Jump to content

காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய


Recommended Posts

காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய

காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய:-

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

 
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள்ளார். 
 
தம்மை வைத்து பொய்யான சரித்திரம் ஒன்றை எழுத சர்வதேச சமூகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் காரணமில்லாத குற்றச்சாட்டுக்களையும் ஆதாரமற்ற  பொய்களையும் கொண்டு அதனை எழுதய முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 
 
இதேவேளை போரில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்கபதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோத்தபாய ராஜபக்ச அறிந்து வைத்துள்ளார் என்றும் காணாமல் போனோர் விடயத்தில் கோத்தபாயவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அத்துடன் இறுதிப் போரில் காணாமல் போனவர்களை கோத்தபாய கொல்லப்பட்டதாக கூறுகிறார் எனில் ஓமந்தை போன்ற யுத்த வலயத்திற்கு வெளியில் சரணடைந்து இன்றுவரை தகவல் தெரியாதவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோர் எகத்தாள கருத்து!

இன்னும் அந்த அடங்காத் திமிர்; தமிழன் என்று வரும் போது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்கும்போது  ஒன்றரை லட்சம் தமிழர்களும் கொலை செய்யப்பட்டது சரியானதே என தெமிழுகளே ஒத்துக்கொண்டபோது

அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள்ளார். 

இந்த விசயம் மாற்றுக்கருத்து மகா மாணிக்கங்களுக்கு தெரியாது போலை கிடக்கு.

Link to comment
Share on other sites

9 hours ago, நவீனன் said:

 

இதேவேளை போரில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்கபதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோத்தபாய ராஜபக்ச அறிந்து வைத்துள்ளார் என்றும் காணாமல் போனோர் விடயத்தில் கோத்தபாயவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
அத்துடன் இறுதிப் போரில் காணாமல் போனவர்களை கோத்தபாய கொல்லப்பட்டதாக கூறுகிறார் எனில் ஓமந்தை போன்ற யுத்த வலயத்திற்கு வெளியில் சரணடைந்து இன்றுவரை தகவல் தெரியாதவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

 

இது கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கேட்க வேண்டிய கேள்வி. இதை விடுத்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி தேசிய கீதம் பாடி கண் கலங்கி சீன் போடுவதில் தான் அவர்களின் காலம் போகிறது. 

 

52 minutes ago, குமாரசாமி said:

இந்த விசயம் மாற்றுக்கருத்து மகா மாணிக்கங்களுக்கு தெரியாது போலை கிடக்கு.

 

மாற்றுகருத்து மாணிக்கங்களுக்கு எது தெரியாது? ஒவ்வொரு குடும்பமும் இயக்கத்தில் இணைந்ததா? இல்லை பலவந்தமாக இணைக்கப்பட்டதா? அன்று இளைஞர்கள் பலவந்தமாக இணைக்கப்பட்ட போது "தேசிய‌ கடமை" என்று விசிலடித்த உங்களை போன்றவர்கள் தான் குற்ற உணர்ச்சியில் கூனி குறுக வேண்டும். 

Link to comment
Share on other sites

பலி ஆடுகளை பிடித்து வேள்விக்கு தயாராக்கி கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு கழுத்தை வெட்டினவனை பழி சொல்லுகின்றார்கள் .

இதில் கேவலம் என்னவென்றால் தலைவர் தான் இதை செட்டப் பண்ணியவராம் மகிந்தா கோத்தா அதை விளங்காமல் வெட்டிவிட்டார்களாம் , எப்படி தலைவர் பார்த்தார் அலுவல்  என்று சொல்லுபவர்கள் தான் அதிகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளேயாவர்!- கோத்தபாய
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 12:16.49 AM GMT ]
koththa.jpg
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் தமது உறவினர் இணைந்து கொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவும் அவர் குறிப்பிட்டார்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது. பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து சர்வதேச பிரதிநிதித்துவம் பொய்யான வரலாற்றை எழுதப் பார்க்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் மற்றும் இராணுவத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலை குறித்து கருத்து கூறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த காலகட்டத்தில் நான் மிகுந்த வேலைப்பழுவிற்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றேன். நிதி மோசடி விசாரணை பிரிவினர் இப்போதெல்லாம் என்னை அதிகமாக எதிர்ப்பார்க்கின்றனர். செய்யாத குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நான் சட்டத்தையும் அரசாங்கத்தையும் மதித்தது அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றேன்.

