Jump to content

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

yoshitha-arrest- rajapaksha family (1)

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

டிசம்பர் 2006ல் சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச கடந்த பத்தாண்டில் எவ்வாறான பதிவுகளைக் கொண்டுள்ளார் என்பதை இங்கு பார்க்கலாம்.

யோசித கடற்படையில் இணைந்த போது, ஏனைய உலகத் தலைவர்கள் போலல்லாது தான் தனது மகனை இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் யுத்தத்தில் பங்கெடுக்க ஒப்படைத்துள்ளேன் என மகிந்த பெருமையுடன் அறிவித்தார். மகிந்தவின் இந்த அறிவிப்பின் பின்னர் பௌத்த மகா சங்கம் மகிந்தவை உண்மையான நாட்டுப்பற்றாளர் எனக் கௌரவப்படுத்தியது.

மகிந்த தனது மகனைக் கடற்படையில் இணைத்த போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனி ஏற்கனவே சிறிலங்காப் படைகளுக்கு எதிராக வன்னிக் காடுகளில் இடம்பெற்ற யுத்தத்தில் பங்கு கொண்டிருந்தார்.

நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கள் முறிந்த பின்னர், மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட செய் அல்லது செத்து மடி என்கின்ற யுத்தத்தில் பிரபாகரன் தனது மகனையும் பங்கேற்க வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடவடிக்கைகளை சாள்ஸ் அன்ரனி பொறுப்பெடுத்து நடத்தியதாக கூறப்பட்டது.

கே.பி என அறியப்படும் குமரன் பத்மநாதனின் அண்மைய கூற்றின் பிரகாரம், தனது அப்பா, அம்மா, சகோதரி மற்றும் இளைய சகோதரன் ஆகியோரை பாதுகாப்பான வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைக்குமாறு கே.பியிடம் சாள்ஸ் அன்ரனி கோரியிருந்தார். சாள்ஸ் அன்ரனி தனது தந்தையான பிரபாகரனிடம் வடக்கை விட்டு வெளியேறி பாதுகாப்பாக வெளிநாட்டிற்குச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்த போதும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அதற்கு செவிசாய்க்கவில்லை என கே.பியிடம் சாள்ஸ் அன்ரனி முன்னர் தெரிவித்திருந்தார்.

எனினும், போர் இடம்பெற்ற போது யுத்த களத்திலிருந்து தப்பிச் செல்லாது தனது மகனுடன் இணைந்து போரின் தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் என்கின்ற பிரபாகரனின் உறுதிப்பாடானது அவர் தனது அமைப்பிற்காகச் செய்த மிகப்பாரிய அர்ப்பணிப்பாகும். இறுதியில், போரில் கொல்லப்பட்ட சாள்ஸ் அன்ரனியின் உடலம் இராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கு மாறாக, மகிந்த தனது அரசியல் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே யோசிதவை கடற்படையில் இணைத்திருந்தார். யோசித இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தன்னை ஒருபோதும் யுத்தத்தில் அர்ப்பணிக்கவில்லை. போர்க் காலத்தில் யோசித என்ன செய்தார் என்பது எவருக்கும் தெரியாது. போர் வலயத்திற்குள் யோசித காலடி எடுத்து வைத்தாரா என்பதற்கான எவ்வித சமிக்கையும் இல்லை.

மைத்திரி-ரணில் அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பெடுத்த பின்னர், போர்க் காலத்தில் யோசித என்ன செய்தார் என்பதை விசாரணை செய்வதற்கான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

சிறிலங்கா கடற்படையில் இணைவதற்கான சட்டஒழுங்கு விதிகளை மீறி, ராஜபக்சவின் மகனான யோசித கனிஸ்க ராஜபக்ச உக்ரேய்ன் அரசாங்கத்தின் சுயஆதரவு வெளிநாட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான Ukrinmarsh இன் நிதி ஆதரவுடன் 13 மாத பயிற்சியைப் பெற்றிருந்தார். இது மட்டுமல்லாது, மருத்துவ சார் முனைவர் பட்டத்தைப் பெறுதல் உட்பட மூன்று வெவ்வேறு துறைசார் பயிற்சி நெறிகளையும் யோசித பெற்றிருந்தமை ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான துறைசார் பயிற்சிகளை யோசித பெற்றுக் கொள்வதற்கு, ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும் ராஜபக்சவின் சொந்த மைத்துனருமான உதயங்க வீரதுங்கவே காரணம் எனவும் அறியப்பட்டது. வீரதுங்க ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது தலைமறைவாக உள்ளார்.

