Jump to content

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! : உசைனிடம் கூட்டமைப்பு வலியுறுத்து!


Recommended Posts

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! : உசைனிடம் கூட்டமைப்பு வலியுறுத்து!
 
 
ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! : உசைனிடம் கூட்டமைப்பு வலியுறுத்து!
ஐ.நா வின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனை இன்று கொழும்பில் வைத்து சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன் கலப்பு நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த செப்டெம்பர் மாத கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
 
எனினும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையிலேயே ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனான கலப்பு நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைமையிலான பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
அது மாத்திரமன்றி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தவும் ஆணையாளர் தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
 
இன்றைய சந்திப்பின் போது காணாமல்போனோர், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிப்பது குறித்த விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
                                                            samanthan-hosain.jpg
 
Link to comment
Share on other sites

மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்? ததேகூ-விடம் கேள்வி எழுப்பிய ஹுசைன்!

 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஹூசைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று காலை நடைபெற்றது.
 

sampanthan-%20UN%20Hussian.jpg

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பாக பேசியதாகவும், இந்த பிரச்னைகளுக்கு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை பெற்றுத் தருவதாக மனித உரிமை ஆணையாளர் தமக்கு உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் கைதிகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்றைய தினம் பேசியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் குறித்தும் செய்ட் அல் ஹூசைன் இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பிரதமருடனான சந்திப்பின்போது மீள்குடியேற்றம் தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் பேசுவதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் உறுதி அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/world/58771-un-human-rights-commissioner-hussein-sampanthan.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.