Jump to content

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்!


Recommended Posts

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்!
 
 
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்!
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
 
அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம்,சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம் , போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை, கூட்டுறவு துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை, விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை, சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை, மற்றும் வவுனியா மாவட்டம் தொடர்ந்து விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை, போன்ற பல்வேறு முறைகேடுகளில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றினை மாகாண சபையில் முன்மொழிந்தார்.
 
அத்துடன் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய அமைச்சர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணையை சமர்ப்பித்தார்.
 
குறித்த பிரேரணை மாகாணசபை உறுப்பினர்கள் எவரது எதிர்ப்பும் இன்றி, சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
அதேவேளை இந்த பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டதும், உறுப்பினர்கள் சிலரும் விவசாய அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
 
மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா.
 
விவசாய அமைச்சினால் தொடர்ந்து வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மரநடுகை மாதம் என கூறி கன்றுகளை நட்டார்கள் அவை இன்று அழிந்து போயுள்ளன. ஆடு மாடுகள் அவற்றை தின்னுகின்றன. மரநடுகை ஒரு சதத்திற்கு கூட பயனில்லாமல் , போயுள்ளது.
 
தென்னைம் பிள்ளை,  பலா போன்ற கன்றுகளை நாட்டினார்கள். அவை கூட இன்று பட்டு விட்டன. அதனால் எந்த பயனும் இல்லை அவற்றை விவசாய குடும்பங்களுக்கு கொடுத்து இருந்தால் அவர்கள் அவற்றை நாட்டி பராமரித்து பயனடைந்து இருப்பார்கள். 
 
வவுனியா மாவட்டத்தில் ஆயிரம் குளம் இருக்கின்றது. அவற்றில் ஒன்றையாவது கடந்த இரண்டரை வருடத்தில் புனரமைத்தார்களா ? ஒரு குளத்தை புனரமைத்தோம் என கூறினால் நான் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்.
 
பார்த்தீனியம் அழிக்கின்றோம் என கூறி பெரும் செலவு செய்தார்கள். வடமாகாணத்தில் யாழில் மட்டும் தான் பார்த்தீனியம் உள்ளதா ? வவுனியா முல்லைத்தீவில் இல்லையா ? ஏன் அங்கே அழிக்கவில்லை.  சரி யாழில் ஆவது முற்றாக பார்த்தீனியத்தை அழித்து விட்டீர்களா ? 
 
வடமாகாண சபையின் ஆட்சி மகிந்த ஆட்சியை விட சர்வாதிகாரமாக நடக்கின்றது என மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா தெரிவித்தார்.
 
மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன்.
 
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீர் ஆக்குவதற்கான செயற் திட்டம் மாகாண சபையின் அனுமதி பெறப்படாமல், முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.
 
அதற்கு மருந்தங்கேணி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். அதனை மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கவனத்தில் எடுக்கவில்லை.
 
இரணைமடு குளம் தொடர்பில் வாத, பிரதிவாதங்களை நாடாத்திய போதும் மருதங்கேணி மக்களின் பிரச்சனை தொடர்பில் நானும் (சுகிர்தன்) சிவாஜிலிங்கமும் மாத்திரமே குரல் கொடுத்து வருகின்றோம். ஏனைய உறுப்பினர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்.
 
யாழ்.மாவட்டத்திற்கான நன்னீர் நிலைகளை புனரமைத்து நீரினை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் தொண்டமனாற்று நன்னீர் ஏரியை கடலுடன் கலக்க விடாது அதனை குளமாக கட்டலாம். 
 
விவசாய அமைச்சர் மீது எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது அவர். எப்பொழுது கடல் நீரை நன்னீர் ஆக்குவதற்கு எதிராக குரல் கொடுத்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தை கலைத்தாரோ அன்றே அவர் மீதான நம்பிக்கை மதிப்பு எல்லாம் போய்விட்டது. 
 
அதிகளவில் கடற்தொழில் செய்து வாழும் மக்கள் உள்ள மருதங்கேணி பிரதேசத்தை நன்னீர் திட்டம் ஆரம்பிக்க தெரிவு செய்ய வேண்டும் மக்கள் வாழாத கடற்பகுதிகளை தெரிவு செய்து இருக்கலாமே 
 
கடல் நீரை நன்னீர் ஆக்கி 24 ஆயிரம்கன அடி நீரினை பெற்றுக் கொள்ள உள்ளனர். அதற்காக கடலில் இருந்து 80 கன அடி நீரினை உறிஞ்சி எடுத்து மீண்டும் 50 கன அடி நீர் கடலுக்குள் விடப்படும். அவ்வாறு கடலுக்குள் விடப்படும் அந்த 50 கன அடி நீரும் இராசாயன பதார்த்தங்கள் கலந்ததாகவும் அதிக உப்பு செறிவு உடைய நீராகவும் மீள கடலுக்குள் விடப்படும். அதனால் தமது மீன் பிடி தொழில் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றார்கள். எனவே அந்த திட்டத்தை மருதங்கேணி பகுதியில் மேற்கொள்ள கூடாது என கோருகின்றேன் என மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார்.
 
மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட்.
 
இரணைமடு குளத்து நீரை கொண்டுவருவது தொடர்பில் பல பிரச்சனைகளை எழுப்பி அந்த காசை திருப்பி விட்டாச்சு.  யாழில் நன்னீரை தேக்கி வைப்பதற்கு பல வழிகள் உண்டு.
 
பெரியளவிலான நன்னீர் நிலைகளில் நீரினை தேக்கி வைக்க நாவற்குழி, தொண்டமனாறு, மற்றும் அராலி பகுதியில் உள்ள நன்னீர் அணைக் கட்டுக்களை புனரமைப்பதன் ஊடக நீரினை சேமிக்கலாம்.
 
இரணைமடுவில் இருந்து நீரணை பெற முடியாது.என கூறி பெருமளவான நீரினை கடலுக்குள் அனுப்பி விடுகின்றார்கள். மருதங்கேணி பிரதேசத்தில் கடல் நீரை நன்னீர் ஆக்கும் செயற்த்திட்டத்தை ஆரம்பிக்க காராணம் அப்பகுதியில் கடலில் உப்பின் செறிவு குறைவு எனப்படுகின்றது. அது ஏனெனில் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீர் அப்பகுதியில் தான் கடலில் கலக்கின்றது.
 
நாம் இரணைமடு குளத்து நன்னீரை கடலில் கலக்க விட்ட பின்னர், கடலில் இருந்து நீரை பெற்று நன்னீர் ஆக்கும் செயர்த்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
 
மகாவலியை வடக்குக்கு திருப்புவது பற்றி கதைக்கின்றார்கள் ஆனால் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலக்கின்றது. அதனை கடலில் கலக்க விடாது திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
மாகாண சபை  உறுப்பினர் கே.சயந்தன்.
 
கடந்த இரண்டரை வருடமாக கூட்டுப் பொறுப்பு என நினைத்து வாய் மூடி இருந்து விட்டேன் இனியும் அப்படி இருக்க முடியாது. விவசாய அமைச்சருக்கு ஆதரவாக ஆரம்பத்தில் செயற்பட்டேன். ஆனால் இப்பொழுது தான் புரிகின்றது அவர் எங்களை முட்டாள் ஆக்கியுள்ளார் என்று. 
 
சுன்னாக நீர் பிரச்சனை தொடர்பில் நிபுணர்கள் சிலரை கடந்த சில தினங்களாக சந்தித்து அது தொடர்பில் பல விடயங்களை அறிந்து வருகிறேன். அதன் போது ஒருவர் கூறினார் விவசாய அமைச்சர் ஒரு துறை சார் அதிகாரிக்கு பதவி லஞ்சம் கொடுக்க கூட தயாராக இருந்தார் என 
 
வடக்கில் நன்னீர் பிரச்சனை இருக்கின்றது. இதுவரை காலமும் வடக்கில் நீர் முகாமைத்துவம் தொடர்பில் விவசாய அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது.  நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்த என்ன திட்டத்தை வைத்து இருக்கின்றது.
 
பாத்தீனியம் அழிப்பதற்காக அமைச்சினால் பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டது. அதன் பின்னூட்டம் என்ன ? வடக்கில் பாத்தீனியம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதா ?
 
அமைச்சின் நிதிகளை செலவு செய்ய வேண்டும் என்பதற்காக புதிது புதிதாக தினங்களை அறிமுகம் செய்து பெரியளவில் விழாக்களை நடாத்தி பெரும் செலவு செய்கின்றார்கள் 
 
வடமாகாணத்தில் சில மாவட்டங்களை சில உறுப்பினர்களை விவசாய அமைச்சர் திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றார் அதனை அவர் கைவிட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் கோரினார்.
 
மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
 
ஐ.நா அறிவித்து உள்ளது 2020 ஆண்டு அனைவருக்கும் தூய நீர் என இன்னமும் நான்கு வருடங்களே  இருக்கின்றது. நாம் தூய நீருக்காக என்ன செய்துள்ளோம்.
 
இலங்கையின் ஏனைய மாவட்டங்கள் 90 வீதம் வரை தூய நீரை பெறுகின்றது அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளது. வடமாகாணம் இன்னமும் 10 வீதத்தை கூட தாண்ட வில்லை.
 
இதனால் தான் நான் பல தடவைகள் கோரி இருந்தேன் வடமாகாண நீர் பிரச்சனை தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க தனியே நீர் தொடர்பில் கதைப்பதற்காக ஒரு நாளோ இரு நாள் அமர்வையோ ஏற்பாடு செய்யுமாறும், ஆனால் இதுவரை எனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
 
எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன்.
 
