Jump to content

வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை.
Mohanay February 05, 2016 Canada

fraud.jpeg

காப்பீட்டு மோசடி “நடன இயக்குநர்” ஒருவர் ரொறொன்ரோவின் பிசியான வீதிகளில் 13 வாகன மோதல்களை நடாத்திய குற்றத்திற்காக வியாழக்கிழமை மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
குற்றவியல் அமைப்பொன்றின் தலைவர்களில் ஒருவரான 38வயதுடைய உதயகாந்தன் ‘மனோ’ திருநாவுக்கரசு என்பவர் ஒரு டசின் கணக்கான சாரதிகள் மற்றும் பயணிகளை போலியான வகையில் காயப்பட்டவர்கள் என காட்டி 1.5மில்லியன் டொலர்கள் வரையிலான பொய்யான காப்பீட்டு கோரிக்கைளை பெற்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டார்.
இத்தொகையில் 1.2மில்லியன் டொலர்கள் திருநாவுக்கரசுவின் வணிக கணக்கில் சென்றுள்ளதாதவும் கூறப்பட்டுள்ளது. இவருக்கு மீளளிப்பாக டொலர்கள் 375,000ஐ செலுத்துமாறு கட்டளையிடப்பட்டள்ளது.
இந்த மோசடியில் இரண்டு டிரக் சாரதிகள், உதிரிப்பாக பழுது பார்க்கும் கடைகள் மற்றும் மறுவாழ்வு கிளினிக்குள் என்பனவும் திருநாவுக்கரசுவின் “இந்த மிகவும் சிக்கலான” மோசடியில் இழுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உணர்கொம்பாக இவர் இருந்துள்ளதாக ஒன்ராறியோ உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோன் மக்கஹோன் தெரிவித்தார்.
2007 மேயில் இத்தகைய ஒரு போலி விபத்து ஸ்காபுரோவில் திசை மாறியதால் மனிதன் ஒருவரை நிரந்தரமாக மூளைக்காயத்திற்கு ஆளாக்கியது
திருநாவுக்கரசு இந்த வருட ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 2007ல் 17 குற்றங்கள் செய்ததாகவும் இவற்றில் ஒரு குற்றவியல் அமைப்பில் கட்டளை செய்தமை, மோசடி மற்றும் குற்றவியல் அலட்சியம் காரணமாக உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்செயல்களும் அடங்குகின்றன.
திருநாவுக்கரசு ஆறு வயதாக இருக்கும் போது இவரது பெற்றோர் மற்றும் சகோதரி இலங்கையில் வெட்டிக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990ல் கனடா வந்தவர்.
மூன்று பிள்கைளின் தந்தை. கடந்த வருடம் மனநல ஆலோசயை நாடியதுடன் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்றவர். ஆனால் 2007ல் மன ஆரோக்கியம் ஒரு பிரச்சனையா இருந்தமைக்கு சாட்சியங்கள் இல்லை.
“நான் செய்தது சரியான தவறு. அதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்” என மொழிபெயர்பாளர் ஊடாக தெரிவித்தார்.
இன்னமும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட மற்றய குற்றங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரங்கேற்றும் வாகன மோதல்கள் துரதிஷ்ட வசமாக ரொறான்ரோவில் பொதுவானவை எனவும் கனடாவில் இந்த மோதலின் தலைநகரம் ரொறொன்ரோ பெரும்பாகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

- See more at: http://www.canadamirror.com/canada/56608.html#sthash.I4WLMpvz.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனிலும் வெள்ளை வானோடு அலைகிறது ஒரு கூட்டம். தமிழர்களுக்கு "நற்" பெயரை சம்பாதித்துக் கொடுக்கிறார்கள்.. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு நல்ல பெயர் இருக்கின்றதப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அங்கின இருந்தது. அதையும் அறவே இல்லைன்னு ஆக்கிட்டு இருக்காங்க. :rolleyes:

Link to comment
Share on other sites

எப்போதும் களவு செய்து பிடுபடுபவன் மட்டும் தான் வெளிச்சத்திற்கு வருகின்றான் தண்டனையும் பெருகின்றான் .இவர் 13 

விபத்துகளை உருவாக்கியவர் ,

நூறுக்கு மேலே விபத்துக்களை உருவாக்கி பெரும் முதலாளிகள் ஆகி இன்று சமூகத்தில் பெரும்புள்ளியாக பவனி வருபவர்கள் பலர் .

எல்லாவற்றிருக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும் .

எமது கார்கள் இரண்டுதரம் இப்படி அடிக்கபட்டன .வேண்டுமென்றே மோதிய அந்த காரில் ஒரு பெண்ணும் இருந்தார் .அம்புலன்ஸ் வர அவர் நடித்த நடிப்பு இருக்கே சொல்லிமாளது .

யாழில் முன்னர் விபரமாக எழுதியிருந்தேன் .

