Jump to content

'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.!


Recommended Posts

'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.!

 

மிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக  கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும் தருணம் இது. திமுகவை பாரதிய ஜனதா நெருங்கி வருகிறது என்றால் திமுக தலைமையோ விஜயகாந்தை நோக்கி வலை வீசுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி யாருடன் வைக்கலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் 'மக்கள் நல கூட்டணி ' என்ற ஒரு கூட்டணி ஏற்பட்டு  முழு வீச்சாக களத்தில் செயல்பட்டு வருகிறது.

makkal%20.jpg

இந்த கூட்டணிக்கு மதிமுக செயலாளர் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜி.கே. வாசனோ , 'கழுவுற மீனுல நழுவுற மீனாக ' நழுவிக் கொண்டிருக்கிறார். கடைசிக் கட்டத்தில் எங்கும் பேரம் படியாத பட்சத்தில் மக்கள் நலக்கூட்டணியை நோக்கி விஜயகாந்த் காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு மக்கள் நலக் கூட்டணி ஒரு 'மனமகிழ் மன்றம்' போல இருந்தாலும் விஜயகாந்தும், ஜி.கே. வாசனும் இணையும் பட்சத்தில் 'கில்லி'  கூட்டணியாக மாறி விட வாய்ப்புள்ளது.

தேர்தல் சமயத்தில் ஜி.கே. வாசனும், விஜயகாந்தும் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு இருக்கிறது. 'அவர்கள் வரும் போது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் நாம இப்போதே இயங்க  தொடங்கி விடுவோம்' என்று மக்கள் நலக் கூட்டணி இளைய தலைமுறையை குறி வைத்து முழு வீச்சாக இயங்க தெடங்கி விட்டது

தமிழக கட்சிகளை  பொறுத்தவரை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் முதன் முறையாக கால் வைத்து,  இளையதலைமுறையை குறி வைத்து களத்தில் இறங்கியது திமுகதான். அந்த கட்சியின் தலைவரே கூட 93 வயதிலும்,  ஃபேஸ்புக் பக்கத்தில் முழுமையாக இயங்குவது போல காட்டிக் கொள்வார். அவரை ஃபேஸ்புக் பக்கத்தில் இயங்க வைக்கவென்றே  ஒரு தனிக்குழு  இயங்கியும் வருகிறது.

திமுக சமூக வலைதளங்களில் முழுமையாக இயங்க காரணம்,  எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் ஒரு கோடியே 30 லட்ச இளைய தலைமுறை வாக்களிக்கப்போகிறது என்பதால்தான். கருணாநிதி ஃபேஸ்புக் பககத்தில் இயங்குவதற்கு இதுதான் முதல் காரணம் ஆகும்.

இப்போது இதனை மக்கள் நலக் கூட்டணியும் முழுமையாக புரிந்து கொண்டு விட்டது. அண்மையில் இந்த நான்கு தலைவர்களும் ஒரு 'செல்ஃபி ' வெளியிட்டார்களே அதற்கு காரணமும் இதுதான். இளைய தலைமுறையை கவரும் வகையில்தான் இந்த செல்ஃபியும் எடுத்து வெளியிடப்பட்டதாம். அது மட்டுமல்ல மக்கள் நல கூட்டணியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அம்மையாரையும் மூத்தவரையும் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

ஊழல்களின் மொத்த உருவம் இந்த கட்சிகள் என்று அதிமுக, திமுக பற்றிய மீம்ஸ்களை அசராமல் வெளியிட்டு  கடுமையாக விமர்சித்தும் வருகிறது. இளம் வாக்காளர்களை கவரும் வகையில் மீம்ஸ்களை தயார் செய்யவே தனி டீம் மக்கள் நல கூட்டணியில் இயங்கி வருகிறதாம். மேலும் இந்த பக்கத்தை ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினரும்' லைக் 'செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் மாற்றம் நிகழ்ந்தால் 1 கோடியே 30 லட்சம் இளம் வாக்காளர்கள்தான் காரணமாக இருப்பார்கள் என்பதை மக்கள் நல கூட்டணி நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. அதற்கேற்ற வகையில் மீம்ஸ் வகையறாக்கள் வகை வகையாக தயார் செய்யப்பட்டு வருகிறது.  தேர்தல் சமயத்தில் இந்த இரு கட்சிகளை மீம்ஸ்களாலேயே பதம் பார்த்து விடலாம் என்பதும் மக்கள் நல கூட்டணியின் நம்பிக்கை.

people%20welfare%20meems.jpg

இளைய தலைமுறையின் மன ஓட்டத்தை நன்றாகவே புரிந்தும் வைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி, இன்னொரு கேள்வியை முன்வைக்குமாம். ஜி. கே. வாசனும் விஜயகாந்தும் இணையும் பட்சத்தில்,   "நாங்களும் எம்.பியாக மத்திய அமைச்சராக இருந்துள்ளோம். எங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா?" என்ற கேள்வியையும் தேர்தல் சமயத்தில் கேட்குமாம். 

அதே போல பிரபல சமூக வலைதளமான 'யூ டியூப்' ல் புதிய அக்கவுண்ட்டை தொடங்கி இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. இதில் கூட்டணியின் செயல்பாடுகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. ஆக முழுவீச்சில் களம் இறங்கியிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி.

அடுத்து 'தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் ஒருங்கே தோற்கும் தேர்தலை  பார்த்திருக்கீறீர்களா? அந்த தேர்தல் இதுதான்  ' என்ற மந்திர வார்த்தையை  பயன்படுத்துமாம்.

அம்மாவும் அய்யாவும் ஜாக்கிரதை!

http://www.vikatan.com/news/tamilnadu/58892-young-generation-priority-of-makkal-nala-kootani.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானைப் பற்றிய பேச்சைக் காணேல்ல , சீமான் சிங்கிள் மானாய்க் குதிக்கப் போகிறாரா....!

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

சீமானைப் பற்றிய பேச்சைக் காணேல்ல , சீமான் சிங்கிள் மானாய்க் குதிக்கப் போகிறாரா....!

தப்பீட்டீங்க சுவி.
சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று ரஜினி போல கூறி சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. மான் கூட்டமாவும் திரியும், தனியாவும் இரைதேடும். சிங்கத்தை சிங்கிளா கூண்டுக்குள்ளயும் கொடியிலயும்தான் பாத்திருக்கேன். 

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

சீமானைப் பற்றிய பேச்சைக் காணேல்ல , சீமான் சிங்கிள் மானாய்க் குதிக்கப் போகிறாரா....!

 

10 minutes ago, ஜீவன் சிவா said:

தப்பீட்டீங்க சுவி.
சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று ரஜினி போல கூறி சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. மான் கூட்டமாவும் திரியும், தனியாவும் இரைதேடும். சிங்கத்தை சிங்கிளா கூண்டுக்குள்ளதான் பாத்திருக்கேன்.

http://www.vdstrust.org/_/rsrc/1434201673220/tinam-oru-tecika-namam-dhinam-oru-desika-namam/noname.jpg:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.