Jump to content

கவனக்குறைவாக வாகனம் செலுத்தி காலனின் கைப்பொம்மையாகாதீர்கள்! வடக்கு முதல்வர் அறிவுரை!


Recommended Posts

கவனக்குறைவாக வாகனம் செலுத்தி காலனின் கைப்பொம்மையாகாதீர்கள்! வடக்கு முதல்வர் அறிவுரை!
 
 
கவனக்குறைவாக வாகனம் செலுத்தி காலனின் கைப்பொம்மையாகாதீர்கள்! வடக்கு முதல்வர் அறிவுரை!
மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுதல், போட்டிக்கு வண்டி ஓட்டுதல், திறமையைக் காட்ட வண்டியோட்டுதல் போன்றவை கவனக் குறைவை ஏற்படுத்தும். உங்கள் கவனக் குறைவு வண்டிக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும், தெருவில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள். காலனின் கைப்பொம்மையாகி விடாதீர்கள். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
முழங்காவிலில் 9 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையக் கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அண்மைக்காலமாக பிரத்தியேக பஸ் உரிமையாளர்களுக்கும், இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகளுக்குமிடையே தினமும் ஒவ்வொரு இடங்களில் வாக்குவாதங்கள், சண்டைகள் நடைபெறுவதை  அறிகின்றோம். இது மனதுக்கு வேதனையைத் தருகின்ற ஒரு விடயமாக அமைகின்றது. பிரத்தியேக பஸ் வண்டிகள் ஆயினும் சரி,  இ.போ.ச பஸ் வண்டிகள் ஆயினும் சரி நாம் பொது மக்களுக்கும், பிரயாணிகளுக்கும் மிகச் சிறந்ததும் செளகரியமானதுமான ஒரு சேவையை வழங்கவே செயற்படுகின்றோம் என்ற மனப்பாங்கு மேலோங்க வேண்டும். எமது கடமை என்ன என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோமானால் எந்தச் சவால்களையும் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.
 
முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில்  இரண்டு சாரதிகளுக்கிடையே ஏற்பட்ட ஒரு போட்டியானது ஒன்றும் தெரியாத ஒரு 6 வயதுப் பாலகனை பாடசாலை விட்டு வீட்டுக்கு திரும்புகின்ற நேரம் உயிர்துறக்க வைத்துள்ளது. இதனை ஒவ்வொரு சாரதியும் தமது மனதில் ஒரு பாடமாகப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
அண்மையில் உங்களுடைய சேவைகள் தொடர்பான நேர அட்டவணை  தயாரிக்கப்பட்டது என்று அறிகின்றேன். எனவே இரண்டு தரப்பினரும் மிகவும் அவதானமாகவும், பற்றுறுதியுடனும், சகோதரத்துவத்துடனும் உங்கள் அரிய சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.  நீங்கள் இந்த அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு உங்கள் வாகனங்களை அல்லது பஸ் வண்டிகளை வீதி ஒழுங்குக்கமைய நிதானமாகச் செலுத்தத் தவறுகின்ற பட்சத்தில், உங்கள் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பஸ் சேவையின் வழித்தட அனுமதிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்ற விடயத்தையும் உங்களுக்கு இறுக்கமாக இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
 
இன்று திறந்து வைக்கப்படுகின்ற பஸ் நிலையமானது இந்தப் பகுதி மக்கள் மிகச் செளகரியமாகத் தங்கியிருந்து தங்கள் தங்கள் பஸ் சேவைகளைப் பெற்றுச் செல்லக் கூடியதாக அமைந்துள்ளது. இதனை அசுத்தப்படுத்தாமல், இதனுடைய அழகை குறைக்காது நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனைப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழல், மக்கள் நலம், முன்னேற்றம் என்று பலதையும் இனி மக்களே சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
 
எம்மிடையே காணப்படுகின்ற மிகப் பெரியதொரு பலவீனம் எமது தனிப்பட்ட சொத்துக்களாயின் மிகவும் அவதானமாகவும், அதன் அழகு குன்றாமலும் பாவிப்போம். அதே நேரத்தில் அது ஒரு அரச சொத்தாகவோ அல்லது மாகாணத்துக்குரிய சொத்தாகவோ இருப்பின், அதனை நாம் சீராக பராமரிக்காமல் அழியவிட்டு விடுகின்ற ஒரு தன்மை காணப்படுகின்றது. இந்த நிலை உடனடியாக மாற்றப்படல் வேண்டும்.
 
பஸ் நிலையங்களில் பீடி, சிகரெட் புகைத்தல் வெற்றிலை பாவித்து விட்டு எச்சில் உமிழ்தல், சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தல் போன்ற தீய செயல்களை நிறுத்துவது மட்டுமன்றி, அவற்றில் ஈடுபடுகின்றவர்களை நீங்கள் தற்செயலாக அடையாளம் கண்டால்கூட, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவி புரிய வேண்டும்.
பஸ் வண்டிகளைப் பராமரிப்பவர்கள், ஓட்டுபவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். எமது பணம் நாளுக்கு நாள் அதன் பெறுமதியை இழந்து வருகின்றது.
 
பஸ்வண்டிகளைக் கவனமாகப் பாவிக்காது விட்டாலோ அவற்றை நாளாந்தம் பரிசோதனை செய்து ஆவன செய்யாது விட்டாலோ, சுத்தமாக வைத்திருக்கத் தவறினாலோ அதனால் ஏற்படும் பெரிய விளைவை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பஸ் வண்டிகளின் உதிரிப்பாகங்களின் விலை மிக மிக அதிகம். பணம் கிடைக்காத வரையில் அந்தப் பஸ் வண்டி தரித்து நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படும். இது பிரயாணிகளையே பாதிக்கும். இவற்றையயல்லாம் நாங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.  
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.