Jump to content

யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா-செவ்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

jaffna_kingசுமார் 400 வருடங்களிற்கும் மேலாக செழிப்புடன் விளங்கிய யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா. நல்லூரை இராசதானியாக ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாண அரசர்களின் பரிபாலனம் போர்த்துக்கேயரின் வருகையுடன் முடிவிற்கு வந்தது.யாழில் அரசபரம்பரைக்குரிய சங்கிலியன்தோப்பு அரண்மனைக்கு உரித்துள்ள குடும்பத்தின் வாரிசு இவர்.தற்பொழுது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். தற்போதும் அரச சம்பிரதாயங்களை கைவிடாமல் வாழ்ந்து வருகிறார். 2005ம் ஆண்டு அரசகுடும்ப உறுப்பினர்களின் ஏகோபித்த சம்மதத்துடன் அரசகுடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சம்பிரதாய ராஜாவுடனான நேர்காணல் இது.

1. யுத்த சமயத்தில் இராணுவம் புலிகள் இருதரப்பையும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு கடும் தொனியிலான எச்சரிக்கையொன்று வெளியிட்டிருந்தீர்கள். பின்னர் அதுபற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை. உங்களது யாழ்ப்பாண இராச்சியத்தில் இன்னும் உயர்பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. மக்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அது பற்றி நீங்கள் பேச மாட்டீர்களா?

ஆம். போரினுடைய இறுதி நாட்களில் போரை நிறுத்துவதற்கும் சரணடைவதற்கும் இன்னும் கால அவகாசம் உள்ளதாகக் கூறியிருந்தேன். அந்தக் கட்டத்தில் இரு தரப்பினரும் போராடிக் கொண்டிருந்ததுடன் என்னுடைய பேச்சையோ அல்லது சர்வதேச அமைப்புக்களினுடைய பேச்சையோ செவிமடுக்கும் நிலையிலிருக்கவில்லை.

நான் நினைக்கவில்லை இலங்கை அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றும் என்று. ஆனால் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும். அண்மையில் அவர்கள் வடக்கில் தங்கள் தலையீடுகளைக் குறைத்துக்கொண்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியப் பெற்றேன்.

என்னுடைய புத்தாண்டுச் செய்தியிலும் பிற பத்திரிகை நேர்காணல்களிலும் இடம்பெயர்ந்த மக்கள் பற்றியும் அவர்கள் சொந்த இடங்களில விரைவில் தாமதமின்றி மீள்குடியமர்தப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளேன்.

இனி போரைப் பற்றிக் கதைப்பதையோ மக்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று பெயரிடுவதையோ நிறுத்தவேண்டிய நேரம். யுத்தம் முடிந்துவிட்டது. போரின் காரணமாக மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைமை, அன்பிற்குரியவர்கள், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் இழந்துவிட்டனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

2. நீங்கள் யாழ்ப்பாண அரச பரம்பரையின் வாரிசு. இப்பொழுது வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அங்கு வாழ்க்கை எப்படியுள்ளது. சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லையா?

என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்ததால் இலங்கயை விட்டு வெளியேறினேன். என் சொந்த நிலமல்லாத ஒரு தேசத்தில் வாழ்கின்றேன். என்னுடைய தேசத்தை விட்டு வந்த நாள் முதல் என் மனமும் இருதயமும் அங்கேயே இருக்கின்;றது. நான் இலங்கையில் நடைபெறும் நிலமையை நன்கு அறிவேன். அன்றாடம் நாட்டில் நிகழும் தகவல்களோடு தொடர்பில் உள்ளேன்.

என்னுடைய கடமைகள் என்னை ஆக்கிரமித்துள்ளன. நான் லண்டனில் சர்வதேச முடியாட்சிக் குழு உறுப்பினராக இருக்கின்றேன். தென் கிழக்காசிய அரச குடும்பங்களிற்கிடையில் நட்புறவை ஊக்குவிக்கின்ற தென் கிழக்காசிய அரச குழுவிலும் உறுப்பினராகவும் உள்ளேன்.

