Jump to content

தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:-

14 பெப்ரவரி 2016

தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:-

விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்றஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார்.

ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலகபோன்றவர்கள் எதிர்பார்த்திராதஒருவளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி என்றுஅழைப்பாரோதெரியாது.

விக்னேஸ்வரனின் விடயத்தில் மட்டுமல்ல ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிகுறித்தும் தயான் ஜெயதிலக போன்றவர்கள் எதிர்பார்த்திராததிருப்பங்கள் கடந்தஓர் ஆண்டுக்குள் நடந்துமுடிந்துவிட்டன.

மைத்திரி-ரணில் அரசாங்கமானது கடந்தசில தசாப்தங்களில் இலங்கைத்தீவைஆட்சிசெய்தஎல்லாஅரசாங்கங்களையும் விட அனைத்துலக கவர்ச்சிமிக்கதாக தோற்றம் பெற்றுவருகிறது. அண்மைத் தசாப்தங்களில் இச் சிறியதீவை ஆண்ட அரசாங்கங்களுக்குள் சந்திரிக்காவின் அரசாங்கமும், குறுகியகாலம் ஆட்சிசெய்தரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் குறிப்பிடத்தக்கஅளவிற்கு அனைத்துலக அளவில் கவனிப்பைப் பெற்றன. இப்பொழுது ரணிலும் சந்திரிக்காவும் ஓர் அணியில் நிற்கிறார்கள். இவர்களைத் தவிர வெளியுலகத்தால் ஆசைகள் குறைந்த எளிமையானஒருதலைவராகப் பார்க்கப்படும் மைத்திரியும் இந்த அணிக்குள் காணப்படுகிறார். இப்படிப் பார்த்தால் அண்மைத் தசாப்தங்களில் இலங்கைத்தீவில் தோன்றிய எல்லா அரசாங்கங்களைவிடவும் அதிகளவில் உலக சமூகத்தால் எதிர்பார்ப்போடுபார்க்கப்படும் ஓர் அரசாங்கமாக  இந்த அரசாங்கம் காணப்படுகிறது.

அரசியலமைப்பு மாற்றங்களில்; ஜனாதிபதிமுறைமை நீக்கப்படுமாக இருந்தால்  இலங்கைத்தீவின் நிறைவேற்று அதிகாரமுடையகடைசி ஜனாதிபதியாக மைத்திரியே இருப்பார். நிறைவேற்று அதிகாரங்களை  இழக்கத் தயாராக இருந்தஒரே ஜனாதிபதியாக அவர் நினைவு கூரப்படுவார். ஆட்சிமாற்றம் ஒன்றின்  கருவியேதான் என்பதைஅவர் நன்கு விளங்கி வைத்திருக்கிறார்.  அதனால்  அவர் இப்பொழுது அமர்ந்திருக்கும் சிம்மாசனம் நிரந்தரமானதல்ல என்பதும் அவருக்குநன்கு தெரிந்திருக்கிறது.  இது காரணமாக தனக்கு முன்பிருந்த எல்லா ஜனாதிபதிகளிடமிருந்தும் அவர் சிலவிடயப்பரப்புக்களில் துலக்கமான விதங்களில் வேறுபட்டுநிற்கிறார்.   

இதுவரையிலும் இருந்தஎல்லா ஜனாதிபதிகளுமே தங்களுடைய நிறைவேற்று அதிகாரங்களை எப்படித் தக்கவைக்கலாம்.  அல்லது எப்படி அதிகப்படுத்தலாம் என்ற திசையிலேயே சிந்தித்தார்கள். ஆனால் மைத்திரியோ 19 ஆவதுதிருத்தத்தின் மூலம் தனது அதிகாரங்களில் ஒருபகுதியை  இழக்கத் தயாராக இருந்தார்.

