Jump to content

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன்

FEB 10, 2016

இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன?

மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே.

ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் அலசிப் பார்க்கையில், அங்கு இடம்பெறும் மாற்றத்தின் அடிநாதம், அதை வழிநடத்தும் மனோநிலை என்பவற்றை நாம் இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது.

அதேவேளையில், சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டதும், அரும்புகின்ற மாற்றங்களை ஊக்குவித்துக் காப்பதற்கு உயர்மட்ட முயற்சிகளை அது தொடங்கியுள்ளதும் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவை.

அரசியல் கருவியாக சர்வதேச ஆதரவில் பெருமளவில் தங்கியுள்ள ஒரு சமூகம் இவ் உண்மைகளை நன்கு உணர்ந்திருத்தல் அவசியம். பொறுப்புக்கூறல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில முக்கியமான முடிவுகள் 2016 ஆம் ஆண்டில் எடுக்கப்படவுள்ள நிலையில், இன்றைய காலகட்டமும் அதி முக்கியத்தும் பெற்றது.

புலம்பெயர் தமிழர்களில் கணிசமான பகுதியினர் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்பதாலும், தங்கள் தாய்ப்பிரதேச மக்களுடன் நெருக்கமான பிணைப்புகளைத் தொடர்ந்து பேணி வருபவர்கள் என்ற ரீதியிலும், நீண்ட தசாப்தங்களாக நிலவிவரும் தேசியப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் சரிவரத் தீர்க்கப்படுவதற்கு பங்காற்ற நியாயபூர்வமான உரித்துடையவர்களாவர்.

எனவே, புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இக் காலகட்டத்தில் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்?

மாற்றங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன்  நாம் எதுவுமே செய்யாமல் வெறும் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருப்பதா? அல்லது இந்தப் புதிய முயற்சிகள் தோல்வி அடையும்வரை மதில்மேல் உட்கார்ந்து காத்திருப்பதா?

அப்படி இருந்தால், வரும் தோல்வியைத் தொடர்ந்து நம் சமூகத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஆக்கபூர்வமான வாய்ப்புகள் ஏதும் வருமா?

மாறாக, இலங்கையும் தமிழ்ச் சமூகமும், வாய்ப்புகளைத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் வரலாற்றில் பல உண்டு என்பதை உணர்ந்து, கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்க முழுமூச்சுடன் முயற்சித்தல் நல்லதா?

இல்லை இத்தகைய ஈடுபாடுகள் இலங்கைக்கு அதீத அங்கீகாரத்தை வழங்கி, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வில் புலம்பெயர்ந்தவர் பங்கை வலுவிழக்கச் செய்துவிடுமா?

மொத்தத் தமிழ்ப் புலம்பெயர் சமூகமும் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமா? அல்லது தற்போது இராஜதந்திர வழிமுறைகளில் முழுமூச்சுடன் செயற்படும் பிரிவினர் அதில் தொடர்ந்தும் ஈடுபட, மற்றவர்கள் அவதானத்துடன் காத்திருந்து, அம்முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அத்தருணத்திற்கேற்ற செயல்களில் தம்மை ஈடுபடுத்துவது விரும்பத்தக்கதா?

இவ்வினாக்களுக்கு இலகுவான பதில்கள் ஏதும் இல்லாத போதும், இலங்கையில் எம் மக்களின் இருப்பை வலுப்படுத்துவதற்கு அதிக காலஅவகாசம் இல்லையென்பதை உணர்ந்தவர்களாய், வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கடமை செய்யும் வாய்ப்பு புலம்பெயர் தமிழர்கட்குக் கிட்டியுள்ளது.

இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு இன்றிருக்கும் அதி முக்கியமானதும் அவசியமானதுமான தேவைகள் மூன்று:தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர்க்கால வன்முறைகள் பற்றிய நேர்மையான பொறுப்புக்கூறல், தமிழரது இருப்பினை வலுவாக நிலைகொள்ளச் செய்யும் பொருளாதார முன்னேற்றம் என்பனவே அவை. 

இந்த ஒவ்வொரு விடயத்திலும் புலம்பெயர் தமிழர் பாராட்டத்தக்கவிதத்தில் செயற்பட்டு வந்திருக்கின்றனர். இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் மிக முக்கியமான செயற்பாடாக இருந்ததும் இனி இருக்கப்போவதும், தற்போது உருவாக்கம் பெறும் நீதி, அரசியல் மற்றும் பொருளாதார வலுப்படுத்தல் விடயங்களில் சர்வதேசம் தொடர்ந்தும் ஊக்கமுடன் ஈடுபட அனைத்தையும் செய்வதும், தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து இவ்விடயங்களில் நேரடிப் பங்காற்றுவதும் ஆகும்.

