Jump to content

சினிமா எடுத்துப் பார்


Recommended Posts

சினிமா எடுத்துப் பார் 71: தயாரிப்பாளர் கதாநாயகன் உறவு!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
  • ’நல்லவனுக்கு நல்லவன்’ (1984) ரஜினிகாந்த், ராதிகா, துளசி
    ’நல்லவனுக்கு நல்லவன்’ (1984) ரஜினிகாந்த், ராதிகா, துளசி
  • ‘எங்கே என் ஜீவனே’ பாடலில் கமல்ஹாசன், அம்பிகா
    ‘எங்கே என் ஜீவனே’ பாடலில் கமல்ஹாசன், அம்பிகா
  • ‘உயர்ந்த உள்ளம்’ (1985) படத்தில் கமல்ஹாசன், ராதா ரவி
    ‘உயர்ந்த உள்ளம்’ (1985) படத்தில் கமல்ஹாசன், ராதா ரவி
  • ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு’ பாடல் காட்சி
    ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு’ பாடல் காட்சி

பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு குடும்பமும், சினிமா துறையைச் சார்ந்தவர்களும், மக்களும், பத் திரிகைகளும், ஊடகங்களும் சிறந்த மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத் தின. அதையெல்லாம் மனதில் ஒருபுறம் வைத்துக்கொண்டு அடுத்த அத்தி யாயத்தை தொடங்குவோம்.

‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் கார்த்திக்கும், துளசியும் ரஜினிகாந்த் தங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவரிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். ரஜினி காந்த் எல்லா சொத்துகளையும் அவர் களுக்கு கொடுத்துவிடுவார். கார்த்திக், ‘‘எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத் துட்டீங்களே! உங்களுக்கு வேண்டி யதை எடுத்துக்கோங்க?’’ என்பார். ரஜினி அப்போது, ‘‘தன் மனைவி ராதிகா வின் புகைப்படத்தை மட்டும் எனக்கு கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொள் வார்.

தன் மனைவி ராதிகாவின் படத்தோடு வீட்டை விட்டு வெளியே செல் வார். கார்த்திக்கும், துளசியும் வருத்தத்தோடு அதைப் பார்ப் பார்கள். அத்துடன் படத்தை முடித்திருந்தேன். படத்தை எல்லோரும் போட்டுப் பார்த்தோம். கதையும், கமர்ஷியலும் கலந்து மிகச் சிறந்த படமாக வந்திருந்தது. எல்லோரும் பாராட்டினார்கள்.

மறுநாள் காலையில் சரவணன் சாரை போய் பார்த்தேன். சரவணன் சார், ‘‘ரொம்ப திருப்தியா வந்திருக்கு முத்து ராமன். படத்தின் முடிவை ரொம்ப எதார்த் தமா முடிச்சிருக்கீங்க. இது ஒரு விருது வாங்கப்போற படத்துக்கான முடிவா இருக்கு. நம்ம படம் கமர்ஷியல் படம். ரஜினியுடைய ரசிகர்கள் படத்தின் முடிவில் ஒரு சண்டைக் காட்சியை வைத்து வில்லன்களை அடித்து தோல்வி யடைய செய்து ரஜினி வெற்றி பெற்றால் தான் முழுமையாக ரசிப்பார்கள். ஆகவே, முடிவை மாற்றி எடுத்துவிடுங்கள். ரஜினியிடம் பேசுங்கள்’’ என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரஜினியிடம் போய் சொன்னேன். ‘‘நாம் படத்தில் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவுதான். ஆனால், சரவணன் சார் சொல்கிற கமர்ஷியல் முடிவு ரசிகர்களுக்கு திருப்தி தருகிற முடிவாக இருக்கும். மாற்றி எடுத்துவிடுவோம்’’ என்றார். அதன் பிறகு, கார்த்திக்கை வில்லன்கள் கடத்திச் சென்று ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலையில் அடைத்து வைப்பதுபோன்ற காட்சியை வைத்தோம். ரஜினி அங்கே சென்று பழைய தாதாவாக மாறி அந்த வில்லன்களோடு போராடி வெற்றி பெறுவதுடன், கார்த்திக்கை காப்பாற்றி கொண்டு வருவார். எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த இடத்தில் வணக்கம் போட்டு முடிவாக்கினோம். சரவணன் சார் சொல்லியதை போலவே மக்களிடம் படம் பெரிய வரவேற்பை பெற்றது. ‘நல்லவனுக்கு நல்லவன்’ பெரிய அளவில் வெற்றிப் படமானது!

சில மாதங்களுக்கு முன்னால், நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரஜினிகாந்த் அவர்கள் சரவணன் சாருக்கு போன் போட்டிருக்கிறார். சரவணன் சார் போனை எடுத்து, ‘ரஜினி பேசுறேன்’ என்பதை கேட்டதும் பதற்றமாகி, ‘‘என்ன ரஜினி, இந்த நேரத்துல என்னை கூப்பிட்டிருக்கீங்க?’’ என்றார்.

அதற்கு ரஜினி, ‘‘ஒண்ணும் பதற்றப் படாதீங்க சார். இப்போ நம்ம ‘நல்லவ னுக்கு நல்லவன்’ படத்தை பார்த்தேன். அந்த சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக் கணும்னு முத்துராமன் சாருக்கு போன் போட்டேன். அவர் கிடைக்கலை. உங்க கூட பேசலாம்னு தோணுச்சு. அதான் கூப் பிட்டேன். என்ன மாதிரி படம் எடுத்துக் கோம் சார். ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்துல எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி எல்லா காட்சிகளும் அமைஞ்சிருக்கு சார். கதை, வசனம், இசை, பாட்டு, நடனம், சண்டை காட்சிகள் இப்படி அமையுறது ரொம்ப கஷ்டம் சார். அதுல சிறந்த நடிப்பை வெளிப்படுத்துற வாய்ப்பு எனக் கும், ராதிகாவுக்கும் கிடைச்சிருக்கு. இது எல்லா படத்துலயும் அமையாது. இதை பார்த்ததும், இந்த சந்தோஷத்தை தயா ரிப்பாளர்கிட்ட பகிர்ந்துக்கத்தான் உங் களைக் கூப்பிட்டேன் சார்’’ என்றார்.

சரவணன் சார், “ எனக்கும், எஸ்பி.எம் குழுவுக்கும் கிடைச்ச பாராட்டு சார் இது. உங்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவிச்சிருக்கிறோம்!’’ என்றார். ரஜினி மகிழ்ந்தார். தயாரிப்பாளர், கதாநாயகன் உறவு எவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி!

எங்களோட அடுத்த படமும் ஏவி.எம். நிறுவனத்துக்குத்தான். என்னோட ‘ஒரு கண்’ணைப் பத்தி சொல்லிவிட்டேன். ‘அடுத்த கண்’ணைப் பத்தி சொல்ல வேண் டாமா? அது கமல் நடித்து நான் இயக்கிய ‘உயர்ந்த உள்ளம்’. இந்தப் படம் இரண்டு நண்பர்களை பற்றிய படம். அந்த நண்பர் களாக கமலும், ராதாரவியும் நடித்தார்கள்.

இளையராஜா இசையில், ‘வந்தாள் மகாலக்ஷ்மியே’ என்ற பாட்டுக்கு கமல் ஆடிய நடனம், நடனக் கலைஞர்களையே பிரமிக்க வைத்தது. இதன் நடன அமைப்பு புலியூர் சரோஜா. ‘எங்கே என் ஜீவனே’ என்ற அம்பிகா, கமலுடைய பாடல் தந் திரக் காட்சிகள் மூலம் சிறப்பாக எடுக்கப் பட்டது. ‘காலைத் தென்றல்’ என்ற பாட்டை அதிகாலையில் எடுப்பது என்று முடிவு செய்தோம். கமலுடைய பங்களாவில் ஒரு அவுட் ஹவுஸ். அதில் அம்பிகா தங்கி யிருப்பார். அதிகாலையில் அம்பிகா அந்த அவுட் ஹவுஸ் வீட்டில் இருந்து வெளியே வருவதை சூரிய உதயத்தின் போது இயற்கையாக புகைகளை உருவாக்கி மேக மூட்டம் போல் செய்து அந்தப் பாடலை எடுத்தோம். அந்த சூழ்நிலையில்தான் கமல், அம்பிகாவை பார்ப்பார். சூரிய உதயம்போல் அவர் கள் காதலும் உதயமாகும்.

அதேபோல், சண்டைக் காட்சிகளில் ஜூடோ ரத்னம் வித்தியாசமான முறையில் ஒரு பெஞ்ச் ஃபைட்டை உருவாக்கியிருந் தார். டீக்கடையில் கிடக்கும் ஒரு பெஞ்ச்சை எடுத்துக்கொண்டு கமல் சண்டையில் சாகசங்கள் செய்தது அவரது திறமையை வெளிப்படுத்தியது. படத்தின் கிளைமாக்ஸில் வில்லன்கள் துரத்த, கமல் ஒரு ஆட்டோவில் ஏறி புறப்படுவார். வில்லன்கள் துரத்துவார் கள். அந்த இடம் எது தெரியுமா? இன் றைக்கு சென்னையில் ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’ என்ற பெயரில் ஒரு வியாபார மால் இருக்கிறதே அந்த இடத்தில் பாழ டைந்த பழைய கட்டிடங்கள் இருந்தன. அதுதான் எங்களுக்கு வில்லன்களின் கூடாரம். அந்த கூடாரத்தில் இருந்துதான் வில்லன்கள் புறப்படுவதாக காட்சிகள் எடுத்தோம்.

அந்த சேஸுக்கும், கிளைமாக்ஸ் சண்டைக்கும் பப்பு வர்மாவை மாஸ்ட ராக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த சேஸில் ஆட்டோ ஓட்டுகிற கமல் உயர மான இடத்தில் ஜம்ப் செய்து தப்பிப்ப தாக காட்சி. பப்பு வர்மாவிடம், ‘‘ஆட்டோ ஜம்ப் எடுக்க எனக்கு பயமாக இருக்கு. அடிபட்டா என்னாகும்?’’ என்று பயந் தேன். ‘‘உங்களுக்கு பயமா இருந்தா டாக்டர், ஆம்புலன்ஸ் எல்லாத்தையும் வர வைங்க’’ என்றார். அடுத்து அந்த ஆட்டோ ஜம்ப் என்ன ஆயிற்று?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-71-தயாரிப்பாளர்-கதாநாயகன்-உறவு/article8998157.ece

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

சினிமா எடுத்துப் பார் 72: மெய்ஞானி ரஜினிகாந்த்!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
 
  • ’ஸ்ரீராகவேந்திரர்’ படத்தில் ரஜினிகாந்த்
    ’ஸ்ரீராகவேந்திரர்’ படத்தில் ரஜினிகாந்த்
  • எஸ்பி.முத்துராமன், கமல்ஹாசன்
    எஸ்பி.முத்துராமன், கமல்ஹாசன்

நான் ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் ஆட்டோ ஜம்ப்பை எடுக்க மூன்று கோணங்களில் கேமராக் களை டி.எஸ்.விநாயகம் வைத்தார். ஸ்டண்ட் மாஸ்டர் ரெடி சொல்ல, ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்து ஒரு மேட்டின் மீது ஓட்டி ஜம்ப் செய்தார். ஆட்டோ உயரத்தில் பறந் தது. நாங்கள் உயிரைக் கையில் பிடித் துக்கொண்டோம். டாக்டர்களும் நர்ஸ் களும் தயார்நிலையில் நின்றார்கள். பறந்த ஆட்டோ கீழே வந்து இறங்கியது. ஓடிப் போய் பார்த்தோம். ஆட்டோ டிரைவருக்கு அடிபடவில்லை. அதற்குக் காரணம் ஆட்டோ இறங்கிய இடத்தில் உயரமாக பல மெத்தைகளைப் போட்டிருந்தோம். அதனால் ஆட்டோ வின் அதிர்வு குறைந்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஃபைட் சேஸ்ஸை செட் அப் செய்யும்போதே நடிகர்கள் அடிபடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் திட்டமிடுதல் வேண்டும். விபத்து நடந்துவிட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சண்டையிலும், சேஸ்களிலும் பாது காப்பிலும் சிறந்தவர்கள் ஜூடோ ரத்னமும், பப்புவர்மாவும்.

‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் வரப் போகும் டைட்டில் கார்டுகளை ஏவி.எம்.சரவணன் சாரிடம் காட்டினேன். படித்துவிட்டு ஓ.கே சொன்னவர், ‘‘முத்து ராமன், இந்தப் படத்தின் முதல் கார்டாக ‘உயர்ந்த உள்ளம்’ எஸ்பி.முத்துராமனின் 50 வது படம்’’ என்று போட வேண்டும் என்றார். அப்படியே போட் டோம். அது ஒரு டைரக்டருக்கு ஒரு தயாரிப்பாளர் கொடுத்த பெருமை. இன்று இது மாதிரியான ‘உறவுகள்’ குறைந்துகொண்டே வருகின்றன.

கமலின் ‘உயர்ந்த உள்ளம்’மக்கள் உள்ளம் கவரும் படமாக அமைந் தது. இப்போது கமலுக்கு உலகப் புகழ்பெற்ற ‘செவாலியர் விருது’ கொடுக்கப்பட்டுள்ளது. அவரைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம். இந்த விருது அவருக்கு ஊக்கத்தைத் தரட்டும். ‘ஆஸ்கர் விருது’க்கு வழியாக அமையட்டும்.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை

சான்றோன் எனக்கேட்டத் தாய்’

- என்ற குறளின்படி கமலின் தாயை எண்ணி மகிழ்கிறேன். அண்ணன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு ‘செவாலியர் விருது’ கிடைத்தபோது மிகப் பெரிய விழா எடுத்ததைப் போல், கமலுக்கு தமிழக அரசும், மத்திய அரசும், இந்தியத் திரை உலகமும் மிகச் சிறப்பான விழா எடுக்க வேண்டும். ஏன் என்றால் அவன் ‘உலக நாயகன்!’

