Jump to content

விடைபெறும் வேளையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (வீடியோ)


Recommended Posts

விடைபெறும் வேளையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (வீடியோ)

விடைபெறும் வேளையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (வீடியோ)

February 8, 2016  12:09 pm

Bookmark and Share
நியூஸிலாந்து - அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

இது நியூஸிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி சர்வதேச ஒரு நாள் தொடராகும். இதன்பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி மெக்கல்லத்துக்கு சிறப்பான முறையில் பிரியா விடைகொடுக்க நியூஸிலாந்து அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

3-வது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, களத்தடுப்பைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கலமுக்கு கைத்தட்டி அவுஸ்திரேலிய வீரர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

ஹேஸ்டிங்ஸ் வீசிய 2-வது ஓவரில் வழக்கமான அதிரடியுடன் தொடங்கிய மெக்கல்லம், மூன்று பவுண்டரிகளை விளாசினார். பிறகு போலண்ட் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அதோடு விடவில்லை. போலண்டின் அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் மட்டும் 16 ஓட்டங்களைக் குவித்தார்.

பிறகு மிட்செல் மார்ஷின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்தவுடன் அடுத்தப் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் 27 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார் மெக்கல்லம்.

முதலில் ஆடிய நியூசிலாந்து, 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி 247 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்ததாக அவுஸ்திரேலியா தற்போது தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

மெக்கல்லம் துடுப்பெடுத்தாட வருகையில் அவுஸ்திரேலிய வீரர்கள் அவரை வரவேற்ற காணொளியை கீழே காணலாம்..
 
 
 
Link to comment
Share on other sites

தொடரை வென்றதால்  2-வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

தொடரை வென்றதால் 2-வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

February 8, 2016  04:06 pm

Bookmark and Share
 
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் முடிவடைந்தது.

ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்பதால் இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருந்தது. ஏனென்றால், மெக்கல்லம் இந்த போட்டியுடன் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இதனால் அவரை வெற்றி வாகையுடன் வழியனுப்ப நியூசிலாந்து வீரரர்கள் எண்ணினர்.

அதன்படியே நியூசிலாந்து வெற்றி பெற்று அவரை கம்பீரத்துடன் வழியனுப்பியது. அத்துடன் தொடரை 2-1 எனக் கைப்பற்றியதால் ஐ.சி.சி.யின் ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2-வது இடத்தில் இருந்த இந்தியா 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, வங்காள தேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் முறையே 4-வது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை பிடித்துள்ளது.
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.