Jump to content

அர்த்தம் அற்ற பிழை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தம் அற்ற பிழை

அனோஜன் பாலகிருஷ்ணன் 
 

 

kayal1

கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள்.

அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களில் ஜில்லிடுவது அப்போதுதான்.

நிச்சயதார்த்தம் முடித்தபிற்பாடு அம்மா போனில் கதைக்கச் சொன்னாள். நானும் ஆர்வமாக போன்நம்பரை குறித்துக் கொண்டேன். அவளுக்கு டயல் செய்யும் போதுதான் நான் மீண்டும் தடுமாறினேன். கயல் அம்மாதான் எடுத்தாள்.

“ஹலோ. . . . . . . . ”

“ஹலோ. . . . . . அன்ட்டி. . . . . நா. . . நா. . . ”

“ஹோ. . . . . மாபிளையா?”

“. . . . . ஆமா. . . ”

“என்ன விஷயம். . . ஹிஹி. . . கதைக்கப் போறீங்களா?. . . . ஒரு நிமிஷம் பொறுங்க. . . ”

கயல் கயல் அப்படின்னு கூப்பிடும் சத்தம் கேட்டது. . . . . . ஐந்து நிமிஷம் ஆச்சு. . . ஹும். . ஒரு சத்ததையும் காணவில்லை. ரிசிவருடன் நடு நடுங்கிக் கொண்டு பில்லிபோல் இருந்தேன். ச்சே. . . . . ஒரு பொண்ணுடன் கதைக்க இப்படியா வியர்க்கும்? சில விஷேச ஹோர்மோன்கள் புதுசாகச் சுரந்தது, துன்புற வைத்தது.

“ஹல்லோ. . . . . . . . . . . ” ரொம்ப மெல்லிய பெண்குரல் ரிசீவர் முனையில் இனித்தது.

என் இதயம் சூடேறி மூச்சுக் குழாயை சிக்கல்படுத்தியது.

“ஹேலோ. . . . . . ” என்றேன் நலிந்த குரலில்

“ம்ம். . . . . . . . . . . . . . . . . . ”

“என்ன ம்ம்?”

“சொல்லுங்கோ. . . . ”

“அம்மா. . . பக்கதுல நிக்குறாங்களா?”

“இச்ச்ஸ். . . . . . . . . . . . ” காத்துச் சத்தம் கேட்டது

“ஹலோலோலோ. . . . . . . . . . . ”

“இல்ல இல்ல. . . . மீன் வாங்க போயிட்டாங்க. . . . . . நான் ரூம்லதான் இருக்கன். ”

முதன் முதலாக வரப்போகின்ற மனைவியுடன் கதைத்த உன்னத தருணத்தை யாரும் மறக்கமாட்டார்கள். எழுபது வயதிலும் இனிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

கல்யாணம் ஊரில்தான் நடந்தது. தங்கை கொழும்பில் இருந்து புருஷனுடன் வந்திருந்தாள். கயலுக்கும் ஒரு தங்கைதான். அடுத்தவருடம் அவளுக்கும் காலியாணமாம். அப்படின்னு அப்போ சொன்னார்கள். அவளின் கலியாணத்துக்கு ஒருமாத கைக்குழந்தையோட போவன் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் போனது அப்படித்தான்.

என் கல்யாணத்துக்கு நிறைய உறவினர்கள் மினுங்க மினுங்க வந்திருந்தார்கள். முன்வரிசையில் இருந்த என் அம்மாவின் கனடா அண்ணாமார்கள் அதாவது என் மாமாமார்கள் ஊரில் தலைநரைத்த பெரியவர்களுடன் கதைத்துக்கொண்டு இருந்தார்கள்.

“பொடியன் டெலிக்கம்ணிக்கேஷன் என்ஜினியாராமே எவ்வளவு மாசச் சம்பளம்?”

“நல்ல சம்பளம். . . . ட்ரின்கோல வேலை. . . . . ” என்றார் சூரி மாமா

“ஓ. . . . நமது கோகுலா. . . புருசனும் அங்கதான் வேலை. . . . . . ”

“யாரு கோகுலா?”

“அட. . . நமது. . . . . . விக்னேஸ்வரன் தம்பி. . . . மகன் முடிச்சான். . . ”

“அடடே. . . அப்படியா? . . . சரி. சரி. . ”

“கனடா போனபிறகு எல்லாம் மறந்துட்டீயா?”

ஆளாளுக்கு ஒவ்வன்று பேசிக்கொண்டார்கள்.  ஐயர் ஓமம் போட்டு என்னை துன்பமற்று விநோதமாக அழவைத்துக் கொண்டிருந்தார். தாலிகட்டி முடிக்கும்வரை அந்த வினோத சம்பிரதாய சித்திரவதைகள் பாராபட்சம் இன்றி தொடர்ந்தது. சகஜ நிலைக்கு கீழிறங்கிவர ஒருவாரம் சென்றது தனிக்கதை.

