Jump to content

வண்ண சிங்கள


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

"நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் .

த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அனுமதிப்போம் அதையும் குறையுங்கோ என்றாள் . சிறிலங்கா விமானநிலையத்தில் ஒருகாலத்தில் கொஞ்ச காசை கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டிடுவாங்கள் , அறுவாங்கள்  இப்ப கண்ட இடத்திலயும் கமராவை பூட்டி வைச்சிருக்கிறாங்கள் இதனால் வாங்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை கொடுக்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை என்று திட்டியபடியே சாமான்களை குறைச்சு போட்டு மீண்டும் நிலுவையில் வைத்தேன் 31 கில்லோ காட்டியது. இந்த தடவை கைப்பொதியை எடை பார்க்கும் படி கேட்கவில்லை.பொதிகளுக்கு லெபிள்களை ஒட்டிய அழ‌கி தங்க்யூ என்று சொல்லி பாஸ்போர்ட்டையும் போர்டிங்க் பாஸையும் தந்தாள் ..நானும் பதிலுக்கு நன்றி சொல்லி போட்டு  கைப்பொதியை தூக்கியபடி இடத்தை விட்டு நக‌ர்ந்தேன்.

குறைத்த நாலு கில்லோவையும் எப்படியும் கை பொதிக்குள் அடைந்து கொண்டு செல்வது என முடிவெடுத்தேன்.ஏற்கனவே அதனுள் இடம் இருந்தபடியால் இந்த நாலுகில்லோவையும் உள்ளே திணிக்ககூடியதாக இருந்தது.

குடிவரவு,குடியக‌ழ்வு விண்ணப்படிவத்தை நிரப்பி எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கைப்பையை தோளில் மாட்டிய‌படி  உள்ளே சென்று வரிசையில் நின்றேன்.அங்கும் ஒரு பெண் அதிகாரி புன்முறுவலுடன் நெக்ஸ்ட் என்றாள்.பாஸ்போர்ட்டில் உள்ள படத்துடன் எனது முகம் பொருந்துகிறாத என பார்த்த பின்பு  கடவுச்சீட்டில்  சீல் குத்தி  தந்தாள் .அவ‌ளுக்கும் நன்றியை சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் நின்றேன்.அது பொதிகளை எக்ஸ்ரே செய்யும் லைன்.எனக்கு முன்னாள் வெள்ளையின‌ தம்பதியினர் இருவர் நின்றனர்.அவர்களின் கையில்  தண்ணீர் போத்தல் இருந்தது .அதை உள்ளே கொண்டு செல்ல முடியாது  என அதிகாரி சொல்ல தம்பதியினர் மனஸ்தாபட்டனர்.

உள்ளே கொண்டு செல்ல வேணுமென்றால் தண்ணீர் கொஞ்சத்தை குடித்து காட்டவும் என அதிகாரி கேட்க அவர்கள் குடித்துகாட்டினார்கள் ,அதன்பின்பு உள்ளே கொண்டுசெல்ல அதிகாரி அனுமதித்தார்.

என்னடாப்பா தண்ணீர் போத்தல் கொண்டு செல்வதற்கு இவ்வளவு நடப்பு காண்டுகின்றனர் என மனதில் எண்ணிகொண்டிருக்கும் பொழுது எனது முறை வந்தது .பெல்ட்,பேர்ஸ் போன்ற‌வற்றை  ஒரு டிரேயில் வைத்து , கைபொதியையும் எக்ஸ்ரே  மேசினுடாக அனுப்பிவிட்டு,நான் எக்ஸ்ரே கதவுடாக சென்றேன்.

தம்பி நல்ல பிள்ளை குண்டுகள் ,வெடிபொருட்கள் ,துப்பாக்கி அவனிட‌மில்லை என்று மெசின் தன‌து மெளன‌த்தின் மூலம் காட்ட‌ அதிகாரி உள்ளே செல்ல அனுமதித்தார்.நான் பெல்ட்,பேர்ஸ்,கைபொதியை எடுக்க போக இன்னுமொரு அதிகாரி கைபொதியை திறந்து காட்டும்படி கேட்டார்.உள்ளிருந்த சென்ட் போத்தலை எடுத்து எவ்வளவு மில்லி என  பார்த்துவிட்டு 100 மில்லி என்றபடியால் கைப்பொதியை கொண்டு செல்ல அனுமதித்தார்.

