Jump to content

அடிமைகளாக்கிய சுதந்திரம்.


karu

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைகளாக்கிய சுதந்திரம்.

இன்று இலங்கையின் சுதந்திர தினம்.

1948 பெப்ரவரி 4 இல் இலங்கை தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லையென்று பெருமயடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் முடிவோடு இனிமேல் உலகைக் கட்டியாள முடியாது. அதற்குரிய ஆட்பலமும் பொருளாதார வலுவும் நம்மிடமில்லையென்ற முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் சனத்தொகைகளோடு ஒப்பிடுகையில் விரல்விட்டு எண்ணத்தக்க ஆங்கிலேய அதிகாரிகளே இருந்தனர். இருந்தும் பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் லண்டனிலிருந்துகொண்டே தனது ஆட்சியதிகாரத்தை உலகெங்கிலும் செலுத்தியது. ஆனால் இரண்டாம் உலமகா யுத்தத்தின்போது பெரிய பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட தாங்கிக்கொள்ள முடியாத தகைப்பின் பெறுபேறாக, தான் தனது காலனியாதிக்கத்தால் அடிமைப்படுத்தி வைத்திருந்த தூரத்து நாடுகளைக் கைவிடவேண்டிய கட்டாய நிலைதோன்ற, இந்தியா பாகிஸ்தான், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளும் மற்றும் பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளும் தங்களுக்கென்று தம்மைத்தாமே ஆளும் சுதந்திர அரசுகளை அமைத்துக் கொண்டன. இந்தியா தனது முழுமையான சுதந்திரத்தை 15 ஆகஸ்டு 1947 இல் பெற்றுக்கொள்ள; பிரிட்;டிஷ் ஏகாதிபத்தியம், தனது பிடியை விடாமல் வைத்துக்கொண்டு, அடுத்தவருடம் பெப்ரவரியில் இலங்கைக்கும் சுதந்திரத்தைத் தந்தது. 
மொத்தத்தில் இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரம்:

“பாரதம் தனைவிடுத்தே வௌ்ளைப் பரங்கியர் அகன்றிடும் போதினிலே யாரிதைக்கணக்கெடுப்பார் என நமதிலங்கையினையும் விட்டகன்றார்…”

என்றவாறாகவேயமைந்தது.

ஆனால் இலங்கை பெற்ற சுதந்திரம் பாதிச் சுதந்திரமே. சுதந்திரம் வழங்கப்பட்டபோது பிரிட்டிஸ் அரசு, இந்தியா போன்ற பெரிய நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற சிறதளவு தனது ஆதிக்கத்தை இலங்கையில் விட்டுச் சென்றது. இலங்கையிலிருந்த கடற்படை அப்போது றோயல் சிலோன் நேவி என்றே அழைக்கப்பட்டது. காசிலும் முத்திரைகளிலுமிருந்த பிரித்தானிய அடையாளங்கள் (எலிசபெத் அரசியின் முகம் உட்பட) நீக்கப்படவில்லை. அரசசேவையிலான கடிதங்களை ஒன் ஹெர் மஜெஸ்ரி சேவிஸ் (ஒன் எச் எம் எஸ்) என்ற பெயரிலேயெ தபாற் திணைக்களம் ஏற்றுக்கொண்டு அனுப்பியது.

இலங்கையின் மீது பிரிட்டிஸார் விட்டுச் சென்ற அரைகுறை ஆதிக்கத்தினால் சிறுபான்மையினருக்கு இருந்த ஒரேயொரு சலுகை: “பெரும்பான்மையரசினால் ஏற்படுத்தப்படக்கூடிய யாதாவது நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளை பிரிவி கவுன்சில் என்னும் பிரித்தானிய உயர் சபையில் முறையிட்டு நீதி கோரலாமென்பதுதான். அந்த சலுகையைப் பாவித்து முன்னர் கோடீஸ்வரன் என்னும் தமிழ் அரச ஊழியர் சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக வழக்கொன்றைத் தொடுத்து வெற்றியும் பெற்றார். ஆனால் பின்னர், இடது சாரிகளின் துணையோடு பதவிக்கு வந்த சிறீமாவோ அரசு, இடது சாரிகளின் முக்கிய தலைவரான கொல்வின் ஆர் டி சில்வா என்பவரின் சட்ட மூளையைப் பாவித்து, இலங்கையை முழுச்சுதந்திரம் பெற்ற குடியரசாக்கி, சிறுபான்மையினருக்கிருந்த கடைசி ஆயுதமான பிரிவி கவுண்சிலையும் பறித்தெடுத்துவிட்டது.