ஒரு முறை நீங்கள் ராஜாவாகப் பிறந்தால் பிறரிற்காக கஸ்டப்பட்டு வேலை செய்யவேண்டி இருக்கும். உங்களுடைய தேவையகளை விட அவர்களுடைய ஈடுபாடுகளினை வைத்தே அணுகவேண்டி இருக்கும்.

பெயர்ந்து வாழும் பலரும் தங்களுடைய தாய் நாட்டிற்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தற்போது நாடு திரும்பியுள்ளவர்கள் ஒன்றிணைவதன் மூலம் நாட்டில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். மீண்டும் சொல்கிறேன் என் மனமும் இதயம் இலங்கையிலேயே உள்ளது. நம் எல்லோருக்கும் வாழ்க்கை என்பது ஒரு நித்திய போராட்டம். நான் மீண்டு வர பல வருடங்களாகப் போராடிக் கொண்டு உள்ளேன்.

3. அரசபரம்பரைக்கு பின்னர் வந்த தமிழ் தலைவர்களில் யாரை சிறந்தவராக நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் எந்த அரசியல் கட்சிக்குமோ அல்லது ராஜ ஆட்சிக்குமோ ஆதரவு இல்லை. அரசியல்வாதிகளுக்கு மக்களினுடைய வாக்குகள்தான் வேண்டும். பின்பு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. 2015 இல் தமிழர்களின் வாக்குகளால்தான் அரசாங்கமே மாற்றப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைத்துப் முக்கிய பிரச்சினைகளயும் எழுத்து வடிவத்தில் கொண்டு வருவதுடன் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு உடன்பாட்டிற்கும் வரவேண்டும்.

இன்று தமிழ் அரசியல்வாதிகள் ராஜதந்திரத்தின் அடிப்படையில் செயற்படுவதில்லை. அவர்கள் ராஜதந்திரம் என்றொரு வார்த்தை இருக்கின்றது என்பதையே மறந்துவிட்டனர்.

பலர் தலைவராக இருப்பதற்கும் கொடி பிடிப்பதற்குமே விரும்புகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் தங்களுக்கென்று ஒரு நந்திக்கொடி இருக்கின்றது என்பதை மறக்கக் கூடாது. 1970 இலிருந்து பல்வேறு தமிழ் இயக்கங்கள் தோன்றி அவற்றிற்கு தற்போது என்ன நடந்தது என்பதையும் நான் நினைவுபடுத்தவேண்டியதில்லை என்று நினைக்கின்றேன்.

4. உங்களிற்கு பிடித்த யாழ்ப்பாண உணவு எது?

எனக்குப் பிட்டு , இடியப்பம், , முருங்கைக்காய் கத்தரிக்காய்க் கறி ஆகியன பிடிக்கும். (மிகவும் பிடித்தது ராசவள்ளிக்கிழங்கு, பாயாசம் )

5. யாழ்ப்பாணம் வந்தால் நிச்சயம் செய்தே தீர வேண்டும் என்ற தீராத ஆசையேதாவது உள்ளதா?

நான் முதலில் என் தகவலில் குறிப்பிட்டது போலவே நான் ஆட்சி செய்வதற்கோ அல்லது மக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கோ கேட்கவில்லை. ஆனால் நான் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய இங்கே இருக்கின்றேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். நாங்கள் இளைய தலைமுறையினரை நாட்டில் முக்கிய பங்குவகிக்க முன்வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

ஒற்றுமையாக இருப்பதுவே நாட்டில் பிரகாசமான எதிர்காலமொன்றை உருவாக்குவதற்கான ஒரே வழி என்பதை அவர்களுக்கு புகட்ட வேண்டும். நாங்கள் தமிழ் மக்களிற்கு சுதந்திரமாகக் கதைப்பதற்கும் சம உரிமையுடன் தங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

மாணவர்களினுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நான் வடக்கு, கிழக்கு மற்றும் ஏலவே பின்நிற்கும் தெற்கையும் அபிவிருத்தி செய்வேன். நான் தமிழர்களுடைய வளமான பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவேன். சில காலத்திற்குள் யாழ்ப்பாண இராச்சியம் (கோட்டை) திருத்தியமைக்கப்படும். அத்தோடு அந்த மகத்துவமான நாள் மக்களால் கொண்டாடப்படும் தினம் விரைவில் வரும் என்று நான் நம்புகின்றேன்.