போர்டிங்க் பார்சில் குறிப்பிட்ட் கேட் இலக்கத்தை கண்டுபிடித்து வாசலில் நின்ற அழ‌கியிடம் போர்டிங் பார்சை கொடுத்து விமானத்தில் ஏறினேன்.

வெல்கம்,யுஅ சீட் ஒன் ரைட் என்றாள்,அவளுக்கும் ஒரு தங்க்யூ சொல்லி போட்டு எனது இருக்கையில் இருந்தேன்.நடை பாதையின் அருகில் உள்ள சீட் என்றபடியால் எனக்கு மிகவும் ச‌ந்தோசமாக இருந்தது.ஏன் என்றால் விமானபணிப்பெண்களை அடிக்கடி அழைத்து தேவையானதை வாங்க‌லாம்,அத்துடன் இயற்கை உபாதைகளுக்கு செல்வதென்றாலும் மற்றவ‌ர்களிடம் "எக்ஸ்கியுஸ் மீ" என்று பல்லிக்காமல் சென்று வரலாம். என்ன தான் வயசு போனாலும் பெண்களை கண்டால் ஒருக்கா பார்க்கதான் மனசு சொல்லுது.மனசின் ஆசையை நிறைவேற்ற சிங்கை அழகிகளை பார்த்து மனசை சமாதானப்படுத்திய பின்பு,தொலைக்காட்சி யில் படங்கள் பார்க்க முடிவு செய்தேன்.பிளேனிலிருந்து  தமிழ் படம் பார்த்தால் கெளரவ குறைச்சல் என்றபடியால் இங்கிலிஸ் படம் ஒன்றை பார்க்க‌முடிவுசெய்து முன்னால் இருந்த தொலைகாட்சிபெட்டியை விரல்களால் தொட்டு விறும்பிய சனலை அழுத்தி ஒரு ஆங்கில படத்தை போட்டு காதினுள் இய‌ர்பொனை செருகிகொண்டேன். விமானம் எயர்பொக்ட்டுக்குள் போகும் பொழுது சிறிது ஆட்டம் போட அடியேனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோண்றி  மறைந்தன.விமானிக்கு மூளையில் பிசகு என்றால் என்ன செய்வது,விமானத்தை யாராவது கடத்தினால்,கீழேயிருந்து யாராவது ஏவுகனையால் தாக்கினால் போன்ற எண்ணங்கள் உண்டாக எல்லாம் வல்ல சிட்னிமுருகனை நினைத்து" முருகா யூ ஆர் கிரேட் "என்று ஆங்கிலத்தில் வணங்கி ,ஊரில இருக்கும் சிவனை நினைத்து ஓம் நமச்சிவாயா சொல்லி மனத்தை தெற்றிகொண்டு கண்யர்ந்து போனேன்.

'சேர் யூ லைக் கொவி,யூஸ்"

இனிமையான குரலை கேட்டு திடுக்கெட்டு எழுந்து "ஸ்கொட்ச் ஒன் த ரொக்"என்றேன்.

ஒரு சிறிய பிளக்லேபிள் போத்தலும் ஐஸ் கட்டிகள் நிரப்பிய‌ கிளாசையும் ,அத்துடன் பிநட்ஸ் பக்கற்றையும் சிரித்த முகத்துடன் தந்து சென்றாள்.

படத்தை பார்த்தபடியே பழரசத்தைரசித்து பருகினேன்.மீண்டும் ஒரு பெக் எடுக்க வேண்டும் போல‌ இருக்க ,படம் பார்த்த கண்கள் விமானபணிப்பெண்ணை தேடியது.எனது கண்களின் தேடலுக்கு பலன் கிடைத்து.