விஞ்ஞானியைப் பற்றி எழுதி னேன். அடுத்து, மெய்ஞானி ரஜினி காந்த். ஒருமுறை ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘ஸ்ரீ ராகவேந் திரர்’ ஆக நடிக்க வேண்டும் என்கிற ஓர் ஆசை உள்ளதைத் தெரிவித்தார். அவரிடம் நான் ‘‘இப்போது வேண்டாம் ரஜினி. கொஞ்ச நாள் ஆகட்டும்’’ என்று கூறினேன். திடீரென்று ஒருநாள், ‘‘எனது நூறாவது படம் வரப் போகிறது. அது ‘ஸ்ரீராகவேந்திரர்’. அதனை கே.பாலசந்தர் சாரின் ‘கவிதாலயா’ பட நிறுவனம் தயாரிக்க நீங்கள் இயக்குகிறீர்கள்’’ என்றார். நான் அசந்து போய் நின்றேன்.

ரஜினி, ‘‘ என்ன… என்ன?’’ என்றார்.

‘‘ரஜினி நீங்கள் ரசிகர்களின் கைதட் டல், விசில்களைப் பெறுகிற வியாபார ரீதியான கதாநாயகன் ஆகிவிட்டீர்கள். நீங்கள் சாதுவாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்தப் படத்தில் லாபம் வருமா? நஷ்டம் வருமா? நஷ்டம் வந்தால் நம்ம பாலசந்தர் சார் பாதிக்கப்படுவார். அவர் பாதிக்கலாமா? நான் சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவன். இந்த ஆன்மீகப் படத்தை என்னால் இயக்க முடியுமா? கொஞ் சம் யோசித்துப் பார்’’ என்றேன்.

‘‘அப்படியா!’’ என்று கேட்டுக்கொண்டு போய்விட்டார் ரஜினி. மறுநாள் காலையில் பாலசந்தர் சார் என்னைக் கூப்பிட்டார். ‘‘என்ன.. முத்துராமன் ரஜினியிடம் மூணு கேள்வி கேட்டியாமே. அதற்கு நான் பதில் சொல்றேன்’’ என்றார்.

‘‘ரசிகர்கள் ரஜினியை சாதுவா ஏற்றுக் கொள்வார்களான்னு கேட்டிருக்கிறாய். ரஜினியின் ரசிகர்கள், ரஜினிக்காக தங்கள் உயிரையே கொடுக்கத் தயாராக இருக்காங்க. ரஜினி ராகவேந்திரராக நடிச்சா மெய் மறந்து வரவேற்பாங்க.

‘பாலசந்தருக்கு நஷ்டம் வந்து அவர் பாதிக்கப்படலாமான்னு அடுத்த கேள்வி. எனக்கு லாபம் வந்தாச்சு. ரஜினி நம்ம கம்பெனியில் ஸ்ரீராகவேந்திர ராக நடிப்பதே நமக்கு கிடைத்த புண்ணியம். ரஜினியின் உணர்வுக்கு நாம் மரியாதை கொடுப்போம். ‘நான் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு ஆன்மிக படத்தை இயக்க என்னால் முடியுமா’ன்னு இன்னொரு கேள்வி கேட்டிருக்கிறாய். நான் சொல்கிறேன். உன்னால் இயக்க முடியும். பலதரப்பட்டப் படங்களை இயக்கி அதில் நீ வெற்றி பெற் றிருக்கிறாய். எந்த ஸ்கிரிப்ட்டையும் கெடுக்கத் தெரியாத டைரக்டர் நீ. ஸ்கிரிப்ட்டை நானும் ஏ.எல்.நாரா யணனும் ரெடி பண்ணிக் கொடுக் கிறோம். நீ டைரக்ட் செய்றே!’’ என்றார் பாலசந்தர்.

பாலசந்தர் சாருக்கு எப்பவும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதான். அடுத்த நாளே விளம்பரம் கொடுத்துவிட்டார். என் ‘மனசாட்சி’என்னைப் பார்த்து ‘உன்னால் முடியுமா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். புராணப் படங்களின் பிதாமகன் மதிப்புக்குரிய ஏ.பி.நாகராஜன் அவர்கள்தான். அவர் இயக்கிய புராணப் படங்களைப் பார்த்து, அந்த இலக்கணங்களை கற்றுக் கொண்டேன். எந்த வயதிலும் தெரி யாததைத் தெரிந்து கொள்ளலாம்தானே! ஏ.பி.நாகராஜன் படங்கள் எல்லாம் எனக்கு ‘பாடம்’ ஆயிற்று.

rajini11_2984044a.jpg

ரஜினிகாந்த், அம்பிகா

மந்த்ராலயாவுக்குச் சென்று ஸ்ரீராகவேந்திரரை வணங்கி வந்து, பட வேலைகளைத் தொடங்கினோம். அனைவரும் அசைவம் சாப்பிடாமல் ‘விரதம்’ இருந்தோம். ரஜினி மேக்கப் உடைகளில் ‘ஸ்ரீராகவேந்திரர்’ஆக செட் டுக்குள் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று வணங்கினோம்.

ஸ்ரீராகவேந்திரர் மனைவியாக நடித் தவர் லெட்சுமி. ஏற்கெனவே ரஜினியும் லட்சுமியும் ‘நெற்றிக்கண்’ படத்தில் கணவன், மனைவியாக தூள் கிளப்பியிருந்தார்கள். ரஜினியும் அமைதியாக, ஆழமாக நடித்தார். ஸ்ரீராகவேந்திரர் பாட அம்பிகா நடன மாடும் ‘போட்டி’ காட்சி ‘சபாஷ்’ வாங்கியது.

சத்யராஜ் ஒரு முஸ்லிம் மன்னன். அவர் அறிமுகத்தை ஒரு மும்பை நடனப் பெண்ணுடன் ஆடுவதுபோல் காட்சி அமைத்திருந்தோம். சத்யராஜ், தனக்கு ஆட வராது. என் கால் உயரம் என்றெல்லாம் அடம்பிடித்தார். நடன இயக்குநர் புலியூர் சரோஜா, ‘‘அமிதாப் பச்சனுக்கும் கால் நீளம்தான் அவர் ஆடவில்லையா?’’ என வாதிட்டு சத்யராஜை ஆட வைத்தார்.

படத்தில் உச்சகட்டம் ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதி அடைவதுதான். ஸ்ரீராக வேந்திரர் உட்கார அவரைச் சுற்றி கற்கள் வைத்து சமாதி கட்டப்படும். அப்பண்ணாச்சாரி ஸ்ரீராகவேந்திரரைப் பார்க்க ஓடி வருவார். அப்பண்ணாச்சாரி கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்தார். இக்காட்சி இளையராஜாவின் இசையோடு இணைந்து உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது. சமாதி மூடப்படும். சமாதியைப் முட்டி மோதி அப்பண்ணாச்சாரி அழுவார். படம் முடிந் ததும் கே.பாலசந்தர் சாருக்கு போட்டுக் காட்டினேன். ‘வெட்டு’ என்றார்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-72-மெய்ஞானி-ரஜினிகாந்த்/article9025250.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 73: ராகவேந்திரராக வாழ்ந்த ரஜினி!

 

 
 
 
  • ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் கமல்ஹாசன், மாஸ்டர் டிங்கு | ’ஸ்ரீராகவேந்திரர்’ படத்தில் ரஜினிகாந்த்
    ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் கமல்ஹாசன், மாஸ்டர் டிங்கு | ’ஸ்ரீராகவேந்திரர்’ படத்தில் ரஜினிகாந்த்
  • ’ஸ்ரீராகவேந்திரர்’ படப்பிடிப்பு முடிந்ததும் மந்த்ராலாயாவில் பிரார்த்தனைக்குச் சென்ற இயக்குநர் எஸ்பி.முத்துராமன் மற்றும் படக் குழுவினர்
    ’ஸ்ரீராகவேந்திரர்’ படப்பிடிப்பு முடிந்ததும் மந்த்ராலாயாவில் பிரார்த்தனைக்குச் சென்ற இயக்குநர் எஸ்பி.முத்துராமன் மற்றும் படக் குழுவினர்
  • சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் எஸ்பி.முத்துராமன்.
    சென்னை - திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் எஸ்பி.முத்துராமன்.

ராகவேந்திரர்’ படத்தை முழுமையாக எடுத்து முடித்து, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் கே.பால சந்தர் சாரிடம் போட்டுக் காட்டியபோது, அவர் என்னைப் பார்த்து ‘‘வெட்டு’’ என்று சொன்ன காட்சி எதுவாக இருந்திருக்கும் என்று யோசித்திருப்பீர் கள். சத்யராஜும் மும்பை அழகியும் ஆடும் நடனக் காட்சியைத்தான் அவர் ‘‘வெட்டு’’ என்றார். ‘‘இந்தக் காட்சி படத்தோடு எந்த வகையிலும் ஒட்டவில்லை. இந்தக் காட்சியை வேறு யாரும் பார்க்க வேண்டாம். நீங்களே எடிட்டர். புரொடக்‌ஷன் அறைக்குச் சென்று வெட்டி விடுங்கள்’’ என்றார். வெட்டினேன். சத்யராஜ் கஷ்டப்பட்டு ஆடிய முதல் நடனம் மக்களால் பார்க்கப்படாமலேயே நீக்கப்பட்டது.

கே.பாலசந்தர் சார் ஸ்ரீராகவேந்திரர் படத் தைப் பார்த்துவிட்டு, ‘‘படம் நல்ல திருப்தியாக வந்திருக்கு. ரஜினி நடிக்கவில்லை. ராகவேந்திர ராக வாழ்ந்திருக்கிறார். அவர் மனதில் வாழும் ராகவேந்திரருக்கு ரஜினி உயிர் கொடுத்திருக் கிறார். இந்தப் படம் தயாரித்ததை நான் பெருமை யாக கருதுகிறேன்!’’என்று எங்கள் எல்லோரையும் மனம் திறந்து பாராட்டினார்.

‘ஸ்ரீராகவேந்திரர்’ படப் பெட்டியை மந்த்ராலயத் துக்கு எடுத்துச் சென்று ஆசி பெற்ற பிறகே வெளியிட்டோம். படத்தை பார்த்த மக்களின் மனதில் ரஜினிக்கு மரியாதை கூடியது. ரஜினி ஸ்ரீராகவேந்திரராகவே போற்றப்பட்டார். ஸ்ரீராக வேந்திரர் பக்தர்கள் எல்லாம் அந்தப் படத்தின் டிவிடியை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு கவலை வரும்போதெல்லாம் போட்டு பார்த் தனர். பலர் ‘ஸ்ரீராகவேந்திரர் எங்களோடு எங்கள் வீட்டிலேயே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்றார்கள்.

திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மடத்தில் ரஜினிக்கும், பாலசந்தர் சாருக்கும், எனக்கும் அவ்வளவு மரியாதை ஏற்பட்டது. நான் அங்கு செல்லும்போதெல்லாம் ‘நன்றி’யுடன் சிறப்பு தரிசனம்தான்.

ஆன்மிகத்தில் இருந்து அடுத்து அயல் நாட்டுக்குப் போவோமா?!

பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிக்க, கமல் நடிக்க ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம் ‘கல்யாணராமன்’. பல்லை நீட்டி வைத்துக் கொண்டு கதாநாயகனாக கமல் நடித்தால் மக்கள் பார்ப்பார்களா என்று பயந்தேன். அதற்கு பஞ்சு அருணாசலம் அவர்கள், ‘‘ஒரு கதாபாத்திரம் இப்படி இருந்தாலும், இன்னொரு கதாபாத்திரத்தில் கமல் அழகாக வருவதால் அந்தக் கதைக்காகவே ஏற்றுக்கொள்வார்கள்’’ என்று கூறினார். அவர் கூறியபடி மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். படம் சூப்பர் ஹிட்!

இதனால் ஆங்கிலப் படங்களில் இரண்டாவது பகுதி எடுப்பதைப் போல் ‘கல்யாணராமன்’’ படத்தை எடுக்கலாம். ஜப்பானில் போய் எடுப் போம். படத்துக்கு ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்று பெயர் வைப்போம் என்று முடிவெடுக்கப் பட்டது. கமல், ராதா, டிங்கு, தேங்காய் சீனிவாசன், கோவை சரளா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அனைவரோடும் ஜப்பான் போனோம்.

ஜப்பானை பார்த்தபோது, ‘அந்நாட்டினர் வளர்ச்சி நிலையில் எங்கோ இருக்கிறார்கள். நாம் அந்த இடத்தைப் பிடிக்க இன்னும் 20 வருடங் களாவது ஆகும் என்கிற எண்ணம் எங்களுக்கு வந்தது. எல்லா துறைகளிலும் அவ்வளவு பிரம் மாண்ட வெற்றி! கடலை மூடி கட்டப்பட்ட மிகப் பெரிய விமான நிலையம். விரிவான விமான ஓடு தளங்கள். மக்கள் வந்துபோக பெரிய பெரிய ஹால்கள். எல்லா வசதிகளும் நவீனமயமாக்கப் பட்டவை. ‘‘ஏன், இவ்வளவு பெரிய விமான நிலையம்?’’ என அதிகாரிகளிடம் கேட்டோம். ‘‘இன்றைய நிலையில் இதை பார்த்து பெரியது என்கிறீர்கள். இன்னும் 20 வருடங்களுக்குப் பிறகு எங்கள் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற அளவில் தான் இந்தக் கட்டிடத்தை பெரிதாகக் கட்டியிருக் கிறோம்’’ என்றார்கள். அவர்கள் வரும் காலத்தை எண்ணி திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நாம் இன்றையத் தேவைகளையே பூர்த்திசெய்வது இல்லை. அப்படியே கட்டினாலும் விமான நிலையங்களில் தொடர்ந்து பலமுறை கண்ணாடி கள் உடைந்து விழுகின்றன.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சிகளில் படப்பிடிப்பு நடத்தி அழகான காட்சிகளை எடுத்திருந்ததைப் போல், நாங்களும் ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சியில் கமல் பாடுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்தோம். ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் தன் திறமையை எல்லாம் திரட்டி கண்காட்சியை நேரில் பார்ப்பதுபோல் படம்பிடித்திருந்தார்.