ரஸ்ய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக உக்ரேய்ன் அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்ட வீரதுங்க, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடனும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியிருந்தார் என்பதை இவ்வாறான சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், யோசித ராஜபக்ச தொடர்பாக விசாரணை செய்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சபை ஒன்றை கடற்படைத் துணைத் தளபதி ஜெயந்த பெரேரா நியமனம் செய்தார். இந்த ஆணைக்குழு ஜனவரி 2015 தொடக்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகிறது.

யோசித மீதான விசாரணைக் குழுவில் றியர் அட்மிரல் டி.டபிள்யு.பி.வெட்டேவ, கொமடோர் யு.எஸ்.ஆர்.பெரேரா மற்றும் கொமடோர் எம்.எம்.வி.பி.மெடேகொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இவர்களது விசாரணை அறிக்கையின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், யோசித ராஜபக்ச கடற்படையில் இணைந்த பின்னர் கடற்படையின் ஒழுக்க விதிகள் மற்றும் பிரமாணங்கள், விதிகள் போன்றவற்றை மீறிச் செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. கடற்படையில் இணைவதற்கான கோவை விதிகள் கூட யோசித கடற்படையில் இணைக்கப்பட்ட போது மீறப்பட்டுள்ளது.

மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது பின்வரும் மூன்று விடயங்களை யோசித தொடர்பில் முன்வைத்துள்ளது:

சிறிலங்கா கடற்படையின் 45வது அதிகாரிப் பயிலுனராக கடற்படையில் இணைந்து கொண்ட யோசித ராஜபக்ச க.பொ.த. சா.த பரீட்சையில் ஒரே தடவையில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் சிங்களம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்திகளையும், க.பொ.த.உ.த பரீட்சையில் இரண்டு சித்திகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் யோசித இவ்வாறான கல்வித் தகைமைகளைப் பெற்றிருக்கவில்லை என்பதை இவரது தனிப்பட்ட கோவை உறுதிப்படுத்துகின்றது. ஒரே தடவையில் க.பொ.த.சா.த பரீட்சையில் யோசித சிங்கள பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்கவில்லை. இவரது சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இவருக்காக ஒதுக்கப்பட்ட கோவையில் காணப்படவில்லை.

கடற்படைப் பயிலுனராக இணைந்து கொண்ட யோசிதவால் வழங்கப்பட்ட 2003,2004 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட க.பொ.த.சா.த பரீட்சைப் பெறுபேறுகளை கடற்படை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனரா அல்லது இல்லையா என்பதற்கான எவ்வித சான்றுகளையும் விசாரணை சபையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் யோசித எவ்வாறு கடற்படையில் இணைக்கப்பட்டார் என்பதற்கான தெளிவான அறிக்கையை இந்த சபையால் முன்வைக்க முடியவில்லை. யோசித கடற்படையில் இணைக்கப்பட்டது எவ்வாறு என்பதை சிறப்பு விசாரணை மூலம் முன்னெடுக்கப்படுவதே சாத்தியமாக இருக்கும்.

கடற்படை கரையோரக் கற்கை நிறுவனத்தில் யோசித பயிற்சி பெற்றிருந்தார். இவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக மூன்று மூத்த கடற்படை மாலுமிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். யோசித பயிற்சி பெற்றிருந்த பகுதிக்கான பாதுகாப்புப் பணியை அதிபர் பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்டிருந்த போதும் அதற்கும் மேலதிகமாகவே மூத்த கடற்படை மாலுமிகள் மூவர் யோசிதவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா கடற்படையின் விதிகளுக்கு முரணாகவே யோசித இணைக்கப்பட்டார் என்பதற்கு அப்பால், லெப்ரினன்ட் ராஜபக்சவிற்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவருக்கு சில சிறப்பு சலுகைகளும் முன்னுரிமைகளும் வழங்கப்பட்ட அதேவேளையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவால் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிரித்தானிய றோயல் கடற்படைக் கல்லூரியின் புலமைப் பரிசில் பயிற்சிக்குள் யோசித உள்வாங்கப்படாத போதிலும் இவர் இதற்கான புலமைப் பரிசில் கட்டணங்களைப் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் கடற்பயிற்சி தொடர்பான இரண்டு மேலதிக பயிற்சி நெறிகளைப் பெற்றுக் கொள்வதற்கு றோயல் கடற்படையுடன் இவர் இணைக்கப்பட்டமை விசாரணை மூலம் நிரூபணமாகிறது.

