Jump to content

ஜெ. மீதான 'பிறந்தநாள் பரிசு வழக்கு' 4 வாரங்கள் ஒத்திவைப்பு


Recommended Posts

ஜெ. மீதான 'பிறந்தநாள் பரிசு வழக்கு' 4 வாரங்கள் ஒத்திவைப்பு

140927143412_indian_politician_jailed_51

 தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைகேடாக பிறந்தநாள் பரிசு பெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் இறுதிக்கட்ட விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது ஜெயலலிதா தரப்பிலான வாதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டது என்றும், அதிலும் காலம் கடந்தே அந்த வழக்கு பதியப்பட்டது என்றும் கூறப்பட்டது.

மேலும், இதே காரணங்களை ஏற்றக்கொண்டே, முன்னதாக உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்றும் ஜெயலலிதா தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு அந்த அமர்வு ஒத்திவைத்தது.

ஜெயலலிதா முதன்முறையாக முதல்வர் பொறுப்பு வகித்தபோது 1992 ஆம் ஆண்டில் அவரது பிறந்த நாள் பரிசாக 2 கோடி ரூபாய் அளவுக்கு வந்த காசோலைகளை, ஜெயலலிதா தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டதாகவும், இதற்காக முறையாக அவர் கணக்கு காட்டவில்லை என்றும் ஜெயலலிதா மீது சிபிஐ வழக்கு தொடுத்திருந்தது.

அந்த வழக்கை உயர்நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டில் ரத்து செய்து உத்தரவிட்டது. தொடர்ந்தே இந்த மேல்முறையீடு வழக்கு இப்போது நடைபெறுகிறது.

இதே மாதத்தின் துவக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது இந்த இரண்டு வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணைகளும் ஒரே காலகட்டத்தில் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்கிற காரணத்தாலும், இந்த இரண்டு வழக்குகளும் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

தினகரன் வெடிகுண்டு வழக்கு

இதனிடையே, தினகரன் நாளேட்டின் மதுரைக் கிளை அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பான மேன்முறையீட்டு வழக்கில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 17 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 5 பேர் தவிர மற்ற 12 பேரும் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் விசாரணையைத தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதைக் கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரைக் கொண்டுள்ள அமர்வு, அந்த குறிப்பிட்ட 12 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india/2016/02/160205_jeya_birthday

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.