Jump to content

தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

உண்மைதான் சிவாசின்னப்பொடி போன்ற ஒத்தோடிகளின் பிரசாரங்களை தாயகத்தில் இருக்கும் மக்கள் கணெக்கெடுப்பதில்லை. முதலில் இவர்கள் யாரென்றே மக்களுக்குத் தெரியாது!

வாலி, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதை நிப்பாட்டினால் ஏதாவது உருப்படியாக விவாதிக்கலாம். 

சிவா சின்னப்பொடி முன்னைநாள் புளட்காரர். அர்ஜுனுக்கும் கட்டாயம் தெரிந்தவராகத்தான் இருப்பார்.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

உண்மையோ பொய்யோ என்பதுதான் கேள்வி ?

மக்கள் செவி சாய்த்தார்களா என்பது யாருக்கு தெரியும் .

isis பற்றி சர்வதேசம் எவ்வளவு சொன்னாலும் ஆதாரம் காட்டினாலும் மக்கள் அதை செவிசாய்க்கவில்லை - அரபு சிவா சின்னபொடி 

Link to comment
Share on other sites

11 hours ago, விசுகு said:

 

13 hours ago, Sasi_varnam said:

ம்ம் ஒருத்தர்  ஊருக்கு போய் எதோ கொஞ்ச நல்ல காரியங்கள் செய்யுறன், முயற்சிக்கிறன் என்றெல்லாம் சொன்னவர் ..வெறும் புலி எதிர்ப்பு, சிங்களத்திடம் எப்படி கையேந்தும் கலை 101 இது போன்ற விஷ விதைகளை மட்டுமே தான் அங்கே நின்று மாய்ந்து மாய்ந்து விதைக்கிறீர்கலாக்கும். உருப்பட்டது உங்கள் சமூகம்.

விடுங்க சசி

புலத்தில் இருந்தபோது நாட்டில் மட்டுமல்ல தங்கியிருந்த நாட்டிலும் எதுவும் தெரியாமல்

எந்த ஒரு அமைப்பிலும் இல்லாது

தான் மட்டுமென சுயநலமாக இருந்துவிட்டு 

இது போன்று  அந்த நாட்டு சட்டதிட்டங்களை பாவித்து பணம் வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு

அங்கு போய் விலாசங்காட்டுபவர்களுக்கு

கடற்கரையும் உணவகங்களும் தான் தெரியும்

வன்னியிலோ கிழக்கிலோ காலே பட்டிருக்காது

அதில் மிகக்கவனமாக இருப்பார்கள்.

 

 

உங்களுக்கே இது கேவலமாயில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு திரியில் உதவி கேட்ட போது, சில நாட்களில் தாயகம் செல்கின்றேன் குறிப்பட்ட பணத்தை அவசரமானால் கொடுத்து விடுகின்றேன், சேர்ந்ததும் பின்னர் தாருங்கள் என்று தனிமடலில் எனது அடையாளத்தை நீங்கள் யாரென்று தெரியாமலே வெளிப்படுத்தி இருந்தேன். இங்கு களத்தில் அதை பயன்படுத்தி எனது அடையாளம் பற்றி கேவலமாக எழுதி உங்கள் மனப்பாண்மையை புரிய வைத்ததற்கு நன்றி.

 

உங்களை நம்பின எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். புலிக்கு பசித்தாலும் புல்லைத் தின்னாது - ஏமாத்தித்தான் எதையாவது தின்னும். மதில் கட்டினான், மாடு மேச்சனான், மரம் வெட்டினான் என்று புங்குடுதீவில படம் காட்டுங்கோ. அதற்குதான் நீங்கள் லாயக்கு.

 

 

உங்களைபோல படம் காட்டுபவனில்லை நான். பதவி பகட்டிற்கு அப்பாற்பட்டு இன்றும் மனிதனாக வாழ்பவன். நான் நாலுகாலில் வாழ விரும்பவில்லை.

 

 

பிகு: நிர்வாகம் இதை தூக்கினாலும் சிலரது தோல்கள் உரிக்கப்பட வேண்டியவையே. இது எனது முதலாவது தனிமனித தாக்குதல் - இதற்கு காரணம் யாரென்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இழந்ததும்,இழந்து கொண்டிருப்பதும் தமிழர்கள். நமது உறவுகள் என்ற எண்ணம் உள்ள எவரும் இல்லாத புலிப்புராணம் பாடுவார்களா? இன்றைய தேவை என்ன? எனது இனவிடுதலைக்காக வேண்டாம் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதிகிடைக்க என்ன செய்யலாம் என்று கருத்தாட வேண்டிய இடத்தில் சேறுவாரியிறைத்துக்கொண்டிருந்து ஏதும் பயனுண்டா? 