"கான் ஐ ‍ஹாவ் வன் மொர் டிரிங்க்"

"சுயர்"

"தங்க்யூ"

மீண்டும் ரசித்து பருகிகொண்டிருக்கும் பொழுது வண்டிலை தள்ளி கொண்டு வந்தவள்,

"சேர் வட் யூ லைக் "

இரண்டு மாசால தோசை ஒரு தயிர் வடையும் என்று கேட்டாள் தந்திடுவாளாக்கும் என மனம் நினைக்க ,அவளோ என‌க்கு தான் கேட்டது புரியவில்லை என்ற எண்ணத்தில் தங்களிடம் உள்ள இரண்டு சாப்பாட்டை சொன்னால் அதில் சிக்கன் என்பது மட்டும் எனக்கு புரிந்தபடியால் அதையே திருப்பி சொல்ல சாப்பாட்டை தந்து புன்னகையும் இலவசமாக தந்து சென்றாள்..

சாப்பாட்டை முடித்தவுடன் அடுத்த தூக்கத்துக்கு தயாரானேன.

விமானி விமானத்தை இறக்குவத‌ற்குறிய அறிவிப்புக்களை செய்தார் விமானபணியாட்களும் அதற்குறிய ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள் .நானும் புறக்கணி சிறிலங்கா என்ற கொள்கையை துறந்திட்டு "அப்பே லங்கா,நமோ நமோ மாதா"என்ற கொள்கையை அறவணைத்து கொண்டு இறங்கினேன்...ஆயுதப்படையினர் ஆயுதமின்றி நின்றனர் ...ஓஓஓஒ...சமாதானம் வந்திட்டோ அதுதான் ஆயுதமின்றி ஆயுதப்படையினர் என்று நினைத்துகொண்டு எனது பொதிகளை பார்த்துகொண்டிருந்தேன்.டேய் புறம்போக்கு சமாதானம் வந்தால் ஏன்டா ஆயுதமின்றிய ஆயுதப்படை மனசாட்சி ஒரு கேள்வியை கேட்க திகைத்து போய் அதுதானே என்று மீண்டும் பதில் கேள்வியை மனசாட்சி கேட்டுது.... இப்படியான இக்கட்டான‌ நேரங்களில்.."ஒம் நமச்சிவாயா"சொல்லி மன‌தை சமாதானப்படுத்துவதுண்டு.அப்படி சொல்லிகொண்டு மனதை சமாதனப்படுத்தும் பொழுது எனது பொதி போன்று ஒன்று  வர அதை எடுத்து தயாராக‌ இருந்த ரொலியில் எற்றி தள்ளும் பொழுது

" மாத்தையா பொட்டாக் இன்ட மெக்க மகே பாக் " என்ற குரல் கேட்டு

அறைகுறை சிங்களம் தெரிந்தபடியால் எதோ பொதிப்பிரச்சனை, பாக்கை மாறி கொண்டுவந்திட்டன் போல  என்று போட்டு பாக்கை பார்த்தேன் என்ட பொதியில் இருந்த கீறல்கள் அந்த பொதியில் இல்லை என்பது புலப்பட்டது. பொதியின் சொந்தக்காரியின் குரலை கேட்டு அவளை பார்த்தேன்.ஆகா ஆகா ஆஅ காஆகா ....."ஒயாகே பாக் மேக்க எனேத"என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன் சிங்களபாரம்பரிய உடை உடுத்த ஒரு முப்பதைந்து வயது மதிக்க வண்ண சிங்களத்தி என்னருகில் நின்றாள்.....அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

Link to comment
Share on other sites

கதை நல்லாத்தான் போகுது. தொடருவீங்களா அல்லது முற்றுமா.


பெண்கள் எமது கண்கள் போன்றவர்கள். ஆனாலும் ஆரம்பம் முதலே பெண்களாவே சந்திப்பது கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. எங்கோ மச்சம் இருக்கு, எங்கென்று சொன்னால் நானும் அங்கு ஸ்ரிக்கர் ஒட்டலாம். புத்தா(உங்களைச் சொல்லவில்லை ஒறிஜினல் புத்தரைச் சொனேன்) உனது திருவிளையாடலா இது. 

இயல்பான எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

கொஞ்சம் இழுத்தமாதிரி தெரியுது எனக்கு..

(உங்களுடைய பழைய கதைகளின் சுருக்கத்தாலோ என்னமோ)

கடைக்கு சிங்களப்பெண்கள் வரும் போது 

இனி எனக்கும் இது ஞாபம் வரும்..

அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

தொடர்ந்து கிறுக்குங்கள் புத்தர்

Link to comment
Share on other sites

கதை அருமை சகோ புத்தன்... தொடர்ந்து எழுதுங்கள்!!! கிழமைக்கு ஒரு கதையாவது குறைந்தது எழுதுங்கள்!! வாசிக்க ஆவல் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கேயுரிய அந்த நளினம் கதை முழுதும் இழையோடுகின்றது....! தொடர்ந்து எழுதுங்கள்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக புத்தனின் கதையில் இருந்து ஏதோ ஒண்டு மிஸ்பண்ணுகிறது என்று நினைக்கின்றேன்! ஆகா கண்டுபிடித்துவிட்டேன்.  <_< புத்தனின் கதைகளில் நக்கல் நளினத்துடன் சமூகத்திற்கான ஒரு செய்தியும் இருக்கும். இன்று அந்த செய்தியைக் காணவில்லை. ஒருவேளை சிங்களத்திகள் அழகென்ற செய்தியை சொல்லுகின்றாரோ தெரியவில்லை.  :rolleyes:  மற்றும்படி கதைசொல்லும் பாங்க்ம் எழுத்துநடையும் சூப்பர்!tw_blush:

Link to comment
Share on other sites

உங்களை மாதிரித்தான் எல்லாரும் ,

83 கலவரத்தின் போது லண்டனில்  வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று நின்ற பலர் அத்துலத்முதலியின்  அழகிய உறவு ஒன்று வந்து சேர அதே கூட்டம் தான் பின்னால் அலைந்தது .

நல்ல யதார்த்தமான கதை புத்தன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பயணத்தின் போது ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
நானே ஸ்ரீ லங்கனில் பறந்து ~ கட்டுநாயக்கா தளத்தில் இறங்கியது போல ஒரு உணர்வு.
அப்படியே கட்டுநாயக்கா, சீதுவ, ஜாஎள,  வத்தள , பிட்ட கொட்டுவ ... என்று உங்கள் பயணக் கதையை தொடருங்கள் ... 

"அம்மா ப்பா சிங்கள படு கேன ...கியளா வேடக் நஎ சகோதரயா ..."
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்! சும்மா சுண்டி விட்டமாதிரி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.....நான் நெடுக சொல்லுற மாதிரி நீங்கள் ஒரு பேய்க்காய் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பயணத்துக்குள்ள ...இவ்வளவு விசயங்கள் இருக்குது எண்டு இண்டைக்குத் தான் தெரியும்!

அன்பையும், எழிலையும் அள்ளித் தருகின்றது.. எயார் லங்கா .. என்ற கொச்சைத் தமிழ் 'வனக்கம்' காலத்தில்.. ஆரம்பித்த 'பறப்பு'.. இன்று வரை தொடர்கின்றது!

இவ்வளவு நாளும்... பேய்க்குஞ்சு மாதிரி... கோணர் சீற்றில பயணித்து... எனது காலத்தை வீணாக்கி விட்டதாக இப்போது உணர்கிறேன்! இந்த 'உரசல்' விஷயம்... இது வரை யாரும் சொல்லித் தரவே இல்லை!

சிங்களப் பெண்கள் அன்பை.. வெளிக்காட்டும் விதமே தனித்துவமானது தான்! எங்கள் பெண்களும் தான் அன்பைக் காட்டுகிறார்கள்! ஆனால்.. வார்த்தைகளால் வெளிப்படுத்துவது மிகவும் குறைவு! எப்போதாவது வருகின்ற 'நீலச் சந்திரனைப்' போலவே அவர்களது ..அன்பு வெளிக்காட்டல்' அமைகின்றது!

உங்களது கதையில்.. ஆங்கிலமும்.. சிங்களமும் கலந்து..இருந்தாலும்.. உங்கள் எழுத்து நடை.. அதை ஒரு 'உறுத்தலாகக்' காட்டாமல் கதையை இயல்பாக நகர்த்திச் செல்வது உங்கள் தனித்துவம்!

இப்போதெல்லாம்.. புத்தன்  'கிறுக்கல்' நிலையைத் தாண்டி... எழுத்தாளன் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், புத்தன்!