முதன்முதலில் கயலை தொடும்போது அவளின்கை லேசாக நடுகியது இன்னும் நினைவுள்ளது. அவள் உயர்தரம் வரைதான் வணிகத்துறையில் படித்து இருந்தாள். வவுனியாவளாகத்தில் படிக்க இடம் கிடைத்ததாம். ஆனால் அப்பா தங்கிப்படிக்க விடவில்லையாம்.

மூன்றுமாத குழந்தையை மேய்ப்பது ரொம்ப சுவாரஸ்யமான விடயமாக இருந்தாலும் கயல்தான் ரொம்பவும் மினக்கிடுவாள். கயலின் அப்பா ஒரு தமிழ்வாத்தியார். மேகலை என்று பெயர்வைத்தார்.

“மேகலை. . . அப்பாவை பாரு. . . . . . . . ”

“க்ளுக். . . . ” என்று சிரித்து கண்ணடித்தது.

“அடி கள்ளி அப்பவை பார்த்து கண் அடிகுறீயா??” என்றாள் கயல்

யாழ்ப்பாணதில்தான் என் சொந்தபந்தமும் அவளின் சொந்தபந்தமும் இருந்தது. திருக்கோணாமலை புது இடம். கல்யாணம் முடிய திருக்கோணாமலை வாடகை வீட்டுக்கு வந்ததுவிட்டோம். இலங்கை ஒலிபரப்புக் கூடுத்தாபனத்தில் எனக்கு வேலை. ஜேர்மன்காரன் கட்டி வேலை செய்து அப்புறம் இலக்கை அரசுக்கு இலவசமாக கொடுத்தது.

சனி,ஞாயிறு ரொம்ப ப்ரீயா இருப்போம். மேகலையோட விளையாட எனக்கு நேரம் கிடைக்கும்.

என் சாம்சன்கலக்ஷி சிணுங்கியது. புது நம்பராக இருந்தது.

“ஹலோ?”

“திஸ் இஸ் ராதேயன்??”

“யெஸ். . . மே ஐ நொவ் ஹு இஸ் திஸ்???”

“டேய். . . . . நான்தாண்டா ரங்கு. . . . . ”

“ரங்கு வா??? எந்த ரங்கு??”

“சரியா போச்சு. . . . . ரங்கராஜன்டா. . . . ”

“டேய். . . . . . . . . நீயா? எப்படி இருக்க? கலியாணத்துக்குகூட வரல. . . . . நீ யு. ஸ் இல்லோ??”

“மெயில் செக் பன்ணலையாடா ஐசே?”

“இல்லைடா. . . . . . . ஏன்டா?”

“படுபாவி. . . . . . நான் ட்ரின்கோதாண்டா வத்துட்டு இருக்கேன். . . . சயாப்ளூல டூ டேஸ் நிப்பன். “

“அட. . . . வாடாவா. . . . ரொம்பநாள் அப்புறம் ஸ்ரீலங்கா வார. . . . வாவா ஜப்னா போகலையா???”

“ரெண்டு நாள் இங்க நின்டுட்டு அப்புறம் போரேண்டா”

“ஓகேடா. . . . . . பேரன்ஸ் எப்படி இருக்காங்க???”

“எல்லாம் நலம். . . டேய் டுடே என்னோட டின்னெர், உன் மிஸ்சஸ் ஓட வாடா. . . ”

ரங்கராஜன் என்கூட ஒரே ஸ்கூல்ல படிச்சவன். ஒன்னாதான் சயின்ஸ்ஹால் தனியார் வகுப்புகளுக்கு போவோம். சைக்கிளில் நானும் அவனும் சுத்தாத இடம் இல்லை. அவனுக்கு களனி யுனிவேர்சிட்டில் பௌதிகவிஞ்ஞானம் கிடைத்தது. படித்தான் எம். எஸ். சியும் செய்தான். பி. எச். டியும் செய்யப்போறன் என்று போனவன். அப்புறம் மெல்ல மெல்ல அவன் தொடர்பு நீர்குவளை ஆவிபோல் காணாமல்போனது. ஃபேஸ்புக்கிலும் அவனை நான்காணவில்லை. மின்னஞ்சலில் ஒருமுறை நம்பர் கொடுத்து இருந்தேன். ஒருமுறை கூட நானோ அல்லது அவனோ தப்பித்தவறி கதைக்கவில்லை. இப்பபோதுதான் அவன் தரிசனம் கிடைத்தது.

நான் சாயாப்ளூ செல்ல மணி ஏழைத் தாண்டியிருந்தது. கயல் காரில் மெலிதான சிரமத்துடன் குழந்தையோடு இருந்தாள். ரிசப்ஷனில் இருந்து அவனை அழைக்க வெளியில் வந்தான். டிஸ்கவரியில் பாம்பு பிடிக்கபோகின்றவன் மாதியிருந்தது அவன் உடை. தலையில் முடி அடர்த்தி குறைத்து இருந்தது. தொப்பை இருந்தது. சினேகமாக கட்டிப்பிடிக்க வயிறு இடித்தது.