 இதற்கு முன்பிருந்தசில ஜனாதிபதிகள் பதவிக்குவரும் வரையிலும் ஜனாதிபதி முறைமையை எதிர்த்தார்கள்.  தாம் பதவிக்கு வந்தபின் அதை நீக்கப்போவதாகவும்  நம்பிக்கையூட்டினார்கள்.  ஆனால் பதவியில் அமர்ந்ததும்  அவர்கள் அந்தசிம்மாசனத்தை இழக்கத் தயாராக இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரங்களின் ருசி அப்படிப்பட்டது. ஆனால் மைத்திரி ஒரு அரசனைப் போல நடந்து கொள்வதில் ஆர்வமற்றவராகக் காணப்படுகின்றார். 

அவர் தற்காப்பு உணர்வின்றி மிகவும் எளிமையாக நடந்து கொள்வதை மகிந்தவின் ஆதரவாளர்கள் கேலி செய்கிறார்கள்.  மகிந்த யுத்தத்தை வெற்றி கொண்டபடியால்தான் மைத்திரி இப்படி சுதந்திரமாகச் செயற்பட முடிகிறதுஎன்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.  ஆனால்  வெற்றிவாதத்தின் பின்னரானசுமார் ஆறாண்டுகால ஆட்சியின் போது பெற்ற கசப்பான அனுபவங்களின் விளைவே மைத்திரிஎனலாம்.  அதுவும் அவர் ஓர் அரசனைப் போலநடந்துகொள்ளத் தயாரற்றிருப்பதற்கு ஒருகாரணமாக  இருக்கலாம்.

தனக்குள்ளநிறைவேற்றுஅதிகாரங்கள் தற்காலிகமானவை என்ற ஒரு விளக்கத்தின் அடிப்படையில் செயற்படும் ஓர் அரசுத் தலைவராக இருப்பதனால் மைத்திரி எளிமையானவராகவும், பேராசை குறைந்தவராகவும், மூர்க்கமிலாதவராகவும் காணப்படுகிறார். அவருடைய இந்தத் தோற்றம் இப்போதுள்ள அரசாங்கத்தின் அனைத்துலக கவர்ச்சிசையை அதிகப்படுத்தியிருக்கிறது.

அதேசமயம் ரணில் விக்கிரமசிங்கவோ ஒரு கண்டிப்பான நிர்வாகி போலவும், கறாராகக் கதைப்பவர் போலவும் காணப்படுகிறார். முன்னைய தசாப்தங்களில் அவர் ஒரு மென்மையான தலைவராகவே பார்க்கப்பட்டார். ஆனால் அவருடைய கட்சிக்குள்ளேயே அவரைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவும், வயது முதிர்ச்சி காரணமாகவும் அவர் ஓர் இறுக்கமான நிர்வாகியாக உருவாகியிருப்பதாக தென்னிலங்கை அரசாங்க வட்டாரங்களில் கருதப்படுகிறது. தனது அமைச்சர்களோடு கண்டிப்பாக நடந்துகொள்ளும் அவர் அதே அளவு கண்டிப்போடு இனவாத ஊடகங்களையும் அண்மையில் நாடாளுமன்றத்தில் சாடியிருந்தார். அதுமட்டுமல்ல இலங்கைத் தீவின் நீதிபரிபாலன அமைப்பைக்குறித்தும் இறந்தகாலத்தில் இழைக்கப்பட்ட சிலதவறுகளைக் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பதைகடந்தவாரம் இலங்கைக்கு வந்துபோன ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஒருபுறம் பேராசைகள் குறைந்தசாதுவானஒரு ஜனாதிபதி இன்னொருபுறம் கண்டிப்பான, கறாரானஒருபிரதமர். இந்த இருவருடையதும் சேர்க்கையானது அனைத்துலகஅளவில் அதிகம் எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறது. முதலாவதாக இச் சேர்க்கையானது மேற்குக்கும், இந்தியாவுக்குமான கதவுகளைஅகலத் திறந்திருக்கிறது. இரண்டாவதாககடந்தகாலத் தவறுகளுக்குரிய ஏதோ ஒரு பரிகாரத்தைக் கண்டடையப் போவதானஒருதோற்றத்தையும் காட்டுகிறது.

