Jump to content

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....


Recommended Posts

12814320_997525116962849_370516168986110
 
இலங்கை கிரிக்கெட் T 20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக லசித் மாலிங்க Sri Lanka Cricketக்கு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நிலை ஆரோக்கியமானதாக இருந்தால் உலக T 20அணியில் வீரராக விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளின் தலைவராகவுள்ள அஞ்சேலோ மத்தியூஸ் உலக T 20 போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Link to comment
Share on other sites

  • Replies 357
  • Created
  • Last Reply

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்...

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்...

 

16 அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.

முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’ பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.

15-ந் திகதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும். மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

நாளை நடக்கும் தொடக்க ஆட்டங்களில் ஹாங்காங்-சிம்பாப்வே (பிற்பகல் 3 மணி), ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.
Link to comment
Share on other sites

பதவியை துறந்தார் லசித் மாலிங்க

 

இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளின் போதும், தற்போது காயம் காரணமாக லசித் மாலிங்க ஒய்வரையிலேயே இருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது, அவர் வழமைக்குத் திரும்புவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/3937

Link to comment
Share on other sites

நாளை தொடங்குகிறது உலக கோப்பை டி20! கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு பிரகாச வாய்ப்பு

 

நாக்பூர்: 16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர், முதல் சுற்று மற்றும் சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன.

‘ஏ' பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி' பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.

15ம் தேதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில்தான் பிரதான அணிகள் நுழைய உள்ளன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பிரிவுகளில் இருந்தும் தலா 2 அணிகள் என மொத்தம், 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில், இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ‘ஏ' பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும். மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ‘பி' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

நாளை நாக்பூரில் நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் ஹாங்காங்-ஜிம்பாப்வே பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியிலும், ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியிலும் மோத உள்ளன. 15ம் தேதிக்கு பிறகுதான் உலக கோப்பை களைகட்ட ஆரம்பிக்கும் என்பது ரசிகர்கள் கருத்து. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பு மண்ணின் மைந்தர்களான இந்திய அணிக்கே உள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/preview-world-t20-2016-ms-dhoni-led-india-clear-favourites-248472.html

Link to comment
Share on other sites

தர்மசாலாவில் பாகிஸ்தான் விளையாடக் கூடாது: இம்ரான்கான் கருத்து

 
இம்ரான் கான். | கோப்புப் படம்.
இம்ரான் கான். | கோப்புப் படம்.

உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தர்மசாலாவில் விளையாடக் கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை தர்மசாலாவில் நடத்த முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தாகவும், அதனால் அங்கு போட்டி யை நடத்த போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே தர்மசாலாவில் நடை பெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டி குறித்து இமாச்சல பிரதேச முதல்வர் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது கருத்து வெறுப்பை வளர்க்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ் தான் அணி தர்மசாலாவில் ஆடக் கூடாது.

இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.

அதிகாரிகள் வருகை

இந்நிலையில் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பட வுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவதற்காக அந்நாட்டின் 2 அதிகாரிகள் இன்று இந்தியா வருகிறார்கள். இதற்காக அவர்க ளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8323338.ece

 

Link to comment
Share on other sites

ஜெயிக்கப் போவது யாரு?

 
உலகக் கோப்பை இன்ஃபோ ரிப்போர்ட்

 

தகளமாக ஆரம்பிக்கிறது ஆறாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள். இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன.  மார்ச் 8-ம் தேதி  தொடங்கி, இந்தியாவில் நடக்கப்போகும் இந்தத் தொடரில், ஜெயிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லும் ரேஸில் முன்னிலையில் இருக்கும் அணிகளின் பலம், பலவீனங்கள் என்ன? கிரவுண்டில் இறங்கிப் பார்ப்போமா?

p4a.jpg

இந்தியா

p4b.jpg

பலம்:

red-dot%283%29.jpg மிகச் சமீபத்தில், ஆஸ்திரேலியாவை  அவர்கள் மண்ணிலேயே டி20 தொடரில் வாஷ்அவுட் செய்ததும் இலங்கையை வென்றதும் அணிக்கு பெரிய உத்வேகம்.