எனினும் அரசியலில் காலடி எடுத்து வைப்பது தொடர்பில் நான் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை. நான் இன்னும் இராணுவ அதிகாரி என்ற நிலைப்பாட்டில் தான் இருந்து வருகின்றேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதில் அதிக காலத்தை செலவழித்தேன்.

அதேபோல் யுத்தத்தின் பின்னரும் பாதுகாப்பு செயலாளராக என்னை தயார்ப்படுத்தி நாட்டின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டேன். எனினும் அந்த வேளையிலும் சரி அல்லது இப்போதும் சரி நான் அரசியலில் என்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

நான் அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தை, சகோதரர்கள் என அனைவரும் அரசியல் கலாசாரம் தெரிந்தவர்கள். ஆனால் எனக்கு அந்த கலாசாரம் தெரியவில்லை. இனியும் அதைப்பற்றிய சிந்தனை எனக்கு இன்னும் வரவில்லை.

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்:-  இந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் என்னிடம் நல்ல அபிப்பிராயம் எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் அமைந்தவுடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தார். 
ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரையில் அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

அதேபோல் இப்போது அமைந்துள்ள அரசாங்கம் ஒரு கொள்கை உள்ள ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டில் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பொதுவாக ஒரு கூட்டணியை அமைத்து அதில் இணைந்து கட்சிகளையும் உள்ளடக்கி இறுதியில் தெளிவான ஒரு கொள்கை இல்லாத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.

கேள்வி :- அரசாங்கத்தின் பாதை ஜனநாயம் சார்ந்ததாக இல்லை என்பது உங்களின் கருத்தா?

பதில்:- மஹிந்த ராஜபக்ச செய்யாத விடயங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்து காட்டும் என்று சவால் விடுத்தார்கள். ஆனால் நாம் செய்யாத எதை இந்த அரசாங்கம் செய்துள்ளது என்று எமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது.

நாம் கட்டிக்காத்த நாட்டை மீண்டும் புலிகளின் கைகளில் ஒப்படைக்கும் ஒரு வேலைத்திட்டத்தை மட்டும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புலிகளின் கரங்களே பலமடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மாகாணம் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முழுமையாக தமது வாக்குகளை வழங்கியது. இந்த செயற்பாடும் மஹிந்தவை முழுமையாக நிராகரித்து புலிகளின் கரங்களை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமைந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்ட போதும் மீண்டும் பிரபாகரனை உருவாக்கும் முயற்சிகள் இன்றும் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத போக்கில் செயற்படுவதாக தெரியவில்லையே?

பதில்:- இன்று நல்லாட்சி ஜனநாயகம் பற்றிய கதைகளை கூறினாலும் அவர்களின் பயணம் புலிகளின் பயணமாகவே அமையும். நாட்டை துண்டாடி அதன் மூலமாக தமிழீழத்தை உருவாக்கும் ஒரு செயற்பாடு மட்டுமே இதில் உள்ளது. அவர்களின் பாதையை மாற்றியமைக்க முடியாது.

அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அவர்களின் கொள்கையையோ பிரிவினைவாத பயணத்தையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் இன்றும் சர்வதேச விசாரணைகள், புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தான் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்.