இதுகாரணமாகவே இலங்கைக்கு வந்து போகும் மேற்கத்தையத் தூதுவர்கள் சிலசமயங்களில் இந்த அரசாங்கத்தின் பிரச்சாரகர்கள் போலமாறி விடுகிறார்கள். உதாரணமாக அண்மையில் வந்து போனசமந்தாபவர் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனைச் சந்தித்தார். இதன்போதுவிக்னேஸ்வரன் நடப்புநிலைகள் தொடர்பாகத் தமதுஅதிருப்தியைத் தெரிவித்துள்ளார். ஆனால் சமந்தாபவரோ ஆட்சிமாற்றத்தின் பின் நிகழ்ந்த நல்லமாற்றங்கள் என்றுஅவர் கருதுபவற்றை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

இவ்வாறாக மைத்திரி-ரணில் அரசாங்கமானது தனது அனைத்துலக அந்தஸ்தை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டு வருகிறது. இது இப்படியே போனால் ஒருகட்டத்தில் மேற்குநாடுகள் இந்தஅரசாங்கத்தை ஒரு மென்சக்திஅரசாங்கம் என்று வர்ணித்தாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறாக இந்தஅரசாங்கத்தின் அனைத்துலகக் கவர்ச்சி அதிகரித்து வருவதனால் பேரம்பேசும் சக்தியும் அதிகரித்துவருகிறது. அதனால் தான் தை;திரியும் ரணிலும் கடந்த ஜெனிவாத் தீர்மானத்தின் போதுஐ.நாவில் வாக்குறுதி அளித்ததற்குமாறாக இப்பொழுது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகுறித்துப் பேசிவருகிறார்கள். தேர்தலில் தோற்றசரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகளைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக ஒருவித தேய்மானத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. நவிப்பிள்ளை அம்மையார் பொறுப்பில் இருந்தபோது பன்னாட்டு விசாரணைக்கான கோரிக்கையே வலுவாகக் காணப்பட்டது. ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் மேற்குநாடுகள் அந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. ஆட்சிமாற்றத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களும் ஒருவிதகலப்புப் பொறிமுறையைத்தான் தெரிவுசெய்தார்கள். ஆனால் தீர்மானம் நிறைவேற்றுப்படும் போது இலங்கைஅரசாங்கம் அதற்குள்ளும் திருத்தங்களைக் கொண்டுவந்தது. அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறைக்குப் பதிலாக பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கியகலப்புப் பொறிமுறை என்று தீர்மானம் மாற்றப்பட்டது. இப்பொழுது சிலமாதங்களின் பின் உள்நாட்டுப் பொறிமுறைதான் என்று கூறப்படுகிறது. அதாவது ஆட்சிமாற்றத்தின் கீழான கடந்த ஓராண்டு காலகட்டத்திற்குள் விசாரணைப் பொறிமுறை படிப்படியாகத் தேய்ந்துவருகிறது.

இது தொடர்பாககடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அவர் விஜயம் செய்த போது அங்குவைத்து அல்ஜசீரா செய்தியாளர் மேற்படி கேள்வியை அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோநேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து சுற்றி வளைத்துப் பதில் சொல்லியுள்ளார். அவரது விஜயத்தின் முடிவிலும், பின்னரும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களை வைத்துப் பார்த்தால் அதுவிடயத்தில் அவர் அரசாங்கத்திற்கு நோகக் கூடியவிதத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை.  இதுதான்  இப் போதுள்ளநிலைமை.

தமிழ்மக்களிடம் இப்பொழுது வன்சக்திகிடையாது. மென்சக்தியும் முழு வளர்ச்சிபெறவில்லை. இத்தகையதோர் பின்னணியில் போர்க் குற்றவிசாரணைகளில் இறுதியாகக் கிடைக்கப்போகும் நீதியேதமிழ்மக்களின் அடுத்தகட்ட அரசியலுக்கான பாதுகாப்புக் கவசமாகும். அதனால்தான் தமிழ்மக்களில் ஒருபகுதியினர் தமக்குப் பரிகாரநீதியே வேண்டும் என்றுகோரிவருகிறார்கள். இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் அவர்களுடைய அடுத்தகட்ட அரசியலுக்கான முதலீடாகக் காணப்பட்டது. இந்த இழப்புக்களுக்கு எதிரானநீதியே இனப்பிரச்சினைக்கான தீர்வுமாகும் என்று தமிழ்மக்களில் ஒரு பகுதியினர் கூறிவருகிறார்கள். அதாவது இனப் படுகொலைக்கு எதிரான பரிகார நீதியே இனப் பிரச்சினைக்கான தீர்வுமாகும்.