red-dot%283%29.jpg தோனி, யுவராஜ் சிங், ரோஹித் ஆகியோரின்  ஐந்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடிய அனுபவம். 

red-dot%283%29.jpg ரோஹித், தவான் எனத் துவக்க ஆட்டக்காரர்களின் அதிரடி. ‘குட்டி டிராவிட்’ எனப்படும் ரஹானே, கோஹ்லி போன்ற அடுத்த நிலை ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டம்.

red-dot%283%29.jpg ரெய்னா என்ற அட்டகாச ஆல்ரவுண்டர். புதிய வேகப் புயல் பும்ரோ மற்றும் முகமது சமி.

red-dot%283%29.jpg சுழற்பந்து வீச்சில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் அஸ்வின். அவருக்குப் பக்கபலமாக ஜடேஜா, ரெய்னா, யுவராஜ் சிங். எக்ஸ்ட்ராவாக இவர்களின் சிறப்பான ஃபீல்டிங்.

red-dot%283%29.jpg தோனியின் புயல் வேக ஸ்டம்ப்பிங்.

p4c.jpg

பலவீனம்:

red-dot%283%29.jpg எதிர் அணியினர் மிரண்டுபோகும் அளவுக்கான வேகப்பந்து வீச்சு இல்லாதது.

red-dot%283%29.jpg சில வீரர்களைத் தவிர, பிற வீரர்கள் ஃபீல்டிங்கில் ஆவேசமாக இல்லாமல் இருப்பது.

red-dot%283%29.jpg யுவராஜ் சிங் மற்றும்  ஜடேஜா வழக்கமான அதிரடி ஆட்டத்துக்கு முழுமையாகத் திரும்பாதது.

red-dot%283%29.jpg தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால், ஐந்தாவது விக்கெட்டுக்குப் பிறகு வலுவான கூட்டணி இல்லாதது.

ஆஸ்திரேலியா

p4d.jpg

பலம்:

red-dot%283%29.jpg டி20 உலகக் கோப்பையை இதுவரை வெல்லாததால், இந்த முறை வென்றே தீர வேண்டும் என்ற வெறியில் விளையாடுவது.

red-dot%283%29.jpg எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டும்  அதிரடி பேட்ஸ்மேன்கள்.

red-dot%283%29.jpg எதிர் அணி பேட்ஸ்மேன்களைத் திணறச் செய்யும் வேகப்பந்து வீச்சு.

red-dot%283%29.jpg டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-க்கும் கேப்டனாக மாறியுள்ள ஸ்மித்.

பலவீனம்:

red-dot%283%29.jpg பாக்னர், பின்ச், கோல்டர் நைல் போன்ற வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது.

red-dot%283%29.jpg இந்திய மைதானங்களில் சிறப்பாகப் பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது.

தென்னாப்பிரிக்கா

p4e.jpg

பலம்:

red-dot%283%29.jpg மற்ற அணிகளைவிட வலுவான பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கும் அணி.

red-dot%283%29.jpg துல்லியமான லைன்&லெங்க்த்தில் பந்து வீசும்  நான்கு பந்து வீச்சாளர்கள் மற்றும் மீதமுள்ள அனைவரும் அதிரடி பேட்ஸ்மேன்களாகக் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபார்முலாவைப் பயன்படுத்தும் தென்னாப்பிரிக்க கேப்டன் டூப்ளெஸியின் வியூகம்.

red-dot%283%29.jpg எதிர் அணியினரைப் பயமுறுத்தும் டிவில்லியர்ஸ், ஸ்டெயின் போன்றோர் அணியில் இருப்பது.

பலவீனம்:

red-dot%283%29.jpg உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் என்றாலே, இறுதிப் போட்டிகள் வரை அட்டகாசமாக ஆடி, மோசமாகத் தோற்கும் ராசி. இது மனரீதியாக வீரர்களைப் பாதிப்பது தென்னாப்பிரிக்க அணியின் பலவீனம்.

நியூசிலாந்து

p4f.jpg

பலம்:

red-dot%283%29.jpg போட்டியின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருப்பது.

red-dot%283%29.jpg சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளையே 20 ஓவர் போட்டிகளைப்போல விளையாடியவர்கள். 20 ஓவர் போட்டிகளை எப்படி விளையாடப்போகிறார்கள் என்று எல்லா அணிகளுமே எதிர்பார்க்கிறது.