அமைப்புகளின் தோற்றத்தையும் மறைவையும் காலமும் சூழலுமே தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைச் சுட்டுகின்றேன்.1984ம் ஆண்டு கிளிநொச்சியிலுள்ள கிராமமொன்றிலே தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)யினரால் ஒரு மக்கள் சந்திப்பு நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே அப்போது தமிழீழ வீடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த மாறன் வந்து சந்திப்பை அவதானித்தவிட்டு, 1984ம் ஆண்டிண் பின்னரும் இயக்கங்கள் தேவையா? என்று கேட்போது, அந்தக் கூட்டத்திலே கருத்துரைத்துக் கொண்டிருந்தவர், (அவர் தன்னை சிறீ என்று அறிமுகப்படுத்தியிருந்தார்) அதனை யாரும் தீர்மானிக்க முடியாது காலமே தீர்மானிக்கும் என்று பதிலளித்திருந்தார். 
அதன் பின்னரும்  அமைப்புகள், கட்சிகள், ஒட்டுக்குழுக்கள் என்று தோன்றியதும் இந்திய சிறீலங்கா அரசுகளின் ஆதரவோடு நடமாடியதும், அனைத்தையும் முறியடித்து ஒரு பலம்பொருந்திய அமைப்பாகவும், அரசு நோக்கிய கட்டமைப்பகளை நிறுவி அரசு நோக்கிய அரசாகவும் மக்கள் ஆதரவோடு தமிழினத்தின் பேரெழுச்சியின் வடிவமாக 2009 மே வரை அவர்களால் நிற்கமுடிந்திருக்கிறது. அவர்களை உலக ஆதிக்க சக்திகளின் துணையோடு சிங்களம் நயவஞ்சகமாக வீழ்த்தியிருக்கிறது. இதனை புலிகளின் வீழ்ச்சியெனப் புளங்காகிதம் அடைவோர் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இது புலிகளின் வீழ்ச்சியல்ல. இது தமிழரின் வீழ்ச்சி. 


இதனை சிங்களத் தலைமைகள் தெளிவாக உரைத்து நடைமுறைப்படுத்திவருகின்றன. அதனால்தான் யுத்த(வஞ்சக)வெற்றி குறித்துப் பேசும்போது மகிந்த வட்டுக்கோட்டையிலே தொடங்கியதை நந்திக்கடலிலே முடித்துவிட்டதாக(2009.05.19) இறுமாந்தமையின் வடிவத்தை நோக்கவேண்டும்.
சிறிலங்காவின் சுதந்திரதினத்திலே தேசியகீதத்தைக் கடைசியாகத் தமிழிலே பாடியதனூடாக எப்போதும் நீங்கள் கடைநிலை இனம்தானென சிங்கள நல்லாட்சி அரசு குறியீடாகக் சுட்டியிருக்கிறது என்பதே பொருத்தமானது. இதிலே சம்பந்தரையா கண்கலங்கினாலென்ன? சுமந்திரன் மாமா கைதட்டினாலென்ன? தமிழரது வாழ்விலே இதனால் ஏதாவது மாற்றம் வருமா? ஆனால் சிங்கள அரசினுடைய நிலையை அவர்கள் இதனூடாக அனைத்துலகிலே மேலும் உயர்த்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே மெய்நிலையாகும். ஆனால் நமக்கென்ன யாருக்காகவோ சேறைவாரியிறைப்போம்


.5:51 வது நிமிடத்தையும் , 6.26வது நிமிடங்களையும் பார்க்கவும். சிங்களவன் சிங்களவன்தான் ஆனால் தமிழன்..

 

 

 

 

Link to comment
Share on other sites

27 minutes ago, nochchi said:

இழந்ததும்,இழந்து கொண்டிருப்பதும் தமிழர்கள். நமது உறவுகள் என்ற எண்ணம் உள்ள எவரும் இல்லாத புலிப்புராணம் பாடுவார்களா? இன்றைய தேவை என்ன? எனது இனவிடுதலைக்காக வேண்டாம் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதிகிடைக்க என்ன செய்யலாம் என்று கருத்தாட வேண்டிய இடத்தில் சேறுவாரியிறைத்துக்கொண்டிருந்து ஏதும் பயனுண்டா? 

இதைத்தானே நானும் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

நாங்கள் எங்கேயோ போய்விட்டோம் தம்பி  இப்பவும் தபேலா வாசிப்பதில் தான் நிற்கின்றார் .

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, arjun said:

நாங்கள் எங்கேயோ போய்விட்டோம் தம்பி  இப்பவும் தபேலா வாசிப்பதில் தான் நிற்கின்றார் .

உண்மை தான் அர்ஜுன் அண்ணா,
நீங்கள் எம்மை எல்லாம் விட்டு .. எங்கேயோ தூர ...தூர ... போய் விட்டீர்கள்.. :(
நான் வாசிக்கும் தபேலா ஒலிதான் தனிமைக்கும், இழப்புக்கும் ஆசுவாசம்.  :)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கே இது கேவலமாயில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு திரியில் உதவி கேட்ட போது, சில நாட்களில் தாயகம் செல்கின்றேன் குறிப்பட்ட பணத்தை அவசரமானால் கொடுத்து விடுகின்றேன், சேர்ந்ததும் பின்னர் தாருங்கள் என்று தனிமடலில் எனது அடையாளத்தை நீங்கள் யாரென்று தெரியாமலே வெளிப்படுத்தி இருந்தேன். இங்கு களத்தில் அதை பயன்படுத்தி எனது அடையாளம் பற்றி கேவலமாக எழுதி உங்கள் மனப்பாண்மையை புரிய வைத்ததற்கு நன்றி.