“ரொம்ப மாறிட்ட” என்று புன்னகைத்தேன்

“நீ அப்படியே இருக்குறடா. . . . ”

பெயர் இலகுவில் நினைவுபடுத்த முடியாத ஒரு ரெஸ்டாரெண்டுக்கு போனோம். என் குழந்தையை ஒரு விசித்திர ஜந்துவாகப் பார்த்தான்.

“டேய். . . உன் மகனா?”

“மகன் இல்லை மகள். . . . . . . . . மாமாக்கு ஹாய் சொல்லு” என்றாள் கயல்

“கிளுக். . . . கியகுக்லோ. . . . ” என்று சிரித்து.

“எதோ. . . . பயோலாஜிக் நேம் சொல்லுது. . . ஹாஹா. . . . உமக்குத்குதான் பயோ நல்லா வருமே ராதே. . . . . ”என்று கண் அடித்தான்.

அந்த ரெஸ்டாரெண்டில் நம்மைத்தவிர யாரும் இல்லை. மெலிதான வெறுமை குடிகொண்டிருந்தது. மெல்லிய வைக்கோலினால் வேயப்பட்டு குறைந்த வெளிச்சத்தில் மின்குமிழ்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் பிடித்ததை மெனுக்கார்ட்டில் கடினப்பட்டு தேடி ஓடர்பண்ணிக் கொண்டோம். நான் எடுத்த நூடில்ஸையே கயலும் ஓடர் பண்ணிக்கொண்டாள். குழந்தையுடன் வந்ததால் நாம் வேகமாக வீடு செல்ல ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.

“சங்கீதாவை கண்டனான்டா. . . ”

நிமிர்ந்து பார்த்தேன். ஒருகனம் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கயல் குழத்தையைமடியில் தாங்கியவாறு சாப்பிடுவதற்கு கடினப்பட்டாள்.

“ஓஒ. . . . . . . . . . ”

“உன்னோட கதைகுரவளாம்”

“அது ஒருக்கா ஃபேஸ்புக்லடா. . . . ”

“அப்பிடியா? ஹிஹி. . . . போன டிசம்பர் சொன்னாள், தான் உன்னோட போன்ல கதைச்சனான் என்று. . . ”

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ” என்னால் பேச முடியவில்லை. இவன் ஏன் இப்ப இந்த பேச்சை எடுக்கின்றான்

“யாரு சங்கீதா?” என்றாள் கயல்

என்னால் சரியாக விழுங்கமுடியவில்லை. நூடில்ஸ் தொண்டைக்குள் விசித்திரமாக சிக்கியது.

“அட இவன் ஏல் படிக்கக்கே லவ்பண்ணின பொண்ணுங்க, அது ஒரு காலம் இவனை சைக்கிள் பார்ல ஏதிக்கிட்டு நான்தாங்க சுத்தினான், நாங்க மத்ஸ், சங்கீதா பயோ, அவள இம்ப்ரெஸ் பண்ண இவன் பயோ கிளாஸ் கூட போனவன். போய் அவள் பெஞ்சுக்கு பின்னால இருப்பான். . . பயோ சேர் திவாசேர்ட பிடிபட்டு பேச்செல்லாம் வேண்டி இருக்கான். . . இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கும் கோல்டன் மெமரிஸ் அப்புறம் அதேல்லாம் இல்லாமப் போச்சு. இப்ப நினைச்சா சிரிப்பாகவிருக்கும். . ”

நான் சுதாகரிக்க முதல் சொல்லிமுடித்தான். அலவாங்கால் பிரடியில் சாத்தியதுபோல் நினைவு பிசிறியது. கயலின் பார்வையைத் தவிர்த்தேன். வீடுவரும்வரை அவள் எதும் பேசவில்லை, நானும் மௌனமாக இருந்தேன். என்னால் அந்த போலி அமைதியை ஜீரணிக்க முடியவில்லை.

வீட்டைத்திறந்து லைட்டைப் போடும்போது பகத்துவீட்டு பூனை மேசையில் இருந்து துள்ளிக்குதித்து ஓடியது. அந்த சாம்பல்நிறப் பூனையைக் கண்டாள் கயல் அடிபின்னியேடுத்துவிடுவாள். அவள் அப்படி ஒன்றும் செய்யாது செயற்கையாகக் கடந்து போனாள். நாளை ஞயிற்றுக்கிழமை.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை, எழும்பும்போது மணி ஏழைத்தாண்டி இருந்தது. மேகலை அழுது கொண்டிருந்தது. தலை சாதுவாக வலித்தது.

கயல் தோசை சுட்டிருந்தாள். ரெண்டாவது தோசையை விழுங்கும் போது அவள் கேட்டாள்.

“யாரு சங்கீதா???”

“என்கூட படிச்சா. . . . ”

“லவ் பண்ணீங்கள???”