கேள்வி :- காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் பலமான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இன்று காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் என்ற கதைகளை கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் தமது உறவுகள் இணைந்து கொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இதனை அவர்கள் நன்றாக தெரிந்து கொண்டும் இன்றும் தமது உறவுகள் காணாமல் போனதாக கூறிகொண்டுள்ளனர். காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர்.

ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது எவரையும் கைது செய்யவோ கடத்தவோ அல்லது வதை முகாம்களில் அடைத்து வைக்கவோ இல்லை என்பதே உண்மையாகும்.

மொத்தமாக அகதியானவர்களின் எண்ணிக்களை மற்றும் வெளிநாடுகளில் இன்றும் வாழ்ந்து வரும் தமிழர்களின் எண்ணிக்கையை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல் போனதாக கூறப்படும் பலர் இன்று சர்வதேச மட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது.

பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமும் சர்வதேச பிரதிநிதித்துவமும் பொய்யான வரலாற்றை எழுதப் பார்க்கின்றனர்.

இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களும் அவ்வாறே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgvzD.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்களையும், சர்வதேசத்தையும் எதை எதையோ சொல்லி கணக்கை சமாளித்து மூடி விடுவீர்கள். காட்டப்படும் கணக்கு பிழையென்று எங்களுக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். எங்களால் உங்களை என்ன செய்துவிட முடியும். எங்களால  மறக்க முடியவில்லை. கண்ணீரோடு இன்னும் தேடுகிறோம். எங்கள் உறவுகளை. உயிர் உள்ளவரை தேடுவோம். ஆனால் கடவுள் கேக்கும் கணக்கை யாராலும் சமாளிக்க முடியாது. கண்டிப்பாய் ஒருநாள் கேப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் தமிழர்களை ஆடு மாடுகள் ஆக்கியாச்சு

இனி மிருகவிலங்கு சட்டத்தின் கீழ்த்தான்எதையாவது எதிர்பார்க்கணும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இறுதியில் தமிழர்களை ஆடு மாடுகள் ஆக்கியாச்சு

இனி மிருகவிலங்கு சட்டத்தின் கீழ்த்தான்எதையாவது எதிர்பார்க்கணும்....

அதுகளுக்கும் வெளிநாட்டில நல்ல பாதுகாப்பான சட்டங்கள் உண்டு

Link to comment
Share on other sites

14 hours ago, arjun said:

பலி ஆடுகளை பிடித்து வேள்விக்கு தயாராக்கி கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு கழுத்தை வெட்டினவனை பழி சொல்லுகின்றார்கள் .

இதில் கேவலம் என்னவென்றால் தலைவர் தான் இதை செட்டப் பண்ணியவராம் மகிந்தா கோத்தா அதை விளங்காமல் வெட்டிவிட்டார்களாம் , எப்படி தலைவர் பார்த்தார் அலுவல்  என்று சொல்லுபவர்கள் தான் அதிகம் .

கோத்தவை விட கொடூரமானவர்கள் என்பது தெளிவு ..

14 hours ago, arjun said:

பலி ஆடுகளை பிடித்து வேள்விக்கு தயாராக்கி கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு கழுத்தை வெட்டினவனை பழி சொல்லுகின்றார்கள் .

இதில் கேவலம் என்னவென்றால் தலைவர் தான் இதை செட்டப் பண்ணியவராம் மகிந்தா கோத்தா அதை விளங்காமல் வெட்டிவிட்டார்களாம் , எப்படி தலைவர் பார்த்தார் அலுவல்  என்று சொல்லுபவர்கள் தான் அதிகம் .

ஒன்று புரிந்தால் புரிந்தது என்று புத்தியுடன் நடக்க வேண்டும் இல்லை புரியவில்லை என்றால் தெரிந்தவர்களுடன் கதைத்து அறியவேண்டும் ....இடையில் நின்று எதிர்ப்பு வாதம் மட்டுமே சொன்னால் ....அவர்களுக்கு .....அறிய இன்னும் பலகாலம் செல்லும் என்பது தெளிவு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - யுத்தத்தின் போதும் பின்னரும்.. காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள்.

