார். பாட்டுடன் பாவனையும் சேரும்போது அது படம் பார்ப்பவரின் உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதீதமானது” என்கிறார் வாமனன்.

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பாதான் பி.யு. சின்னப்பா என்று அழைக்கப்பட்டார். அவருடைய அப்பாவும் நாடகத் துறையில் இருந்ததால் சிறு வயதிலேயே சின்னப்பாவும் அத்துறைக்கு வந்தார். டி.கே.எஸ். சகோதரர்களுடன் பணியாற்றினார். சேட்டைகள் அதிகம். இதனால் அடிக்கடி அடி வாங்குவார்.

சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ‘ஆர்யமாலா’ திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தந்தது. அதற்கு முன்னதாக ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

‘ஜகதலப்பிரதாபன்’ திரைப்படத்தில் அவர் பாடிய “தாயைப் பணிவோம்” பாடலில் பாடுபவராகவும் வயலின், மிருந்தங்கம், கஞ்சிரா வாசிப்பவராகவும் கொன்னக்கோல் சொல்பவராகவும் கலக்கியிருப்பார். பிற்காலத்தில் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற “பாட்டும் நானே பாவமும் நானே” பாட்டுக்கு சின்னப்பாவின் பாடலே ஆதர்சம்.

அவர் சிறந்த நடிகர் என்பதை இப்பாடல் காட்சியைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போதே கஞ்சிராவில் தண்ணீரைத் தெளித்துத் தயார் செய்துகொண்டிருப்பார். சங்கீத பாவனைகள் அற்புதமாக வெளிப்படும் காட்சி அது. ‘திருவிளையாடல்’ படத்தில் சிவாஜி தொண்டையைச் சரி செய்வதுபோல.

திரைப்படத்தில் தலைமயிர்களெல்லாம் தெறித்துப் போகும் அளவுக்கு கஞ்சிரா வாசிப்பார்.

பின்னர் இதே மெட்டில் கிராமபோன் இசைத் தட்டுக்காக “நமக்கினி பயமேது” என்று பாடினார்.

‘மங்கையர்க்கரசி’, ‘மனோன்மணி’, ‘கண்ணகி’ எனப் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் ‘கிருஷ்ணபக்தி’ திரைப்படத்தில் அவர் நடத்திய கதாகாலட்சேபத்துக்கு இணையேது.

“இயற்கையிலேயே நல்ல குரல் வளம் இருந்தாலும் இசைத்திறமையை மேம்படுத்துவதற்காகக் குன்னக்குடி வெங்கட்ராம ஐயரிடம் சங்கீதம் பயின்றார். ஒரு பாடலை சுமார் ஐம்பது முறையாவது கேட்டுவிட்டுத்தான் அவர் பாட ஆரம்பிப்பார்” என்கிறார் வாமனன்.

திரைப்படத்துறையில் அவர் பெரும் பொருளீட்டினார். புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கினார். இனிமேல் அவருக்கு யாரும் விற்கக் கூடாது என்று சட்டம் வரும் அளவுக்கு அவர் வீடுகளை வாங்கிக் குவித்திருந்ததார் என்று சொல்லப்படுகிற்து.

ஆனால் குடிப்பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டது. அத்துடன் பீடி புகைப்பார். அடி தடிகளில் ஈடுபடுவார். திடீரென ஒரு நாள் இறந்துபோனார். “அவர் இறப்பு இன்னும் புதிராகவே உள்ளது” என்று வாமனன் பதிவுசெய்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரையில்-மிளிரும்-வரிகள்-15-காதல்-கனிரசமாக-மாறிய-கீர்த்தனை/article8653575.ece

Link to comment
Share on other sites

திரையில் மிளிரும் வரிகள் 16: நெஞ்சின் அலை உறங்காது...

aishwarya_rai_2879924f.jpg
 

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனை சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்னக ரயில்வேயில் நடந்த ஒரு விழாவில் சந்தித்தேன். அவருடைய சகோதரர் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இன்னொரு அதிகாரியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவரோடு பேசிக்கொண்டிருந்த போது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாமூச்சி ஏனடா’ என்ற பாடல் குறித்து விவாதம் திரும்பியது. நாட்டைக்குறிஞ்சியில்தான் அப்பாடல் அமைய வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் அதன் மெட்டு அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார். பாடலை எழுதியர் வைரமுத்து.

கருணைப் பிரவாகம் எடுக்கும் ஒரு ராகம் நாட்டைக்குறிஞ்சி. தமிழர்களின் திருமண நிகழ்ச்சியில் தாலிகட்டு நடக்கும்போது நாட்டைக்குறிஞ்சியே நாகசுரத்தில் வாசிக்கப்படும். சுருள் சுருளாக நீண்ட கார்வைகளுடன் அந்த ராகத்தை வாசித்து சுவாதித் திருநாள் மகாராஜாவின் ‘மாமவசதா வரதே’ கீர்த்தனையை காருக்குறிச்சி அருணாசலம் வாசித்திருப்பதை எத்தனையோ ஆண்டுகளாகக் கேட்டுவருகிறேன்.