பலவீனம்:

red-dot%283%29.jpg பிரண்டன் மெக்கல்லம் என்ற அதிரடி பேட்ஸ்மேன் ஓய்வு பெற்றுவிட்டது.

red-dot%283%29.jpg வெட்டோரிக்குப் பிறகு வெளிநாடுகளில் அற்புதம் புரியும் சுழற்பந்து வீச்சாளர்கள்    கிடைக்காமல் போனது.

மேற்கிந்தியத் தீவுகள்

p4g.jpg

பலம் :

red-dot%283%29.jpg 20 ஓவர் போட்டிகளை விளையாடுவதற்கு என்றே பிறந்தவர்களைப்போல விளையாடும் அணி என்பதே அவர்களது கூடுதல் பலம்.

red-dot%283%29.jpg இமாலய சிக்ஸர்களை அடிக்கும், சிக்ஸர் மழை பொழியும் கெயில் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது.

பலவீனம்:

red-dot%283%29.jpg நரேய்ன், பொல்லார்டு, பிராவோ போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இல்லாமல் இருப்பது.

red-dot%283%29.jpg நிலையான அதிரடி ஆட்டத்தை எந்த வீரர் தருவார் என நம்பவே முடியாது. திடீரென சொதப்பலாக விளையாடி, வேகமாக வெளியேறுவது.

-சுப.தமிழினியன்


வார்னே சொன்னா பலிக்குமா?

p4h.jpg

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே சொல்லும் கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்துள்ளன. 2011-ம் ஆண்டு இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும் என்றார். மைக்கேல் கிளார்க் கேப்டனாக இருந்தால், 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று கூறியிருந்தார். 2011-ம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த டெஸ்ட் போட்டி ஒன்று, டையில் முடியும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது அத்தனையுமே நடந்தது. ‘இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியாதான் இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். இந்த முறையும் ஷேன் வார்னேயின் கணிப்பு பலிக்குமா?

டி20 உலகக் கோப்பையை இதுவரை நடத்திய நாடுகளில், இலங்கையைத் தவிர வேறு எந்த நாடுமே இரண்டாவது சுற்றைத் தாண்டியது இல்லை. இந்த ஃபார்முலாவை இந்திய அணி உடைக்குமா?


இன்னும் சில அணிகள்!

இலங்கை: குஷால் பெரேரா, தில்ஷான் என வலுவான துவக்க வீரர்கள். இறுதி ஓவர்களில்  கட்டுக்கோப்பாக பந்து வீசும் மலிங்கா, சுழற்பந்து வீச்சில் கலக்கும் சேனநாயகா போன்றோர் அணியின் மிகப்பெரிய பலம்.

சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றோருக்குப் பிறகு, மத்தியில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லாமல் இருப்பது. மலிங்காவுக்கு  துணையாக, சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பலவீனம்.

பாகிஸ்தான்: அப்ரிடி, மாலிக், ஹபீஸ், ரியாஸ் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது. உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் திடீர் பலம் பெற்று  ஆச்சர்யம் அளிப்பது பலம்.

ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததால், அவர்களுக்கு இந்திய மைதானங்களின் தன்மை புரியாமல் இருப்பது பெரிய பலவீனம்.

p4i.jpg

இங்கிலாந்து: சமீப காலங்களில், 20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கிறார்கள். சமீபத்தில், பாகிஸ்தானை வென்று  கூடுதல் உத்வேகத்துடன் இருப்பது பலம்.

வேகப்பந்து வீச்சு பலமாக இருந்தாலும், இந்திய மைதானங்களில் விக்கெட்களை வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை.

