Jump to content

ஆப்பரேசன் அல்ககோல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பரேசன் அல்ககோல்

 – யதார்த்தன்

 

வவுனியா, நெழுக்குளம்

வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம். நெழுக்குளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை. முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்பாட்டிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது. இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம். அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத்திடம் அனுமதி வாங்கி முகாமில் இருக்கும் ஓ எல் மாணவர்களுக்கு பாடம் எடுத்தனர்.

ஒரு பெரிய வேப்ப மரத்தின் கீழ் தறப்பாள்களை விரித்து கிட்டத்தட்ட 40 மாணவர்களுக்கு மேல் படிக்கத் தொடங்கினோம். எனக்கு புது நண்பர்கள் அறிமுகமானார்கள். அருண், லூக்கு, டிலக்சன், ஜூலியட், பவதாரணி இப்படியாக. தர்ஷிகாவும் அறிமுகமானாள். அவள் எனக்கு கணிதம் சொல்லிதருவாள். அவள் எனக்கு நல்ல தோழியானாள். அவள் மேல் எனக்கு பிரியம் வர அவளின் பெயரிலிந்து ஏராளமான இத்யாதி காரணாங்கள் இருந்தன.

அன்று அவளிற்கொரு பரிசை எடுத்து வந்திருந்தேன்.

அன்று காலையில் நான் அதனை அவளிற்கு பரிசளித்தபோது அதனை வாங்கி திருப்பிதிருப்பி பார்த்தாள். லேசாய் மஞ்சள் படிந்து கிடந்த அந்த யானைத் தந்த லொக்கட்டை சீவிச்சீவி நான் மிக வெண்மையாக அடித்திருந்தேன். சமர வீர என்ற அந்த வயதான பொலிஸ்காரரிடம் நான் அந்த இரண்டு விரலிடை கூட இல்லாத யானைத்தந்தத்தை வாங்குவதற்கு எத்துனை பிரயத்தனங்களை மேற்கொண்டேன். அது எனக்கு கொஞ்சம் மரியாதைத் குறைவான ஒரு செயலாகவே பட்டது. எனினும் அந்த மனப்பாங்கு அவள் அதனை கண்டவுடன் அவள் கண்கள் உற்பத்தி செய்ய, மகிழ்ச்சிக்குள் மூழ்கி காணாமல் போயிருந்தது.

THARSHIKA என்று பொறிக்கபட்ட அந்த யானைத் தந்தத்தினை லேசாய் அவள் விரல் ரேகைகள் தடவிக்கொடுத்தன.

“எங்காலை உனக்கு தந்தம் ? ”

“யானை ஒண்டு வேட்டையாடின்னான் ”

“எங்க இந்த முகாமுக்கையோ ?”

“ஓம்”

“நம்பிட்டன் ”

“தங்ஸ்”

“சொல்லடா.. எங்காலை ?”

“சமர வீர ட்ர வாங்கின்னான் ”

“அந்த மனுசன என்ன சொல்லி மயக்கின்னி ? அதுவும் உன்ர அரை குறை இங்கிலீசால ?”

“ஹிம்”

”தந்தம் வச்சிருந்தா குற்றமெல்லோ ? ”

“ ஒமடி இந்த ஒண்டரை இஞ்சி தந்தத்துக்கு என்னை தூக்கில போட போறாங்கள் ”

“வெவ்வ்வேவ்வே ”

கழுத்தில் எபோதும் இருக்கும் முருகன் டாலர் தொங்கிய கறுப்பு நூலில் என் தந்த லொக்கட்டை கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டாள்.

சரி வா கிளாசுக்கு போவம் என்றேன். டெண்டுக்கு போய் கொப்பி எடுக்கோணும். நடந்தாள். தொடர்ந்தேன். தர்ஷியின் கூடாரம் முகாமின் பின் பக்கம் இருந்த நீர் எடுக்கும் குழாய் கிணற்றின் பக்கம் இருந்தது. என்னுடைய கூடாரம் முகாமின் முன் பக்கம் உள்ள குழாய் கிணற்றடியில் இருந்தது.

அவளுடைய கூடாரம் வர உள்ளே நுழைந்தாள். கூடாரத்தின் வெளியே உள்ள மர நிழலில் அவள் அம்மா தர்ஷியின் சகோதரியொருத்தியின் தலையில் வகிடு பிடித்து தலை வாரிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும்

”தம்பி காட் வாங்கி வச்சிருக்கிறன்” என்றாள் இரகசியமான குரலில்.

“சரி அன்ரி ”

“எத்தினை மணிக்கு கதைக்கலாம் ?”