சப் லெப்ரினனாக இணைந்து கொண்ட பின்னர், இவர் ஹாம்ப்சையரில் உள்ள HMS Collingwood கரையோர போர் மூலோபாயக் கல்லூரியில் அனைத்துலக நிறைவேற்று கற்கை நெறியைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்பட்டார்.

யோசித ராஜபக்ச, சப் லெப்ரினன்ட் நிலையை அடைந்த பின்னர், 29 ஒக்ரோபர் 2009 தொடக்கம் 31 ஆகஸ்ட் 2010 வரை உக்ரேய்ன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது மாமாவான உதயங்க வீரதுங்கவால் தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் யோசிதவிற்கான நாளாந்த வெளிநாட்டு கொடுப்பனவு, போக்குவரத்து மற்றும் தொலைபேசிச் செலவுகளை வழங்குமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கட்டளையிட்டார்.

வீரதுங்க நெருக்கமான தொடர்பைப் பேணிய உக்ரேய்னின் Ukrinmarsh நிறுவனத்தால் யோசிதவிற்கு ஏற்கனவே சலுகைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட சமநேரத்திலேயே கோத்தபாயவின் கட்டளைக்கு இணங்க மேலதிக வெளிநாட்டுக் கொடுப்பனவும் வழங்கப்பட்டன. யோசித தனிப்பட்ட முறையிலேயே உக்ரேய்ன் நிறுவனத்தின் புலமைப்பரிசிலுக்குள் உள்வாங்கப்பட்டாரே தவிர, இவர் சிறிலங்கா கடற்படையின் விதிமுறைகளுக்கு அமைவாக இவ்வாறான பயிற்சித் திட்டங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை. இந்த பயிற்சி நெறியைப் பூரணப்படுத்திய பின்னர், இவர் ‘தத்துவவியல் கலாநிதிப்’ பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டார் என்பது இங்கு அதிர்ச்சி தரும் தகவலாகும்.

திருகோணமலையில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பின் போது, பயிலுனரான யோசித ராஜபக்சவிற்கு அந்த ஆண்டிற்கான Midshipman பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அத்துடன் இவர் ‘கௌரவ பட்டயமும்’ வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். இவ்வாறான சிறப்பு விருதுகளை யோசித பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொடவே காரணமாகும்.

இதன்பின்னர், கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில், யோசித அதிபர் பாதுகாப்புப் பிரிவுடன் இணைக்கப்பட்டார். கடற்படைத் தலைமையகத்தில் சாதாரண பணிகளைப் புரிந்த யோசித பின்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அலரி மாளிகையில் பணியாற்றினார்.

இதற்காக இவருக்கு சிறப்பு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. புதிய அரசாங்கம் சிறிலங்காவின் ஆட்சியைப் பொறுப்பெடுத்துக் கொண்ட பின்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் கீழ் யோசித பணியாற்றுவதற்கான கட்டளை இரத்துச் செய்யப்பட்டது.

யோசித ராஜபக்சவினதும் சாள்ஸ் அன்ரனியினதும் சம்பவங்கள் மகிந்த ராஜபக்சவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் எவ்வாறான அர்ப்பணிப்புக்களுடனும் நாட்டுப்பற்றுடனும் பணியாற்றியுள்ளனர் என்பதை மிகத் தெளிவாக விளக்கி நிற்கின்றன.

தனது மகன் போரில் பங்கு கொண்டு போராடினான் என்பதை நினைத்து தலைவர் பிரபாகரன் திருப்தியடைந்தார். ஆனால் மகிந்தவின் மகன் போரின் நிழலைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தனது மகனை கடற்படையில் இணைத்துக் கொள்வதாகக் கூறி தனக்கான சொந்த அரசியல் இலாபத்தை மகிந்த ராஜபக்ச தேட முயற்சித்த போதிலும் இவரது மகனான யோசித ராஜபக்ச போர் வலயத்திற்குள் தனது காலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதே உண்மை.

http://www.puthinappalakai.net/2016/02/03/news/13269

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.