 

உங்களை நம்பின எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். புலிக்கு பசித்தாலும் புல்லைத் தின்னாது - ஏமாத்தித்தான் எதையாவது தின்னும். மதில் கட்டினான், மாடு மேச்சனான், மரம் வெட்டினான் என்று புங்குடுதீவில படம் காட்டுங்கோ. அதற்குதான் நீங்கள் லாயக்கு.

 

உங்களைபோல படம் காட்டுபவனில்லை நான். பதவி பகட்டிற்கு அப்பாற்பட்டு இன்றும் மனிதனாக வாழ்பவன். நான் நாலுகாலில் வாழ விரும்பவில்லை.

 

பிகு: நிர்வாகம் இதை தூக்கினாலும் சிலரது தோல்கள் உரிக்கப்பட வேண்டியவையே. இது எனது முதலாவது தனிமனித தாக்குதல் - இதற்கு காரணம் யாரென்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே நிர்வாகம் தூக்கும் என்று எனக்கு எழுதிய இருமுறையும் எழுதிவிட்டே பதில் இட்டிருக்கின்றீர்கள்

அதன் மூலமே தெரிகிறது மனச்சாட்சிக்கு விரோதமாக நீங்கள் பதிலளிக்கின்றீர்கள் என்று.

உங்களது தனி மடல் பற்றியோ

உங்களது இரகசியங்கள் பற்றியோ நான் எதுவும் எழுதவில்லை

திண்ணையிலும் திரிகளிலும் நீங்கள் எழுதியவற்றையும் பச்சையிட்டவற்றையும்  வைத்தே நான் எழுதினேன்.

அது உங்களது இரட்டை வாழ்க்கையை இரட்டை வேசங்களை தொடுமாயின் தப்பு என்மீதில்லை

பொதுக்கருத்து எழுதும் போது இரட்டை வேசம் சாத்தியமாகாது.

இங்கு தனிப்பட்ட விசுகுவுக்கும்  ஜீவன் சிவாவுக்கும் எந்த வாதாட்டமுமில்லை

தம்மை

தமது உயிரை

உடல் பொருள் ஆவியை 

தமிழரின் விடிவுக்காக தந்த மறவர்களை 

மறக்கணும் 

மன்னிக்கமுடியாதவர்கள்

என்ற எழுத்துக்களின் முன்னால் ....

அவர்கள்  இருக்கும் காலத்தில் நாம் என்ன செய்தோம்?

என்கின்ற கேள்விக்கு ஒவ்வொருத்தரும் பதிலளிக்கணும்

தம்மைத்தானே விமர்சனம் செய்யணும்.

அதுவே எனது கேள்வியே தவிர  ஜீவன் சிவா புலிகளை கை நீட்டாதிருந்தால் 

அவரை நோக்கி நான் மட்டுமல்ல எவரது கைகளும் நீளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On February 10, 2016 at 0:35 PM, கிருபன் said:

வாலி, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதை நிப்பாட்டினால் ஏதாவது உருப்படியாக விவாதிக்கலாம். 

சிவா சின்னப்பொடி முன்னைநாள் புளட்காரர். அர்ஜுனுக்கும் கட்டாயம் தெரிந்தவராகத்தான் இருப்பார்.

கிருபன் சார், இங்கு விவாதிக்க என்ன இருக்கு. சிவா சின்னப்பொடி எழுதினதை மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். அப்படி அவர் தாயக மக்களுக்கு என்ன செய்து இருக்கிறார். புலம்பெயர் வால்களின் துடிப்பை அறிந்து எழுதும் பத்தோடு பதினொன்றாக அவர் இருகலாம். மற்றும்படி "விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை" என்று எழுதும் அவர், புலிகள் கொலைசெய்யவில்லை என்கிறாரா? இல்லை பணம் பறிக்கவில்லை என்கிறாரா? இல்லை பிள்ளை பிடிக்கவில்லை என்கிறாரா? 

இப்படியானவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டத்தான் லாயக்கு. சிங்கள அரசு இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டதுதான், ஆனால் அது தமிழ் மக்களை நோக்கிய பிரசாரம் அல்ல, பன்னாட்டுச் சமுகத்தை நோக்கிப் பிரசாரம் செய்தது. அதில் (புலிகளின் உதவியுடனேயே) மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அரசின் பிரசாரங்களையோ செய்திகளையோ  வன்னிக்கு வெளியே இருந்த மக்கள் இறுதிவரை தமிழ் மக்கள் நம்பவில்லை.  எனினும் கடைசியில் நடந்தது வேறு. ஆனால் வன்னிக்குள் வாழ்ந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிந்து இருந்தது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.