Jump to content

கிமிக்கோ ரஹீமுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம்: ஜீவனுக்கு 2 ஆவது தங்கம்; 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு தங்கம், கயன்திகாவுக்கு வெள்ளி


Recommended Posts

கிமிக்கோ ரஹீமுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம்: ஜீவனுக்கு 2 ஆவது தங்கம்; 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு தங்கம், கயன்திகாவுக்கு வெள்ளி
 

(குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்)

 

1477830.jpg12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிக்கோ ரஹீம் 4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளிலும் இலங்கை அணி தனது தங்­க­வேட்­டையை ஆரம்­பித்­தது.

 

மக­ளி­ருக்­கான 800 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் இலங்­கையின் நிமாலி தங்கப் பதக்­கத்­தையும் கயன்­திகா வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் வென்­றனர். 

 

இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தின் குவா­ஹாட்டி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்­லோங்கில் நடை­பெறும் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களின் ஐந்தாம் நாளான நேற்று தட­களப் போட்­டிகள் ஆரம்­ப­மா­கின. 

 

பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்கை வீராங்­கனை ஏ.நிமாலி லிய­னா­ரச்சி முத­லிடம் பெற்று, இலங்­கைக்கு மெய்­வல்­லுனர் போட்­டி­களில் முத­லா­வது தங்­கத்தைப் வென்று கொடுத்தார்.

 

இவர் இப்­போட்­டியை 2.09 நிமி­டங்­களில் நிறை­வு­செய்தார். மகளிர் 800 மீற்றர் ஓட்­டப்­ போட்­டியின் வெள்­ளிப்­ ப­தக்­கமும் இலங்­கைக்கே கிடைத்­தது. அப் பதக்­கத்தை கயன்­திகா அபே­ரத்ன பெற்றுக்­கொ­டுத்தார்.

 

இதே­வேளை ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் குறுந்­தூர ஓட்­டப்­போட்­டியின் 2 ஆவது தகு­திகாண் சுற்றில் பங்­கு­பற்­றிய ஹிமாச ஹேஷான், கடந்த 1999ஆம் ஆண்டு காத்­மண்­டுவில் நடை­பெற்ற தெற்­கா­சிய விழாவில் இந்­திய வீரர் அனில் குமாரால் (10.37 செக்­கன்கள்) நிகழ்த்­தப்பட்ட சாத­னையை முறி­ய­டித்தார்.

 

14778southasiangames2016.jpgஇவர் குறித்த தூரத்தை 10.26 செக்­கன்­களில் கடந்தார். இதே­வேளை, பெண்­க­ளுக்­கான குண்டு எறி­தலில் டீ.கே பெர்­ணாண்டோ 14.87 மீற்றர் தூரம் வீசி வெண்­க­லப்­ப­தக்­கத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

 

சைக்­கி­ளோட்டம்


போட்­டி­களின் 5 ஆவது நாளான நேற்று இலங்­கைக்கு முத­லா­வது தங்கப் பதக்­கத்தை சைக்­கி­ளோட்ட வீரர் ஜவீன் மஞ்­சுள பெற்­றுக்­கொ­டுத்தார்.

 

ஆண்­க­ளுக்­கான 100 கிலோ­மீற்றர் தனி­நபர் சைக்­கி­ளோட்டப் போட்­டியில் ஜீவன் மஞ்­சுள ஜய­சிங்க வென்றார். இவர் போட்­டித்­தூ­ரத்தை 2 மணித்­தி­யா­லயம் 25 நிமிடம், 38 விநா­டி­களில் கடந்தார்.  

 

இம்­ முறை ஜீவன் மஞ்சுள வென்ற இரண்­டா­வது தங்­கப்­ப­தக்கம் இது­வாகும். இதற்­கு முன் ஆண்­க­ளுக்­கான 60 கிலோ­மீற்றர் ஸ்பிரிங் பிரிவில் மஞ்­சுள தங்­கப்­ப­தக்கம் வென்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

1477829.jpgபெண்­க­ளுக்­கான 80 கிலோ­மீற்றர் வீதி­யோர தனி­நபர் சைக்­கி­ளோட்டப் போட்­டியில் இலங்கை சார்­பாக 6 வீராங்­க­னைகள் கலந்து­கொண்டனர்.

 

எனினும் எந்­த­வொரு பதக்­கத்தை இலங்கை பெற்­றுக்­கொள்­ள­வில்லை. முதல் மூன்று இடங்­க­ளையும் இந்­தி­யாவே பெற்­றது.

 

கடந்த 5 ஆம் திகதி முதல் நடை­பெற்­று­வந்த சைக்­கி­ளோட்டப் போட்­டிகள் நேற்­றுடன் நிறை­வுக்கு வந்­தன.

 

இதன்­படி, இலங்கை அணி 2 தங்­கங்­க­ளையும், ஒரு வெள்­ளிப்­ப­தக்கம் உட்­பட 2 வெண்­க­லப்­ ப­தக்­கங்­களைப் பெற்­றுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

கிமிக்கோ ரஹீ­முக்கு 4 ஆவது தங்கம்


நேற்று மாலை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 50 மீற்றர் மல்­லாக்கு நீச்சல் (பெக் ஸ்ட்ரோக்) போட்­டியில் இலங்கை வீராங்­கனை கிமிகோ ரஹீம் மற்­று­மொரு தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

இம்­ முறை கிமிக்கோ ரஹீம் வென்ற 4 ஆவது தங்­கப்­ப­தக்கம் இது­வாகும். ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் சாதா­ரண (ப்றீ ஸ்டைல்  நீச்சல் போட்­டியில் இலங்­கையின் கைல் அபே­சிங்க வெண்­கலப்­ப­தக்­க­தையும், ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் வண்­ணத்­துப்பூச்சி (பட்­டர்ஃ­பிளை) போட்­டியில் சிரந்த டி சில்வா வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் வென்­றனர். 

 

14778VRA-20160209-M01-MED.jpgபளு­தூக்கல்

நேற்று காலை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான பளு­தூக்­கலில் 75 கிலோ­கிராம் எடைப்­பி­ரிவில் இஷானி அனுஷ்கா வெள்ளிப்பதக்கதை வென்றார்.

 

அத்துடன் ஆண்களுக்கான 105 கி.கி எடைப்பிரிவில், அபேவிக்ரம வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

 

இதன்படி, கடந்த 6 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த பளுதூக்கல் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்ததுடன், இதில் இலங்கை அணி ஒரே ஒரு தங்கப்பதக்கத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14778#sthash.gP4VYc6L.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.