Jump to content

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி:


Recommended Posts

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி:

09 பெப்ரவரி 2016
Bookmark and Share
 

 

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி:



மனித உரிமை ஆணையாளரின்டை விஜயம் வேடிக்கையாய் இருக்குதாம் கோத்தபாயவுக்கு. பின்ன இருக்காதே? அதை வைச்சும் இவரும் இனவாத அரசியல் செய்த இடமிருந்தால் அது வேடிக்கைதானே. இல்லாட்டி மனித உரிமை ஆணையாளர் என்ன மஜிக் சோ நடத்தவே வந்தவர்?

அவர் வந்து நிலமையைளை பாக்கிறார். நீங்கள் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி முந்தி கூட்டம் போடுறியள்? குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். இராணுவ வீரர்கள் யுத்தக் குற்றம் இழைக்கவில்லையாம். சரி அப்ப ஏன் பயப்பிடுறியள்? குற்றம் இழைக்காட்டில் ஏன் இந்த பதற்றம்?

கொழும்பிலை மீட்டிங்கை போடுறியள். கையெழுத்து வேட்டை செய்யிறியள். ஏரி நிறைந்தால் கரை கசியும். அப்பிடித்தான் உங்கடை இனவாத குட்டைக் குளத்தின்டை அணைக்கட்டுக்கள் கரைஞ்சு போச்சுது. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும் எண்டுற இனவாத அரசியல் செய்யாதிங்கோ. சொப்பனத்திலை கண்ட அரிசி சோற்றுக்காகுமே?

நாங்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாம் எண்டுறார் கோத்தபாய. சும்மாவே யுத்தம் செய்தனியள். சனங்களை கொத்துக் கொத்தாய் கொண்டு தமிழினத்தை அழிச்சு இரத்த ஆற்றிலை நீந்தி எல்லோ யுத்தம் செய்தனியள். உயிரோடை சரணடைஞ்ச எத்தினை மனுசரை இல்லை எண்டு சொன்னனியள்? வெல்ல வேணும் எண்டு நீங்கள் எப்பிடி வேணும் எண்டாலும் யுத்தம் செய்வியள். அதை பாத்துக் கொண்டே இருக்கவேணும் என?

உங்கடை யுத்தம் மனித குலத்திற்கு எதிரானது எண்டதுதானே பிரச்சினை. சரி. நேர்மையாய் யுத்தம் செய்திருந்தால் ஹேக் நீதிமன்றம் போங்கோ. இன்னும் எந்த நீதிமன்றம் என்ன விசாரணை எண்டு சொல்லேல்லை. அதுக்குள்ளை நீங்கள் தொடங்கிட்டியள்.

ஏனெண்டால் என்ன குற்றம் செய்தால் என்ன விசாரணை? எங்கை நீதிமன்றம்? என்ன தண்டனை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே? உவையளை மாதிரி ஆக்களுக்கு என்ன நடந்தது எண்டும் உவருக்கும் உவரின்டை அண்ணனுக்கும் நல்லா தெரியும்தானே?

வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா? ஆட்சியை இழந்தால் பேசாமால் அண்ணனும் தம்பியுமாய் மெதமுலனவில் போய் இளைப்பாறுகிறதுதானே. அதைவிட்டிட்டு கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்த கதையாய் தொடர்ந்தும் யுத்தவெறியை வைச்சுக் கொண்டு அரசியல் செய்ய திரியிறியள்?

ஆட்டுக்கும் வால் அளந்து வைத்திருக்கு. அதனால் கொஞ்சம் அடக்கமாய் நடந்திருக்க வேணும். நீங்கள் அந்தி மழை அழுதாலும் விடாது எண்டுற மாதிரி தொடர்ந்து இனவாதத்தை கக்கிறியளே? அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் எண்டுவினம். இது நுனி நாக்கிலையும் நஞ்சே? ஆனால் இலங்கை தீவிலை நிலமை மாறிட்டுது. மகிந்தர் எண்டுற இனவாத குதிரையை வைச்சு இனிமேல் பந்தயம் காட்ட ஆரும் வறமாட்டினம். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிஞ்சிட்டுது. அடாது செய்தவன் படாது படுவான் எண்டுற மாதிரி நீங்களும் இனி என்ன எல்லாம் செய்து பாக்கிறியள். என்ன எல்லாம் பேசிப் பாக்கிறியள். அல் ஹூசைனுக்கு  அரசாங்கம் பயிற்சி அளித்து பேச அனுப்பியிருக்குது எண்டுறியள். மகிந்தவும் அவரை முந்திக் கூப்பிட்டவர்தானே. அப்ப நீங்கள் கூப்பிடுறவைக்கு நீங்கள் ரெயினிங் எடுக்கிறனியளே? அது மகிந்தர்தான் வெளிநாட்டு கூட்டங்கள் போகமுதல் ரெயினிங் கிளாஸ் போறவர்.

இரண்டொரு நாளிலை அல் ஹூசைன்  என்ன சாதித்தபார்? எதை முழுமையாக தெரிஞ்சு கொள்ளுவார் எண்டு கேக்கிறியள்? உங்கடை ஆட்சியிலை நவநீதம்பிள்ளை வந்து இரண்டு ஒருநாளிலை வந்து எல்லாத்தையும் தெரிஞ்சு கொண்டாவா தானே? நீங்கள் செய்த அநியாங்களை உலகமே அறியும் எல்லே? இன்னும் கூட நாள் இஞ்ச அல் ஹூசைன் இலங்கையிலை தங்கினால் உங்கடை வண்டவாளங்கள்தான் ஐ.நா தண்டவாளத்திலை அதிகமாய் ஏறும்!

நீங்கள் தலையாலை நடந்தும் ஒண்டும் செய்ய ஏலாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான். உப்புத் திண்டவன் தண்ணி குடிப்பான். திண்ட உப்பின்டை அளவு தெரியும்தானே. அதுக்கு தக்கினை பானையோடை ரெடியாய் இருங்கோ.

யாழ்ப்பாணத்தம்பி

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128765/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.