“படம் போட்ட பிறகு வாங்கோ அன்ரி ”

“சரி தர்சின்ர அண்ணா காசு போட்டவனோ எண்டு கேக்கோணும் ”

“ஓம் அன்ரி தர்ஷி சொன்னது ”

“கவனமா இருக்கோணும். நேற்று கிச்சின் பல சார்ச் போட்ட எண்டு யாற்றையோ போன் பிடிபட்டு போச்சு ”

“ஓம் அன்ரி தெரியும் ”

நாங்கள் முகாமில் மொபைல் போன் வைத்திருக்க தடை. எனினும் ஒரு சிலர் இரகசியமாக வைத்திருந்தனர். நானும் ஒரு NOKIA 1100 வைத்திருந்தேன். முகாமில் ஒவ்வொரு நாளும் இரவில் மல்டிமீடியா புரோஜெக்டர் வைத்து எதோ ஒரு தமிழ் படம் போட்டனர். இரவில் பெரும்பாலான ரெண்ட்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அந்த இடைவெளிக்குள் நாங்கள் டெண்ட்களில் போன் கதைத்து கொள்வோம், பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்களுடன் பொருளாதார தேவையின் பொருட்டு பேச வேண்டியிருந்தது.

உள்ளே போன தர்ஷி வெளியே வந்தாள். வகுப்பு நடக்கும் வேப்ப மரத்தடி நோக்கி நடந்தோம்,

”அம்மா என்னவாம் ?”

“போன் கதைக்கோணுமாம் ”

”ஓமடா இரவுக்கு ஒருக்கா கதைக்கோணும் அண்ணாவோட“

“சரி டி”

தர்ஷியின்கூடாரத்திற்கு அடுத்ததாக இருந்த கூடாரத்தை கடக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான வாடை என் நாசியை தாக்கியது.

“என்னடி மணக்குது ? ”

“என்ன மணம் ? ”

“உனக்கு மணக்கேலையே ஏதோ அழுகின மணம் ”

“முகாம் எண்டா அப்பிடிதான் பேசாம வாடா ” அதட்டினாள்.

வகுப்பு முடிந்ததும் தர்ஷிகா தன் தோழிகளை அழைத்துக்கொண்டு எங்கோ போய்விட்டாள். அருண், லூக் டிலக்சன் இருவரும் என்னிடம் வந்து

“டேய் இரவுக்கு ஒரு மிசன் இருக்கு ”

(பாணிற்கு வெங்காயம் முட்டை எல்லாம் சமயலறையில் இருந்து சுட்டு வருதல், போனிற்கு துப்பரவுக்கு வரும் தொழிலார்களை பிடித்து காட் வாங்குதல், காய்ச்சல் தலையிடி எண்டு பொய் சொல்லி கொஸ்பிட்டலுக்கு பதிஞ்சு அம்புலன்ஸில் இராணுவ பாதுகாப்புடன் போய் வவுனியா ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருக்கிற சீடி கடையில் இங்கிலிஸ் பட டீவிடி வாங்கி வந்து சமரவீர வின் லப்டொப்பில் படம் பார்த்தல் முதலான சாகசங்களை நாங்கள் மிஷன் என்று அழைத்தோம் ஒவ்வொரு மிஷனுக்கும் ஒவ்வொரு பெயர் வேறு வைக்கப்படும்)

”என்ன மிசன் மச்சான் ? ’

“ஆப்பரேசன் அல்க கோல் ” என்றான் லூக்.

“அல்ககோலா ?”

“சாராயம் டா ”

“என்ன ? வாங்கி குடிக்க போறமா ? ”

“இல்லயடா பிடிக்க போறம்” அருண்.

“தெளிவா சொல்லடா”

“முகாமுக்க ஒரு இடத்த சாராயம் காய்ச்சி வில்படுது ”

“போடா முகாமுக்க என்னெண்டு காய்ச்சுறது ?”

“காய்ச்சுறாங்களாடா ..”

“உனகென்னண்டு தெரியும் ?”

”லூக்க்கின்ர அப்பா நேற்று குடிச்சிட்டு வந்தவராம்”

“டேய் ஆமி ஆரிட்டயும் வாங்கி குடிச்சிருப்பார் ”

“இல்லையடா இண்டைக்கு இரவு அவரை பின் தொடர்றம் கண்டு பிடிக்கிறம்.”

“சரி.”

இரவு படம் போடும் வேளையில் தர்ஷியும் அவள் தாயும் எங்கள் கூடாரத்திற்கு வந்தனர். அவர்களுக்கு நம்பரை டயல் செய்து கொடுத்துவிட்டு. ஆப்ரேசன் அல்க கோலிற்கு புறப்பட்டேன்.

தர்ஷி: “எங்க போற ?”

“அருணாக்களிட்ட ”

“படம் பாக்கவோ?”

“இல்லை வந்து சொல்லுறன் ’

“ம்ம்”

கதைச்சிட்டு போனை அம்மாட்ட குடுத்திட்டு போ.என்றேன் அவள் தலையாட்டினாள். நாங்கள் திட்டமிட்ட படி லூக்கின் அப்பாவை பின் தொடர்ந்தோம்.