“. . . . . . அ. . அ. . . அது சின்ன வயசுல”

“அப்புறம் ஏன் அவளை கலியாணம் பண்ணலை?”

“அது ஜஸ்ட் லவ். . . அப்போ இருந்தீச்சு இப்போ இல்லை”

“அப்படினா?”

“லுக். . . அது ரொம்ப சின்ன வயசுல டீன்ஏஜ்ல நடந்த ஒரு அற்பமான விபத்து”

அவள் கண்கள் பனித்திருந்தது. ஏதும் பேசவில்லை. எனக்குள் இருந்த ராதேயன் ஒரு மூலையில் சரிந்து கொண்ட்டிருந்தான். மேலும் தொடர்ந்தேன் “ நான் படிச்ச கெமிஸ்ட்ரி கிளாஸ்ல அவள் படிச்சாள் குரூப் கிளாஸ் நாலு பொண்ணுக நான் ஒரு பொடியன். ஒருசமயத்துல நான் அவளை காரணம் இல்லாமல் விரும்பினேன். அந்த விருப்ப இச்சையை தோற்றுவித்தவள் அவள். அவள் என்னை விரும்பினதும் நிஜம். ஒருவரிடம் நிலையில்லாமல் இருந்தேன். திடடீரென்று அவள் சம்பந்தம் இல்லாமல் பேசினாள். ரொம்ப வலித்தது. காரணம் சொன்னாள். அவங்க குடும்பத்தில காஸ்ட் பாப்பாங்களாம். அவளை நான் கேவலமாக பார்த்தது அப்போதுதான். அவங்க அம்மா ஒருபோதும் ஓம் சொல்ல மாட்டாங்களாம் என்று ஏதோ சாக்குபோக்குச் சொன்னாள். அதோட நானும் மறந்துட்டேன். அப்புறம் எனக்கே சிரிப்பாக இருந்திச்சு. . . . போயும்போயும் இவள் பின்னுக்கு அந்த வயசில் திரிந்தோமே என்று. . ”

நான் சொல்லிமுடிக்க அவள் அழுதாள்.

“இப்ப ஏன் அழுறடி???”

“இதபத்தி நீங்க சொல்லவே இல்ல. ”

“இது ஒரு விஷயமும் இல்லை நான் என்ன அவளோட குடும்பமா நடத்தினேன். அவள் விரலகூட நான் தொட்டது கிடையாது”

“அப்ப ஏன் இப்போ அவளுடன் கதைக்குறியள்???”

“யாரு சொன்னா?”

“உங்க பிரண்ட்தானே என் முன்னால் சொன்னார். ” என்றாள் மூக்கை சிந்தியவண்ணம். ச்சே இந்தப் பெண்கள் சில சமயத்தில் எவ்ளவு புத்திசாலிகள்.

“அ. . அ. . அ. . . அதுவந்தது ஃபேஸ்புக்ல என்நம்பர் இருக்கு. . . . . . அத வச்சு ஒருக்கா கால் எடுத்தாள்”

“ஒ. . . . . . . . அப்ப அவளுடன் ராவு ராவா சட் வேற பண்ணுறியளோ, இப்பத்தானே புரியுது ஏன் இந்த லட்டாப்ல ராவுராவா மினக்கடுரியள் என்று”

“அடி மூதேவி, அவள் கலியாணம் முடிச்சு ஸ்டேட்ல இருக்காள், அவள்தேடி எனக்கு ரிக்குவஸ்ட் கொடுத்திருந்தாள். அவள்மேல் எனக்கு காதலோ கத்தரிக்காய்யோ இல்லை அடிமட்டக் குரங்கு. . ” குரலை உயர்த்தி கத்தினேன். அவள் விம்மி விம்மி இன்னும் அழத்தொடங்கினாள். அம்மா அழுவதைப் பார்த்து குழந்தை “விர்ர். . . . கேகேகே. . . . . . . . ”என்று சம்பந்தம் இல்லாமல் அழுதது.

கயலின் தோளைத் தொட்டேன். விருட் என்று தட்டிவிட்டாள். அவளை முதன்முதலாக தொட்டபோது அவள் இப்படித்தான் தட்டிவிட்டாள். அதில் ஒரு நாணம் கலந்த காமம் இருந்தது. இப்போது கோபம் கலந்த வெறுப்பு இருந்தது. பேசாமல் எழுந்து சென்றாள். குழந்தையை மார்புடன் அணைத்துத் தூக்கினாள். குழத்தை அழுகையை மெல்லமெல்ல குறைத்து நிறுத்தியது.

வெறுப்புடன் ஜன்னலை நோக்கினேன். காலை வெயில் சுட்டது. வீட்டை விட்டு வெளியே வந்தேன். போன் சிணுங்கியது. அத்த ரங்கு பயல்தான். இவன் என் இப்படிச் செய்தான் பரதேசி? கதைக்க வேறு கதையா இல்லை. அவனை நினைக்க ரொம்ப கடுப்பு தலைக்கேறி நரம்பு மண்டலங்களை சூடாக்கியது.