அதே கீர்த்தனையை வேதாரண்யம் வேதமூர்த்தியும் வாசித்திருக்கிறார். ஆரவாரம் இல்லாத சமுத்திரத்தில் ஒரே சீராக அலைகள் எழுவதும் தாழ்வதும் போல அவர் அந்த ராகத்தை வாசித்திருப்பார். சம்பிரதாயமான நாட்டைக் குறிஞ்சியைக் கேட்க வேண்டுமானால் வேதமூர்த்தியின் வாசிப்பே எல்லாவற்றுக்கும் முன்னால் நிற்கும்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் கதாநாயகியின் சார்பாக அவள் காதலனை நோக்கி அவளுடைய தங்கை பாடுவது போல் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. காதலியின் பொருட்டு அவள் தோழிகளும் அன்னைமாரும் பேசுவது தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியத்தில் ஏராளமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘செங்கயல் பாய் நீர் திரவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே’ என்று கங்குலும் பகலும் கண் துயிலாமல் கண்ணீர் பெருக பெருமாளின் நினைவாகவே உருகிக்கொண்டிருக்கும் மகளின் நிலையை உரைக்கும் தாயின் பாவத்தில் நம்மாழ்வார் அருளியிருக்கிறார்.

அதே போல் பெண்ணின் மனதை இப்பாடலில் அற்புதமாகப் படம் பிடிக்கிறார் வைரமுத்து. கண்ணாமூச்சி காட்டும் காதலனிடம் தன் சகோதரி ‘கண்ணாடிப் பொருள்’ என்கிறாள். ஒரு வகையில் அனிச்ச மலர் போலத்தான். மோப்பக் குழைந்துவிடும் மலர். சற்று கவனக் குறைவாக இருந்தாலும் உராய்வுகள் ஏற்படலாம் அல்லது உடைந்து சிதறிப் போகலாம். பின்னர் ஒட்ட வைப்பது அத்தனை எளிதல்லவே.

நதியைக் கேட்கலாம். ஆனால் நதியின் கரையைக் கேட்பதாகக் கூறுகிறாள். நதி நிற்காமல் ஓடிக்கொண்டி ருக்கிறது. கரை இடம்பெயர்வதில்லை. அந்த நம்பிக்கையில் கேட்கிறாள். அது போல் காற்றை நிறுத்திக் கேட்கிறாள். வான்வெளியைக் கேட்கிறாள். விடை கிடைக்காததால் இறுதி யாக ‘உன்னைக் கண்டேன்’ அதுவும் ‘இருதயப் பூவில் கண்டேன்’ என்கிறாள்.

அனுபல்லவி தொடங்குவதற்கு முன்னால் வயலினில் நாட்டைக் குறிஞ்சி வழிந்தோடி காதுகளை நிறைக்கிறது.

மறுபடியும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள்.

என் மனம் உனக்கென விளையாட்டு பொம்மையா?

எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?

நெஞ்சின் அலை உறங்காது.

உன் இதழ் கொண்டு என் வாய் மூட வா என் கண்ணா

உன் இமைகொண்டு விழி மூட வா என் கண்ணா

உன் உடல்தான் என் உடையல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும் உன்

வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே நிறம் மாற வா

என் உயிரில் நீ வந்து சேர்க

என் உதடுகள் ஈரமாய் வாழ்க

கலந்திட வா…

‘நானொரு விளையாட்டு பொம்மையா’ என்று அம்பாளிடம் பாபநாசன் சிவன் கேட்கிறார். மனத்தை விளையாட்டு பொம்மையாகக் கையாளும் காதலன் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறான். சட்டனெக் கோபம் தணிந்து காமம் வெளிப்படுகிறது. இதழால் இதழ் மூடி, இமைகளால் இமைகளை மூடி ஆரத் தழுவும் ஆலிங்கனத்துக்கு அழைப்பு விடுக்கிறாள்.

‘உன் உடல்தான் என் உடையல்லவா’ என்ற வரிகள் கவிதையின் உச்சம். “பூசும் சாந்தென் நெஞ்சமே” என்ற நம்மாழ்வார் பாசுரத்தை இங்கு குறிப்பிடலாம், நெஞ்சத்தையே சாந்தாகப் பூசுகிறார் ஆழ்வார்.

அனுபல்லவி வரிகள் திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகத்தை நினைவுபடுத்துகின்றன.

வான் மழை விழும்போது மலை கொண்டு காத்தாய்

கண் மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்

நானென்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை

நீ காணக் கண்ணில்லையா என் கண்ணா

உன் கனவுகளில் நானில்லையா

என்று வரிகள் நீள்கின்றன.

திருக்குறுந்தாண்டகத்திலும் பரகால நாயகி கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறாள். எப்படித் தெரியுமா? ‘கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்’ பெருமாள் பேரைக் கிளிக்குச் சொல்லிக்கொடுத்து அது அதை மீண்டும் சொல்லக் கேட்டு ‘துணை முலைமேல் துளிசோர சேர்கின்றாளே’ என்று மகளின் நிலை குறித்துத் தாய் கலங்கி நிற்கிறாள்.

தமிழ்க் கவிதையின் நீண்ட பாரம்பரியம் இந்தத் திரைப்படப் பாடலில் தொடர்கிறது. வேதாரண்யம் வேதமூர்த்தியையும் திருமங்கை மன்னனையும் மீண்டும் மீண்டும் படித்தாலும் திகட்டுவதில்லை. கண்ணாமூச்சி பாடலும் அப்படியே.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரையில்-மிளிரும்-வரிகள்-16-நெஞ்சின்-அலை-உறங்காது/article8685761.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.