Jump to content

பாசத்தின் விலை


Recommended Posts

என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க ,

ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ......

என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்டியது தான் ,இங்க பிரச்சினை என்று வேறு வேலைக்கு போனால் அங்க வேறு பிரச்சினை இருக்கும் சரி விடுங்க இதுகளை கதைச்சா தலை வெடிக்கும் , உண்மைதான்டா தம்பி ஆனால் , ஆனால் என்ன அண்ணே சொல்லுங்க நீங்க எதோ வேற பிரச்சினையை வைச்சு கதைப்பது போல இருக்கு எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் விடுங்க நான் கேட்கமாட்டான் நேரம் ஆகுது வீட்டுக்கு போங்க அக்கா பார்த்துக்கொண்டு இருப்பா ....

உனக்கு சொல்லுறதில என்னடா இருக்கு நீ எனக்கு ஒரு சகோதரம் போல ,இல்லை எங்கட மூத்த அக்காவின் பிள்ளைகளை இவன் தம்பி ரவி தான் இவ்வளவு காலமும் பார்த்தவன் ,

ஓம், ஓம் எனக்கு தெரியும்.... நீங்கதானே அவரை இங்க கூப்பிட்டு விட்டது

ம்ம் அவனும் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில இருந்திட்டு வெளியில வரும்போது வயதி முப்பது தாண்டி போட்டுது ,நானும் எவ்வளவு காலம் பார்க்கிறது பிள்ளைகள் வளர வளர தேவைகள் கூடுது அதனால தான் அவனை கடன்பட்டு கூப்பிட்டு விட்டன் ,வந்தவன் எனக்கு காசு தரவேணாம் நீ மூத்த அக்காவின் பிள்ளைகள் மூன்றையும் வளர்த்து விடு என்று நான் சொல்லி போட்டு விடுட்டுடன் அவனும் சரி அண்ணை என்று இவ்வளவு காலம் பார்த்தவன் ....

கடைசி பெடியன் பிறந்து பத்தாம் நாள் அத்தான் கிபீர் அடிச்சு செத்து போனார் ,அந்த மூன்று பிள்ளையும் அவள் வளர்க்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் ,நான் இங்க இருந்து காசு கொடுத்து விட்டாலும் அது போயிட்டா கொடுத்து விட்ட ஆள் கொண்டுபோய் கொடுத்து இருக்குமா என்று எல்லாம் இரவு பகல் எல்லாம் யோசிப்பன் ,உனக்கே தெரியும் அப்ப ஒரு தொடர்பும் இல்லை வன்னிக்கு கதைக்க ...

உண்மைதான் அண்ணே போன் கதைக்க வேணும் என்றால் கூட முதல் இரண்டுநாள் வந்து சொல்லி அதுக்கு பிறகு போய் காத்திருந்து கதைக்க வேணும் ...

ம்ம் அப்படி தான் இருபது வருடத்தில் அக்காவோட இரண்டு தரன் தான் கதைச்சனான் எடா .. சரி அதை விடு ,இப்படி இவனுக்கும் வயது நாற்பது ஆகுது இனி எங்க கலியாணம் என்று அவனுக்கும் வெறுப்பு வந்திட்டு, பிறகு இல்லை கடைசி காலத்தில தனிச்சு போடுவான் என்று நான் தான் பிடிவாதம் பிடிச்சு, கலியாணம் பேசி ஊரில தெரிச்ச பிள்ளை தான் நாலு மாதம் முதல் இந்தியாவில போய் கட்டீட்டு வந்தவன் ..

ஓம் ஓம் ஒருக்கா படம் போனில காட்டின நினைவு இருக்கு இப்ப என்ன அவைக்குள்ள என்னமும் பிரச்சினையா ...

சீ சீ அவள் தங்கமான பிள்ளை ,பிரச்சினை என்ற அக்காவின் பெடி படிச்சவன் இனி குடும்பத்தை பார்ப்பான் ,வளர்த்திட்டான், வேலைக்கு போக தொடங்கிட்டான், என்னும் துணிவில தான் நான் சந்தோஷமா இருந்தான் ,பட்ட துன்பங்கள் துயருகள் எல்லாம் மறத்து, அடுத்தவள் பொம்பிளை பிள்ளை அதை அவன் கரை சேர்ப்பான் என்று இருக்க நேற்று அக்கா போன் பண்ணி அழுகிறா என்ன நடந்தது என்று நான் கலவர பட்டு பயந்து போனேன் ...