மைத்திரி - எப்பாடு பட்டேனும்.. எமது சொறீலங்கா படைவீரர்கள் மீதான களங்கத்தைப் போக்குவேன்.

சரத் பொன்சேகா - காணாமல் போனோர் என்று யாரும் இல்லை.

கோத்தா - யுத்த சூனிய வலயம் என்ற ஒன்றே இருக்கல்ல. காணாமல் போனவர்கள் எல்லாம் யுத்த களத்திலையே இறந்திட்டாங்க. நான் தான் நேர நின்று போடுவிச்சனான்.

சம்பந்தன் - சும்மா பழைசக் கிளறிக்கிட்டு. மறப்போம் மன்னிப்போம் சிங்கங்கக் கொடியை தூக்கிப் பிடிப்போம்.. சிங்கள இராணுவ சுதந்திர தின..வெற்றி அணிவகுப்பை ரசிப்போம். படையினரின் களங்கத்தைப் போக்க என்னாலான அனைத்தும் செய்வேன் சொறிலங்காவின் எதிர்கட்சித் தலைவராக.

சுமந்திரன் - நிகழ்ந்தது பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வது தான். அது நிகழ்ந்து முடிந்து விட்டது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால்.. ஐக்கிய இலங்கை.. மூவின நல்லிணக்கம்.. அமெரிக்க நலன்.. இந்திய நலன்.. எல்லாம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். உலகம் வேறு ஒழுங்கில் தன்னை சரி செய்து கொள்ள முனையும். எனக்குக் கிடைக்கக் கூடிய பதவிகளும் இல்லாமல் போகலாம்.

ஐநா மனித உரிமை ஆணையாளர்: இலங்கை இராணுவத்தின் மீதான களங்கத்தை போக்கி அதனை ஐநா அமைதி நடவடிக்கையில் இறக்க சொறீலங்கா முயற்சிக்க ஒத்துழைப்பேன்.

-------------------

இப்படியான ஆட்கள் உள்ள சொறீலங்கா.. சர்வதேச அரசியல் சூழலில்.......................................... மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதியும் தண்டனையும் கிடைக்கும் என்று நம்புவது எமது முட்டாள் தனம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

அதுகளுக்கும் வெளிநாட்டில நல்ல பாதுகாப்பான சட்டங்கள் உண்டு

பச்சை இல்லை !
அதுக்குள்ளே போட்டாலே போதும் ....
வெளிவாரது ஈசி .....

இப்ப எங்க போட்ட்டிருக்கு என்றே புரியுதில்லை.

Link to comment
Share on other sites

On 10.2.2016 at 10:15 AM, விசுகு said:

இறுதியில் தமிழர்களை ஆடு மாடுகள் ஆக்கியாச்சு

இனி மிருகவிலங்கு சட்டத்தின் கீழ்த்தான்எதையாவது எதிர்பார்க்கணும்....

தமிழர்களைப் புலியாகக் காண்பிப்பதுதான் வழமை. மாறாக தமிழர்களை ஆடு மாடுகளாக காண்பிப்பதற்குப் பயம் காரணமாக இருக்கலாம்.:unsure:


"புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்" என்று கோத்தபாய பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் வந்த பயமோ..... !! :shocked: :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தமிழர்களைப் புலியாகக் காண்பிப்பதுதான் வழமை. மாறாக தமிழர்களை ஆடு மாடுகளாக காண்பிப்பதற்குப் பயம் காரணமாக இருக்கலாம்.:unsure:


"புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்" என்று கோத்தபாய பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் வந்த பயமோ..... !! :shocked: :shocked:

புலிகள் கொள்கைப்பிடிப்பாளர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

அவர்கள் காட்டுக்குள் போவதில்லை என எடுத்த முடிவிலும் மாற்றங்கள் வராது இனி எப்பொழுதும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.