Jump to content

சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி


Recommended Posts

சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி

 

இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

160208151647_kandy_un_512x288_bbc_nocred

 

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் ஆணையர் செயித் ராத் அல் ஹுசைன் மல்வத்து மஹநாயக்க தேரருடன் கலந்துரையாடும்போது

ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அவரைக் கண்டியில் சந்தித்தபோதே திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை அரசு சகல இன மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவற்காக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என மல்வத்தை பீடாதிபதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையரிடம் தெரிவித்துள்ளார்.

160208151624_kandy_un_512x288_bbc_nocredஆணையர் செயித் ராத் அல் ஹுசைனை பஸ்நாயக்க நிலமே நிலங்க தேல பண்டார வரவேற்றபோது

புதிய அரசாங்கம் அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் ஐ நா ஆணையரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே மனித உரிமைகள் விஷயத்தில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் முக்கியத்துவம் பற்றி, ஐ.நா. ஆணையாளருக்கு தாம் விரிவான விளக்கம் கொடுத்துள்ளதாக அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியது, முக்கியமானதொன்றாக இருந்தது என ஊடகவியலாளர்களிடம் சயீத் ரா அத் அல் ஹுசைன் தெரிவித்தார்.

நாட்டில் சமாதானம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மற்றைய தரப்பினர்களுடனும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160208_kandy_un?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி

உண்மைதான்........புலிப்பயங்கரவாதிகளை அழித்ததிற்கு எதற்காக சர்வதேச விசாரணை வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப் 11 தாக்குதலில் 2000 மக்கள் இறந்த உடன ஒருத்தற்ற கருத்தும் கேட்காமல் அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்கிச்சுது.. குண்டு போட்டிச்சுது.. நாடுகளை ஆக்கிரமிச்சிச்சு. இந்த ஐ நா வாய் பார்த்திட்டு இருந்திச்சு

இங்க என்னடான்னா.. சிங்களவர்களால் பல ஆயிரக்கணக்கில்... கொலை செய்யப்பட்ட.. காணாமல் போகடிக்கப்பட்ட.. தமிழ் மக்கள் சார்ப்பில் சிங்களவனட்டையே உங்களை விசாரிக்கிறதா இல்லையா.. நீங்களே உங்களை விசாரிக்கிறீங்களா.. அல்லது நாங்க வாறதான்னு கருத்துக் கேட்கும் வேடிக்கையை கடந்த 6 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறது ஐ நா.

காரணம்.. தமிழன் உலகில் பலவீனமாக அதிகாரம் இன்றி இருக்கிறான் என்ற ஒற்றைக்காரணம் தானே தவிர வேறில்லை. :rolleyes:tw_angry:

Zeid_Nalloor_visit_01.jpg

மைத்திரி வரேக்க நின்ற.. சிங்கள இராணுவ அதிரடிப்படை ஆட்களை இப்ப காணேல்ல. இல்ல.. காக்கியில வந்து நிற்கினம்.

இப்படித்தான் இவைட விசாரணையும் இருக்கும்... :rolleyes:

உலகத்தை ஏய்ச்சு தமிழனையும் ஏய்ச்சு.. சிங்களவன் என்னமா காய் நகர்த்திறான். கொலைகாரச் சிங்களவன். அவனுக்கு எங்கட சிலது எதிர்க்கட்சி தலைவர்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38127

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் பின்வரும் காரணத்துக்காக வழக்குப் பதிவு செய்ய முடியாதா?

 

Perverting the cause of justice.

 

 ஆராவது தமிழ் படுத்திவிட்டால், மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.