Jump to content

நாட்டுக்காக சேiவாயற்றிய என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை – கோதபாய ராஜபக்ஸ:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக சேiவாயற்றிய என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை – கோதபாய ராஜபக்ஸ:

08 பெப்ரவரி 2016

நாட்டுக்காக சேiவாயற்றிய என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை – கோதபாய ராஜபக்ஸ:

நாட்டுக்காக கடின உழைப்பினை வழங்கிய தம்மை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றியிருந்தார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாரிய அர்ப்பணிப்புடன் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தற்போது படைவீரர்களை சிறையில் அடைத்து, சிறையில் உள்ளவர்கள் விடுதலையாவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் தேர்தல் காலத்தின் போது குறிப்பிட்டதாகவும் அதனை துரதிஸ்டவசமாக பலர் நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பேரவையின் ஊடாக படைவீரர்கள் யுத்த நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு தண்டிக்கப்பட உள்ளதாகவம், பிரபாகரனுக்கு தேவையானவற்றை அரசாங்கம் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
1980ம் ஆண்டு முதல் தாம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும், எவ்வாறு பயங்கரவாதம் தலைதூக்கியது எவ்வாறு விஸ்தரித்தது என்பது பற்றிய விபரங்கள் தமக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல அரசாங்கங்கள் யுத்தம் செய்ததாகவும் யுத்தம் காரணமாக 30,000 படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் செய்தது பிழை என்பது போல தற்போது பேசப்படுவதாகவும் இளைஞர்களை ஏமாற்றும் வகையில் வரலாற்றை மறைத்து யுத்தம் செய்தது பிழையென காண்பிக்க முயற்சிக்கப்படுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128725/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பயம் கவ்வத் தொடங்கிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாட்டுக்காக செய்த பணி என்ன.. ஐநாவை அடிச்சுக் கலைச்சிட்டு.. உலகத்தைக் கூட்டி.. தமிழர்களைக் கொன்றொழித்தது. அதுக்கு.. இவர்.. சிங்களவனிடம் இருந்து ஒருவேளை தப்பலாம்.. ஆனால்.. இயற்கை தர்மத்தின் வழி.. தண்டிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையும் நாட்டுக்குள்ள தானே இருக்கு!

ஒரு வேளை ஜெனீவாவிலும் சிறை இருக்கெண்டு பயப்பிடீனமோ தெரியாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.