அவர் நேராக முகாமின் பின்பக்கம் இருந்த தண்ணீர் குழாய் இருந்த பக்கமாய் போனார். தரிஷியின் கூடாரத்தை கடந்து அடுத்ததாக இருந்த கூடாரத்தினுள் நுழைந்தார். வெளியில் வரும்போது ஒரு சோடா போத்தல் நிறைய இளம்மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்றுடன் வெளிப்பட்டார் நேராக அந்த விளக்கு வெளிச்ச மற்ற ஒரு இடத்திற்கு சென்று அதனை குடித்து தீர்த்தார், எங்களுக்கு பரம திருப்தி நாங்கள் தேடிவந்தது தெரிந்து விட்டது. லூக் தந்தையை கொஞ்சம் பரிச்சமான கெட்ட வார்த்தையால் திட்டினான். மூவரும் காலையில் பொலிசிடம் சொல்லி விடுவதென்ற முடிவுடன் கலைந்து சென்றோம். ஒப்ரேசன் அல்ககோல் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

அடுத்தநாள் காலையில் முகாமே கதி கலங்கியது. அந்த கூடாரத்தை சுற்றிவளைத்த பொலிசார் இரண்டு இளைஞர்களை பிடித்து அடித்து அவர்களின் தலையில் சாராய கான்களை வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று பொலீஸ் வானில் ஏற்றி கொண்டு சென்றனர். நாங்கள் மூவரும் சமூக களையெடுப்பை நிகழ்த்தி விட்ட வெற்றிகளிப்பில் படிக்கும் இடத்திற்கு வந்தோம். அங்கே தரிஷிகா அவள் தோழிகளுடன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

“எப்படி எங்கட மிசன் ?” என்றேன் அவளிடம்.

என்ன என்று கேட்டாள்

சொன்னென்.

சட்டென்று அவள் கை எழுந்து என்கன்னத்தில் அறைந்தது.

நிலை குலைந்து விட்டேன். ஒரு கணம், குலைந்து நிமிர்ந்தேன் கோபம் பீறிட்டு வர ஏன் இப்ப அடிச்சனி என்று அவளை பிடித்து உலுக்கி பிடித்து தள்ளிவிட்டேன். அவள் பக்கத்தில் இருந்த வேப்பமரத்தில் கை உரச விழுந்தாள். அழுதாள்.

“டேய் இப்ப ஏன் அவளை தள்ளி விட்டனி ?” பவதாரணி மல்லுக்கு வந்தாள்.

”சும்மா ஏன் இப்ப அடிச்சவள் ?”

“நீ செய்த வேலைக்கு பின்ன என்ன செய்யிறது ? ” விம்மிய படி சொன்னாள்.

அவள் கை, கால் சிராய்ப்பு சிவப்பாய் கசிவது தெரிந்தது.

“நான் என்ன செய்தனான் ? சாரயம் காய்சினவங்களை பிடிச்சு குடுத்தது பிழையோ ?”

“அந்த பெடியளின்ர அக்கா மண்ணெண்ணை குடிச்சிடா தெரியுமோ ?” பவதாரணி சீறினாள்.

அதுக்கு நான் என்ன செய்யிறது அது காய்ச்ச முதல் யோசிச்சு இருக்கோணும்.

”டேய் அவையள பற்றி உனக்கு என்னடா தெரியும் ?” தர்ஷி.

”என்ன? ஏன் இப்ப துள்ளுற ?

”உனக்கென்ன காசு இருக்கு. அப்பா இருக்கு. எங்களுக்கு அண்ணா அனுப்புறான்” ஆனா அதுகளுக்கு ஒருத்தரும் இல்லை. என்னெண்டு அதுகள் சீவிக்கும் ? “

அங்க சாராயம் காய்ச்சி விக்கிறது எனக்கு எப்பவோ தெரியும். அந்த அக்கா அடிக்கடி அழுவா என்னட்ட. தங்கட தலை விதிய சொல்லி. அவாட அண்ணை மார் பாவம் எண்டு. உனக்கு அதெல்லாம் தெரியாது. பாவம் அந்த அக்கா. அவமானத்தில மண்ணெண்ணை எடுத்து குடிச்சிட்டா.

நான் எதுவும் பேசவில்லை .

இன்னும் கொஞ்சம் என்னை திட்டினாள். எனக்கு எதுவும் கேட்கவில்லை.

“இனி என்னோட கதைக்காத ” என்றவள் வேகமாய் நடந்து போய் விட்டாள்.

