Jump to content

சிரிய அலெப்பே நகரை அரசபடையினர் முற்றுகையிடும் பட்சத்தில் 300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் - ஐ.நா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அலெப்பே நகரை அரசபடை முற்றுகையிடும் பட்சத்தில் 300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம்

10 பெப்ரவரி 2016
அலெப்பே நகரை அரசபடை முற்றுகையிடும் பட்சத்தில்  300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம்

சிரியாவின் வடபகுதி நகரான அலெப்பேயை அரசபடையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அங்குள்ள 300,000 மக்களிற்காக உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளது.

அலெப்பே நகரிற்கு துருக்கியிலிருந்த உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக உலக உணவு திட்டம் பயன்படுத்தி வந்தபாதையை கடந்த வாரம் அரசபடையினர் துண்டித்துள்ளனர்,இதனை தொடர்ந்து உலக உணவு திட்டம் மாற்றுப்பாதையொன்றை பயன்படுத்தி வருகின்றது எனினும் இந்த பாதையும் துண்டிக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது.அரச படையினர் துருக்கியிலிருந்து கிழக்கு அலெப்பேயிற்கு செல்வும் பாதையை விரைவி;ல் துண்டிக்கலாம் என கிளர்ச்சிக்காரர்களும், அரச எதிர்த்தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிரிய அரசபடையினர் கிளர்ச்சிக்காரர்களின் பிடியிலுள்ள நகரங்களை கைப்பற்றுவதற்காக பட்டினி அல்லது சரணடையுங்கள் என்ற தந்திரோபாயத்தை  பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வாறான நிலையில் 300,000 ற்கும் மேற்பட்ட மக்களிற்கான உணவு விநியோகம் துண்டிக்கப்பலாம் என ஐநா தெரிவித்துள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128819/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.