பலம் வாய்ந்த இந்த அணிகளைத் தவிர, வங்கதேசம், ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளும் விளையாடுகின்றன. இத்தகைய சின்னச்சின்ன அணிகளும், பல சமயங்களில் திடீர் ஆச்சர்யத்தை  அளிக்கும். கடந்த ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில், வங்கதேச அணி மற்ற சின்ன அணிகளை வென்றதோடு, இங்கிலாந்தையும் வீழ்த்தியது.  அதுபோல ஆச்சர்யங்களும் இந்த டி20 உலகக் கோப்பையில் காத்திருக்கலாம்... பார்ப்போம்!

vikatan

Link to comment
Share on other sites

தலைவராக மெத்தியூஸ் - இலங்கை அணியில் சில மாற்றங்கள்

தலைவராக மெத்தியூஸ் - இலங்கை அணியில் சில மாற்றங்கள்

 

20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் உப தலைவரா தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெந்தசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லகிரு திருமானே ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6-வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக இருந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே மெத்யூஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

இன்று நடந்த முதலாவது தகுதிகாண் போட்டியில் சிம்பாவே 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது..

Zimbabwe 158/8 (20/20 ov)
Hong Kong 144/6 (20/20 ov)
Zimbabwe won by 14 runs
 
தற்சமயம் நடைபெற்று கொண்டு இருக்கும் போட்டியில்
 
ஸ்காட்லாந்து எதிராக ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்து ஆடுகிறது... 79/1  10ஓவர்களில்
Link to comment
Share on other sites

டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவண

 
 
kop_2766618f.jpg
 

அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, உற்சாக கொண்டாட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய 6-வது டி 20 உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது. கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், பெங்க ளூரு, தர்மசாலா, மொஹாலி ஆகிய 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற் கின்றன. 27 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 35 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

போட்டி அட்டவணை

1_2766622a.jpg

2_2766620a.jpg

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/article8326688.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்: தோனி

 
 
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் நேற்று தாயகம் திரும்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது படம்: பிடிஐ
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் நேற்று தாயகம் திரும்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது படம்: பிடிஐ

ஆசியக் கோப்பை டி 20 இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பி யன் பட்டம் வென்ற நிலையில் டி 20 உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ் வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பு கின்றனர். மைதானத்தில் ஆடுவதை விட டிவி-யில் பார்க்க கிரிக்கெட் மிக எளிதாகவே இருக்கும். இந்தியா இறுதியில் வென்றது என்றில்லாமல் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி என்பதே பரபரப்பான தலைப்பாக இருக்கும். வெற்றி பெற்றால் இது என்ன பெரிய விஷயம், வென்றுதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியாகும். தோற்றால் வங்கதேசத்திடம் தோற்கலாமா என்று கேள்விகள் எழும்.

அதாவது வெற்றி பெறுவது இயல்பான ஒன்று அதன் மூலம் முன்னெடுத்துச் செல்ல ஒன்றுமில் லை என்பது போல் இருக்கிறது சில விமர்சனங்களின் தரம்.

சுரேஷ் ரெய்னா அல்லது ரோஹித் சர்மா போன்றவர்கள் முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர்கள். ஆனால் பின்னால் களமிறங்கும் போது ஆரம்பத்திலேயே பெரிய ஷாட்களை ஆடுவது கடினம்.

முகமது ஷமி அணிக்கு வந்தால் ஆஷிஷ் நெஹ்ரா இடத்தில் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் நெஹ்ராவை இப்போதைக்கு நாம் விலக்க முடியாது. பும்ராவை நீக்குவதற்கு வாய்ப்பேயில்லை. ஏனெனில் அவர் புதிய பந்து, பழைய பந்து என்று யார்க்கர்களை நினைத்த போது வீச முடிகிறது. முதலில் ஷமி தனது உடல்தகுதியை பயிற்சிப் போட்டிகளில் நிரூபிக்க வேண்டும்.

டி 20 உலகக்கோப்பைக்கான சரியான பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இம்முறை சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் எதிரணியை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாள ருக்கு எதிராக பெரிய அளவிலான ஷாட்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.

அவருக்கு பந்து வீச சரியான துணையும் கிடைத்துவிட்டால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியும். இந்த விஷ யத்தில் தரம்வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர்களை கருத்தில் கொள்ள வேண்டும். பந்து வீச்சில் அவர்கள் காட்டும் மாறுதல்கள் டி 20 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு தெரிவித்தார் தோனி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8326673.ece

Link to comment
Share on other sites

இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டி மைதானத்தை மாற்றுமாறு பாக்கிஸ்தான் கோாிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டி  மைதானத்தை மாற்றுமாறு  பாக்கிஸ்தான் கோாிக்கை


பாக்கிஸ்தான் இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் போட்டி நடைபெறவிருந்த நிலையிலேயே பாக்கிஸ்தான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.