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினம் கலந்த இயல்பான எழுத்து நடை புத்தனுக்கு உாிய தனித்தன்மை. கதையை தொடருங்கள். செய்திக்காகக் காத்திருக்கும் எம் எதிா்பாா்ப்பை ஏமாற்றாமல்....... , தொடருங்கள் புத்தன் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2016 at 2:41 AM, ஜீவன் சிவா said:

கதை நல்லாத்தான் போகுது. தொடருவீங்களா அல்லது முற்றுமா.


பெண்கள் எமது கண்கள் போன்றவர்கள். ஆனாலும் ஆரம்பம் முதலே பெண்களாவே சந்திப்பது கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. எங்கோ மச்சம் இருக்கு, எங்கென்று சொன்னால் நானும் அங்கு ஸ்ரிக்கர் ஒட்டலாம். புத்தா(உங்களைச் சொல்லவில்லை ஒறிஜினல் புத்தரைச் சொனேன்) உனது திருவிளையாடலா இது. 

இயல்பான எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்கள். 

எல்லாம் அவன் செயல் அந்த ஒறிஜினல் புத்தன் செயல்

On 30/01/2016 at 3:11 AM, விசுகு said:

ம்ம்ம்

கொஞ்சம் இழுத்தமாதிரி தெரியுது எனக்கு..

(உங்களுடைய பழைய கதைகளின் சுருக்கத்தாலோ என்னமோ)

கடைக்கு சிங்களப்பெண்கள் வரும் போது 

இனி எனக்கும் இது ஞாபம் வரும்..

அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.

தொடர்ந்து கிறுக்குங்கள் புத்தர்

நன்றிகள் விசுகு எல்லாம் உங்களது பாராட்டுக்கள் தான் என்னை தொடர்ந்து கிறுக்க வைக்கின்றது....

On 30/01/2016 at 5:51 AM, மீனா said:

கதை அருமை சகோ புத்தன்... தொடர்ந்து எழுதுங்கள்!!! கிழமைக்கு ஒரு கதையாவது குறைந்தது எழுதுங்கள்!! வாசிக்க ஆவல் :)

 

நன்றிகள் மீனா ....ஒரு கிழமைக்கு ஒரு கதை(கிறுக்கல்) என்பது சாத்தியமில்லை ..மாதத்திற்கு ஒன்று தர முயற்சிக்கிறேன்

On 30/01/2016 at 6:31 AM, suvy said:

உங்களுக்கேயுரிய அந்த நளினம் கதை முழுதும் இழையோடுகின்றது....! தொடர்ந்து எழுதுங்கள்...!!

நன்றிகள் சுவி ....உங்களது பாராட்டுக்கள் தான் எனது விட்ட‌மின்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2016 at 6:31 AM, suvy said:

 

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

வழக்கமாக புத்தனின் கதையில் இருந்து ஏதோ ஒண்டு மிஸ்பண்ணுகிறது என்று நினைக்கின்றேன்! ஆகா கண்டுபிடித்துவிட்டேன்.  <_< புத்தனின் கதைகளில் நக்கல் நளினத்துடன் சமூகத்திற்கான ஒரு செய்தியும் இருக்கும். இன்று அந்த செய்தியைக் காணவில்லை. ஒருவேளை சிங்களத்திகள் அழகென்ற செய்தியை சொல்லுகின்றாரோ தெரியவில்லை.  :rolleyes:  மற்றும்படி கதைசொல்லும் பாங்க்ம் எழுத்துநடையும் சூப்பர்!tw_blush:

சீ சீ ....தமிழ்தான் அழகு.....தெமிளு படு கொந்தாய்..:rolleyes:.நன்றிகள் வாலி

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

 

On 30/01/2016 at 6:47 AM, வாலி said:

 

On 30/01/2016 at 6:57 AM, arjun said:

உங்களை மாதிரித்தான் எல்லாரும் ,

83 கலவரத்தின் போது லண்டனில்  வெட்ட வேண்டும் கொத்த வேண்டும் என்று நின்ற பலர் அத்துலத்முதலியின்  அழகிய உறவு ஒன்று வந்து சேர அதே கூட்டம் தான் பின்னால் அலைந்தது .