"பாவம் மக்கள் " எனும் கவிதை தொகுப்பு நூல் ஒன்று 1984 ம்  ஆண்டு கால பகுதியில் வெளியாகி இருந்தது. அதனை தேடி எடுத்து மாகாண சபை நூலகத்தில் வைக்க வேண்டும்.
 
அக்கால பகுதியில் தமிழீழம் கோரி பல குழுக்கள் போராடினார்கள். அக்கால பகுதியில் இன்னமொரு கதை கூறுவார்கள், இவர்களிடம் தமிழீழத்தை கொடுத்து விட்டு பார்க்க வேண்டும் என அது இங்கு நடக்கும் செயலை பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது.
 
வடமாகாண அவைத்தலைவர் கூறுவார் இங்கே எதிர்க்கட்சி இல்லை, அனைவரும் ஆளும் கட்சியே என்று, ஆனால் ஆளும் கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றது. உட்கட்சி மோதல்கள் நடைபெறுகின்றன. அதனால் அமர்வின் நேரம் வீணாகின்றது.
 
சபை அமர்வின் முதல் நாள் ஆளும் கட்சி கூட்டம் நடைபெறும், அங்கு இந்த விடயங்களை பேசி முடிவெடுக்கலாம்.  இந்த சபை திறம்பட இயங்க வேண்டும் ஆயின் பிரச்சனைகளை அந்த அந்த மட்டத்திலேயே முடிக்க வேண்டும்.
 
மக்களுடைய பிரச்சனை தொடர்பில் விபரங்களை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் எடுத்துக் கூறும் போது சுருக்கமாக சொல்லுங்கள் நேரம் செல்கின்றது என அவர் விபரத்தை முழுமையாக சொல்ல விடாத அவைத்தலைவர் கருத்து மோதலுக்காக பெருமளவான நேரத்தை ஒதுக்கி உள்ளார். என தெரிவித்தார்.
 
மாகாண சபை  உறுப்பினர் க.சர்வேஸ்வரன்.
 
தற்போது வடமாகாண சபை தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போன்று மாகாண சபையில் பிரச்சனைகள் ஒவ்வொரு பக்கத்தால் செல்கின்றது. இறுதியில் எந்த பிரச்சனைக்கும் முடிவு இல்லாமல் சபை ஒத்தி வைக்கபப்டுகின்றது.
 
இனிவரும் காலத்தில் இவ்வாறு இல்லாமல் ஒரு பிரச்சனையை மையப்படுத்தி அது தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
 
நீர் பிரச்சனை என்றால் அது தனியாக எடுக்கப்பட வேண்டும் அதே போன்று மீள் குடியேற்ற பிரச்சனை என்றால் அது தனியா எடுத்து பேச வேண்டும். 
 
இன்றைய அமர்வில் இந்த பிரச்சனை தொடர்பில் பேசப்படும் என முன்னரே  உறுப்பினர்களுக்கு அறிவித்தால் ஒவ்வொரு உறுப்பினர்களும் அந்த பிரச்சனை தொடர்பில் தமது பிரதேசம் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல்கள் தரவுகளை பெற்று வந்து விவாதிக்க முடியும். அதன் ஊடாக அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படும்.
 
அதனை விடுத்து ஒவ்வொரு அமர்விலும் ஏதோ ஒரு பிரச்சனை கதைக்க தொடங்கி அது வேறு பிரச்சனைக்கு சென்று அது வேற வழியாக வேறு பிரச்சனையில் சென்று முடியும். இறுதியில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு  இன்றி  சபை ஒத்தி வைக்கப்படும். அவ்வாறன செயற்பாடுகள் இனி வரும் காலத்தில் நடக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
 
 
குற்றச்சாட்டுகளையும் மறுத்தார் விவசாய அமைச்சர்.
 
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களால் முன்வைக்கபட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மறுத்தார்.
 
அனைத்தும் தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டபடுகின்றது. இது வேணும் என்றே என் மீது சேறு பூசும் நடவடிக்கை. யாருக்கோ முதுகு சொறிந்து விடுவதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.
 
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என கூறப்பட்ட விடயம் விவாதிக்கும் போது அதனை அவைத்தலைவர் தடுக்காது இருந்துள்ளீர்கள்.
 
பொது பிரச்சனை என கூறி என் மீதான குற்ற சாட்டுக்களை உறுப்பினர்கள் முன் வைக்க வேண்டும் என அவைத்தலைவர் செயற்பட்டு உள்ளீர்கள்.
 
அவைத்தலைவர் உங்களுக்கு கண்ணியமாக சபையை நடாத்த தெரியவில்லை. இந்த இரண்டரை வருடத்தில் அரை நாள் அமர்வை மாத்திரமே உபஅவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் நடாத்தி இருந்தார். அந்த அரை நாள் அமர்வு எவ்வளவு கண்ணியமாக நடந்தது
 
இது வேணும் என்றே என் மீதான சேறு பூசும் நடவடிக்கைக்கு அவைத்தலைவர் துணை போயுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. என விவசாய அமைச்சர் தெரிவித்தார

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.