ஏன் அண்ணே என்னாச்சு ,ஏதாவது வாகனத்தில் அடிபட்டு போட்டானே பெடியன் ..

கோதாரி அப்படி போய் இருந்தாலும் நான் சந்தோஷப்பட்டுருப்பன் அந்த மூதேவி இப்ப தான் இருபத்தி ஒரு வயது அவையின் வீட்டில் இருந்து மூணாவது வீட்டில இருந்த ஒரு பெட்டைய கூட்டிக்கொண்டு ஓடிட்டாம் என்று சொல்லி முடிக்கும் போது .....

இவன் குடும்பத்தை பார்ப்பான் என்று நான் இருக்க ,இவன் தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு போயிட்டான் என கண்களில் நீர் அணைக்கட்டில் நிறைவது போல முட்டி நிக்க கதையை சொல்லி முடித்தார்....

யோசிச்சு பார் அப்பு நானும் கடன் ,வந்த தம்பி உழைச்சு கொடுத்து, படிப்பித்து, வீடு கட்டி கொடுத்து,மோட்டார் சைக்கிள் முதல் கொண்டு வாங்கி கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை நாற்பது வயதில் தான் ஆரம்பிக்க போக இந்த நாய் இந்த வேலையை செய்து இருக்கு ...

விரும்புறது கலியாணம் கட்டுறது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை கொஞ்சமாவது குடும்பத்தை யோசிச்சு பார்த்தியா ,தங்கச்சி இருக்கு தம்பி இருக்கு படிப்பிக்க வேணும் அம்மா இவ்வளவு காலம் விதைவையாக இருந்து எங்களை வளர்த்து ஆளாக்கி விட நாங்க இப்படி தெறிக்கும் வேலையை செய்யலாமா என்று ...

சரி அண்ணே அழவேணாம் அவன் பார்ப்பான் குடும்பத்தை மாமா ஆக்கள் எப்படி கஷ்டபட்டு தன்னை வளர்த்தவர்கள் என்று விளங்காமல் இருக்குமா ,சரி நீங்க அழாமல் இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்னும் ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னால் அவருக்கு வேறு என்னத்தை தான் கூற முடியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அஞ்சரன்! நல்லதொரு சமூக கதை. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

நன்றி  வருகைக்கு கருத்துக்கும் அண்ணே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் நீங்கள் இதை கதையாக எழுதியிருந்தாலும் 
எமது சமூகத்தில் இது அன்றாட பிரச்சனையாகிவிட்டது என்பது கசப்பான உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையில்லை அஞ்சரன்!

உண்மை வாழ்வின் தரிசனங்களில் ஒன்று...!

பிரச்சனைகள்.. அவற்றை எதிர் கொள்பவர்களுக்கு மட்டுமே பிரச்சனைகளாகத் தோன்றும்!

மற்றவர்களை அது பாதிப்பதில்லை!

தங்கள் பாட்டில் போய்க்கொண்டே இருப்பார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசத்திற்கு விலையை நாங்களே நிர்ண‌யிக்கின்றோம்.....தொடருங்கள் அஞ்சரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்,நீங்கள் சொல்ல வந்த கதையின் கரு பல குடும்பங்க்ளில் நடக்கின்றது...நீங்கள் கதையாக்கிய விதத்தில் அவசரம் தெரிகின்றது...கேள்விப்பட்ட கதையை சொல்ல வேண்டும் என்ட அவரசத்தில் எழுதின மாதிரித் தெரிகிறது

Link to comment
Share on other sites

On 08/02/2016 at 6:06 PM, அஞ்சரன் said:

என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , .........................

 

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்

17 hours ago, புங்கையூரன் said:

இது கதையில்லை அஞ்சரன்!

உண்மை வாழ்வின் தரிசனங்களில் ஒன்று...!

பிரச்சனைகள்.. அவற்றை எதிர் கொள்பவர்களுக்கு மட்டுமே பிரச்சனைகளாகத் தோன்றும்!

மற்றவர்களை அது பாதிப்பதில்லை!

தங்கள் பாட்டில் போய்க்கொண்டே இருப்பார்கள்! 