6. வடக்கு மாகாணசபைக்கு உங்களின் ஆலோசனை என்ன?

பிறபகுதியிலிருந்து இலங்கையின் வடபகுதி ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. ஆகவே வட மாகாணசபையை உறுதியாக நின்று தமிழ் மக்களினுடைய பிரச்சினையைத் தீர்த்து வைக்கவேண்டும் எனவும் அத்தோடு வடமாகாணசபை வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றேன்.

7. மைத்திரியை நேரில் சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?

ஜனாதிபதி இலங்கையினுடைய அரசாங்கத்தையும் மக்களையும் புது முன்னடைவுகளை; பெறுவதற்கு வழிநடாத்துவார் என நம்புகின்றேன். தமிழ் இன முரண்பாடு இன்னும் முழுமையாகத் தீர்கப்படவில்லை. தமிழ் மக்கள் சரியான அங்கீகாரம் பெறவேண்டும்.

நாட்டின் அனைத்து அரசியல் தமிழ் கைதிகளுக்கும் பொமன்னிப்பு வழங்கப்படுவதோடு குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

ஊழல் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக இயற்றி ஊழலுக்கான தண்டனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். சம்பந்தப்பட்ட ஊழல் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்.

8. எப்பொழுது யாழ்ப்பாணம் வருகிறீர்கள்?

இலங்கை திரும்புவதற்கான என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை நானறிவேன். இருந்தபோதிலும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் என் வருகைக்கான பாதுகாப்பை பொறுப்பேற்று நாட்டிற்கு வருவதற்கும் தங்குவதற்குமான ஏற்பாடுகளை உறுதி செய்தாலே நான் வரக் கூடும். இப்போதுவரை இனந்தெரியாக் குழுக்களாலோ அல்லது தனிப்பட்டவர்களாலோ எனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

9. யாழ்ப்பாணத்தில் சமூகவிரோத செயல்கள் அதிகரித்து செல்வதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். சிலகாலத்தின் முன்னர் பிபிசி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது ‘ஓரினச் சேர்க்கையாளர்களிற்கு மரணதண்டனை கொடுப்பேன்’ என்ற சாரப்பட சொன்னீர்கள். யாழ்ப்பாணத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களிற்கு உங்களின் தண்டனை என்ன?

(1)ஓரினச் சேர்க்கையானது மரணதண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றமாக இன்னும் சில நாடுகளில் உள்ளது. அவர்களில் எத்தனை பேரைத் தண்டிக்க வேண்டும் அல்லது தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? நாம் மக்களிற்கும் இளைய தலைமுறையினருக்கும் நோய் ஆபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வைக் கற்றுக் கொடுக்கவேண்டும். ஏனெனில் இது உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய பிரச்சினை ஆகும்.

இலங்கை பெருவாரியாக ஒரு கல்வியறிவுள்ள நாடு. ஆனால் கடுமையான சமூக அமைப்பு மற்றும் பழமைவாத மதத் தரப்பு ஆகியன இந்தப் பிரச்சினையயை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம். மேலும் படித்த சமுதாயத்தில் கூட ஓரினச் சேர்க்கையைப் பற்றிக் கதைப்பதென்பது ஒரு விலக்கப்பட்ட விடயமாகவே உள்ளது.

எய்ட்ஸ் தெற்காசியாவிலேயே ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. கிராமப் புறங்களில் ஒரு முறையான சுகாதார மருத்துவ உட்கட்டமைப்பு அவசியம் தேவை. அரசாங்கத்தினுடைய உந்துசக்தி மற்றும் முயற்சி ஆகியன முறையான சுகாதார வசதி, விழிப்புணர்வு இன்றி இறக்கும் மக்களைப் பாதுகாப்பதாய் அமையவேண்டும்.

நான் இலங்கையில் நிலவும் மோசமான எய்ட்ஸ் நோய் நிலைமை குறித்து வருத்தப்படுகின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விரும்புகின்றேன்.

http://www.kuriyeedu.com/archives/35482

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா

இவரைப்பற்றி வாசித்ததுண்டு. ஆனாலும் பெயர் ரொம்ப இடிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சிறுவர்களாக இருந்தபோதே மதம்மாற்றப்பட்டு வளர்க்கப்பட்டார்கள் என்று வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இவரைப்பற்றி வாசித்ததுண்டு. ஆனாலும் பெயர் ரொம்ப இடிக்குது.