பிரிட்டிஸாரின் ஆதிக்கத்தின் கீழ் வரும்வரை வரை ஓர் தனிராச்சியமாக இருந்த யாழ்ப்பாண தமிழ் இராச்சியமும், மற்றும் கண்டியின் கடைசித் தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனின் கீழிருந்த மட்டக்களப்புப் பிரதேசங்களும் எண்பது வீத சிங்கள சிறுபான்மையினரின் கைகளில் கொடுக்கப்பட்டதுதான் மிகக் கொடுமையான விடயமாகும். அதனால், சுதந்திரமென்னும் பெயரில் பிரிட்டிசாராரால் போடப்பட்ட பிச்சையில் ஒரு சிறு பருக்கைதானும் நமது நாவுக்கு எட்டவில்லை. அக்காலத்தில் சோல்பரியென்னும் பிரபுவே எமது அரசியல் வாழ்வை நிர்ணயித்தார்.

சுதந்திரம் எனச்சொல்லி - அந்தச்
சோல்பரி வெகு ஜன வாக்களிப்பை
விதந்துரை செய்ததனால் - என்றும்
மேவிய திரு நிறை பொலிவுடையாள்
அருந்தமிழ் ஈழமதை - எம(து)
அயலவர் சிங்களப் பெரும்பான்மைக் 
கரந்தனில் ஒப்புவித்தார் - அந்தக்
கணமதில் சகலதும் போயினவே!

அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில், மிகச் சிறுபான்மையினராகப் போய்விட்ட நாம் கிடைத்த சுதந்திரத்தினால் எங்களுக்கிருந்திருக்க வேண்டிய அனைத்து அரசியல், நிர்வாக அதிகாரங்களையும், அதாவது ஒரு மொழிவாரி தேசிய இனத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய அவர்களது ஆட்புல அடையாளங்கள், சுயாதீனமான நிதி, பாதுகாப்பு நிர்வாகம் உட்பட கல்வி, மொழி, கலை, கலாச்சார அபிவிருத்தி ஆகிய சகல விடயங்களையும் சிங்களவர்களின் கையில் ஒப்புக்கொடுத்துவிட்டு,

‘அணிலேற விட்ட நாய்களைப் போல‘ 
வாயைப் பிளந்து கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. இன்றுவரை எமக்கேற்பட்டுவிட்ட இந்த அவலநிலையிலிருந்து நாம் மீட்சியடையவில்லை.

நாம் யாருக்காகவும் இலங்கை சுதந்திரமடைந்தபோது எமக்குக் கட்டாயம் கிடைத்திருக்க வேண்டிய தேசிய இன உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. தற்போதுள்ள அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் இருந்த இராணுவ நெருக்குவாரங்களைச் சற்றுத் தளர்த்திவிட்டுள்ளது என்பதற்காகவோ, அவர்களுடன் ஒரு இணக்கமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதற்காகவோ:

“முகத்துக்கஞ்சி வேசித்தனம் பண்ண ஒருப்படுவது போல” தமிழர் தரப்பு செயற்படமுடியாது..

