Jump to content

தமிழகத்தின் நிலைமையோ


Recommended Posts

தமிழகத்தின் நிலைமையோ இன்று கன்னடத்தில் இருந்து வந்தவர்களும்,தெலுங்கர்களும் , மலையாளிகளும் வந்து தமிழகத்தை அடக்கி ஆள்வதும்.மலையாள நிறுவனங்கள் தமிழக பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதும்,தமிழகத்தின் வளங்கள் பிற இனத்தவருக்கு வழங்கப்பட்டதும்.தமிழகத்தில் உயர்பதவிகளை பிற இனத்தவர் ஆக்கிரமிப்பதும்.தமிழ் தமிழ் எனச்சொல்லி ஒரு கூட்டமும்,பார்ப்பானிய ஆதரவு என ஒரு கூட்டமும் கொள்ளையடிப்பதும் இங்கே தான்.

 


பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்பற்ற தன்மையும்,பாலியல் வல்லுறவு,பெண்களுக்கு எதிரான வன்முறையும்,நீதிக்கு எதிரான வன்முறையும்,காவல்துறை அதிகாரியை கொலைசெய்வதும் நடக்கத்தான் செய்கிறது.இங்கு இந்த பிரச்சினைகளை சரிசெய்ய எவ்வளவோ முயற்சியெடுத்தாலும்,அது சட்டப்படி குற்றம் எனக்கூறி கைது செய்வதும் நாட்டின் வழக்கமாக இருப்பது வருந்த செய்கிறது.
நாம் ஒரு நாள் மதுவிலக்குக்காக பொங்கியெழுந்தால்,அடுத்த நாளே அதை திசைதிருப்ப பெண்களுக்கு எதிரான கருத்து என்று நம்மை பொங்கச்செய்வதே அரசியலாக உள்ளது.எதையும் மறந்துவிடும் நம் இயல்பு,இங்கு அரசியல்வாதிகளால் மிக அழகாக நம்மை ஏமாற்ற கையாளப்பட்டுவருகிறது.

 

 

 

ஏப்ரல் 2015ல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "தாலி பெண்களை பெருமைபடுத்துகிறதா? இல்லை சிறுமைபடுத்துகிறதா? என்ற விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர் இந்து மதவெறியர்கள்.மாதொருபாகன் நாவல் பிரச்சினையில் எழுத்தாளர் பெருமாள் இந்து மதவெறிர்களால் தாக்கப்பட்டார்.தோழர் கோவன் தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கையை விமர்சித்ததிற்காக தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைதானது.மேலும் சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சித்ததற்காக கைது எனும் நிகழ்வுகளை நாம் சாதரணமாக ஒன்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என கூறிவிட முடியாது.

 

இந்நிகழ்வுகள் அனைத்தும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக நடத்தப்பட்டவை.
இன்று நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியானது அதன் மதச்சார்பின்மை,தமிழர் நல்வாழ்வு,சாதி எதிர்ப்பு,பகுத்தறிவு போன்ற திராவிட கொள்கையிலிருந்து விலகிசென்றுவிட்டது என்றே சொல்லலாம்.நடந்து வரும் அ.தி.மு.க அரசு மதகுருக்களின் திட்டப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 


ஒரு காலத்தில் இங்கு இருந்த அ.தி.மு.க அரசு,அயோத்தியில் நடந்த மசூதி இடிப்புக்கு கரசேவைக்கு ஆள் அனுப்பிய வரலாறு நாடறியும்.மதச்சார்பின்மையை ஆதாரமாக கொண்ட திராவிட கட்சிகள் இன்று மதவாதிகள் ஆதரவை கேட்டு அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் களம் காண்பதும்.சமீபத்தில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் அவர்களின் நமக்கு நாமே பயணத்தில் கோயிலுக்கு சென்றதை நினைவுபடுத்துகிறேன்.திராவிட கட்சிகளின் கைகள் மதக்கறை படிய தொடங்கிவிட்டது.சாதிக்கு எதிரான கொள்கை உடைய திராவிட கட்சிகள் இன்று கேவலம் ஓட்டுக்காக சாதிக்கட்சிளின் கால்களை பிடித்தது.இவ்வாறு பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என சொன்னவர்கள் சாதியை வழக்க தூபம் போட்டனர்.இலங்கையிலே நம் ரத்தச்சொந்தங்கள் சிங்கள இனவெறியர்களால் வேட்டையாடப்பட்டுகொண்டிருந்த போது வெறும் வேடிக்கையையோடு நாடகத்தை தானே நடத்தினர்.தமிழர் நலவாழ்வு எனும் கொள்கையை உடைய திராவிட கட்சிகள் அதிலிருந்து விலகி கட்சி நலவாழ்வு என மாறிப்போனது.ஆனால் திராவிட கட்சிகள் தமிழகத்தில் வேறு எந்த மாற்றுக்கருத்தையும் வேறுண்ற விடவில்லை.

 


இலவசங்கள்,மது,ஸ்டீக்கர்,காவல்துறை ஏவல்,பார்பணிய ஆதரவுபோக்கு,சாதிய ஆதரவுபோக்கு என பல பிழைகள் உள்ளன தற்போதைய ஆளும் அ.தி.மு.க அரசிடம்.திருந்தவேண்டும் அவர்கள்.

 


ஆனால் தமிழகத்தில் சென்னை மழை தந்த பாடம்,அரசியல்வாதிகள் மக்களுக்கு ஆதாயங்களுக்காகவே உதவுவார்கள் என.இன்று நம் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிப்பது என தெரியாமல்,புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

 


பார்ப்பணிய அ.தி.மு.க வேண்டாம்.ஊழல்,குடும்ப ஆட்சி கட்சிமுறையுள்ள தி.மு.க வேண்டாம்.சாதியக்கட்சிகளும் வேண்டாம்.பொதுவுடமை கொள்கையும் தெரியாது எனவே அதுவும் வேண்டாம்.மதவாதமும் வேண்டாம்.வேறு என்ன கட்சி இருக்கிறது வாக்களிக்க? என்ற யோசனையிலே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.

 


மறதி தேசிய வியாதி என்பது மறந்து போய் மக்கள் சிந்தித்து வாக்களித்தார்கள் எனில் மாற்றம்

 

http://nethajidhasan.blogspot.co.uk/2016/01/blog-post_64.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.