நம் நாட்டில் இப்போதுதான் பெருமளவில் ‘நியான் சைன்’ விளக்குகள் ஒளிர் கின்றன. அன்றைக்கே ஜப்பான் நகர் முழு வதுமே பல வண்ணங்களில் ‘நியான் சைன்’ விளக்குகள் ஜொலித்தன. அதையெல்லாம் படம் பிடித்தோம். காட்சிகள் வண்ணமயமாக அமைந்தன.

‘சக்குரா’ என்கிற ஒரு வகை பூக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக பூக்கக் கூடியவை. அந்த நேரத்தை அறிந்துகொண்டு அங்கு சென்று, பூத்து குலுங்கிய ‘சக்குரா’ பூக்களுக்கு மத்தியில் காட்சி அமைத்தோம்.

கமல், ராதா, டிங்குவை வைத்து நான் படம் பிடிக்க, எடிட்டர் விட்டல் சார் எனக்கு உதவியாக தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, கோவை சரளா, சித்ரா லட்சுமணன் ஆகியோரை வைத்து ஷூட் செய்தார். சித்ரா லட்சுமணனுக்கு இதுதான் முதல் படம். கோவை சரளாவுக்கு சென்னையில் விமானம் பறக்கத் தொடங்கியதில் இருந்து சென்னை வந்து சேரும்வரை தலை சுற்றல், வாந்தி. அதற்கிடையிலும் படப்பிடிப்பில் அருமையாக ஒத்துழைத்தார்.

இந்தப் படப்பிடிப்பின்போது பஞ்சு அருணா சலம் அவர்களின் மகன் சுப்புவும் ஜப்பானுக்கு வந்தான். ‘‘ஏன், சுப்புவை வரச் சொன்னீர்கள்?’’ என்று பஞ்சு அருணாசலம் அவர்களிடம் கேட்டேன். ‘‘அவனுக்கு இப்போது விடுமுறை. ஜப்பானைப் பார்க்க வந்திருக்கிறான்’’ என்றார். நான் பஞ்சு அவர்கள் தனிமையில் இருக்கும்போது, ‘‘சுப்பு படப்பிடிப்பில் எல்லாம் கலந்துகொண்டால் படிப் பதில் எண்ணம் செல்லாது. சினிமா ஆசை வந்து விடும்’’ என்றேன். அதற்கு பஞ்சு அருணாசலம் அவர்கள், ‘‘அப்படியெல்லாம் வர மாட்டான்’’ என்று கூறினார். ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. இன்று சுப்பு பஞ்சு தயாரிப்பு நிர்வாகி மட்டுமல்ல; நல்ல குணச்சித்திர நடிகர். சினிமா என்பது ஒரு கவர்ச்சி காந்தம். அனைவரையும் தன்னிடம் இழுத்துக் கொண்டுவிடும்.

‘கல்யாணராமன்’ கதையில் கமல், ஆவி இரு வரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள்தான் ‘ஹைலைட்’. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் அப்படியான காட்சிகளை எடுக்க முடியவில்லை. ஏன் என்று அடுத்து சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-73-ராகவேந்திரராக-வாழ்ந்த-ரஜினி/article9054100.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 74: என்னம்மா கண்ணு சவுக்கியமா?

எஸ்பி.முத்துராமன்

 
ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், சத்யராஜ்
ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், சத்யராஜ்

‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத் துக்காக கமல், ஆவி இரு பாத் திரங்களையும் ‘மிக்சல்’ கேமரா வில் மாஸ்க் செய்து எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தோம். ஜப்பானில் ‘மிக்சல்’ கேமரா கிடைக்கா மலா போய்விடும் என்ற நம்பிக்கையில், அங்கே போய் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கிவிட்டோம். டோக்கியோ வில் ‘மிக்சல்’ கேமரா கிடைக்கவில்லை. விசாரிக்கும்போது, ‘‘இங்கே ‘மிக்சல்’ கேமராவை யாரும் பயன்படுத்துவது இல்லை. அதனால், அதை கண்காட்சி யில் வைத்துவிட்டோம்’’ என்றார்கள்.

அதனால் கமல், ஆவி இரு கதா பாத்திரங்களையும் ஜப்பானில் எங்க ளால் எடுக்க முடியவில்லை. ‘கல்யாண ராமன்’ படத்தில் ஹைலைட் காட்சிகளே கமலுடன் ஆவி இணைந்து வரும் காட்சி கள்தான். அதை எடுக்க முடியாததால் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் பல காட்சிகள் குறைந்தன. அதன் பலன், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ‘கல்யாணராமன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றி, ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தை குறைத்து மதிப்பிட வைத்தது. என்ன காரணம் சொன்னாலும் ‘தோல்வி’யை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். நான் அந்தத் ‘தோல்வி’யை ஏற்றுக் கொண்டேன்.

‘என்னம்மா கண்ணு சவுக்கியமா’ என்று தொடங்கும் காவியக் கவிஞர் வாலி எழுதிய புகழ்பெற்ற பாடல் வரிகள் எல்லோருக்கும் தெரியும். அந்தப் பாட்டு இடம்பெற்ற படம் ஏவி.எம். தயாரித்து, என் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்டர் பாரத்’. பின்னாளில், அந்தப் பாட்டின் வரி களை என்னுடன் இணை இயக்குநராக பணிபுரிந்த வி.ஏ.துரை, ஒரு படத்துக் குத் தலைப்பாகவே வைத்து படம் தயாரித்தார். அந்த அளவுக்கு வரவேற் பைப் பெற்ற பாடல் வரி அது!

‘மிஸ்டர் பாரத்’ படத்துக்கு கதை சலீம் ஜாவ்டு. திரைக்கதை-வசனம் எழுதும் பொறுப்பை விசு ஏற்றார். அதில் அவரது திறமை மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டது. அப்படத்தில் விசுவும் சிறப்பாக நடித்திருந்தார். படத் தில் ரஜினிக்கு சவாலாக சத்யராஜ் பாடு வது போன்ற அமைப்பில் இடம்பெற்ற ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?’ பாட்டு, 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜெயந்தி மாலா, பத்மினி இருவருக் கும் அமைந்த போட்டி நடனத்தைப் போன்றே அமைந்தது.

பாடல் ஒலிப்பதிவின்போதே கருத் தோடு அமைந்த இந்தப் போட்டிப் பாடலை எங்கே எடுக்கலாம் என்ற யோசனை எங்களுக்கு வந்தது. ஏவி.எம்.சரவணன் சார், ‘‘சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானம் இந்தப் பாட் டுக்கு சரியாக இருக்கும். போய் பாருங் கள்’’ என்றார். அவர் சொன்ன மாதிரியே அந்தப் பாட்டுக்கான அழகான சூழல் அங்கே அமைந்திருந்தது. அங்கே அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கி னோம். அந்தப் ‘பச்சைப் புல்’ தரையை உருவாக்கி பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம். ரேஸ் கிளப்புக்கு பாராட்டுகள்!

ரஜினிகாந்த் எப்போதும் தான் எதை செய்யப் போகிறேன் என்பதை சொல்லவே மாட்டார். நடிக்கும்போது அதை அவருக்குரிய ஸ்டைலில் செய்து விடுவார். அவர் ஸ்டைலுக்கு ஈடாக சத்ய ராஜ் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். தியேட்டரில் ரஜினி, சத்யராஜ் இரு வரது ரசிகர்களும் அவர்களது நடிப்பை பார்த்து மாறி மாறி கைத் தட்டினார்கள். இருவரது ஸ்டைல் நடிப்பும் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன.

படத்தில் ரஜினிக்கு தாயாக நடிக்கும் பாத்திரத்துக்கு ‘ஊர்வசி’ சாரதா சரியாக இருப்பார் என்று முடிவு செய்தோம். மலையாளப் படங்களில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாகவும், இயற்கையாகவும் இருக்கும். அவர், ‘‘உங்கள் இயக்கத் தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே காத்திருக்கிறேன், முத்து ராமன் சார்’’ என்று என்னை சந்திக்கும் போது எல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். நடிப்பதைப் போலவே பழகு வதற்கும் அவ்வளவு இனிமையானவர். மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது எப்படி என்று ‘ஊர்வசி’ சாரதாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தப் படத்தில், அவரை நம்ப வைத்து ஒரு குழந்தைக்குத் தாயாக்கி விட்டு, ஒருவன் ஓடிவிடுவான். அந்தக் குழந்தைதான் ரஜினி! தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி வாங்க வேண்டுமென்று முடிவெடுத்து, சின்ன வயதில் இருந்தே தன் மகன் ரஜினிக்கு வீரத்தை ஊட்டி வளர்ப்பார் சாரதா. இறக்கும்தறுவாயில் ரஜினியிடம், ‘யார் அந்த கயவன் என்பதைச் சொல்லி, அவ னுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும்?’ என்று மகனிடம் இறுதி உறுதி மொழி வாங்கிக்கொண்டு இறந்துவிடு வார். அந்தக் கயவன் பாத்திரம்தான் சத்ய ராஜுக்கு. தந்தை சத்யராஜை மகன் ரஜினி பழி வாங்கத் துடிக்கும் காட்சிகள் உணர்ச்சிமயமாக இருந்ததால் படம் விறுவிறுப்பாக இருந்தது.

bharath1_3000869a.jpg

’மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ்

படத்தில் ரஜினிக்கும் சத்யராஜிக்கும் இடையே நடப்பது பழி வாங்கும் கதை என்றால், ரஜினிக்கும், அம்பிகாவுக்கும் இடையே நடப்பது காதல் கதை. அவுட்டோர், அரங்கக் காட்சிகள் என்று இல்லாமல் ஒரு பாட்டை வித்தியாசமாக உருவாக்கத் திட்டமிட்டோம். அந்தப் பாடல் காட்சியை ஃப்ரிஜ்ஜுக்குள் பட மாக்கினோம். பிரிஜ்ஜுக்குள் என்றால் நடிகர்களை சின்னச் சின்ன உருவமாக மாற்றி, தந்திர காட்சியாக எடுக்க வேண் டும். அற்புதமான அந்தத் தந்திர காட்சி களை மக்கள் ஆச்சர்யத்தோடு ரசித்தனர். அதுக்கு ஒளிப்பதிவாளர் காந்த் நிவாஸின் திறமையே முக்கிய காரணம்.

‘ஏழாவது மனிதன்’படத்தில் ரகுவரன் அற்புதமாக நடித்திருந்தும், அதைத் தொடர்ந்து வேறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். ‘‘ரகுவரன் நடிப்பு ‘ஏழாவது மனிதன்’ படத்தில் வித்தியாசமாக இருந்தது. நம்ம படத்தில் நடிக்க அவரிடம் கேளுங்களேன்’’ என்றார் ஏவி.எம்.சரவணன் சார். நாங்கள் ரகு வரனை அணுகியபோது, ‘‘என்னோட ‘ஏழாவது மனிதன்’ கதாபாத்திரத்தை ஞாபகம் வைத்து ஏவி.எம்.சரவணன் சார் கூப்பிடுபோது, உங்க படத்தில் சின்ன கதாபாத்திரமா இருந்தாலும் நான் நடிக்கத் தயார்’’ என்று ஒப்புக்கொண்டார். ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சாராயக் கடை நடத்தும் பாத்திரத்தில் ரகுவரன் சிறப்பாக நடித்திருந்தார்.

அவர் இடம்பெறும் காட்சிகள் பெரும் பாலும் இரவு 9 மணி படப்பிடிப்பாகவே இருக்கும். ஆனால், 6 மணிக்கே வந்து விடுவார். ‘‘என்ன ரகுவரன், 9 மணிக்குத் தானே உங்களை வரச் சொன்னோம். ஏன் இவ்வளவு சீக்கிரமே வந்துட்டீங்க?’’ என்று கேட்டால், ‘‘பரவாயில்லை சார்! நீங்க எப்படி படப்பிடிப்பு நடந்துறீங் கன்னு பார்க்கலாம்னுதான் முன்னாடியே வந்தேன்’’ என்பார். அவருடைய ‘கற்றுக் கொள்ளும்’ ஆர்வம்தான் அவரை வேக வேகமாக வளர வைத்தது. யாருடைய பாதிப்பும் இல்லாமல், தனக்கென ஒரு தனி நடிப்பை தந்து பெயர் வாங்கினார்.

bharath_jpg1_3000868a.jpg

படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பாட்டு, ஒரு சண்டை என்று முடிவெடுத்து படமாக்கினோம். சென்னை, விருகம் பாக்கத்தில் உள்ள ஆவிச்சி பள்ளி விளையாட்டுத் திடலில் ரஜினி பாடும், ‘என் தாயின் மீது ஆணை’ பாடலையும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியையும் எடுக்க ஆரம்பித்தோம். சண்டைக் காட்சியில் ஒரு காரை, இன்னொரு கார் ஜம்ப் செய்து தப்பிப்பதுபோல் ஷாட் எடுக்க ஏற்பாடு செய்தோம். காரை ஜம்ப் செய்ய வந்திருந்த ஃபைட்டர், ‘‘என்ன டைரக்டர் சார், நான் ரெண்டு மூணு காரை ஒரே நேரத்தில் ஜம்ப் செய்ற ஆளு. நீங்கள் ஒரே ஒரு காரை ஜம்ப் செய்ய சொல்றீங்களே?’ என்றார்.