அதாவது சுதந்திரத்தைச் சுகிக்காதவர்கள் சுதந்திர தினத்தைக் கொள்கையளவிலேனும் தமது கொண்டாட்டத்திற்குரிய நாளாகக் கருதமுடியாது, அதைத் தமிழர் பிரதேசங்களில் கொண்டாட அனுமதிக்கவும் முடியாது. சுதந்திரத்திற்கு முன்னர், அதாவது காலனித்துவ காலத்திற்கு முன்னர் நாம் எமது இராச்சியங்களில் எவ்வளவு சுதந்திரததோடு வாழ்ந்தோமோ அதேயளவு சுதந்திரத்தைப் பெற்றுச் சுவைக்கும் நிலை தோன்று மட்டும் நாம் சுதந்திரம் பெற்றவர்களாக எம்மைக் கருதமுடியாது. அப்படிக் கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகவே இருக்கும்.

“சிங்கமொன்று வாளைக்காட்டி முன்னேயிருக்கும் இரண்டு சிறுபான்மையினங்களையும் (பச்சையும், ஓரேஞ்சும்) மிரட்டுகிறது.” இதுதான் நமது தேசியக்கொடி சொல்லும் செய்தி. இதற்கு ஆயிரம் அர்த்தங்களைப் புதிது புதிதாகப் பலர் கூறலாம். ஆனால் உண்மையில் அக்கொடி வடிவமைக்கப்பட்டது அச்செய்தியைக் கூறத்தான். இதனைத் தூக்கிப் பிடித்துக்கொண்டுதான் நாம் எமது சுத்திரதினத்தைக் கொண்டாட வேண்டுமென்றால் அதனைவிட வெட்கக்கேடான செயல் வேறு என்ன இருக்க முடியும்?

எமது சுதந்திரத்திற்குப் பெருமை இப்படித்தான் வரமுடியும். அது இதோ:

சுதந்திரப் பெருமை

ஈழ சுதந்திரம் வேண்டி நின்றார் - வே(று)
எதையும் விரும்புவாரோ
இனிய நறுந்தேன் இருக்கையில் வேம்பின(து)
எண்ணெயைக் குடிப்பாரோ
வாழ்வினில் ஓர் கணமேனும் விடுதலை 
மகிழ்வினை உணர்வாரேல்
வண்டமிழ் ஈழ நன் மண்ணினிற் தம்முயிர்
மாய்ந்திடல் விரும்பாரோ

தாயவள் ஈழநந் நாடதன் மேலுள
தாகத்தில் துடிப்பாரேல்
நோயினும் பிணியினும் அன்னைமண் விடுதலை
நோக்கினில் பிறழ்வாரோ
ஆயிரம் கோடி பணமிருந்தாலும் எம்
அன்னையின் மடி மீதில்
போயுயிர் நீத்து இப் பொய்யுடல் அழிவதில்
புளகமதடையாரோ

அவனியில் நாடொன்று அற்று அலைந்திடும்
அகதியென்றிழிவோடு
பவனிகள் செய்திடும் பகட்டினில் யாது
பயனென உணர்வாரேல்
யமனிடமும் தமதின்னுயிர் போகையில்
யாசகம் புரியாரோ
எமதுயிர்த் தாயகம் தனிலெனைக் கொல்லென
இரந்திட முனையாரோ

அன்னை மண் தந்திடு கூழதுவாயினும்
அருமையை மறவாரேல்
அன்னியன் பிச்சையில் அமிழ்தமருந்தினும்
அக மகிழ்ந்திடுவாரோ
பின்னமிலா எமதீழ சுதந்திரப் 
பேற்றினை நினைவாரேல்
பேதையராய் அயல் நாட்டிலுழல்வதைப்
பெருமையென்றுணர்வாரோ

விந்தைகள் செய்தெம(து) இன் தமிழீழத்தை
வீழ்த்திட முனைவாரேல் - அந்த
வித்தகர் யாரெனினும் பகை கூட்டியே
வீழ்ந்திடல் நிஜமாமே
செந்தமிழ் ஈழத்திற் செங்களமாடிய
எங்களின் மறவீரம்- இன்று
நிந்தை பட்டாலும் சுதந்திர ஈழத்தை
நிறுவுதல் நிஜமாமே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.