நல்ல யதார்த்தமான கதை புத்தன் .

நன்றிகள் அர்ஜூன் ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

On 30/01/2016 at 10:51 AM, Sasi_varnam said:

விமானப் பயணத்தின் போது ஏற்படும் சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
நானே ஸ்ரீ லங்கனில் பறந்து ~ கட்டுநாயக்கா தளத்தில் இறங்கியது போல ஒரு உணர்வு.
அப்படியே கட்டுநாயக்கா, சீதுவ, ஜாஎள,  வத்தள , பிட்ட கொட்டுவ ... என்று உங்கள் பயணக் கதையை தொடருங்கள் ... 

"அம்மா ப்பா சிங்கள படு கேன ...கியளா வேடக் நஎ சகோதரயா ..."
  

நன்றிகள் சசி.....இப்ப கடுகதி வீதியை போட்டபிறகு வத்தளை ,ஜாஎல "ப‌டுகளை" பார்க்க ஏலாமல் கிடக்கு.....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/01/2016 at 11:38 AM, குமாரசாமி said:

புத்தன்! சும்மா சுண்டி விட்டமாதிரி ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.....நான் நெடுக சொல்லுற மாதிரி நீங்கள் ஒரு பேய்க்காய் :cool:

நன்றிகள் கு.சா ஐயா உங்களின் பாராட்டுக்கள்தான் எனது கிறுக்களுக்கு ஊக்கமாத்திரை

On 31/01/2016 at 1:50 PM, புங்கையூரன் said:

 

இப்போதெல்லாம்.. புத்தன்  'கிறுக்கல்' நிலையைத் தாண்டி... எழுத்தாளன் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், புத்தன்!

 

  

சிங்களத்தியை விட இந்த பாராட்டு என்னை உச்சத்திற்கே கொண்டு போயிற்று....நன்றிகள் புங்கை அண்ணா

On 31/01/2016 at 8:36 PM, அபராஜிதன் said:

புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதி புத்தன் வாழ்க வாழ்க :D

நன்றிகள் அபாஜிதன்....ஒரு சிறு திருத்தம்...சிட்னி இலக்கியவாதி....புத்தன் வாழ்க‌

On 31/01/2016 at 0:42 AM, Kavallur Kanmani said:

நளினம் கலந்த இயல்பான எழுத்து நடை புத்தனுக்கு உாிய தனித்தன்மை. கதையை தொடருங்கள். செய்திக்காகக் காத்திருக்கும் எம் எதிா்பாா்ப்பை ஏமாற்றாமல்....... , தொடருங்கள் புத்தன் பாராட்டுக்கள்

நன்றிகள் காவ‌லூர் கண்மணி .....சிறு சிறு அத்தியாயமாக தொடர்கிறேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லில்லாத பொக்கை வாயையே வாயெல்லாம் பல்லென்று நினைக்கிற வயதில முப்பத்தஞ்சு வயசு கூட பதினாறு வயசாத்தான் தெரியும். tw_blush:tw_blush:tw_blush: ஸ்கொட்ச் இறங்கினால் முப்பத்தஞ்சு ஐம்பத்தஞ்சு ஆகத் தெரிந்திருக்கும். அப்ப எல்லாம் கொள்கையளும் திரும்ப வந்திருக்கும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து பயணிகளை திருப்தி படுத்தவதற்காகவோ என்னவோ எல்லா இடங்களிலும் அழகிய பெண்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இம் முறை பயணத்தில் நானும் ரொம்ப படித்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.2.2016 at 0:12 AM, கிருபன் said:

பல்லில்லாத பொக்கை வாயையே வாயெல்லாம் பல்லென்று நினைக்கிற வயதில முப்பத்தஞ்சு வயசு கூட பதினாறு வயசாத்தான் தெரியும். tw_blush:tw_blush:tw_blush: ஸ்கொட்ச் இறங்கினால் முப்பத்தஞ்சு ஐம்பத்தஞ்சு ஆகத் தெரிந்திருக்கும். அப்ப எல்லாம் கொள்கையளும் திரும்ப வந்திருக்கும்.!

எங்கடை நிலைமை தெரிஞ்சும் வேணுமெண்டு வெறுப்பேத்துறார்mad02171.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.