Jump to content

இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி


Recommended Posts

இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி
 

article_1455337792-2.jpg

அவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வல்லமை படைத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் ஸ்ரீ ஆ.சந்தானகிருஷ்ணன் அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார். 

ஈழமணி திருநாட்டின் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தன் தந்தையாரான ஸ்ரீ ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றவர். 

அமரர்களான இசை மேதைகள் வலங்கைமான் ஸ்ரீ ஏ.சண்முகசுந்தரம்பிள்ளையும், ஸ்ரீ ஏ.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள். 

காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் சங்கீத பூஷணங்கள் ஸ்ரீ எஸ்.கணபதிப்பிள்ளை, ஸ்ரீ பொன் சுந்தரலிங்கம், ஸ்ரீ  எம்.ஏ. குலசீலநாதன், சென்னை பல்கலைக்கழக பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி எம்.ஏ. ஸ்ரீமதி குலபூஷணி கல்யாணராமன், ஸ்ரீமதி சிவசக்தி (இலண்டன்), ஸ்ரீமதி சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோரின் இசை அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ரவிச்சந்திராவின் மிருதங்க அரங்கேற்றத்தில் யாழ். நகர மண்டபத்தில் கஞ்சிரா வாசித்தவர். கொழும்பிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பிரபலம் பெற்ற நடன மணிகளின் நாட்டிய அரங்கேற்றங்களிலும் மிருதங்கம் வாசித்துள்ளார்.  
ஈழத்திலும், இலங்கையிலும் பல வளரும் கலைஞர்களின் அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார். கலையில் அவர்கள் காலடி வைத்த வேளையில் இவரின் கலை உதவி உறுதுணையாக இருந்துள்ளது. 

அண்மை காலத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி, பிறிஸ்பேன் ஆகிய நகரங்களில் ஸ்ரீமதிகள் ஆனந்தவல்லி, தமயந்தி, சித்திரா ஆகியோரின் மாணவிகளினது நடன அரங்கேற்றங்களில் மூன்றாவது தலைமுறைக்கும் மிருதங்கம் வாசித்தது பெருமைக்கு உரியது.  

1965-1970 ஆண்டு காலப் பகுதியில் N.C.O.M.S பரீட்சை பிரதம அதிகாரியாக கடமையாற்றிவர். அப்போது பரீட்சைக்குத் தோற்றிய பலர் இன்று புகழ்பூத்த மிருதங்க கலைஞர்களாக திகழ்கின்றார்கள். இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஓமான், ஹொங்கோங், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களின் Super grade Artist ஆவார். சென்னை AIR இலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரண்டு வாத்தியங்களிலும் கச்சேரி செய்து பங்குபற்றியவர். 

இவருக்கு நல்லை ஆதீனமும், மதுரை ஆதீனமும் இணைந்து மிருதங்க பூபதி, கொழும்பு கப்பித்தாவத்தை தேவஸ்தானம் ஞானச்சுடரொளி, இலங்கை அரசாங்கம் கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும், பொற்கிழி, தங்கப் பதக்கங்கள், பொன்னாடை வழங்கியும் கௌரவித்துள்ளனர்.

இவரது சஷ்டியப் பூர்த்தி நிமிர்த்தமாக கொழும்பு கம்பன் கழகம் லயசங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிருதங்கம் வாசிக்க வைத்து பொன்னாடை போர்த்தியும், யாழ். இசை வோளாளர் சங்கமும், கச்சேரி செய்ய வைத்து பொன்னாடை போர்த்தியும் கௌரவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சிட்னி கலாபவனம் கலா திலகம் என்னும் விருதையும், சிட்னி கம்பன் கழகம் சான்றோர் விருது வழங்கியும் கௌரவித்துள்ளது. 

இவர் சென்னை இசை விழாக்களில் மியூசிக் அகாடமி, அண்ணாமலை மன்றம், ரசிக ரஞ்சன சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சபா, கிருஷ்ணகான சபா, வாணிமஹால் மற்றும் பல சபாக்களிலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரு வாத்தியங்களும் வாசித்துள்ளார்.  

இசைமேதைகளான சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, வைணிக வித்துவான் எம்.ஏ.கல்யாண கிருஷ்ண பாகவதர், ரி.கே. ரங்காச்சாரி, மஹாராஜபுரம் சந்தானம், கே.பி. சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி, ராதா ஜெயலஷ்மி, டொக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டொக்டர் கே.ஜே. ஜேசுதாஸ், ஓ.எஸ். தியாகராஜன், சேஷகோபாலன், மண்டலின் சிறிநிவாஸ், சந்தானகோபாலன், சஞ்சய் சுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், சீர்காழி எஸ். கோவிந்தராஜன், சுதா ரகுநாதன், பம்பாய் ஜெயஸ்ரீ, நித்தியஸ்ரீ, ரி.வி. ச! ங்சரநாராயணன், ஹைதராபாத் சகோதரிகள், வயலின் மேதைகள் டி.என். கிருஷணன், சுப்பிரமணியம், எல். சுப்பிரமணியம், கணேஷ்-குமரேஸ், வேணுகானவித்துவான்களான டொக்டர். ரமணி, ஷஷாங் ஆகியோருக்கும் வாசித்துள்ளார்.  

இவர் இந்தியாவின் சிரேஸ்ட மிருதங்க வித்துவான்களான ரி.கே.மூர்த்தி, பாலக்காட்டு ரகு, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன!, அமரர் தஞ்சை உபேந்திரன், குருவாயூர் துரை, ஸ்ரீமுஷ்ணும் ராஜாராவ், திருச்சி சங்கரன், திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் இளைய தலைமுறை வித்துவான்களுடனும் இணைந்து கஞ்சிரா வாசித்ததை நினைவு கூர்ந்து மகிழ்ந்ததோடு, பெரும் பாக்கியமாகக் கருதினார். 

இசை ஆளுமை கொண்ட காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தது இசை உலகத்துக்கு ஒரு பேரிழப்பாகும்.

இவரின் இறுதி நிகழ்வுகளின் விவரம்:

Viewing: On Date 15th Feb 2016 (Monday)
Time between 06:00 PM to 08:00 PM
At Guardian Funerals, 1 First Avenue, Blacktown, NSW 2148, Australia.
 
Last ride and Cremation: On Date 17th Feb 2016 (Wednesday)
Time between 02:00 PM to 04:00 PM
At Pinegrove Memorial Park, “North Chapel”,
Eucalyptus Drive (OFF Kington Street), Minchinbury, NSW 2770, Australia.

- See more at: http://www.tamilmirror.lk/165939/-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.cm7dPpWA.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.... ஆழ்ந்த இரங்கல்கள்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.