Jump to content

மற்றொரு மிகப்பெரிய நீல மாணிகக்கல் தம்புள்ளவில் கண்டுபிடிப்பு! - முன்னையதை விட மூன்று மடங்கு பெரியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார். அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

   

இந்நிலையில் அதை விட அதிக நிறையுடைய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல்லே இவ்வாறு தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=149381&category=TamilNews&language=tamil

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

blue-stone-160116-seithy%20(1).jpg

blue-stone-160116-seithy%20(2).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை சொறீலங்காவின்.. ஏதோ பொருண்மிய நோக்கம் கருதி வெளியில் வருகின்றன போல் தெரிகிறது. இவ்வளவு காலமும் வராதவை...??!:rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்  விசயத்தோடை வெள்ளிகாட்டுறான். சனமும் ஆவெண்டு அண்ணார்ந்து பாக்குதுகள்.:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம், ஆனாலும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 11:43 AM   அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற  நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றம் சென்றமையும்  சர்வதேச அளவில் இடம்பெறும் காசா தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் மக்கள்  உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டசர்வதேச ஒழுங்குமுறையின் வீழ்ச்சி ஐநா போன்ற அமைப்புகளின் மீதுமக்கள் நம்பிக்கைஇழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. 1948ம் ஆண்டு புதிய ஒழுங்குமுறையை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தவர்களே  அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா  பிரிட்டன் ரஸ்யா சீனா போன்ற  நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன. காசாவில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்கும் போது இது புலப்படுகின்றது. ஆனாலும் இதற்கு எதிராக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளமை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் இது சர்வதேச அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 1948ம் ஆண்டின் இனப்படுகொலைகள் தொடர்பான பிரகடனம் மிகவும் அவசியமான விடயம் என்பதை தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகள் உலகிற்பு தெளிவுபடுத்தியுள்ளன. உலக நாடுகளில் இதற்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இதற்கு பெரும் ஆதரவு காணப்படுகின்றது. காசாவில் யுத்தநிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவதில் வழமையாக இந்த விடயத்தில் ஆர்வம் காண்பிக்கும் நாடுகளிற்கு பதில் வேறு நாடுகள் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்க விடயம். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பல்கலைகழகங்களில் காசா விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. பெருமளவு மக்களும் பல்கலைகழக மாணவர்களும்  வீதியில் இறங்கியுள்ளனர் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் பெருமளவு மக்கள் உள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/184120
    • கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ முனைவர்  பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு பல்கலைக்கழகம் முனைவர்   பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/302113
    • பைடன் , இஸ்ரேலால் நடாத்தப்படுவது இனப்படுகொலை இல்லையாம். அதனை அவர் நிராகரிக்கிறாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.