முதலில் ஒரு காரை ஜம்ப் செய்து ஷாட் எடுப்போம் என்று கூறி, அவரை ஒரு காரில் ஜம்ப் செய்ய சொன்னோம். அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்து சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-74-என்னம்மா-கண்ணு-சவுக்கியமா/article9080057.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 75: ரகுவரனின் மாறிய பாதை!

எஸ்பி.முத்துராமன்

 

  • spm_3009621g.jpg
     
  • spm11_3009619g.jpg
     
 

காரைக்குடி இராம.சுப்பையா - விசாலாட்சி பெற்றெடுத்த என் தம்பி எஸ்பி.செல்வமணி இறந்துவிட்டார். சகோதரர்கள் நால்வர். இன்று மூவராகிவிட்டோம். செல்வமணி, பொதுப்பணித் துறையில் சிறந்த முறை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் மனைவி சரோஜா மாநகராட்சிப் பள்ளி களில் தமிழாசிரியராகப் பணியாற்றி நல் லாசிரியர் விருது பெற்று, ஓய்வு பெற்ற வர். செல்வமணி இல்லாமல் சரோஜா இல்லை. சரோஜா இல்லாமல் செல்வ மணி இல்லை என்று ஒற்றுமையாக எடுத் துக்காட்டான தம்பதிகளாக வாழ்ந்து காட்டினர்.

தங்கள் வரவு, செலவு கணக்கைத் தினம் எழுதி வைத்து, வரவுக்கு ஏற்ற செலவு செய்து, அதில் சேமிக்கவும் செய்தார்கள். பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து ஒழுக்கத்துடன் வளர்த்தார்கள். பிள்ளைகள் நல்லவராவதும், கெட்டவ ராவதும் பெற்றோர் கையில் என்பதை நிரூபித்தார்கள்.

சரோஜாவுக்கு ஒரு விபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற, ஒரு மாதமாக மனை விக்கு நர்ஸாக சேவை செய்தார் செல்வமணி. அதன் விளை வாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மனைவி தன் உடல் நலக்குறைவோடு கணவனைக் கவனித்துக்கொண்டார். செல்வமணிக்கு நவீன அறுவை சிகிச்சை. பிள்ளைகள் பணத்தை எண்ணாமல் அள்ளிக் கொடுத் தனர். ஆனாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சரோஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

திட்டமிட்டு வாழ்ந்த அவர் வாழ்க்கை யைப் பின்பற்றுவதே நமக்கு ஆறுதலை தரும். விழியில் வழியும் நீரைத் துடைத் துக்கொள்கிறேன். வழி தெரிகிறது!

spm1_3009620a.jpg

சென்ற வாரம்.. ‘மிஸ்டர் பாரத்’ படத் தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இரண்டு, மூன்று கார்களை ஜம்ப் செய் வேன் என்று சொன்ன ஃபைட்டர், கடைசி யில் முதல் காரை ஜம்ப் செய்யும்போது அந்த காரின் மேலேயே விழுந்துவிட்டார். ஜீடோ ரத்தினம் மாஸ்டரிடம், ‘‘என்ன மாஸ்டர் நம்ம ஃபைட்டர், மூணு காரை ஜம்ப் பண்றேன்’’ என்று சொன்னாரே என்று கேட்டேன். அதற்கு மாஸ்டர் சிரித் தார். வாய்ச் சொல் வீரர்கள் செயல்வீரர் களாக இருப்பதில்லை. முடிவாக, ஃபைட் டர் விழுந்த அந்த முதல் காரிலேயே சண்டைக் காட்சியை எடுத்து முடித்தோம். படம் நன்றாக அமைந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஏவி.எம்-ன் முத்திரை பதித்த வெற்றிப் படங்களில் ‘மிஸ்டர் பாரத்’ படமும் இணைந்தது.

அந்த சமயத்தில் எனக்கு கண்ணில் ‘காட்ராக்ட்’ ஏற்பட்டது. சங்கர நேத்ரா லயா கண் மருத்துவமனையில் காட்டி னேன். அறுவை சிகிச்சை செய்ய வேண் டும் என்று சொன்னார்கள். ஏவி.எம்.சர வணன் சார், ‘‘உலகளவில் சிறந்த கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர் களையே உங்களுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யச் சொல்கிறேன்’’ என்று சொல்லி முன்னின்று ஏற்பாடு செய்தார். நான் கண்ணொளி பெற்று பல ஆண்டு களாக சிறப்பாக வாழ்ந்து வருகிறேன். டாக்டர் எஸ்.எஸ்.பி அவர்களுடன் சேர்ந்து டாக்டர் டி.எஸ்.சுரேந்தர், லிங்கம் கோபால், தருண் சர்மா, ஜோதி பாலாஜி, ராஜேஸ்வரி எல்லோரும் பார்த்துக்கொள்கின்றனர். நான் சங்கர நேத்ராலயாவின் ‘நண்பனாக’வாழ்ந்து வருகிறேன். எனக்கு ‘சங்கர ரத்னா’ விருது கொடுத்து ‘சங்கர நேத்ராலயா’ டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் குழுவினர் கவுரவித்தார்கள்.

நான் ‘காட்ராக்ட்’அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வில் இருந் தேன். ஏவி.எம்.சரவணன் சார் அவர் களும், குகன் அவர்களும் என்னை நலம் விசாரிக்க வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘சார், நாம் அடுத்தக் கட்டத்துக்கு போகணும்!’’ என்றேன்.

சரவணன் சாருக்கு நான் அப்படி சொன்னது ஆச்சர்யத்தைத் தந்தது.

‘‘முத்துராமன், ஏன்… என்ன திடீர்னு?’’ என்று கேட்டார். இப்போது தொலைக்காட்சியை மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள். பவர்ஃபுல் மீடியமாக மாறி வருகிறது. இந்த நேரத்தில் நாமும் டி.வி-க்கு போனால் நன்றாக இருக்கும். நாம் அடுத்த கட்டமாக தொலைக்காட்சிக்குப் போக வேண்டும்!’’ என்றேன்.

சரவணன் சார் சிரித்துக்கொண்டே ‘‘பண்ணுவோம்’’ என்று சொல்லி, புறப்பட்டார். ‘பண்ணுவோம்’ என்று சொன்னாலே, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். அதுதான் ‘ஏவி.எம்!’

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய, ‘ஒரு மனிதனின் கதை’ என்ற நாவலை தொலைக்காட்சித் தொடராக எடுக்கத் திட்டமிட்டோம். ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மைய மாக கொண்ட கதை அது. அந்தத் தொட ருக்கு யாரை கதாநாயகனாக போடுவது என்று யோசித்தபோது, ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத் திய ரகுவரன் நினைவுக்கு வந்தார். அவரை அணுகியபோது எந்த யோசனை யும் இல்லாமல் உடனே சம்மதித்தார். சம் மதித்தது மட்டுமல்ல; அந்தக் கதாபாத்திர மாகவே வாழ்ந்து காட்டினார். ‘குடித்து விட்டுத்தான் நடிக்கிறாரோ’ என்று மக்கள் கேட்டனர். அந்த அளவு அவரின் நடிப்பில் யதார்த்தம் தெரிந்தது.

தூர்தர்சனின் ‘பொதிகை’ தொலைக் காட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை’ மெகா தொடர் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்போதெல்லாம் சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பானது. அந்தப் பகுதிகளில் பார்த்த மக்களிடம் இருந்து வந்த விமர்சனங்கள் பெரிய அளவில் உத்வேகத்தைக் கொடுத்தன.

‘என் கணவர் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்துவ தில்லை’, ‘என் கணவர் இந்தத் தொடரை பார்த்த பிறகு குடிப் பழக்கத்தையே விட்டு விட்டார்’ என்று பல மனைவியர்கள் கடிதம் எழுதினார்கள். அதைப் பார்த்த ஏவி.எம்.சரவணன் சார், தமிழகம் முழு வதும் கொண்டு செல்ல அந்தத் தொடரை சினிமாவாக எடுக்க முடிவெடுத்தார்கள். அந்தப் படம்தான் ஏவி.எம்-ன் ‘தியாகு’.

அந்தப் படத்திலும் ‘தியாகு’வாக ரகுவரனே நடித்தார். தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்த ரகுவரன், அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒருமுறை என்னிடம், ‘‘முத்துராமன் சார், வீட்டுல வரவர தொந்தரவு அதிக மாகிடுச்சு. ஹோட்டலில் ஒரு தனி ரூம் எடுத்து தங்கப்போறேன்!’’ என்றார். அதுக்கு நான், ‘‘நீங்க தனியா தங்குறது எனக்கு சரியாப் படலை. உங்களை சுத்தி துணை இல்லாம இருந்தா கண்டதை சிந்திக்கத் தோணும். செயல்படத் தோணும். தப்பு நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு!’’ என்று சொன்னேன். அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பார்த்தால், ‘ரகுவரன் முழுக்க மதுவுக்கு அடிமை யாகிவிட்டார்’ என்ற செய்திதான் என் காதுக்கு வந்தது. அதை கேள்விப்பட்ட தும் மனம் தாங்கிக்கொள்ள முடிய வில்லை.

ஒரு நாள் நானும், ரஜினியும் சோழா ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந் தோம். அவருக்கு அந்த ஹோட்டலில் தயாராகும் புதினா பரோட்டா ரொம்பவும் பிடிக்கும். அப்போது ரஜினிக்கு பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார். கொஞ்ச நேரத்துக்கு பிறகு ரஜினி என் னிடம், ‘‘முத்துராமன் சார், என்ன எது வுமே கண்டுக்காம இருக்கீங்க?’’ என்று கேட்டார். அதற்கு நான், ‘‘என்ன ரஜினி… புரியலையே?’’ என்று சொன்னேன். அப் போது ரஜினி, ‘‘ என் பக்கத்துல உட்கார்ந் திருப்பது யாருன்னு பார்த்தீங்களா?’’ என்று கேட்டார். ‘‘தெரியலையே ரஜினி?’’ என்று சொல்லியபடியே ரஜினி சுட்டிக் காட்டியவரை உற்றுப் பார்த்தேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-75-ரகுவரனின்-மாறிய-பாதை/article9106782.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 76: அரசே வெளியிட்ட படம்!

எஸ்பி.முத்துராமன்

 

 
அன்றைய முதலைமைச்சர் கருணாநிதியிடம் ‘தியாகு’ படச்சுருளை அரசுக்கு நன்கொடையாக அளிக்கும் ஏவி.எம்.சரவணன். உடன் துரைமுருகன், தமிழ்க்குடிமகன், எஸ்பி.முத்துராமன், சிவசங்கரி
அன்றைய முதலைமைச்சர் கருணாநிதியிடம் ‘தியாகு’ படச்சுருளை அரசுக்கு நன்கொடையாக அளிக்கும் ஏவி.எம்.சரவணன். உடன் துரைமுருகன், தமிழ்க்குடிமகன், எஸ்பி.முத்துராமன், சிவசங்கரி
 

நானும் ரஜினியும் ஹோட்ட லில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் பக்கத்து டேபிளில் வந்து உட்கார்ந்தவரைப் பற்றி ரஜினி சுட்டிக் காட்டியவுடன், அந்த நபர் யாரென்று உற்றுப் பார்த்தேன். கண்கள் எல்லாம் உள்ளே போய், தாடி வளர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்த அவர், ரகுவரன்.

சில விநாடிகள் என்னால் நம்பவே முடியல. ‘‘ரகுவரன்… ரகுவரன்…’’ என்று இரண்டு தடவை உரக்கக் கூப்பிட்ட பிறகுதான் எங்கள் பக்கம் திரும்பினார். நான் ரஜினியைப் பார்த்தேன். அவர் சொன்னார்: ‘‘என்ன சார் பண்றது? நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவர் திருந்துற மாதிரி தெரியலையே!’’ என்றார். ரொம்ப வருத்தப்படும் அளவுக்கு அந்த சந்திப்பு அமைந்துவிட்டது.

அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ரகுவரன் திருந்திவிட்டார் என்ற செய் தியை கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு நடிகை ரோகிணி, ரகுவரன் இரு வரும் திருமணம் செய்துகொண்டார்கள். சினிமாவை உயிராக நேசிக்கும் நடிகைகளில் ரோகிணியும் ஒருவர். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், ரகுவரன் - ரோகிணி இல்லறமும் நீடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் ரகுவரன் உடல் நலக்குறை வால் உயிரிழந்தார்.

‘ஒரு மனிதனின் கதை’ தொடரில் நடித்த ஒரு மனிதனின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டேன். அதனால்தான். ‘மதுப் பழக்கம், போதைப் பழக்கம் கூடாது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

ரகுவரன் நடித்த ‘ஒரு மனிதனின் கதை, தொலைக்காட்சித் தொடரை ‘தியாகு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கத் தொடங்கியபோது, எழுத்தாளர் சிவசங்கரி சிறந்த முறையில் திரைக்கதை அமைத்துக் கொடுத்தார். மதுப் பழக்கத்தால் ஏற்படும் கொடுமைகளை காட்சியின் மூலம் நல்ல முறையில் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் சிறந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட எழுத்தாளராகவும் பெயர் பெற்றார். ‘தியாகு’ படம் சிறப்பாக தயாராகியும், அப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை. எங்களாலும் படத்தை வெளியிட முடியவில்லை.