குறிப்பிட்ட மைதானத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்  குறித்து ஆய்வினை மேற்கொண்ட பாக்கிஸ்தான் குழுவினர் அளித்த அறிக்கையின் பின்னரே பாக்கிஸ்தான் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.


பாக்கிஸ்தான் கொல்கத்தா அல்லது மொகாலிக்கு 19 ம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியை மாற்றுமாறு கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129834/language/ta-IN/-20-----.aspx

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட் அணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் ஜனாதிபதி!
 
இலங்கை கிரிக்கெட் அணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் ஜனாதிபதி!
இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 'இருபதுக்கு 20' உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார். 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கெட் அணியினர் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். 
 
                        1457495918_cricket1.jpg
 
இதைமுன்னிட்டு 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவால் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. 'ஒரே அணி - ஒரே தேசம்'  உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமும் இதன்போது ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  
 
                                    1457495936_cricket2.jpg
 
Link to comment
Share on other sites

பாகிஸ்தான் அணியின் இந்திய வருகை நிறுத்தி வைப்பு!

பாகிஸ்தான் அணியின் இந்திய வருகை நிறுத்தி வைப்பு!

இந்தியாவில் நடக்க இருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, இந்தியா செல்வதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

போட்டி நடக்கும் இடத்தில் முழு பாதுகாப்பை உறுதி செய்வதாக இந்திய அரசு உத்திரவாதம் அளித்தால் மட்டுமே பாக். வீரர்களை இந்தியா அனுப்ப முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மார்ச் 19ம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லையில் அவ்வப்போது ஊடுருவியும், இந்திய இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியும் இந்திய இராணுவ வீரர்களை கொன்று குவித்து வரும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மசாலாவில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு இமாச்சல முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கிரிக்கெட் நடக்கும் இடத்தை தர்மசாலாவில் இருந்து கோல்கட்டாவுக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தர்மசாலாவில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், திடீரென போட்டி நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ இன்று கூடி ஆலோசிக்க உள்ளன.

இந்நிலையில், இன்று இந்தியா வருவதாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணத்தை அந்நாடு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், பாதுகாப்பு விஷயத்தில் இந்திய அரசு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி இந்தியா செல்லும். இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாதது ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டே பாகிஸ்தான் அணியின் இந்திய பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

துடுப்பாட்டத்தை வலுப்படுத்த 3ஆம் இலக்கத்தில் லஹிரு – அரவிந்த டி சில்வா
2016-03-09 10:22:12

(நெவில் அன்­தனி)

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணியின் துடுப்­பாட்­டத்தை வலுப்­ப­டுத்தும் நோக்கில் மூன்றாம் இலக்­கத்தில் லஹிரு திரி­மான்ன துடுப்­பெ­டுத்­தா­டுவார் என தெரி­வுக்­ கு­ழுவின் புதிய தலைவர் அர­விந்த டி சில்வா தெரி­வித்தார்.

 

மற்­றைய கிரிக்கெட் அணி­களை கவ­னிக்­கும்­போது நாங்கள் நீண்ட கால மற்றும் குறு­கிய கால திட்­டங்­களை வகுத்து அணியைக் கட்டி எழுப்­ப­ வேண்டும் என்றார் அவர்.

 

15417a-ce-silva.jpg

 

‘‘மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணியில் பாரிய இடை­வெளி ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இலங்கை அணியை எழுச்­சி­ பெறச் செய்­வ­தற்கு ஒரு நீண்­ட­ கா­லத்­திட்டம் அவ­சியம். லஹிரு திரி­மான்ன, தினேஷ் சந்­திமால் போன்­ற­வர்கள் இந்தத் திட்­டத்தை பின்­பற்­ற­வேண்டும். 

 

துடுப்­பாட்­டத்தில் அடிக்­கடி மாற்­றங்கள் செய்­வதால் வீரர்கள் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கின்­றனர். இது தவிர்க்­கப்­ப­ட­ வேண்டும். லஹிரு திரி­மான்ன மூன்றாம் இலக்­கத்தில் நிலை­யாக இருக்க வேண்டும்.