“ஹலோ. . . . . . ”

“என்ன ஒய். . . . . . . ஒரு சத்தத்தையும் காணம் அப்புறம்??”

“டேய் நீ செய்தது உனக்கே நியாயமா இருக்காடா? இப்ப அந்தகதை அவசியமா? உன்னை யாரு இப்ப கேட்டா சங்கீதாவைப் பத்தி?” பொரிந்து தள்ளினேன்.

“ஏன்டா எதுக்கு இப்ப கத்துறடா?”

“எத்துக்கா நீ சங்கீதாவைப் பத்தி சொன்னது இப்ப ரொம்ப பிரச்சனையாப் போச்சு. . . உன்னையாருடா. . . ”

“சாரி, சாரி . . . . ஹேய் கமோன் கூல் டோவ்ன். . . . . தென் டெல் அச்சுவலி வாட் ஹப்பேன்???”

“அப்பறம் கதைக்குறேன் வைடா போனை” சடக் என்று கட் பன்ணினேன். போனை ஆப் செய்துவிட்டு தூக்கியெறிந்தேன். சுழன்று போய் கட்டிலுக்கு அடியில் விழுந்தது. திரும்பினேன் கயல் தலை கலைந்து நின்றுகொண்டிருந்தாள்.

“ஏன் இப்போ அவருக்கு பேசுறியள். . . . . அவர் என்ன செய்தார்??”

அமைதியாக அவளைப் பார்தேன். “இங்க பாரு நான் அவளை ஒன்றும் சினிமாத்தனமா காதலிக்கவில்லை நீ நினைக்குற மாதிரி, அவதான் என்கூட லவ்வாகதைச்சா தொடக்கத்துல அப்புறம் அதெல்லாம் காணாமப்போச்சு. . இது எல்லாருக்கும் வாற இளமை சில்மிஷம் இதை எல்லாம் பெரிசு படுத்தாத. . ”

“என் பின்னாலையும்தான் பொருளியல் கல்லூரில நாலு ,அஞ்சு பேரு வந்தாங்க. . அதுக்கு”

“இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம கதைக்குற?”

“யாரு நானா நீங்கதான் அவளோட. . . . . கதைக்குறீயள். . . . ”

“இங்கபாரு அவள் இப்ப கதைச்சது பிரண்ட்லியா. . . . . ”

“கலியாணம் முடிச்சு குழந்தை இருக்கு. . . பழைய காதலியோட கதைக்குறது மனைவிக்கு தெரியாம பிரண்ட்லியா?”

“எடியே. . . . என்ன லூசுத்தனமா கதைகுற?” குரலை உயர்தினேன்

“யாரு நானா?. . . . . . . நீங்க போன்ல கூத்து அடிப்பீங்க கேட்டா லூசா??”

“ஏய்ய். . . . . . . . . . அவள் என்கூட அப்படி ஒன்றும் கதைக்கல, ஜஸ்ட் எப்படி இருக்கிற என்று சும்மா கதைச்சா, நானும் சரி என்று சும்மா கதைச்சேன், ஒரு ரெண்டு நிமிஷம் கூட இருக்காது. . . . ”

“ஓஒ. . . . . . சேட்ல எல்லாம் கதச்சு முடிச்சா. . . போன்ல கதைக்க என்ன இருக்கும்? அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் கன்னம் “பளார்” என்று மின்னியது. கயலை இதுக்குமுன் நான் அடித்ததே இல்லை. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. வெண்மையான கன்னம் இன்னும் சிவந்து இருந்தது. விர்கித்துப்போய் சுவரோடு சாய்ந்து கொண்டாள். கண்ணீர் தாரையாக வழிந்தது.

விருட் என்று ஹங்கரில் இருந்த ஷர்ட் ஐ கொழுவிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். பைக்கை எடுத்துக்கொண்டு இலக்கு இல்லாமல் சென்றேன், மனம் முழுவதும் சம்பந்தம் இல்லாத வெறுப்பு இருந்தது. சுவாரசியம் இல்லாமல் நிமிஷம் செல்ல தயக்கப்பட்டது. சரஸ்வதி தியேட்டர் கண்ணில் பட்டது. கூட்டம் இல்லை. டிக்கட் எடுத்து உள்ளே போனேன். ஐந்தாறு நபர்கள் இருந்தார்கள். ஒரு இளம்ஜோடி ஒரு மூலையில் இருந்தது. லைட் அனைத்தபின்பு அவர்கள் கார்னர் சீட் போனார்கள். படம் ஓடிக்கொண்டிருந்தது என்னால் எதுவும் ரசிக்கமுடியவில்லை. படமும் புரியவில்லை கார்னர் சீட்ல என்ன நடக்கிறதென்று கற்பனையும் செய்யமுடியவில்லை. மனம் ரொம்ப சிக்கலில் மெலிதாகத் துடித்தது.