இவ்வாறு பரிகார நீதியைப் பெறுவதாக இருந்தால் அதற்குரிய விசாரணைப் பொறிமுறை ஆகக்கூடிய பட்சம் அனைத்துலக மயப்பட வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு விசாரணைப் பொறிமுறை அனைத்துலக மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்மக்களுடைய பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கும். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக அந்தவிசாரணைப் பொறிமுறையை அனைத்துலக மயநீக்கம் செய்வதில் மைத்திரி-ரணில் அரசாங்கம் படிப்படியாக வெற்றிபெற்று வருகிறது. அதாவது தொகுத்துக் கூறின் தமிழ் மக்களுடைய பேரம்பேசும் சக்தி குறைந்துவருகிறது.

இவ்வாறு தமிழ்மக்களுடைய பேரம்பேசும் சக்தியை குறைத்து வரும் அரசாங்கத்தின் அனைத்துலகக் கவர்ச்சியோ உயர்ந்துகொண்டே போகிறது. தமிழ் வன்சக்தி அகற்றப்பட்டிருக்கும் ஒரு வெற்றிடத்தில் கடந்த ஆறேமுக்கால் ஆண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மென் சக்தியானது அதன் முழு வளர்ச்சியை இதுவரையிலும் பெறவில்லை.

இப்போதுள்ளநிலைமைகளின் படிதமிழ் மென்சக்தியானது முதலாவதாக கோட்பாட்டுத் தெளிவுடையதாக கொள்கைப் பிடிப்புள்ளதாக இருக்க வேண்டும். இரண்டாவதாகஅந்தக் கொள்கையின் பிரகாரம் அர்ப்பணிப்புக்களைச் செய்வதற்கும், தியாகங்களைச் செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். மூன்றாவதாக மைத்திரி-ரணில் அரசாங்கத்தை அதிகம் எதிர் பார்ப்போடுபார்க்கும் ஓர் உலகச்சூழலில் சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை சுழித்துக் கொண்டோடத் தெரியவேண்டும்.

ஆனால் இங்குவிபரீதம் என்னவெனில் தன்னை ஒரு மென்சக்தி போல கட்டியெழுப்பமுற்படும் மைத்திரி-ரணில் அரசாங்கமானது போர்க் குற்றவிசாரணைப் பொறிமுறையைப் படிப்படியாக அனைத்துலக மயநீக்கம் செய்துவரும் ஒருபின்னணியில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்ற மிதவாதிகளோ ஒரு கட்சி ஏகபோகத்தை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழரசுக்கட்சியில் இணைந்திருக்கிறார்.

அதேசமயம் ,தயான் ஜெயதிலகவால்  மென்சக்தி என்று அழைக்கப்பட்ட விக்னேஸ்வரனோ கூட்டமைப்புக்கு எதிராகத்     திட்டவட்டமாகத் தலைமை தாங்கத் தயங்குகிறார். தமிழ் மக்கள் பேரவை எதிர்காலத்தில் ஒரு கட்சியாக மாறப் போவதில்லை என்ற நிபந்தனையோடுதான் அவர் அதில் இணைத்தலைவராக இணைந்திருக்கிறரர். ஒருமாற்றுத் தலைமையைக் கட்டியெழுப்ப அவர் இன்று வரையிலும் தயாரில்லை.

அதாவதுதமிழ் மென்சக்தியானதுதுலக்கமானஒரு முழு வளர்ச்சியை இனிமேற்றான் பெற வேண்டியிருக்கிறது. அப்படியொரு வளர்ச்சியை அடைவதற்கிடையில் தமிழ் மக்களின் தலையில் மேலுமொரு தீர்வற்றதீர்வு கட்டியடிக்கப்பட்டுவிடுமா?.
10.02.2016

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128940/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.