Jump to content

மதுரையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 14 பேர் பலி; 45 பேர் காயம்


Recommended Posts

மதுரையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 14 பேர் பலி; 45 பேர் காயம்

 
 
விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை அருகே அரசுப் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து இன்று குமுளிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து இன்று மாலை 4.15 மணி அளவில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கரூரில் இருந்து கேரள மாநிலம், ஆரியங்காவுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி எதிரே வந்தது. இவை இரண்டும் எதிர்பாராது நேருக்கு நேர் மோதின. சிமெண்ட் லாரி பேருந்து மீது சாய்ந்ததில் மூட்டைகள் பயணிகள் மீது விழுந்தன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 ஆண்கள், 2 ஆண் குழந்தைகள், 4 பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் திருமங்கலம், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த விபத்தில் அரசு பேருந்தும், லாரியும் ஒன்றுடன் ஒன்று சிக்கி பலத்த சேதமடைந்து உருக்குலைந்தன. விருதுநகர், திருமங்கலம் பகுதியில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியிருந்த சடலங்களையும், படுகாயமடைந்தவர்களையும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் போராடி மீட்டனர். இதனால் சடலங்களை மீட்பதும், காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதும் தாமதமானது.

இந்த விபத்தால் மதுரை-ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கோபால்சாமி மலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் ராய் ரத்தோர், டிஐஜி ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டுத் துரிதப்படுத்தினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் தகவலை அறிவதற்காக திருமங்கலம், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தகவல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 9445000591, 9445000592 ஆகிய செல்போன்கள் மூலமும், மதுரை அரசு மருத்துவமனையில் 9445000586, 9445000587 ஆகிய செல்போன்கள் மூலமும் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.

இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1 லட்சம் நிதி

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-45-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8203157.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.