Jump to content

என்னோடு இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் ஸ்டீவ் வோவே சுயநலவாதி


Recommended Posts

நான் விளையாடியவர்களில் ஸ்டீவ் வோவே சுயநலவாதி
 
 

article_1455034507-TamilShaneiWaugh.jpgதான் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோ, மிகவும் சுயநலவாதியான கிரிக்கெட் வீரர் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோண் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டே, இக்கருத்துகளை ஷேன் வோண் வெளியிட்டார்.

'ஸ்டீவ் வோவை நான் விரும்பாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன. பல காரணங்கள். ஏனெனனில், நான் இணைந்து விளையாடிய வீரர்களில், அதிக சுயநலவாதியான வீரர், அவரே" என, வோண் தெரிவித்தார்.

ஸ்டீவ் வோ மீதான அவரது வெறுப்புக்கு, 1999ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து தான் விலக்கப்பட்டமையை, காரணமாக ஷேன் வோண் வெளியிட்டார். அதற்கு முன்னைய போட்டியில், பிரையன் லாரா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதோடு, தான் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை எனத் தெரிவித்த வோண், ஆனால், அப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு, தான் பலியாடு ஆக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போதைய காலத்தில், அணித்தலைவர் (வோ), உபதலைவர் (ஷேன் வோண்), பயிற்றுநர் (ஜெப் மார்ஷ்) ஆகியோர் அணியைத் தெரிவு செய்பவர்கள் என்ற போதிலும், தன்னை அணியிலிருந்து நீக்கும் முடிவை, ஸ்டீவ் வோ எடுத்ததாகவும், அணித்தலைவராகத் தானே எடுப்பதாக வோ குறிப்பிட்டதாகவும், வோண் தெரிவித்தார்.

அதனைத் தவிர, வேறு பல காரணங்களுக்காகவும் ஸ்டீவ் வோவை தனக்குப் பிடிக்காது என, வோண் மேலும் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/165670/%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%A4-#sthash.7TUAR1Vp.dpuf
Link to comment
Share on other sites

ஸ்டீவ் வாஹ் கடும் சுயநலக்காரர்: ஷேன் வார்ன் காட்டம்

பிடிஐ

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
ஷேன் வார்ன். | கோப்புப் படம்.
ஷேன் வார்ன். | கோப்புப் படம்.

ஸ்டீவ் வாஹ் மீதான தனது கோபத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும் ஷேன் வார்ன் தற்போது அவரை ‘தன்னுடன் விளையாடிய வீரர்களில் அதிக சுயநலம் பிடித்தவர் ஸ்டீவ் வாஹ்தான்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

சேனல் 10 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஷேன் வார்ன் இது பற்றி கூறியதாவது:

“எனக்கு ஸ்டீவை பிடிக்காததற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று என்னவெனில், நான் விளையாடியதிலேயே ஸ்டீவ் வாஹ்தான் மிகவும் சுயநலம் பிடித்தவர் என்பதே.

அவரை நினைத்தால் எனக்கு கோபம் ஏற்படும் ஒரு விஷயம் என்னவெனில் 1999-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில் ஒரு போட்டியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தது, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்து பிராங்க் ஒரல் டெஸ்ட் டிராபியை தக்க வைக்க வேண்டும்.

இந்த நிலையில் கேப்டன் ஸ்டீவ் வாஹ், துணைக் கேப்டனான நான், பயிற்சியாளர் ஜெஃப் மார்ஷ் அணியைத் தேர்வு செய்ய வேண்டும்.

நான் அந்தத் தொடரில் நன்றாக வீசவில்லை. தோற்றோம், பிரையன் லாரா பேட்டிங் அசாதாரணமாக இருந்தது. ஆனாலும் நான் சரியாக வீசாததற்காக என்னையே கடிந்து கொண்ட காலம் அது. நான் சரியாக வீசவில்லை அது என்னுடைய தவறுதான்.

நாங்கள் அணித் தேர்வுக்கு உட்கார்ந்தோம், அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம். உடனே ஸ்டீவ் வாஹ் என்னிடம் ‘நீ இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, உன்னை நீக்குகிறோம்’ என்றார். நான் உடனே அணி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்றேன். அதற்கு ஸ்டீவ் வாஹ், “நான் தான் கேப்டன், நீ ஆடப்போவதில்லை” என்றார்.

இது இன்றும் கூட எனக்கு கடும் ஏமாற்றமாக இருக்கிறது. எனக்கு அப்போதுதான் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடந்தது. டெஸ்ட் போட்டியை வெல்ல ஒரு கேப்டன் என்னில் உள்ள சிறந்த திறமையையும் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும்.

எனக்கு ஸ்டீவ் வாஹை வேறு சில விஷயங்களுக்காகவும் சுத்தமாக பிடிக்காது, ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருடனான உறவு மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும் என்று நான் கருதவில்லை” என்றார் ஷேன் வார்ன்.

ஆனால் இந்தச் சம்பவம் பற்றி ஸ்டீவ் வாஹ் தனது 'The meaning of Luck' என்ற புத்தகத்தில் குறிப்பிடும் போது, “நான் ஒரு மிகப்பெரிய நட்பை இழந்தேன், ஆனால் அந்த அனுபவத்தின் மூலம் நான் திடமடைந்தேன். எது சரி என்பதை அறிந்திருப்பதற்கும் அதன் மீது செயல்படுவதும் இருவேறு விஷயங்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆனால் ஒருநாள் ஷேன் வார்ன் என்னைப் புரிந்து கொள்வார், அதாவது அவரது ஆழமான திறமையை நான் நம்பவில்லை என்பதல்ல அது, தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு நடைமுறையான முடிவே அவரை நீக்கியது. ஒவ்வொரு தலைவரும் ஒரு உள்மன உந்துதல் சொல்லும் விஷயங்களை நம்பி செயல்பட வேண்டும்” என்று எழுதினார்.

அந்தத் தொடரில் ஸ்டீவ் வாஹ், ஷேன் வார்னை கடைசிப் போட்டியில் உட்கார வைத்ததற்கான காரணங்கள் உள்ளன. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ஷேன் வார்ன் எடுத்த விக்கெட்டுகள் வெறும் 2 மட்டுமே. சராசரி 134 ரன்கள். மாறாக சக லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் 7 விக்கெட்டுகளை 31.43 என்ற சராசரியில் பெற்றிருந்தார்.

ஷேன் வார்னை நீக்கி விட்டு கொலின் மில்லரை அணியில் சேர்த்து கடைசி டெஸ்ட் போட்டியை 176 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று 2-2 என்று தொடரை சமன் செய்து பிராங்க் ஒரல் டிராபியை தக்கவைத்தது என்பதும் முக்கியமானது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8214286.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.