 

இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­களில் முறையே விராத் கோஹ்லி, சர்வ்ராஸ் அஹமத், சபிர் ரஹ்மான் ஆகியோர் இருக்­கின்­றனர். 

 

ஒரு­வேளை அணி தெரிவு குறித்து பொது­மக்கள் குமு­றலாம். ஆனால் நாங்கள் சில முடி­வு­களை எடுத்­துத்தான் ஆக­வேண்டும்’’ என 1996இல் உலக சம்­பி­ய­னான இலங்கை அணியின் இறுதி ஆட்ட நாயகன் அர­விந்த டி சில்வா தெரி­வித்தார்.

 

துடுப்­பாட்ட வரிசை குறித்து அவ­ரிடம் மெட்ரோ நியூஸ் பிரத்­தி­யே­க­மாகக் கேட்­ட­போது, ‘‘ஆரம்ப வீரர்­க­ளாக தினேஷ் சந்­தி­மாலும் திலக்­க­ரட்ன டில்­ஷானும் களம் இறங்­குவர். 

 

இவர்­களைத் தொடர்ந்து லஹிரு திரி­மான்ன, சாமர கப்­பு­கெ­தர, ஏஞ்­சலோ மெத்யூஸ், மிலிந்த சிறி­வர்­தன, திசர பெரேரா ஆகியோர் ஏழாம் இலக்கம் வரை இடம்­பெ­றுவர்’’ என பதி­ல­ளித்தார்.

 

ஷெஹான் ஜய­சூ­ரிய அணிக்குள் வந்தால் ஒரு சிறு மாற்றம் இடம்­பெற வாய்ப்­புள்­ளது எனவும் அவர் கூறினார்.

 

இதே­வேளை, இலங்­கையில் கிரிக்கெட் வீரர்கள் மத்­தியில் காணப்­படும் ஆற்­றல்கள் வியக்­கத்­தக்­கது என்­ப­தையும் அவர் கூறத் தவ­ற­வில்லை.

 

குமார் சங்­கக்­கார கருத்து
இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப வீரர்கள் தங்­களை மாற்­றிக்­கொண்டு விளை­யாடி வெற்றி பெற முயற்­சிக்­க­ வேண்டும் என குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

 

‘‘ஒவ்­வொரு வீர­ருக்கும் மனோ­பலம் இருப்­பது அவ­சியம். 2014இல் உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுக்கு செல்­லும்­ வரை நாங்கள் அணியில் இடம்­பெ­று­வோமா என்று நினைக்­க­வில்லை. 

 

அணி­யாக செல்­லும்­போ­து தான் எங்­க­ளது மன­துக்கு நிம்­மதி ஏற்­பட்­டது. இப்­போதும் அப்­ப­டித்தான். அணியில் மாற்றம் குறித்து கவ­லைப்­ப­டக்­கூ­டாது. 

 

தெரி­வா­ளர்கள் அதி சிறந்த அணி­யைத் தான் தெரிவு செய்­வார்கள். என்ன நடக்கும் என்­பதை யாராலும் ஆரூடம் கூற­மு­டி­யாது.

 

நாட்­டையும் அணி­யையும் இத­யத்தில் நிறுத்தி மனோ­தை­ரி­யத்­துடன் விளை­யாடி நாட்­டுக்கு வெற்­றி­யீட்­டிக்­கொ­டுக்­க­வேண்டும்’’ என 2014 உலக இரு­பது கிரிக்கெட் போட்­டியில் இலங்கை சம்­பி­ய­னாவ­தற்கு இறுதிப் போட்­டியில் பெரும்­பங்­காற்­றிய குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

 

இலங்கை குழாம்:
ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), தினேஷ் சந்­திமால் (உதவி அணித் தலைவர்), திலக்கரட்ன டில்ஷான், லஹிரு திரிமான்ன, சாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, ஷெஹான் ஜயசூரிய, திசர பெரேரா,  நுவன் குலசேகர, ரங்கன ஹேரத், துஷ்மன்த சமீர, சுரங்க லக்மால், சச்சித்ர சேனாநாயக்க, தசுன் ஷானக்க, லசித் மாலிங்க. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15417#sthash.x5WORkdi.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.