Jump to content

மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்! 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்! 
[Wednesday 2016-02-10 07:00]

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

   உரிய பாதுகாப்பு நடைமுறைகளையே தாங்கள் கையாண்டதாகக் கூறும் ஏரோமெக்ஸிகோ, அதன் காரணமாக ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. அவர் தனது பயண இலக்கை விரைவாக அடைய மாற்று வழிகளை தர முன்வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.வாரிஸ் அலுவாலியா தனது பயணச்சீட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாதுகாப்பு பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் “SSSS” என முத்திரைக் குத்தப்பட்டுள்ளது தெரிகிறது.அப்படியான முத்திரை குத்தப்பட்டிருந்தால், அதற்குரிய பயணி கூடுதலான பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

யார் அப்படியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனபதை திடீரென முடிவு செய்யப்படும் நடைமுறை உள்ளது என விமானசேவை நிறுவனம் கூறுகிறது.கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் எனும் படத்தில் நடித்துள்ள அலுவாலியா அவர்கள், அமெரிக்க ஆடை நிறுவனமாக GAPன் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.நியூ யார்க்கில் நடைபெற்ற ஆடைக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்கச் செல்லும்போதே இந்தச் சிக்கலை அவர் எதிர்கொண்டார்.வழக்கமான அனைத்து பாதுகாப்புச் சோதனைகளையும் தான் ஏற்றுக் கொண்டதாகவும், ஆனால் பொதுமக்கள் முன்னிலையை தலைப்பாகையை கழற்றச் சொல்லுவது, அனைவர் முன்னிலையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு சமமான ஒன்று என்று எனக் கூறி அதைப் பொதுமக்கள் முன்னால் செய்ய முடியாது என தான் அந்த விமான சேவை நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும் வாரிஸ் அலுவாலியா செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=151040&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி தான், இருந்தாலும், அவர்களது தேசிய உடையுடன் அல்லது தாடியுடன் யாராவது நாமிருக்கும் ரயில் பெட்டியில் ஏறினால் மனம் பதறுகிறதே...

மதத்தின் பெயரால் சிலர் செய்யும் அநியாயங்களால் பாதிக்கப்படுவது அப்பாவிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சரி தான், இருந்தாலும், அவர்களது தேசிய உடையுடன் அல்லது தாடியுடன் யாராவது நாமிருக்கும் ரயில் பெட்டியில் ஏறினால் மனம் பதறுகிறதே...

மதத்தின் பெயரால் சிலர் செய்யும் அநியாயங்களால் பாதிக்கப்படுவது அப்பாவிகள். 

உண்மையும் அதுதான்........இப்பத்தையான் நிலமையும் அப்பிடித்தானே போய்க்கொண்டிருக்கு...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.