அந்த சமயத்தில் எழுத்தாளர் சிவசங் கரி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த அதே விமானத்தில் அப்போது முதல் வராக இருந்த கலைஞர் அவர்களும் வந்திருக்கிறார். கலைஞரிடத்தில் சிவசங்கரி, ‘‘மதுப் பழக்கம் கூடாது என் பதை வலியுறுத்தும் விதமாக ஏவி.எம் நிறுவனம் ‘தியாகு’ என்ற படத்தை எடுத் திருக்கிறார்கள். அதை வியாபாரம் செய்ய முடியவில்லை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

karu1_3017633a.jpg

‘தியாகு’ (1990) படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன்

அதைக் கேட்ட கலைஞர் அவர்கள், ‘‘ஏவி.எம்.சரவணனை எனக்கு அந்தப் படத்தை போட் டுக் காட்டச் சொல்லுங்கள். பார்த்து முடிவு பண்ணுவோம்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் அவர்கள் ‘தியாகு’ படம் பார்க்க ஏற்பாடானது. மது ஒழிப்பு கமிட் டியையும் அழைத்துக் கொண்டு வந்து கலைஞர் படம் பார்த்தார். படம் பார்த்து விட்டு வெளியே வந்த கலைஞர் என்னைப் பார்த்து ‘‘என்ன முத்துராமா! நீ இந்த மாதிரி படமும்கூட எடுப்பியா?’’ என்றார் சிரித்துக்கொண்டே. அதன் பிறகு மது ஒழிப்பு கமிட்டியிடம் கலந்து பேசிவிட்டு சரவணன் சாரிடம் ‘‘படத்தை அரசுக்கு கொடுத்துவிடுங்கள். நாங்கள் ரிலீஸ் செய்து, மக்களிடம் அந்தக் கருத்தைக் கொண்டு சேர்க்கிறோம்’’ என்றார். இப்படித்தான் அந்த விழிப்புணர்வு படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டியிருந்தது.

ஏவி.எம் தயாரிப்பில் விஜய காந்த், ராதிகா, சரத்பாபு, பல்லவி, டெல்லி கணேஷ் நடிப்பில் ‘தர்ம தேவதை’ படத்தை இயக்கினேன். முதலாளி, தொழி லாளிக்கு இடையே உள்ள பிரச்சி னையை மையமாகக் கொண்ட படம் அது. தொழிலாளர் தலைவராக சரத்பாபுவும், அவரது மனைவியாக போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் ராதிகாவும் நடித்தார். முதலாளிகளின் சூழ்ச்சியில் சரத்பாபு கொல்லப்பட, அதற்காக விஜயகாந்த் நீதி கேட்டு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சென்னை நகரில் சரத்பாபு உடலோடு மிகப் பெரிய ஊர்வலம் நடத்துவார். கணவன் இறந்தாலும் கடமை ஆற்றும் போலீஸ் அதிகாரி ராதிகா, ஊர்வலத் தில் பாதுகாப்புக்கு வருவார். அந்த ஊர்வ லத்தை பார்த்தவர்கள், படப்பிடிப்பு என்று நினைக்காமல் உண்மையான தொழி லாளர்கள் ஊர்வலம் என்றே நம்பினார் கள். படத்தில் ஒருசில காட்சிகளில் விஜயகாந்த் தோன்றினாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார்.

karu2_3017634a.jpg

‘தர்ம தேவதை’ படத்தில் விஜயகாந்த், ராதிகா

அடுத்து அந்தப் படத்தை முடித்துவிட்டு, தமி ழில் விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தெலுங்கில் நான் இயக்க ஆரம்பித்தேன். விசுவின் கதா பாத்திரத்தில் தெலுங்கில் கொள்ளபுடி மாருதி ராவ் ஏற்று நடித்தார். அவருடன் சரத்பாபு, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, அன்னபூரணி நடித்தனர். பட வேலை களை ஆரம்பித்தபோது ஒரு சிக்கல் ஏற் பட்டது. கொள்ளபுடி மாருதி ராவ் 20 நாட்களில் அமெரிக்கா போக வேண்டி யிருந்ததால், அதற்குள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நெருக்கடி உருவானது. படத்தில் நடிக்கவிருந்த நடிகர்களை அழைத்து தமிழ் ‘சம்சாரம் அது மின் சாரம்’ படத்தை போட்டுக் காட்டினேன்.

அவர்கள் அத்தனை பெரும் படம் பார்த்து முடிந்ததும், ‘‘இப்போது உங்க எல்லோருக்கும் கதையும், காட்சிகளும் தெரிஞ்சிருக்கு. இதில் மாருதி ராவ் நடிக்கும் காட்சிகளை மட்டும் முதலில் துண்டுத் துண்டாக எடுக்கப் போறேன். அதனால நான் பேட்ச் பேட்ச்சாகத்தான் எடுப்பேன். கடைசியில் எடிட்டிங்கில் சரியாக தொகுத்துக்கொள்வேன்!’’ என் றேன். அதற்கு மாருதி ராவ், ‘‘என்னால பேட்ச் பேட்ச்சாக எடுத்து படமே ‘பேட்ச்’ ஆக வந்துடப் போகுது?’ என்றார். ‘‘இல்லை சார். நான் அடிப்படையில் ஒரு எடிட்டர். மனதில் இப்படித்தான் எடுக்கணும் என்பதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்துட்டேன். நிச்சயமாக அது பேட்ச்சாக இருக்காது!’’ என்று உறுதியோடு கூறிவிட்டு, படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுவென குறித்த நாட்களுக்குள் எடுத்து முடித்துவிட்டேன்.

அமெரிக்கா சென்று திரும்பி வந்த மாருதி ராவ் மிகவும் ஆர்வத்தோடு, நான் பேட்ச் பேட்சாக எடுத்த காட்சி களை முழு படமாக பார்க்க வேண்டு மென்று வந்து பார்த்தார். பார்த்தவர் என்ன சொன்னார்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-76-அரசே-வெளியிட்ட-படம்/article9131094.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 77: ரஜினி பேசிய இங்கிலீஷ்!

எஸ்பி.முத்துராமன்

  • ‘வேலைக்காரன்’ படத்தில்..
    ‘வேலைக்காரன்’ படத்தில்..
  • ம.பொ.சி-யுடன் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்
    ம.பொ.சி-யுடன் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்
 

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கொள்ளபுடி மாருதி ராவ் ‘சம்சாரம் ஒக சதுரங்கம்’ படத்தை பார்த்தார். ‘ ‘பேட்ச் பேட்ச்சாக எடுத்ததே தெரியலை. நல்லா தொகுத்துட்டீங்க. உங்களுக்கும், எடிட்டர் விட்டலுக்கும் பாராட்டுகள்!’’ என்று சொல்லி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடு தெலுங்கில் விநியோகம் செய்தார். அந்தப் படம் ஆந்திராவில் பெரிய வெற்றி.

அடுத்து, கே.பாலசந்தர் சாரின் ‘கவிதாலயா’ தயாரிப்பில் நான் இயக் கிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத் தில் ரஜினியும், செந்திலும் சேர்ந்து நகைச்சுவை நடிப்பை கொட்டினார் கள். கே.ஆர்.விஜயா உணர்ச்சிபூர்வ மான காட்சிகளில் கண்ணீரை வர வழைத்துவிடுவார். கதாநாயகி அமலா அழகானவர், அமைதியானவர். நடிப்பில் திறமையை காட்டிவிடுவார். சரத்பாபு எல்லா விதமான பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் எங்கள் குழுவில் ஓர் உறுப்பினர். நாசரின் வளர்ச்சி அவர் திறமைக்கு கிடைத்தப் பரிசு. வி.கே.ராமசாமி போல் குணச்சித்திர நடிகர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அதேபோல அவருக்கு நகைச்சுவையும் இயல்பாக வரும். இப்படி நல்ல கலைஞர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்துதான் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கினோம்.

கதை முழுக்க ஒரு ஹோட்டலை மையமாக வைத்து நகரும். கதைப்படி, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருவார் ரஜினி. ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் செந்தில், ஹோட்டல் நிர்வாகி நாசரிடம் ரஜினியை தன் ஊர்காரர் என அறிமுகம் செய்து வேலை கேட்பார். ரஜினியிடம் இண்டர்வியூ செய்யும் நாசர், ‘‘உனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியுமா?’’ என்று கேட்பார். அப்போது ரஜினி பேசும் இங்கிலீஷ் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. அந்த அலட்டல் ஆங்கில வசனத்தை பாலசந்தர் சார் எழுதித் தந்தார். ரஜினியின் ஸ்டைலான ஆங்கிலம், தடாலடி உச்சரிப்பு, ஜெட் வேகம் இதெல்லாம் திரை யரங்கில் கைத்தட்டலை அறுவடை செய்தது.

படத்தின் 100-வது நாள் விழாவில் கேடயம் வழங்க வந்த ‘சிலம்புச் செல்வர்’ மா.பொ.சி அவர் கள், ‘‘ரஜினி படத்தில் இங்கிலீஷ் பேசு கிறாரே… அதற்கு என்ன அர்த்தம் என்று என் பேரனிடம் கேட்டேன். ‘அதெல்லாம் ரஜினி இங்கிலிஷ்… உனக்குப் புரியாது தாத்தா’ என்று கூறிவிட்டான். அது எனக் குப் புரியவில்லை என்றாலும், ரஜினியின் அந்த வேகமான நடிப்பு அற்புதம்!’’ என்று ரஜினியைப் பாராட்டினார்.

‘வேலைக்காரன்’ படம் ஒரு ஹோட் டல் பின்னணியைக் கொண்டதால், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலெல்லாம் ஷூட்டிங் செய்ய நினைத்தோம். சென்னை சோழா ஹோட்டல் தொடங்கி டெல்லி, ஆக்ரா, நகர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஹோட்டல்களில் படப்பிடிப்பை நடத்தினோம். இதற்கான ஏற்பாடுகளை ‘கவிதாலயா’ தயாரிப்பு நிர்வாகி நடராஜன் சிறப்பாக செய்து தந்தார். டெல்லி தமிழ்ச் சங்கத்தினரும் படப்பிடிப்புக்கு பல உதவிகளை செய்தது மட்டுமின்றி, சில காட்சிகளில் குடும்பத்தோடு வந்து நடித்தார்கள். அவர்களுக்கு நன்றி.

velaikaran11_3025963a.jpg

தொடர்ச்சியாக பல்வேறு இடங் களில் படப்பிடிப்பு நடந்ததால் பாடல் பதிவுக்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது பாலசந்தர் சார் ‘‘முத்துராமன், நீங்க ஷூட்டிங்ல கவனம் செலுத்துங்க. எனக்குத்தான் பாட்டுக்கான சூழல் தெரியுமே. நான் கவிஞர் மு.மேத்தாவிடம் பாடல்கள் எழுதி வாங்கி, இளையராஜாவோடு அமர்ந்து பாடல் ஒலிப்பதிவை கவனித்து, உங்களுக்கு அதை அனுப்புகிறேன்’’ என்றார். மிகப் பெரிய இயக்குநரான அவர், என் பணிச் சுமையை சுமப்பதைப் போல பொறுப்பேற்றுக் கொண்டது எனக்குப் பெருமையாக இருந்தது. ‘வேலைக்காரன்’ பாடல்கள் சிறப்பாக அமைய மும்மூர்த்திகள் காரணம். கே.பி சார், இசைஞானி, கவிஞர் மு.மேத்தா.

கவிஞர் மு.மேத்தாவைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். தமிழகத் தின் அற்புதமான கவிஞர்களில் ஒருவர். புதுக்கவிதை எழுதுவதில் சிகரம் தொட்டவர். இவரது ‘கண்ணீர்பூக்கள்’ 25-க்கும் மேலான பதிப்புகளைத் தாண்டி அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில், ‘வா வா கண்ணா வா’ பாடலில் ஒரு இடத்தை சுட்டிக்காட்ட விரும்புறேன்.

தாஜ்மஹாலின் காதிலே

ராம காதை கூறலாம்;

மாறும் இந்த பூமியில்

மதங்கள் ஒன்று சேரலாம்!’

- என்று எழுதியிருப்பார். மத நல்லிணக்கத்தை இதைவிட எப்படி அருமையாகச் சொல்ல முடியும்! இதை எழுதிய மு.மேத்தா ஓர் இஸ்லாமியர் என்பதே அவர் வீட்டுக் திருமணத்துக்குப் போனபொதுதான் எனக்குத் தெரியும். கலை உலகம் மதம், ஜாதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்று நினைக்கும்போது ‘மகிழ்ச்சி!’

‘மாமனுக்கு மயிலாப்பூருதான்’ பாடலுக்கு நடனம் ஆட மாமாவும், மாமியும் அங்கே கிடைக்கவில்லை. கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்று எங்களுடைய நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவையும், துணை இயக்குநர் எஸ்.எல்.நாராயணனையும் ஆட வைத்து படமாக்கினோம். புலியூர் சரோஜாவுடன் போட்டிப் போட்டு நடனம் ஆடி கைதட்டல் வாங்கினார் எஸ்.எல். நாராயணன்.

காஷ்மீர், நகருக்கு நாங்கள் படப்பிடிப்புக்குப் போன நேரத்தில் அங்கே கடும் குளிர். மலைகள் பனியில் மூடிக் கிடந்தன. அந்த அழகான சூழலில் ரஜினியையும் அமலாவையும் நடிக்க வைத்து ‘வா.. வா.. கண்ணா’ பாடலை படமாக்கினோம். ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவே ஸ்வெட்டர், கம்பளி கோட், பூட்ஸ் அணிந்துகொண்டு பரபரப்பாக இயங்கிகொண்டிருக்க, அந்தப் பாடல் காட்சியில் அமலா பரத நாட்டிய உடையில் வெறும் காலுடன் நடனம் ஆட வேண்டும். அந்தக் குளிரை எப்படி சமாளித்து நடித்தார் அமலா என்பதை அடுத்து சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-77-ரஜினி-பேசிய-இங்கிலீஷ்/article9157631.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 78: குளிரால் ரஜினி கால்மீது ஏறிக்கொண்ட அமலா!