வரலாறு முக்கியம் அமைச்சரே,

சிங்கள கோட்டை இராசதானி அரசருக்கு, போர்த்துக்கேயரால் கழுத்துக்கு கத்தி வந்த போது, கத்தோலிக்கராக டொன் யுவான் தர்மபால என்று மதம் மாறி தப்பிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் தோற்கடித்து கொல்லப் பட்ட பின்னர், அவனது வாரிசுகள், மதம் மாறித் தான் தப்பி பிழைத்தார்கள்.

இவர் யாழ்ப்பாண இராசதானி வாரிசு என்றால் அந்த மதம் மாறித் தப்பிப் பிழைத்தவர்களில் வந்த வாரிசு தான்.

500 வருடங்கள் ஆகின்றன. போர்த்துக்கேயரிடம் யாழ் இராசதானி வீழ்ந்து.....

ஆங்கிலேயர் போகும்போது சிங்களவனிடம் வழங்கியதால் இன்னும் அடிமை மண் தான்.

என்று தான் விடியுமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்களை அடிமைகளாக  தாரை வாத்துப்போட்டு, அதில குளிர் காயுதுகள். குற்ற உணர்வு சற்றுமில்லாமல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனுங்க கொஞ்சப் பேர் இப்ப கொஞ்சக்காலமா நாங்க தான் யாழ்ப்பாணி என்று கிளம்பி இருக்கிறாய்ங்க. இவங்களை இயக்கிறது அந்நிய சக்திகள். சில அந்நிய சக்திகள்.. எங்களில் சிலதை வைச்சே எங்களை குழப்பிற அலுவலை நல்லா பார்க்கிறார்கள்.

அகதிகளாக உள்ள மக்களுக்கு உதவ வக்கில்லாத நெதர்லாந்து தான் விட்டிட்டு போன கோட்டையை (நாங்க எங்களின் அடிமைச் சின்னமாக கருதும் கோட்டையை) புனரமைக்க கொட்டின காசு சொல்லும்.. அது இன்னும் காலணித்துவத்தை கைவிடல்லை என்று. அந்தக் காலணித்துவத்தின் பாதணிகளாக இருக்கும்.. இதுங்க எல்லாம்.. தமிழர் இராய்ச்சியத்தின் இராசதானிகள் அல்ல.. மாறாக.. தமிழர் இருப்பை கருவறுக்க வரும் காட்டேரிகள்.

மக்கள் இதில தெளிவா இருக்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி !<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.2.2016 at 7:53 PM, colomban said:

4. உங்களிற்கு பிடித்த யாழ்ப்பாண உணவு எது?

எனக்குப் பிட்டு , இடியப்பம், , முருங்கைக்காய் கத்தரிக்காய்க் கறி ஆகியன பிடிக்கும். (மிகவும் பிடித்தது ராசவள்ளிக்கிழங்கு, பாயாசம் )

எங்கடை ச/அரசு! புட்டு இடியப்பம் முருக்கங்காயை இன்னும் மறக்கவேயில்லை கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எங்கடை ச/அரசு! புட்டு இடியப்பம் முருக்கங்காயை இன்னும் மறக்கவேயில்லை கண்டியளோ :cool:

 இன்னும் மறக்காமல் இருக்கிறார். ஆகையால் இவர்தான் எங்களுக்கு ராசாவாக வர தகுதியானவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

 எங்களை அடிமைகளாக  தாரை வாத்துப்போட்டு, அதில குளிர் காயுதுகள். குற்ற உணர்வு சற்றுமில்லாமல். 

இந்தக் கூற்றை தாயகத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளும், போரினைச் சுமந்த மக்களும் இன்னொரு தரப்பை நேக்கி கேட்பதே நியாயமானதும் சரியானதும் ஆகும். அந்த இன்னொரு தரப்பு இப்பொழுது "ஜெனிவா திருவிழா"வுக்கு ஆயத்தமாகி வருகின்றது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.