படம்முடித்து வெளியேவர கொடூரமாகப் பசித்தது. மதியமும் சாப்பிடவில்லை. பக்கத்து கடையில் பரோட்டா சாப்பிட்டேன். மனம் எளிமை இசை இயக்கம் ஆற்றியது. நிலையில்லாமல் தவித்தது. என் மீது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். கயல் கோபப்பட்டதில் என்ன அர்த்தம் அற்ற பிழை? நான் கோபப்பட்டது ஏன்? கோட்பாடுகளுக்குள் அடங்காத இந்த மூர்க்கத்தனம் ஏன்? நான் ஏன் அறைந்தேன்? புதிதாக தாய்மை அடைந்தவள் மீது மென்மையில்லாமல் நடந்து கொண்டது சரியா? வலித்தது ரொம்ப வலித்தது.

வீடு பூட்டியிருந்து. பைக் சாவியில் இருந்த வீட்டுத் துறப்பை எடுத்து உள்ளே ஓடினேன். கயலை காணவில்லை. குழத்தையையும் காணவில்லை. நிசப்தமாக வீடு இருந்தது. பக்கத்து வீட்டையும் கேட்டுப் பார்த்தேன். எந்த அறிகுறியும் இல்லை. அவளுக்கு யாரைத்தெரியும்? எங்கே போனாள்? பயம் அடிவயிற்றில் மெலிதாக எட்டிப் பார்த்து. கயலின் அப்பாக்கு போன் செய்தேன்.

“கயல் ஏதும் சொன்னாளா?”

“இல்லையே மாப்பிளை. . . . ஏன் என்ன ஆச்சு???”

“ஒன்னும் இல்லை சின்ன வாக்குவாதம் அவளை காணவில்லை. . . . . . . ”

“என்ன. . . . என்ன. . சொல்றீங்க? என்ன பிரச்சனை?”

“ஒன்றும் இல்லை மாமா. . . சும்மா சின்ன வாய்தகராறு. . . . . . . . எங்க போய் இருப்பாள் என்று தெரியலை. . ”

“எங்க கூடையும் எதும் சண்டையென்றால் கதைக்காம கொல்லாம கோயில் பக்கம் எங்கேயும் போயிடுவாள். . . அப்படி எங்கேயும் போயிருப்பாள். . . . . . ”

“சரி மாமா. . . . . . . . ”என்று பைக்கை கோயில்பக்கம் செல்ல எடுத்தேன். எந்தக் கோயில்? கொஞ்சம் பக்கத்துல இருக்குற கோயில் திருகோணமலை பஸ்டிப்போ முன்னால இருக்குற காளி கோயில். அங்கேசென்றேன். அவள் இல்லை. உள்ளே சென்று பார்த்தேன். ஹும் காணவில்லை. ரொம்ப பழக்கப்பட்ட குழந்தை அழுகுரல் கேட்டது. மேகலையை மடியில் தாங்கி சோர்வுடன் அவள் இருந்தாள். வீடு வந்தபிறகு அவளை நான் எதும் கேக்கவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. சோர்வுதான் உடலில் மனதில் வடுவாக எஞ்சியிருந்து.

இரவு தூக்கம் கலைந்தது. கயல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எழுந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேகலை நெட்டி முறித்துக்கொண்டு இருந்தது. என் மீது அதுக்கும் கோபம் இருந்து போல் என்பார்வையைத் தவிர்த்தது. என்ன நினைத்ததோ தெரியவில்லை அழத்தொடக்கியது. கயல் திடுக்கிட்டு எழுந்து என்னையும் பார்த்தாள் குழந்தையையும் பார்த்தாள். குழந்தையைத் தூக்கி தோளில் போட்டாள். என்ன மாயமோ மர்மமோ உடனே அழுகையை நிறுத்தியது. என் லேப்டாப்பை கயல்முன் வைத்தேன்.

“இங்கபாரு கயல். . . . . . . என் மனதுல நீ மட்டும் தான் எப்பவும் இறுக்குற. . . . . நீயே என் ஃபேஸ்புக்ல இருக்குற எல்லாத்தையும் எல்லா மெசேசையும்பாரு. . . . . ”

“. . . . . . . . . . . . . . . . . . . . ”அவள் ஏதும் பேசவில்லை. அவளின் மௌனம் என்னை சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் போல் சிதறடித்தது.

“உன்னை அடித்தது என் மடத்தனம். . . . ப்ளீஸ். . . உன்னை கெஞ்சி கேக்குறன். . . என்கூடப் பேசு. . . . ”

என்னையே உற்றுப் பார்த்தாள். “இந்த ஃபேஸ்புக்காலதானே பிரச்சனை. . . இது இருந்தாதானே. . ”கையில் இருந்த லப்டாப்பை தூக்கி விஷுக் என்று தூக்கி எறிந்தேன். மார்பிள் தரையில் பட்டு சல் என்று நொறுங்கியது. டிஸ்பிளே நொறுங்கியிறுந்தது. மேகலை ஆர்வமாக நொறுங்கிய லேப்டாப்பை பார்த்து சிரித்தது.