“சரிதான் போடி ”

எனக்கு கோபம் ஆறவில்லை. எனக்கு அந்த அக்கா மண்ணெண்ணை குடித்ததை பற்றியோ இல்லை சாராயம் காய்ச்சியவர்கள் பற்றியோ அவர்களை பற்றியோ யோசிக்கவே தோன்றவில்லை. எனக்கு அவ்வளவு பேரின் முன்னால் ஒரு பெண் பிள்ளையிடம் வாங்கிய அறை தான் பெரிதாக தெரிந்தது. என் தன்முனைப்பு அன்று இரவு முழுவதும் பூரணமான வெறுப்பிற்கும் கோபத்திற்கும் என்னை கொண்டு சென்றது.

காலையில் சூரிய வருகைக்கு முதலே எழுந்து எங்கள் கூடாரத்திற்கு சற்றுத்தள்ளி இருக்கும் குழாய் கிணற்றிற்கு அருகில் உள்ள சிறி மூங்கில் புதரின் கீழ் காட் போட் மட்டைகளின் மேல் அமர்ந்து மூங்கிலுக்கு முதுகை கொடுத்து சாய்ந்திருந்தேன்.

“கன்னத்தி விழுந்தது இன்னும் உள்ளே வலித்து கொண்டிருந்தது”

அபோது தர்ஷிகாவும் அவள் சகோதரிகள் இருவரும் தண்ணீர் குடங்களுடன் வருவது தெரிந்தது, நான் பார்த்தபடியிருந்தேன். அவர்களின் தண்ணீர் குழாய் ஏதோ சேதபட்டு இருக்க வேண்டும். அதுதான் இங்கே வருகிறார்கள்.

என்றுமில்லாதவாறு நான் அவளை நன்றாக பார்த்தேன். வானம் லேசாக மஞ்சளடிக்க தொடங்கியிருந்தது. அந்த மெல்லிய மஞ்சள் ஒளியில் அவள் தெளிவாக தெரிந்தாள். கால்வரை நீண்டு தரையை தொட்டும் தொடாமலும் அலையும் கறுப்பு பாவாடையும் கறுப்பு மேற்சட்டையும் அணிந்திருந்தாள். அவள் வெள்ளைத்தேகம் மஞ்சளொளியில் லேசாய் பசாடையடித்தது. முகத்தில் எந்த உணர்வுமில்லை. இன்னும் அவள் முகம் கழுவியிருக்கவில்லை. கண்கள் அழுது வீங்கி இருந்தன. நான் மூங்கில் மீது சார்ந்திருப்பதை கண்டிருப்பாள். முகம் இறுகி இறுகி கொண்டே சென்றது. நடந்து வந்து குடத்தை வைத்தாள். அவள் தங்கை தண்ணீர் பம்பியை அடித்து தண்ணீரை நிரப்பினாள். மூன்று பேரின் குடமும் நிறைந்து முடிய, அவள் சகோதரிகள் நடக்க தொடங்கினர். என்னை பார்த்தபடி குடத்தை தூக்க போனாள் குடம் கைகள் நழுவி அவள் உடலெங்கும் நீர் தெறிக்க விழுந்து உருண்டது அவள் உடை நனைந்து விட்டது.

“போங்கோ நான் அடிச்சு கொண்டு வாறன் ” சகோதரிகளிடம் சீறினாள்.

நான் பார்த்த படியிருந்தேன்.

மறுபடியும் தண்ணீரை நிரப்பினாள். குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தாள். சட்டென்று என்னை நோக்கி வந்தாள். மிக வேகமாக வந்தாள் கழுத்தில் இருந்து கறுப்பு கயிற்றை பிடுங்கி என் முன் போட்டாள்.

எனக்கு சினம் தலைக்கேறியது.சட்டென்று அந்த தந்தத்தை எடுத்து பல்லில் வைத்து கடித்தெறிந்தேன்.

அவளிற்கு அழுகை மார்பபிலிருந்து எழுந்துவந்து தொண்டையில் வந்து நின்று விம்மியது. திரும்பி வேகமாய் நடக்க தொடங்கினாள்.

நீரில் நனைந்த அவள் பாவாடையில் கால்கள் பட்டு ஓசை ஒன்று சீரான சந்தத்தில் கிளம்பி வந்தது. அது ஒரு பெரிய பறவை தன் பிரமாண்டமான சிறகுகளை உதைப்பது போன்றிருந்தது. அவள் நடக்க நடக்க அந்த ஈரப்பாவாடையின் ஒலி பறவையொன்றின் சிறகுகள் தான் என்றே நினைக்க தோன்றியது

மிக லாவகமாக சீரான சந்தத்துடன் அந்த பறவைதன் சிறகு விரித்தலை நிகழ்த்தியது .

பிறகு

பறவையின் உருவம் மறைந்த பின்னரும் சிறகுச்சத்தம் நிற்கவேயில்லை.

http://www.nanilam.com/?p=3385

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருந்தது , முடிவு சொதப்பல் போல இருக்கு  ....! நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.