எஸ்பி.முத்துராமன்

 

 
 
  • ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கமல்ஹாசன், மனோரமா, கே.ஆர்.விஜயா, ஜெய்கணேஷ்
    ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கமல்ஹாசன், மனோரமா, கே.ஆர்.விஜயா, ஜெய்கணேஷ்
  • ‘பேர் சொல்லும் பிள்ளை’ (1987) படத்தில் கமல்ஹாசன், ராதிகா
    ‘பேர் சொல்லும் பிள்ளை’ (1987) படத்தில் கமல்ஹாசன், ராதிகா
 

‘வேலைக்காரன்’ படத்துக்காக ஸ்ரீநகர் பனி மலையில் பட மாக்கிய ‘வா வா வா… கண்ணா வா’ பாடலுக்கு பரதநாட்டிய உடையில் அமலா வெறும் காலோடு நடனம் ஆடியதால், அவருடைய கால்கள் நடுங்கத் தொடங்கின. ஒரு ஷாட் எடுப் பதற்குள்ளேயே பனிக் கட்டிகளில் அவரது கால்கள் இழுத்தன. பெரிய கம்பளி விரிப்பை விரித்து அதன்மேல் அவரை நடனம் ஆட வைத்தோம். கொஞ்ச நேரத்துக்குள் அந்தக் கம்பளி யிலும் ஜில்லென குளிர் படர்ந்து பனியாகி விட்டது. சின்னச் சின்ன ஷாட்டுகளாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

அப்படி படமாக்கும்போது அமலா பனியில் நின்று நடனம் ஆடிவிட்டு ஓடிவந்து ரஜினி அணிந்திருக்கும் ஷூ கால்களின் மீது ஏறி நின்று கொள்வார். அந்தப் பரதநாட்டிய காட்சி முழுக்க அமலா, ரஜினியின் ஷூ கால் உபயத்தோடு ஆடி முடித்தார். பாடல் படப்பிடிப்பு முடிந்ததும் அமலா, ‘‘இப்படியெல்லாம் ஆட வேண்டிய நிலை வரும் என்று தெரிந்திருந்தால் இந்தப் பரத நாட்டியத்தையே கற்றிருக்க மாட் டேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆனால், அந்த நடனத்தை படத்தில் பார்த்தபோது எங்கள் மனம் குளிர்ந்து போனது. உங்கள் மனமும்தான்.

மூன்று தலைமுறை நடிகர் வி.கே.ராம சாமி என் படங்களில் நடிக்கும்போது, ‘‘முத்துராமன் சார் படங்கள்னா நாள் கணக்குன்னு பேசி நடிக்கக் கூடாது. ஒரு படம்னு கான்ட்ராக்ட் போட்டுத்தான் நடிக்கணும். மூணு நாட்கள்ல என் காட்சி களை எல்லாம் ஷூட் பண்ணி முடிச்சுட்டு, உங்க வேலை முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிடுவார். அந்த அளவுக்கு சுறுசுறுப்பா எடுத்துடுறார்’’னு என்னைப் பாராட்டுவார். அந்தப் பாராட்டுக்குள்ள ஒரு சின்ன வருத்தமும் இருக்கும்.

அடுத்து, ஏவி.எம் தயாரிப்பில் நான் இயக்கிய படம் ‘பேர் சொல்லும் பிள்ளை’. அந்த பேர் சொல்லும் பிள்ளை யார்? ஏவி.எம் வீட்டுப் பிள்ளை கமல் தான்! அந்தப் படத்தில் அவருக்கு ஜோடி ராதிகா. முக்கியமான ரோல் களில் கே.ஆர்.விஜயா, ஜெய் கணேஷ், மனோரமா, ரவீந்தர், கவுண்டமணி நடித்தனர். சொந்தப் பிள்ளைகள் எல்லாம் சரியில்லை. வேலைக்கார கமல் நல்ல பிள்ளை. அவர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் கதாபாத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு. அந்தப் பாசம்தான் கதையின் மையக் கரு.

படத்தின் கதையை வி.சி.குகநாதன் எழுதியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘படிக்காத மேதை’ படத்தின் சாயல் கதையில் இருந்தது. சரவணன் சார், ‘‘இந்தப் படத்துக்கு ‘படிக்காத மேதை’ படத்துக்கு வசனம் எழுதிய கே.எஸ். கோபாலகிருஷ்ண னையே வசனம் எழுத வைக்கலாமே?’’ என்று சொன்னார். விஷயத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் போய் சொன்னோம். மகிழ்வோடு ஒப்புக்கொண்டார். \

kamal11_3034275a.jpg

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன் வசனத்தால் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கே.ஆர்.விஜயாவை அறிமுகம் செய்து ‘கற்பகம்’ என்ற படத்தை இயக்கிய அவர், அந்தப் படத்தின் வெற்றியில் கிடைத்த பணத்தை வைத்து சென்னையில் ‘கற்பகம்’ ஸ்டுடியோவை நிறுவினார். அந்த அளவுக்கு திறமைசாலி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். தினமும் நான் வீட்டில் இருந்து கிளம்பி வரும்போது, ‘கற்பகம்’ ஸ்டுடியோ வழியேதான் வருவேன். இன்றைக்கு அந்த ‘கற்பகம்’ ஸ்டுடியோ அடுக்கு மாடிக் கட்டிடங் களாக உயர்ந்து நிற்கிறது. சினிமா உலகத்தின் நிலை இப்படித்தான் நிறைய மாறிவிட்டது!

எப்போதுமே கமலுக்கு டான்ஸ் என்றால் அவ்வளவு ஆர்வம். உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிப்புக்குள் வந்தவராச்சே, இருக்காதா! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்துக்கு புலியூர் சரோஜாதான் டான்ஸ் மாஸ்டர். ‘‘மாப்ளே... மாப்ளே’’ என்றுதான் கமலை செல்லமாக அவர் அழைப்பார். அதுக்கு கமல், ‘‘ நீங்க, ஒரு பெண்ணை பெத்து கொடுத்திருந்தா நான் கல்யாணம் செய்திருப்பேன்’’ என்று சொல்வார். இருவரும் உறவுமுறை கொண்டாடும் அளவுக்கு அப்படி ஒரு நட்பு!

‘அம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி’ என்ற பாடலில் கமல் வேலை பார்த்துக் கொண்டே நடனம் ஆடி, தத்ரூபமான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப் பாடலுக்கு நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களை வரவழைத்து கமலோடு சேர்ந்து ஆட வைத்தோம். இளமை துடிப்போடு ஆடிய இளைஞர்களில் பலர் இன் றைக்கு டான்ஸ் மாஸ்டர்கள். இந்தப் பெருமை புலியூர் சரோஜாவை சேரும்.

‘விளக்கேத்து விளக்கேத்து வெள் ளிக்கிழமை’ பாடலுக்கு கமலோடு சேர்ந்து ரம்யா கிருஷ்ணன் நடனம் ஆடுவார். மத்தாப்பு, பட்டாசு என்று வாணவேடிக்கைக்கு இடையே பாடல் படமாக்கப்பட்டது. இரவு 12 மணி இருக்கும். புரொடெக்‌ஷன்ல ஒரு பையன் ஓடி வந்து, ‘‘சார்... பட்டாசு, மத்தாப்பு எல்லாம் தீரப் போகுது?’’ன்னு சொன்னார். எனக்கு ஒரே அதிர்ச்சி. இந்த விஷயம் ஆர்டிஸ்ட்டுக்கு தெரியக் கூடாது. தெரிந்தால் ‘‘என்ன சார் இது?’’ என்று அலுத்துக்கொள்வார்கள்.

அந்த நடுராத்திரியில் எங்கே போய் பட்டாசு வாங்க முடியும்? தீபாவளி முடிந்த நேரம் அது. யூனிட் ஆட்களில் சிலரை அனுப்பி தேடச் சொன்னோம். ஒரு வழியாக வடபழனியில் மூடி இருந்த ஒரு கடையைக் கண்டுபிடித்தனர். அந்தக் கடைக்காரரை வீட்டுக்குப் போய் அழைத்து வந்து கார்த்திகை தீபத் திருநாளுக்காக விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகளை எல்லாம் வாங்கி வந்தனர். அன்றைக்கு பட்டாசு கிடைக்காமல் போயிருந்தால் அதற்கு மேல் படப்பிடிப்பே நடத்தியிருக்க முடியாது. இயக்குநருக்குத்தான் கெட்டப் பேர். என்னதான் தெளிவாக திட்டம்போட்டு ஷூட்டிங் நடத்தினாலும் இப்படி சில நெருக்கடிகள் வரத்தான் செய்யும். அதுதான் ‘சினிமா எடுத்துப் பார்’!

‘விளக்கேத்து… விளக்கேத்து’ பாட லுக்கு நடனமாடிய ரம்யா கிருஷ்ணன் தான் பின்னாளில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு சவால் விடும் ‘நீலாம்பரி’ ரோலில் நடித்தார். அதில் அவரது அபார நடிப்புத் திறமை வெளிப்பட்டது. பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது ‘படையப்பா. அவருக்கு நம் பாராட்டுகள்!

‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் ஆச்சி மனோரமா, ஆச்சியாகவே நடித்தார். அவரது மகள் ராதிகா. அவரும் செட்டிநாட்டு பாஷையில்தான் பேசுவார். ராதிகாவின் செட்டிநாட்டு பேச்சு அவ்வளவு தத்ரூப மாக இருந்தது. அதற்கு துணை ஆச்சி தான். படத்தில் ராதிகா கிராமத்துப் பெண். அவர் பேசுவது போலவே கமலும் கிராமத்து பாஷை பேசி ராதிகாவை கேலிசெய்வார். அவர் களுக்கு இடையே காதல் வளரும். கமலின் கலகல கலாட்டா ராதிகா வுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும்தான் உற்சாகமளித்தது. அப்படியென்ன கமல் உற்சாகமளித்தார் என்பதை வரும் வாரம் சொல்கிறேனே!

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-78-குளிரால்-ரஜினி-கால்மீது-ஏறிக்கொண்ட-அமலா/article9187622.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 79: எவன்தான் மனிதன்?

எஸ்பி.முத்துராமன்

  • ‘மனிதன்’ படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா.
    ‘மனிதன்’ படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா.
  • ‘மனிதன்’ படத்தில் ரூபினி, ரஜினிகாந்த்.
    ‘மனிதன்’ படத்தில் ரூபினி, ரஜினிகாந்த்.
 

’பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் பணிபுரிந்தபோது, கமல் அப்படி என்ன எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார்? என்ற கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தேன். கமல், ஏவி.எம்.சரவணன் சார், குகன் சார் மூவரும் சேர்ந்து படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை படத்தில் பணிபுரிந்த ‘எங்கள் குழுவுக்கு’ கொடுப்பதாக முடிவு செய்தார்கள். அந்தத் தொகை படத்தில் பணிபுரிந்த எங்கள் குழுவுக்குக் கிடைத்த போனஸ் தொகையாக எண்ணி மகிழ்ந்தோம். கமலுக்கும், சரவணன் சாருக்கும், குகன் சாருக்கும் எங்கள் உளம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

அடுத்து நான் இயக்கிய படம், ஏவி.எம் நிறுவனம் தயாரித்த ‘மனிதன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பொருத்தமான தலைப்பு. சாதாரண நிலையில் இருந்து வளர்ந்து இன்றைக்கு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு உயரத்தில் இருக்கும்போதும் எந்த பந்தாவும் இல்லாமல் ஒருவர் இருக்க முடியுமா? முடியும். அது ரஜினியிடம் இருக்கிறது. அதற்கு மனப்பக்குவம் வேண்டும்.

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் அவரை எப்படி பார்த்தேனோ, அதேமாதிரிதான் இன்றைக்கும் பழகி வருகிறார். என்னோடு மட்டுமல்ல, எங்கள் படக் குழுவினர் ஒவ்வொருவரோடும் அப்படி ஒரு அன்போடு பழகுகிறார். அப்போதெல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்போது ஏவி.எம் ‘லைட் மேன்’ வீரப்பனைப் பார்த்ததும் அவரது தோள்களில் கை போட்டுக்கொண்டு நகைச்சுவையாக பேசு வார். அதேமாதிரி ‘மேக்கப் மேன்’ முத்தப்பா படத்தில் நடித்தால் ராசி என்று சொல்லி, அவருக்கு ஒரு ரோல் வாங்கிக் கொடுத்து விடுவார். என்றைக்கும், மாறாத அதே குணமும், அன்பும்தான் ரஜினியின் மனிதநேயம்.

ஏழை, பணக்காரர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் காட்டும் படம்தான், ‘மனிதன்’. ஏழைகள் எப்போதும் பணக்காரர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? என்பதை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பு. அந்த அமைப்புக்கு தலைவராக ரஜினி நடித்தார். பணக்காரர்கள் தரப்பில் வினு சக்ரவர்த்தி, ரகுவரன், சோ ஆகியோர் நடித்தனர். எங்களது பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்தப்படத்தில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் இணைந்தார். இனிமையாக இசையமைத்தார். கவிப்பேரரசு வைரமுத்து கருத்தோடு பாடல்கள் எழுதினார்.