இந்த அடிப்படைகளிலிருந்து வழுவாமல், புலம்பெயர் தமிழர்கள் தமது பங்களிப்பை மேலும் விரிவாக்குவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்த முடியுமா?  மேற்கத்திய தாராளவாத ஜனநாயகங்களிலிருந்து நாம் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் எமது பொருளாதார வலிமை என்பன, இலங்கையின் சகல இன மக்களும் நல்லிணக்கமும் சுபீட்சமும் அடையக்கூடியதற்கான பாரிய பங்களிப்பையும், ஏன் புதிய சிந்தனைகளையும் ஊட்ட முடியுமா?

இலங்கைத் தேசியப் பிரச்சினைக்கு அடித்தளமாய் அமையும் முக்கிய காரணிகள் – ஒருபுறத்தில் தமிழருக்கு சமத்துவமின்மை, அரசியல் அதிகாரமின்மை, மற்றும் நாட்டில், குறிப்பாக பல நூற்றாண்டுகளாகத் தாம் பெரும்பான்மையாய் வாழ்ந்து வரும் பிரதேசங்களிலேயே தமது அடையாளத்தையும் சுபீட்சத்தையும் பாதுகாக்கவோ முன்னேற்றவோ முடியாத இஸ்திரமற்ற தன்மை; மறுபுறத்தில் ‘தமிழர் பிராந்திய ஆதிக்கம்’ இறுதியில் தமது தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற சிங்கள சமூகத்தினரின் பயம். இப் புரிந்துணர்வு அற்ற நிலை, சமகால உலகில் புழக்கத்திலிருக்கும் பல்வேறுவித அரசியலமைப்பு மற்றும் ஆளுகை மாதிரிகைகள் வழியாக சுமூகமாக தீர்க்கப்படலாம். அத்தகைய ஒருமித்திசைந்த அரசியல் தீர்வொன்று பரிணமிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும்.

எனினும், தனியே வெறும் அரசியல் அதிகாரம் மட்டும் ஒர் செழித்தோங்கும் தமிழ்ச் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப போதுமானதல்ல. கலாச்சார, தொழில்நுட்ப, பொருளாதார முன்னேற்றங்களும் நம்பிக்கையில் மேம்பட்டதோர் தமிழ் சமுதாயத்தை வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, மலையகப் பிரதேசத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உருவாக்க அவசியமானவை. அனுபவமும் வளமும் கொண்ட புலம்பெயர் சமூகத்தால் இம் முன்னேற்றங்களை ஊக்குவிக்கக்கூடிய ஆற்றலையும் செயற்றிறனையும் கொண்டு வர முடியும். அவ்வண்ணம் செய்வதால் இலங்கையில் புதியதோர் தமிழ்த் தேசிய சரிதத்தை நம்மால் படைக்க முடியும்.

இங்கே பிரேரிக்கப்படுவது என்னவென்றால், நாம் வாழ்கின்ற நாடுகளின் அரசாங்கங்களுடனும்,  இலங்கைவாழ் அனைத்துத் தமிழ்ப்பேசும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடனும், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனும் பங்காளிகளாக இணைந்து, முக்கியதோர் பங்களிக்கும் முனைப்பில் இறங்குவதற்குத் தகுந்த நேரம் புலம்பெயர் தமிழருக்கு வந்துவிட்டது என்பதே.

எமது ஈடுபாட்டின் அளவும் பரிமாணமும், அரசியல் கைதிகள் மற்றும் பொதுமக்கள் காணிகள் விடுவிப்பு,  இராணுவப் பிரசன்னத்தை அகற்றல், ‘நம்பகரமான’ பொறுப்புக் கூறல், அரசியல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளைத் தோற்றுவித்தல் போன்ற விடயங்களில் காணும் உருப்படியான முன்னேற்றங்களில் தங்கியிருக்கலாம். தக்க தருணத்தில் இவை இடம்பெறுவது முக்கியம் மட்டுமன்றி, இலங்கை வாழ் அனைத்து இனங்களினதும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் அதற்கு ஊட்டமளிப்பதாகவும் அமையவேண்டும். அத்தகைய கட்டங்கட்டமான முன்னேற்றமும், வளர்ந்துவரும் நம்பிக்கையுமே, மிகக்கடினமான தீர்மானங்களைப் பின்னர் எடுப்பதற்கு உவந்த சூழ்நிலை உருவாக வழிசமைக்கும்.

தோல்வியின் சாத்தியக்கூற்றை முழுமையாய் புரிந்திருக்கும் அதே சமயம், காலாதிகாலமாய்த் துன்புறும் நம் உறவுகளுக்கு அமைதியும் சுபீட்சமும் உருவாக உழைப்பதற்கு வாய்த்திருக்கும் இவ் அரியதோர் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், துணிவுடனும், நம்பிக்கையுடனும், மனத்திடனுடனும் நாம் செயற்படுவது அவசியம். உண்மையில் சொல்லப்போனால், மாற்றுவழி ஏதும் நமக்கு இருப்பதாகத் தோற்றவில்லை.

- கலாநிதி க. முகுந்தன்

http://www.puthinappalakai.net/2016/02/10/news/13512

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.