“ச்சே ச்சே. . . . அப்படி ஒன்றும். . இல்லை. . . . நீங்க நினைக்குறமாதி ஒன்றும் இல்லை. . நான்தான் உணர்ச்சிவசப்பட்டு உங்களை. . கஸ்டப்படுத்திட்டேன். ”அவள் கண்கள் பனித்திருந்து.

“இல்லடி. . . . நான் சேட் பன்ணி இருக்கக் கூடாது. . . . . . இத முதலே உன்கிட்ட சொல்லியிருக்கனும், என் முன்கோபம் உன்னை அடிச்சுட்டேன். . . சாரிடி ரொம்ப வலிக்குதா????” அவள் கன்னத்தைத் தடவினேன். அவள் தட்டிவிட்டாள்.

“ஆமா. . . . இப்பதான் இவருக்கு. . . . ”என்று சினுங்கினாள்.

தன்னை ஒன்றும் கவனிக்காமல் இவர்கள் என்ன செய்யுறார்கள் என்று நினைத்ததோ என்னமோ “வீர்ர்ர்ரர்” என்று மேகலை அழுதது. “அச்சச்சோ. . . உன்னை கவனிக்க வில்லை என்று கோவமாடி. . . ”என்று இருவரும் சிரித்து அவளை என் தோளில் போட்டுக் கொண்டேன்.

ஒருவாரம் ரொம்ப பொறுமையாக நடத்து கொண்டேன். ரொம்ப நிதானம் கடைபிடித்தேன். ரொம்ப பொறுமையாக டிஸ்கவரியில் மேன் வெர்சஸ் வைல்ட் பார்த்துக்கொண்டு இருந்தேன். கயல் வந்தாள்.

“இந்தாங்க. . . . உங்க. . . ”என்று என் லேப்டாப்பை நீட்டினாள்,அவளை நிமிர்ந்து பார்தேன். அவள் முகத்தில் கவனிக்கமறந்த புன்னைகை ஒன்றிருந்தது.

“என்னடி இது???”

“உங்க லேப்டாப். . . . . நான்தான் பக்கத்து வீட்டு குணபால் அங்கிள்கிட்ட கொடுத்து ரிப்பியர் செய்யச் சொன்னேன். ”

“ஏன்டி என்னத்துக்கு. . . இது. . . ”

“நீங்க என்னதான் சிரிச்சு கதச்சாலும். . . முந்தியமாதியில்லை. . . . . . ஏதோ ஒன்று குறையுது. . . முகத்துல போலித்தனம் இருக்கு. . . எனக்கு பழைய ராதேயன் வேணும்ங்க. . . என்கூட குறும்புத்தனமா. . . செல்லமா சண்டை போடுற. . அந்தராதேயன் வேணும்ங்க. . . . . . நீங்க யாருகூட வேண்டும் என்றாலும் சேட் பண்ணுங்க. எனக்கு ஒன்றும் இல்லைங்க. கலியாணம் முடிச்ச புதுசுல இருந்து எப்படி கதச்சியளோ. . அப்படி கதையுங்க. . . . . ”

என் கண்கள் சாதுவாகக் கலங்கியது. இத்தனை நாட்களுக்குள் இவளை நான் முழுமையாக புரிந்து கொண்டது பூரணமாகவில்லை. அவளின் பெண்மையின் மென்மையை நான் துன்பப்படுத்திவிட்டேன். ஒரு சின்ன வெக்கம் என்னை அடிவயிற்றில் சில்மிஷம் செய்து. கையில் இருந்த மொபைல்போனை பார்த்தேன். சங்கீதா அனுப்பியிருந்த “ஹாய் ரங்கராஜன் சொன்னான் எதோ என்னால ப்ராப்ளம் என்று? வாட் ஹப்பன்?”என்ற இரண்டு மெசேஜ்க்கு மொபைலில் பேஸ்பூக்கை ஆன் செய்து திருட்டுத்தனமாக “நத்திங். . ” என்று பதில் அனுப்பியிருந்தேன்.

லேப்டாப்பை ஒன்பண்ணினேன் ஃபேஸ்புக்கை பார்த்தேன். இன்பாக்சில் சங்கிதாவின் புதிய இரண்டு மெசேஜ் இருந்தது.

அவள் நட்பாகத்தான் என்னிடம் பழகினாள். அவளின் குற்றஉணர்ச்சி என் மீது நட்பாக கதைக்கத் தூண்டியிருக்கலாம். அவளின் கணவனிடம் அவள் என்னைப் பற்றி என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. நான் கேக்கவும் விரும்பவில்லை. இதுவரை இல்லாத ஒரு விநோத உணர்வு இருந்தது. அவளுடன் வெறும் நட்பாகத்தான் இப்போதும் பழகினேன். இவை நிச்சயம் கயலை துன்பப்படுத்தும். சில புரிதல்கள் புரியாமல் இருக்கும்போது விலகிவிடுவது நல்லது.