ரஜினி நடித்த படங்களான ‘முரட்டுக்காளை’, ‘போக்கிரி ராஜா’, ‘பாயும்புலி’ உள்ளிட்ட படங்களின் பெயர்களை வைத்து ‘காளை காளை முரட்டுக்காளை’ என்ற பாடலை வைரமுத்து உருவாக்கினார். அந்தப்பாடலின் வரிகளைக் கேட்டுவிட்டு ரஜினி, ‘முத்துராமன் சார், என்ன இது? இந்தப்பாட்டு என்னை நானே பெரிதாக ஃபோகஸ் பண்ணிக்கிற மாதிரி இருக்கே! இது வேண்டாம்னு தோணுது!’ என்றார். நான், ‘அப்படியெல்லாம் இல்லை ரஜினி. பாட்டு இயல்பா இருக்கு. அதுவும் கதையோட சூழலுக்கு மிகவும் பொருத்தமா இருக்கு. கவிப்பேரரசர் படங்க ளின் பெயர்களை அழகாக கோர்த் திருக்கிறார். நிச்சயம் உங்களோட ரசிகர்கள் கொண்டாடுவார்கள்!’ என்று ரஜினியை சமாதானப்படுத்தி அந்தப் பாட்டை எடுத்தோம்.

raj2_3041562a.jpg

படம் ரிலீஸானதும் அந்தப் பாட்டைப் பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி, விசில் அடித்து ‘ஒன்ஸ்மோர்.. ஒன்ஸ்மோர்’ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால், தியேட்டரில் திரும்பவும் அந்தப்பாடலைப் போட்டார்கள். இப்படி பல ஊர்களிலும் நடந்தது.

ஒருநாள், ஏவி.எம் ஸ்டுடியோவில் ‘மனிதன்’ படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த் அங்கேயே இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. என் அறைக்கு வந்தவர், ‘முத்துராமன் சார், அடுத்து ஷூட்டிங் இங்கேயே இருக்கு. வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்!’’ என்றவர், என் அறையில் இருந்த பாத்ரூமை பார்த்ததும், ‘நான், இங்கேயே குளிச்சிடுறேன்!’ என்று கூறி, உதவியாளரை அழைத்து ஒரு கைலி, துண்டு எடுத்து வரச்சொல்லி குளித்து ரெடியாகி படப்பிடிப்புக்குக் கிளம்பினார்.

அப்போது ‘மனிதன்.. மனிதன் எவன்தான் மனிதன்’ என்ற பாடல் பக்கத்து அறையில் கேட்டது. அதை கேட்ட ரஜினிகாந்த், ‘இந்தப் பாட்டு எந்த இடத்துல இடம்பெறுது?’’ என்று கேட்டார். அதற்கு நான், ‘படத்துக்குள்ள அதுக்கு சரியான இடம் அமையலை. எங்கே வைக்கிற துன்னு யோசிச்சுக்கிட்டிருக்கோம்!’’ என்று, சொன்னேன். உடனே ரஜினி, ‘சாங் ரொம்ப நல்லா வந்திருக்கு. கண்டிப்பா படத்துல வச்சே ஆகணும்!’’ என்றார். எல்லோரும் கலந்துபேசி டைட்டில் சாங்காக இந்தப் பாட்டை வைக்க முடிவு செய்தோம். ரஜினியை வைத்து, பலவிதமான ஸ்டைல், ஆக்‌ஷன் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் எடுத்து சேர்த்தோம். அதன்மீது டைட்டில்களை போட்டோம். பாட்டோட கருத்தும், ஓபனிங்கில் சூப்பர் ஸ்டாரோட ஸ்டைல், ஆக்‌ஷன்ஸும் படத் துக்கே மிகப் பெரிய ஓபனிங்கை கொடுத்தது.

‘மனிதன்’ படத்தில் கார் சேஸிங்கோடு ஒரு சண்டைக் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். அதற்கு கார்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு உடைக்க வேண்டும். குகன் சார், பழைய கார்களை எல்லாம் ஒன்றுசேர்த்து ஆண்டுக்கொருமுறை நடக்கும் கண்காட்சிகளில் பங்குபெறும் பிரியம் கொண்டவர். விஷயத்தைச் சொன்னதும், ‘என்ன கார் வேணும்னு சொல்லுங்க. விலைக்கு வாங்கித் தர்றேன்’ என்று சொன்னார். ‘கார்களை பணம் கொடுத்து வாங்கி உடைக்க வேண்டுமா?’ என்று நான் சங்கடப்பட்டேன். குகன் சார், “காட்சியை அமைச்சிட்டீங்க? இப்ப யோசனை பண்ணா எப்படி?’’ என்று கூறி, கார்களை வாங்கிக்கொடுத்தார்.

கார்களை மோதவிட்டு எடுக்கும் சண்டைக் காட்சியை எடுக்க ஆரம்பித்தோம். படப்பிடிப்பு நடந்த அன்று அதிகாலை 3 மணி இருக்கும். கார் பல்டி அடிக்கிற மாதிரி காட்சியை எடுக்க வேண்டும்! காரை ஓட்டும் ஃபைட்டரிடம் விஷயத்தைச் சொன்னோம். அவரும், ‘ஓ.கே’ என்று கூறிவிட்டு தயாரானார். கார் பல்டி அடித்த காட்சி தத்ரூபமாக வந்தது. காட்சியை எடுத்து முடிந்ததும் சில விநாடிகள் வரைக்கும் கார் ஓட்டிய ஃபைட்டர் வெளியே வரவில்லை. பதற்றத் தோடு ‘அவருக்கு என்ன ஆச்சு?’ என்று போய் பார்த்தோம். அவர் வெளியே வர முடியவில்லை. காரின் கதவை உடைத்து அவரை வெளியே கொண்டு வந்தோம். ஃபைட்டர் கையில் இருந்து ரத்தம் வடிந்தது. கையைப் பிடித்து பார்த்தால் மூன்று விரல்கள் இல்லை. அடுத்து?

- இன்னும் படம் பார்ப்போம். |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-79-எவன்தான்-மனிதன்/article9210195.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 80: ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கை!

எஸ்பி.முத்துராமன்

  • ‘மனிதன்’ படத்தில் ரகுவரன், ரஜினிகாந்த்
    ‘மனிதன்’ படத்தில் ரகுவரன், ரஜினிகாந்த்
  • ‘மனிதன்’ படத்தில் ரஜினிகாந்த், ரூபிணி
    ‘மனிதன்’ படத்தில் ரஜினிகாந்த், ரூபிணி
 

‘மனிதன்’ படத்துக்காக கார்கள் மோதும் சண்டைக் காட்சியை எடுத்தபோது, அதில் சிக்கி விபத்துக்குள்ளான ஃபைட்டரின் மூன்று விரல்கள் எங்கே என்று தேடினோம். அதில் இரண்டு விரல்களைத்தான் கண்டு பிடிக்க முடிந்தது. சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் இதுமாதிரி துண் டான விரல்களை ஒட்ட வைக்கும் சிகிச்சை அளிப்பதாக சொன்னார்கள். உடனே அவரை அங்கே அழைத்துச் சென்றோம். துண்டான இரண்டு விரல் களையும் மருத்துவர்கள் கையோடு இணைத்தனர். அந்த மூன்றாவது விரலை கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற கவலை எங்கள் படக்குழுவினருக்கு இருக்கவே செய்தது.

அந்த ஃபைட்டர் என்னை எங்கே பார்த்தாலும், ‘குட் மார்னிங் சார்’ என்று சல்யூட் அடிப்பார். கையில் அந்த ஒரு விரல் இருக்காது. ‘மனி தன்’ படத்துக்காக ஒரு விரலை இழந்துவிட்டாயே!’ என்று கவலையோடு விசாரிப்பேன். ‘அதெல்லாம் பரவா யில்லை.. விடுங்க சார்’ என்பார். அதில் அவரது வீரம் தெரியும்.

சினிமாவில் உள்ள ஸ்டண்ட் கலைஞ ர்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது. அவர்களது உழைப்பு பெரும்பாலும் ரிஸ்க் நிறைந்ததாகவே இருக்கும். எங் களுடைய அதிக படங்களுக்கு ஸ்டண்ட் அமைக்கும் ஜூடோ ரத்னம் மாஸ்டர் குழுவில் ரவி என்று ஒரு ஃபைட்டர் இருந் தார். அப்படி ஒரு சுறுசுறுப்பு. எப்படிப் பட்ட காட்சியாக இருந்தாலும், எவ்வளவு ரிஸ்க் என்றாலும் கொஞ்சமும் யோசிக் காமல் களத்தில் இறங்கிவிடுவார்.

படங்களில் ஆபத்து நிறைந்த சண் டைக் காட்சிகளை ஷூட் செய்யும் போதெல்லாம், ரிஸ்க் அதிகம் இருந்தால் நானே அந்தக் காட்சியை எடுக்க மாட் டேன். சில மாதங்களுக்கு பிறகு வேறு ஒரு படத்தில் ஆபத்தான காட்சியில் நடிக்கும்போது ரவி விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரை விடும் அளவுக்கு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களது வீரத் தையும், உழைப்பையும் மனமார பாராட்ட வேண்டும். ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் ‘சண்டைக் காட்சி நடிகர்களுக்கும் விருது கொடுக்க வேண்டும்’ என்று அரசுக்கு வேண்டுகோள் வைத் திருக்கிறார். அதை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

‘மனிதன்’

படத்தில் வில்லன் ரகுவரன் மாதுரியிடம் தவறாக நடந்துவிடுவார். ரஜினி கடுமையான கோபத்தோடு வந்து ரகுவரனிடம், ‘ஏழைகள்னா உனக்கு கிள்ளுக்கீரையா போச்சா!?’ என்று பயங் கரமாக வாதிடுவார். அதை துளியும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாத ரகு வரன் பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டே ரஜினியை கிண்டலடிப்பார். ரஜினிக்கு கோபம் கொப்பளிக்கும் அந்த எமோஷனல் காட்சியோடு இடைவேளை வைப்பதாக திட்டமிட்டிருந்தோம்.

manithan11_3049839a.jpg

அந்தக் காட்சியை ஷூட் பண்ணிக் கொண்டிருக்கும்போது இடைவேளைக் காட்சியை இன்னும் எமோஷனலாக வைக்கலாமே என்று எனக்குத் தோன்றி யது. அப்போது ரஜினியை அழைத்து, ‘இந்த இடத்தில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனோட பாட்டை சேர்த்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று பாட லைக் கூறினேன். ‘‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!’’ இந்தப் பாடலை ரஜினி யிடம் சொன்னேன். நான் சொன்னதை ரகுவரனைப் பார்த்து அவருடைய ஸ்டைலில் உணர்ச்சியோடு கூறினார். அந்த இடத்தில் இடைவேளை. தியேட்டரில் அப்படி ஒரு கைதட்டல், ஆரவாரம். ரசிகர்களின் அந்த உணர்ச்சி வசப்பட்ட ஆரவாரம் இப்போதும் என் கண் முன் நிற்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை குகை மாதிரி ஒரு பின்னணி உள்ள இடத்தில் படமாக்கலாம் என்று தேடினோம். அந்த நேரத்தில் சென்னை, பூந்தமல்லியை அடுத்து உள்ள இடங்களில் நவீனமயமான செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்ப் பதற்கு செங்கல் வீடு மாதிரியும், குகை மாதிரியும் வித்தியாசமாக இருந்தன. செட்டே போட்டாலும் இந்த மாதிரி தத்ரூப மாக வராது என்று அந்த இடங்களில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கும் வேலையில் இறங்கினோம்.

ரஜினி இந்த கிளைமாக்ஸ் சண்டைக்கு புறப்படும்போது ராணுவ வீரர்கள் அணியும் உடையைப் போல் அணிந்திருப்பார். அந்த சட்டையைப் போட்டு ஜிப் மாட்டுவது, பேண்ட்டில் ஜிப் மாட்டுவது, பூட்ஸில் ஜிப் மாட்டு வது போன்ற ஷாட்டுகளை குளோஸ் அப்களில் எடுத்தோம். அதற்கே கைதட் டல். அந்த உடையில் ரஜினி நடந்த வீர நடைக்கு கைதட்டலோ கைதட்டல்!

சண்டைக் காட்சியில் ரஜினி, தன் னோடு மோதும் வில்லன்கள்.. தன் மீது வீசும் வெடி குண்டுகளை ஜம்ப் செய்து பிடித்து ஸ்டைலாக வில்லன்கள் மீதே வீசுவார். வில்லன்கள் அடிப்பட்டு விழுவார்கள். இதுபோல ரசிகர்களின் கைதட்டல்களை பெறக்கூடிய ஸ்டைல் ஷாட்டுகளை இணைத்தோம். படம் முழுவதும் தயாரானதும் சரவணன் சாரிடம் போட்டுக் காட்டினோம். பார்த்து விட்டு, ‘படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கிளைமாக்ஸ் சண்டையில ரஜினி தனி ஸ்டைலோட வில்லன்கள் மேல குண்டு வீசுறாரே அது இன்னும் அஞ்சு, ஆறு இடத்துல இருந்தா அவரோட ரசிகர்கள் கைதட்டி ரசிப்பாங்க. பரவாயில்லை. படத்தைத்தான் முடிச்சிட்டீங்களே! என்று சொன்னார்.

அந்த நேரத்தில் ரஜினி பெங்களூ ரில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். ‘உங்களோட கிளைமாக்ஸ் சண்டை ஸ்டைல் எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு. படத்தை பார்த்துட்டு சரவணன் சார், ‘கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில நீங்க வில்லன்கள் மேல வெடிகுண்டை ஸ்டைலா தூக்கிப்போடுற ஷாட்டுகள் இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்கும்!’’னு நினைக்கிறார் என்று சொன்னேன். அதுக்கு ரஜினி, ‘ஒண் ணும் பிரச்சினை இல்லை. வர்ற ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஷூட்டிங் இல்லை. வேண்டிய ஏற்பாடுகளை நீங்க பண்ணிடுங்க. நான் காலையில வந்துட்டு ஈவ்னிங் பெங்களூர் திரும்பிடு றேன்!’ன்னு சொன்னார். திரும்பவும் அந்த செங்கல் சூளைக்கு போய் சரவணன் சார் சொன்னமாதிரி ரஜினியின் பல ஸ்டைலான ஷாட்டுகளை எடுத்து படத்தில் சேர்த்தோம்.

