Jump to content

காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; 'ஆணாதிக்க சிந்தனை'


Recommended Posts

காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; 'ஆணாதிக்க சிந்தனை'

160214180104_dog_kiss_512x288_bbc_nocred

   

உலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது.

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன.

சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் இங்கு நடந்தன.

இதுபோன்ற ஆதரவு நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

'கலாசார சீர்கேடு'

இதனிடையே, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்களை இந்து அமைப்புக்கள் நடத்தின.

தமிழகத்தின் சில பகுதிகளில் நாயுக்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்யும் போராட்டம், நாயும் நாயும் முத்தமிட்டுக்கொள்ளும் போராட்டம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சென்னையில் சூளையில் '30 நாய்கள் முத்தமிடும்' கண்டனப் போராட்டத்தை பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு நடத்தியிருந்தது.

காதலர் தின கொண்டாட்டங்கள் மூலம் இந்து மதத்தின் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் பிரபு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'தனிநபர் உரிமைகளில் தலையீடு'

உண்மையான காதலில் ஈடுபடுபவர்கள் பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இரு தனிநபர்களின் உரிமையில் தலையிடுவது அநாகரீகமான செயல் என்று திராவிடர் கழகத்தின் பேச்சாளர் வழக்கறிஞர் அருள்மொழி கூறினார்.

மத அடிப்படைவாதிகளே காதலர் தினத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

'பெண்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட மத அடிப்படை வாதிகளே இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்' என்றார் அருள்மொழி.

http://www.bbc.com/tamil/india/2016/02/160214_india_valentines_day

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.