நன்றி புங்கை இதைவிட இக்கதைக்கு பொருத்தமாக என்னால் கருத்திட்டிருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 /95 வரை வந்த பலரது நிலை இதுதான். அக்காவோ தங்கச்சின்ரயோ குடும்பத்தில ஒருத்தனைக் கூப்பிட்டு விட்டால் அவன் அந்தக் குடும்பத்தப் பார்ப்பான் என்று கடனை கிடனை எடுத்து கூப்பிட்டு விட்டால் அவருக்கு நாடு பிடிபட்டவுடன  ஜூலை மாதத்து ஜிம்மி மாதிரி ரயில் விட்டுக் கொண்டு போயிடுவார், பிறகென்ன ஏற்கனவே உள்ள பிரச்சனையோட கடனையும் கட்டியழ வேண்டியதுதான்...!

நல்ல கதை அஞ்சரன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கு கஸ்டம் என்னவென்று தெரியாமல் வளர்த்தால் இப்படித்தான் நடக்கும். இப்படியான சம்பவங்கள் கேள்விப்பட்டவைதான்.

Link to comment
Share on other sites

23 hours ago, புங்கையூரன் said:

இது கதையில்லை அஞ்சரன்!

உண்மை வாழ்வின் தரிசனங்களில் ஒன்று...!

பிரச்சனைகள்.. அவற்றை எதிர் கொள்பவர்களுக்கு மட்டுமே பிரச்சனைகளாகத் தோன்றும்!

மற்றவர்களை அது பாதிப்பதில்லை!

தங்கள் பாட்டில் போய்க்கொண்டே இருப்பார்கள்! 

உண்மைதான்  அண்ணே  தனக்கு  தனக்கு  வரும்வரை  தான்  பிரச்சினை   எல்லாம்..

நன்றி  வருகைக்கு .

10 hours ago, putthan said:

பாசத்திற்கு விலையை நாங்களே நிர்ண‌யிக்கின்றோம்.....தொடருங்கள் அஞ்சரன்

நன்றி  வருகைக்கு ...

5 hours ago, ரதி said:

அஞ்சரன்,நீங்கள் சொல்ல வந்த கதையின் கரு பல குடும்பங்க்ளில் நடக்கின்றது...நீங்கள் கதையாக்கிய விதத்தில் அவசரம் தெரிகின்றது...கேள்விப்பட்ட கதையை சொல்ல வேண்டும் என்ட அவரசத்தில் எழுதின மாதிரித் தெரிகிறது

உண்மை  கேட்டததை  கதையாகவேனும்  என்று உண்மையில்  அவசரமாக  எழுதியது  தான்  என்னில்  உள்ள பலவீனமும்  அதுதான் தொடங்கினால் அதை உடனம்  முடிக்கவேணும்  என  நினைப்பது  ..

நன்றி  வருகைக்கு .

5 hours ago, ஜீவன் சிவா said:

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்

நன்றி புங்கை இதைவிட இக்கதைக்கு பொருத்தமாக என்னால் கருத்திட்டிருக்க முடியாது.

நன்றி  வருகைக்கு ...

5 hours ago, suvy said:

90 /95 வரை வந்த பலரது நிலை இதுதான். அக்காவோ தங்கச்சின்ரயோ குடும்பத்தில ஒருத்தனைக் கூப்பிட்டு விட்டால் அவன் அந்தக் குடும்பத்தப் பார்ப்பான் என்று கடனை கிடனை எடுத்து கூப்பிட்டு விட்டால் அவருக்கு நாடு பிடிபட்டவுடன  ஜூலை மாதத்து ஜிம்மி மாதிரி ரயில் விட்டுக் கொண்டு போயிடுவார், பிறகென்ன ஏற்கனவே உள்ள பிரச்சனையோட கடனையும் கட்டியழ வேண்டியதுதான்...!

நல்ல கதை அஞ்சரன்...!

வீட்டுக்கு  வீடு  வாசல்படி  தான் ..

நன்றி  வருகைக்கு .

4 hours ago, கிருபன் said:

பிள்ளைகளுக்கு கஸ்டம் என்னவென்று தெரியாமல் வளர்த்தால் இப்படித்தான் நடக்கும். இப்படியான சம்பவங்கள் கேள்விப்பட்டவைதான்.

உண்மை ..

நன்றி வருகைக்கு .

On 2/9/2016 at 10:49 PM, ஈழப்பிரியன் said:

அஞ்சரன் நீங்கள் இதை கதையாக எழுதியிருந்தாலும் 
எமது சமூகத்தில் இது அன்றாட பிரச்சனையாகிவிட்டது என்பது கசப்பான உண்மை.

நன்றி வருகைக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.