Jump to content

அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!


Recommended Posts

அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!
 
 
அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சமூகத்தினர் சிவாகமங்களும், திருமுறைகளும் புலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளும் என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தியும், இந்து நாகரிகத்துறை சமூகத்தை நோக்கி பயணிக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் ஏற்பாடு செய்துள்ள முதலாவது அனைத்துலகச் சைவ மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நேற்று இடம்பெற்றன.
 
இந்து நாகரிகத்துறை பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்பநாள் நிகழ்வுகளின் போது பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும், சிறப்பு விருந்தினர்களாகக் கலைப்பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானக்குமரன், இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், அகில இலங்கை சைவப் புலவர் சங்கத் தலைவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
ஆதார சுருதி உரையினை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் க.பாஸ்கரன் நிகழ்த்தினார்.
 
இந்த நிகழ்வுகளில் பல்கலைக்கழக பேரா சிரியர்கள்இதுறை சார் விரிவுரையாளர்கள்,மாணவர்கள், சைவ ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் சமகால ஆய்வு அமர்வுகள் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையும் நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளன.நிறைவு நாள் நிகழ்வுகள் 14 ஆம் திகதி மாலை 2 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளன.
 
அதேபோன்று ஆன்மீகச் சுற்றுலா நிகழ்வுகள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளனம குறிப்பிடத்தக்கது. 
 
                                                    saiva%20manadu1.jpg
 
                                                    saiva%20manadu3.jpg
 
                                                    saiva%20manadu2.jpg
 
                                                    saiva%20manadu4.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
                                                  1455358602_open1.jpg
 
                                                  1455358641_open3.jpgபுரட்சி அரசியலுக்கு சிறுவர்.......சைவமாட்டுக்கு முதியோர் (ப‌ட்டு வேஷ்டி கோஸ்டி)
Link to comment
Share on other sites

கூட்டம் நடத்துவதை விட்டு போட்டு சைவ மக்களுக்கு ஏதாவது நன்மை செயுங்கோ இல்லாவிடில் சிவபுராணமும் திருவாசகமும் ஓதிய வாயால் அல்லா உ அக்பரும் , துவவும் ஓத வேண்டிய நிலை வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.