தொட்டிலில் இருந்த என் வாரிசு என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தது. தனக்குள் ஏதோ சொல்லி விளையாடியது. அப்போதுதான் கவனித்தேன் கயலின் சாயல் மேகலையில் இருந்தது. அந்தக் கன்னம், மேவாய் சின்ன கட்டை விரல் எல்லாம் அப்படியே இருந்தது. இதுவரை தெரியாதது எல்லாம் இப்போது தெரிந்தது. நான் கடைசியாக ஃபேஸ்புக் பார்த்தது அன்றுதான். அந்த மெசேசை நான் படிக்கவும் இல்லை நான் பதில் அனுப்பவுமில்லை. ஏனோ அதுக்கு அப்புறம் பார்க்கவுமில்லை.

 

http://siragu.com/?p=16954

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ம் ...நன்றாக இருக்கிறது கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

கயலின் தோளைத் தொட்டேன். விருட் என்று தட்டிவிட்டாள்.

இப்போது கோபம் கலந்த வெறுப்பு இருந்தது

 

எல்லா பெண்களும் கோபம் வ‌ந்தால் இப்படித்தான் போல கிடக்கு

Quote

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏதோ சரியாய்ப் புரிந்து வைத்துள்ள மாதிரியும், ஜீனியஸ் போலவும் நினைத்துக் கொண்டு உரையாடுவோம். ஆனால் நாங்கள் எதிர் பார்க்காத கோணத்தில் இருந்து ஒரு தாக்குதல் வரும். அதில் நிலை தடுமாறுவது எப்போது நாங்களாய்த்தான் இருக்கும். அதுதான் கயல் புயலாகவும் அத்தான் சுவத்துல ஒட்டிய பல்லியாகவும் நிலமை மாறிப் போச்சு. அதைவிட வாற நன்பர்கள் தெரிஞ்சு செய்யுறாங்களோ, தெரியாத மாதிரிச் செய்யுறாங்களோ அவங்க பாட்டுக்கு ஒரு திரியைக் கொழுத்திப் போட்டுட்டு போயிடுவாங்க....!

நடைமுறையில் நடக்கும் கதைதான் , பகிர்வுக்கு நன்றி கிருபன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கு ஏதாவது மறைத்து பின்னர் அதைப் பற்றி மனைவி கேட்கும் போது நெழிந்து வளைந்து அதை சமாளிக்க உயிரை விட்டுவிடலாம் போல் இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நாங்கள் ஏதோ சரியாய்ப் புரிந்து வைத்துள்ள மாதிரியும், ஜீனியஸ் போலவும் நினைத்துக் கொண்டு உரையாடுவோம். ஆனால் நாங்கள் எதிர் பார்க்காத கோணத்தில் இருந்து ஒரு தாக்குதல் வரும். அதில் நிலை தடுமாறுவது எப்போது நாங்களாய்த்தான் இருக்கும். அதுதான் கயல் புயலாகவும் அத்தான் சுவத்துல ஒட்டிய பல்லியாகவும் நிலமை மாறிப் போச்சு. அதைவிட வாற நன்பர்கள் தெரிஞ்சு செய்யுறாங்களோ, தெரியாத மாதிரிச் செய்யுறாங்களோ அவங்க பாட்டுக்கு ஒரு திரியைக் கொழுத்திப் போட்டுட்டு போயிடுவாங்க....!

என்ரை வீட்டில கமரா கிமரா ஒண்டும் ஒளிச்சு வைக்கேல்லை எண்டு இப்ப சத்தியம் பண்ணுங்கோ - பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நாங்கள் ஏதோ சரியாய்ப் புரிந்து வைத்துள்ள மாதிரியும், ஜீனியஸ் போலவும் நினைத்துக் கொண்டு உரையாடுவோம். ஆனால் நாங்கள் எதிர் பார்க்காத கோணத்தில் இருந்து ஒரு தாக்குதல் வரும். அதில் நிலை தடுமாறுவது எப்போது நாங்களாய்த்தான் இருக்கும். அதுதான் கயல் புயலாகவும் அத்தான் சுவத்துல ஒட்டிய பல்லியாகவும் நிலமை மாறிப் போச்சு. அதைவிட வாற நன்பர்கள் தெரிஞ்சு செய்யுறாங்களோ, தெரியாத மாதிரிச் செய்யுறாங்களோ அவங்க பாட்டுக்கு ஒரு திரியைக் கொழுத்திப் போட்டுட்டு போயிடுவாங்க....!

நடைமுறையில் நடக்கும் கதைதான் , பகிர்வுக்கு நன்றி கிருபன்...!

உந்த கோதாரிவிழுவாராலை தான் நான் ஒருசில நாடுகளுக்கு குடும்பத்தோடை போகேலாமல் கிடக்கு tw_angry:tw_glasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.