Link to comment
Share on other sites

இந்த வலைப்பின்னலில் வேற்று நாட்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். பிடிபடுவது சிறியவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பற்றிய விபரம் தெரிந்தால் 
உடனே போலீசில் போட்டுகொடுத்து விட வேண்டும்.

இன்சுரன்ஸ் காரன் என்ன தனது வங்கி கணக்கில் இருந்தா எடுத்து கொடுக்கிறான் 
அதை பிறகு எங்களிடம் தான் அவன் வசூலிக்க போகிறான்.

அவர்கள் சுத்தி வளைத்து எம்மிடம்தான் கொள்ளை அடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு நல்ல பெயர் இருக்கின்றதப்பா

தவறு செய்த தனிப்பட்ட ஒருவனின் போக்கை கண்டிப்பதை விட்டு ஒட்டு  மொத்த புலம் பெயர் தமிழர்களை சாடுவது அறிவுபூர்வமாக இல்லை.
மஹிந்த குடும்பம் (மகன்மார்) செய்த ஈனச்செயல்களுக்காக ஒட்டு மொத்த சிங்கள இனத்தையே  கள்ளர்களாகவும் கயவர்களாகவும் பார்க்கலாமே. 

Link to comment
Share on other sites

13 hours ago, கறுப்பி said:

வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை.


மூன்று பிள்கைளின் தந்தை. கடந்த வருடம் மனநல ஆலோசயை நாடியதுடன் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்றவர். ஆனால் 2007ல் மன ஆரோக்கியம் ஒரு பிரச்சனையா இருந்தமைக்கு சாட்சியங்கள் இல்லை.
 

கனடாவில் மன நோயாளிகள் ஏன் அதிகமாக உருவாகின்றனர்... ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர்ச்சி குன்றி ஐந்தாம் அறிவு கூட செயடபடாத பலர் 
இப்போ இணையத்தில் எழுதுகிறார்கள் 

அதோடு ஒப்பிடும்போது அதில் வியந்துகொள்ள ஏதுமில்லை.

ஊரை கொள்ளையட்டிக்கும் தலைவர்களை கொண்ட உலகில் 
ஜேசு பயங்கரவதியாகி கொலையாகி போய்  இன்று 2016 வருடம் கடந்து விட்டது 

அதற்கிடையில் மனித இனம் பல நூறை பார்த்துவிட்டது 
சாத்தான் வேதம் ஓதினால் .........
கடவுள் மனநோயாளிதான் !
அதில் மனிதர்கள் வியக்க என்ன இருக்கிறது ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அநியாயத்தை செய்து உழைக்க நமக்கு ராசியில்லை என்ற மன வருத்தமும் இங்கு இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மோசடிகளைச் செய்து குறுக்குவழியில் முன்னுக்கு வருவது எல்லா சமூகத்திலும் உள்ளதுதான். அண்மையில் வேல்ஸ் பகுதியில் சேர்ந்த வெள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

http://www.bbc.co.uk/news/uk-wales-south-east-wales-35122026

பல இலட்சம் தமிழர்கள் இருக்கும் கனடா, ஐரோப்பாவில் ஒரு சிலர் மோசடி செய்து சம்பாதிப்பது உண்மையே. ஆனால் நாணயமாக இருக்கும் மிகப் பெரும்பாலானவர்களை மறந்து, கள்ள வழியில் முன்னேறுபவர்கள்தான் நமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என்ற பிம்பத்தைக் கட்டுவது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2016 at 3:02 PM, கிருபன் said:

இப்படியான மோசடிகளைச் செய்து குறுக்குவழியில் முன்னுக்கு வருவது எல்லா சமூகத்திலும் உள்ளதுதான். அண்மையில் வேல்ஸ் பகுதியில் சேர்ந்த வெள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

http://www.bbc.co.uk/news/uk-wales-south-east-wales-35122026

பல இலட்சம் தமிழர்கள் இருக்கும் கனடா, ஐரோப்பாவில் ஒரு சிலர் மோசடி செய்து சம்பாதிப்பது உண்மையே. ஆனால் நாணயமாக இருக்கும் மிகப் பெரும்பாலானவர்களை மறந்து, கள்ள வழியில் முன்னேறுபவர்கள்தான் நமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என்ற பிம்பத்தைக் கட்டுவது தவறு.

உந்த கள்வர்களை விட்டு விட்டு, கல்வியில் நம் தமிழர்கள் செய்யும் அபார வெற்றியினை பேசலாமே.

மருத்துவத் துறையில், தொழில் துறையில் சாதனை படைக்கிறார்களே.

அவை குறித்து பேச மாட்டோமா?

இன்று டோனி ப்ளையரையும், டேவிட் காமரோனையும் நம் தமிழர் குறித்து கரிசனை கொள்ள வைத்த, சிங்களவரையே வெருள வைக்கும், புலத் தமிழர் அரசியல் பலம்....

அட விடுங்கப்பா.... ஒன்று ரெண்டு பூச்சிகளும் இடையே வரும்.கண்டு கொள்ளாமல் நடந்து செல்வோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.