அதை சரவணன் சாரிடம் போட்டுக் காட்டினோம். பார்த்து மகிழ்ந்தார். ‘என்ன முத்துராமன். நான் சும்மா ஒரு யோசனையாத்தான் சொன்னேன்! ஆனால், நீங்க ரஜினியை வர வழைச்சு ஷூட் பண்ணி சேர்த்துட்டீங்க. ரஜினிக்கு தேங்ஸ் சொல்லிடுங்க. உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்!’ என்றும் சொன்னார். அந்த கிளைமாக்ஸ் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பொதுவாக நூறு நாட்கள், வெள்ளி விழா ஓடும் படங்களுக்கு பிரம்மாண்ட மாக விழா எடுப்போம். அந்த மாதிரி ‘மனிதன்’ படத்துக்கும் விழா எடுத்தோம். அந்த விழா ஒரு வித்தியாசமான விழா! என்ன வித்தியாசம்?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-80-ஸ்டண்ட்-கலைஞர்களின்-வாழ்க்கை/article9238562.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 81: கண் தானத்தை ஊக்குவித்த ரஜினி!

எஸ்பி.முத்துராமன்

 

 
  • ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினிகாந்த், கெளதமி
    ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினிகாந்த், கெளதமி
  • ‘குரு சிஷ்யன்’ படப்பிடிப்பில் பஞ்சு அருணாசலம், எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த், பிரபு
    ‘குரு சிஷ்யன்’ படப்பிடிப்பில் பஞ்சு அருணாசலம், எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த், பிரபு
 

மனிதன்’ படத்தின் வெள்ளி விழா 20.4.1988-ல் சென்னை, ராஜேஸ் வரி கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமான சினிமா கொண்டாட்ட விழாவாக மட்டுமல் லாமல் வித்தியாசமான விழாவாகவும் அமைந்தது. அதற்கு காரணம் ‘சங்கர நேத்ராலயா’ கண் மருத்துவமனை சேர்மன் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர் கள்தான். சரவணன் சாரை டாக்டர் பத்ரி நாத் அவர்கள் சந்தித்து, ‘‘நம்ம நாட்டுல ‘கண் தானம்’ குறித்த விழிப்புணர்வு மக்கள்ட்ட இன்னும் சரியா போய்ச் சேரலை. ஒவ்வொருவரும் இறந்த பிறகு கண் தானம் செய்யணும்கிற உணர்வை உண்டாக்கணும்.

இதை ரஜினி சார் சொன்னால் நல்லா இருக்கும். மக்கள் கிட்டயும் ஈஸியா போய்ச் சேரும்!’’ என்று கூறியிருக்கிறார். உடனே சரவணன் சார் என்னை அழைத்து, விஷயத்தை சொன்னார். நானும் ரஜினியை சந்தித்து டாக்டர் பத்ரிநாத் அவர்கள் சொன்ன தகவலை சொன்னேன். ரஜினியும், ‘‘நல்ல விஷயமாச்சே. நிச்சயம் செய் வோம் சார்!’’ என்றார்.

ரஜினியை நடிக்க வைத்து ‘தானத்தில் சிறந்த தானம் கண் தானம்’, இறப்புக் குப் பின் ஒவ்வொருவரும் நிச்சயம் கண் தானம் செய்வதாக மனு கொடுக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் குறும்படமாக எடுத்து வெளியிட் டோம். ரஜினி சொன்னதாலேயே அந்தக் கருத்து மக்களிடம் போய்ச் சேர்ந்தது. ‘மனிதன்’ வெள்ளி விழா மேடையில் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் மனு கொடுக்கலாம் என்ற தகவலை பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் வெளியிட்டோம்.

‘மனிதன்’ பட விழாவில் மக்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வந்து குவிந்தன. அப்படி வந்த மனு ஒன்றில், ‘எங்கள் தலைவர் ரஜினிகாந்த் கண் தானம் கொடுக்கச் சொல்லி விட்டார். இப்போதே ரெண்டு கண்கள்ல ஒரு கண்ணை கொடுக்குறேன். எங்கே வரணும்? எப்போ வரணும்னு சொல் லுங்க?’’ன்னு ஒருவர் எழுதியிருந்தார். அந்த அளவுக்கு ரஜினியின் வேண்டு கோளுக்கு மதிப்பிருந்தது. இன்றைக் கும் சங்கர நேத்ராலயாவுக்கு பலர் கண் தானம் செய்துகொண்டிருக் கிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த ரஜினிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

‘மனிதன்’ வெள்ளிவிழா நிகழ்ச்சியில் வழக்கம் போல படக்குழுவினருக்குக் கேடயம் வழங்கப்பட்டது. மேடையில் இருந்த விருந்தினர்கள் பலரும், ‘‘முத்து ராமன் மாதிரி சினிமாத் துறையில் நல்ல மனிதர் யாரும் இல்லை!’’ என்று பேசினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சோ அவர்கள் பேசும்போது, ‘‘இங்கே முத்துராமனை எல்லோரும் சினிமாத்துறையில் இவ ரைப் போல நல்ல மனிதர் யாரும் இல்லை என்று பேசினார்கள்.

அதை நான் மறுக்கிறேன்!’’ன்னு சொன்னார். ஒரு நிமிஷம் அரங்கமே அமைதியானது. ஒரு சின்ன இடைவேளைக்குப் பின், ‘‘அவர் சினிமாத் துறையில மட்டுமல்ல; உலகத்துலயே ரொம்ப நல்ல மனிதர்!’’ என்று முடித்தார். கைத்தட்டல் அதிர்ந் தது. எங்கேயும், எப்போதும் யாரை சந்திக்கும்போதும் என்னைப் பற்றி பேச்சு எழுந்தால் சோ சார் அவர்கள், என்னை உயர்வாகவே பேசுவார்கள். அந்த நல்ல உள்ளத்துக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்!

சில மாதங்களுக்கு முன் சோ அவர் கள் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது அவரை பார்க்க பலமுறை முயற்சி செய் தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் பார்க்க முடியாமல் போயிற்று. சமீபத்தில் அவரது உடல் நிலை குணமாகி ‘துக்ளக்’ ஆபீஸில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அந்த நேரத்தில் கண்ணதாசன் விழா நிகழ்ச்சி வந்ததால் அதற்கான அழைப் பிதழுடன் அவரை சந்திக்கச் சென்றேன். ஒவ்வொரு ஆண்டு கண்ணதாசன் விழா வின்போதும் நானும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும்தான் அழைப்பிதழோடு சென்று அவரை அழைப்போம். இந்தமுறை நானும், அறக்கட்டளைத் தலைவர் ‘இலக்கிய சிந்தனை’பா.லட்சுமணன் அவர்களும் போனோம்.

அவரை பார்த்த நேரத்தில் ‘துக்ளக்’ இதழுக்கு எழுத வேண்டிய கட்டுரையை அவர் சொல்லச் சொல்ல அவரது உதவியாளர் எழுதிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் சோ அவர்களுக்கு மகிழ்ச்சி. கவியரசர் விழாவினை சிறப்பாக நடத்துவதற்காக எங்களை பாராட்டினார்.

சோ சார் அவர்கள் எந்த விஷயத்திலும் துணிச்சலோடு முடிவெடுப்பார். ‘ஒன் மேன் ஷோ’ என்று சொல்ற மாதிரி அவர் ஒரு ‘ஒன் மேன் ஆர்மி’. விரைவில் அவர் பூரண குணம்பெற்று பேச்சு, எழுத்து, நடிப்பு, அரசியல் ஆகிய விஷயங்களில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துவோம்!

spm12_3058504a.jpg

ஒருமுறை பஞ்சு அருணாசலம் அவர் களுக்கு சில சிக்கல்கள் உருவானது. ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணி னால் அந்தப் பிரச்சினையில் இருந்து அவர் வெளியே வர முடியும். இந்த விஷயத்தை ரஜினியிடம் போய் சொன் னேன். அதுக்கு ரஜினி, ‘‘என்ன முத்து ராமன் சார், தேதியே இல்லை. எப்படி இந்த நேரத்துல படம் பண்ண முடியும்? இருந்தாலும் நம்ம பஞ்சு சாராச்சே! எப்படி செய்யாம இருக்கறது? நான் பத்து நாள் கால்ஷீட் கொடுக்கிறேன். அதுக்கு தகுந்த மாதிரி ஒரு கதையைத் தயார் பண்ணுங்க?’’ன்னு சொன்னார். அதுக்கு நான், ‘‘எப்படி ரஜினி? நீ கெஸ்ட் ரோல் பண்ணினா, ரஜினி வந்துட்டு போறார்னு சொல்வாங்க. விநியோகஸ் தர்கள் படத்துக்கு உரிய விலை கொடுக்க மாட்டாங்க. பெருசா வியா பாரம் ஆகாது. நான் ஒரு யோசனை சொல்றேன். அது உன்னால முடியு மான்னு பாரு!’’ன்னு சொன்னேன். ‘‘என்ன சார்..!’’னு கேட்டார்.

‘‘பத்து நாட்கள்னு கொடுக்கிற தேதியை இருபத்தைந்து நாட்களா கொடு. உன்னை வைத்து முழு படத்தையும் எடுத்துடுறேன்!’’ன்னு சொன்னேன். அதுக்கு அவர், ‘‘எப்படி சார் 25 நாட்கள்ல முழு படம் எடுக்க முடியும்?!’னு கேட்டார். அதுக்கு நான் ஹிந்தியில் ஒரு படத்தை பார்த்து வெச்சிருக்கோம். அதில் ரெண்டு ஹீரோ. அதனால உன்னோட கால்ஷீட்டுக்கு 25 நாட்கள் போதும்!’’னு சொன்னேன். அதுக்கு ரஜினி, ‘‘சரி.. சார். ஆனா 25 நாட்களுக்கு மேல ஒரு நாள்கூட தேதி இல்லை!’’ன்னு சொன்னார். உடனே நான், ‘ஒரு நாள் கூட அதிகமா கேட்க மாட்டேன்!’னு சொன்னேன். அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘குரு சிஷ்யன்’.

‘குரு சிஷ்யன்’ படத்துக்காக விஜிபி-யில் ‘ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு’ பாட்டோட ஷூட்டிங். கவுதமிக்கு முதல்நாள் படப்பிடிப்பு. ரஜினிகூட ஆடும்போது அவருக்கு சரியா மூவ் மெண்ட் வரலை. ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுத்துப் பார்த்தோம். எனக்கும், ரஜினிக்கும் திருப்தியா இல்லை. எப்படி ஷூட்டிங்கை தொடர்வது?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/சினிமா-எடுத்துப்-பார்-81-கண்-தானத்தை-ஊக்குவித்த-ரஜினி/article9270537.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 82: பிரபுவுக்கு விட்டுக்கொடுத்த ரஜினி!

எஸ்பி.முத்துராமன்

 
‘குரு சிஷ்யன்’ படத்தில் பிரபு, வினுசக்கரவர்த்தி, ரஜினிகாந்த்.
‘குரு சிஷ்யன்’ படத்தில் பிரபு, வினுசக்கரவர்த்தி, ரஜினிகாந்த்.
 
 

குரு சிஷ்யன்’ படத்தில்தான் கவுதமி அறிமுகம். ரஜினியுடன் முதன் முதலில் சேர்ந்து நடனம் ஆடு வதில் அவருக்குத் தயக்கம். ‘‘உன்கூட ஃபர்ஸ்ட் டைம் நடிக்கிறதுல கவுதமி பயப் படுறாங்க. முதல்ல ரெண்டு நாளைக்கு ஸீன்ஸ் எடுப்போம். அடுத்து இந்தப் பாட் டுக்குள்ள போவோம்!’’னு ரஜினியிடம் சொன்னேன். ‘‘ஆமாம் சார். அது சரியா இருக்கும்’’னு அவரும் சொன்னார். அதே மாதிரி அடுத்து ரெண்டு நாட்கள் காட்சி களை ஷூட் பண்ணினோம். கவுதமிக்கு புலியூர் சரோஜா பிரம்பால் அடிக்காத குறையாக வார்த்தைகளால் அடித்து அவரை தயார் செய்துவிட்டார்.

ரஜினி யோடு காட்சிகளில் நடித்ததால் கவு தமிக்குப் பயம் போய்விட்டது. பயத்தி னால் ஏற்பட்ட ஆட்டம் போய் நடனம் சிறப்பாக ஆடினார். அதன் பிறகு, தமிழில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். எந்த மாதிரியான கதா பாத்திரம் என்றாலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை கவுதமி. தமிழில் தனக்கான ஒரு தனி இடத்தைப் பெற்று பெரிய அளவில் வெற்றியும் பெற்றவர். இன்றும் நடித்துக் கொண்டிருப்பவர். அவருக்கு வாழ்த் துக்கள்!

படத்தின் ரெண்டாவது ஹீரோவாக இளைய திலகம் பிரபு நடித்தார். அவர் எங்க யூனிட்டோட செல்லப் பிள்ளை. ரஜினி செய்ய வேண் டிய ஒரு சண்டைக் காட்சியைப் பிரபுவுக்கு விட்டுக் கொடுத்தார். ‘‘ஏன் ரஜினி?’’ன்னு கேட்டதும், ‘‘பிரபு பண்ணட்டும் சார். அவர் சண்டை போட்டுட்டிருக்கும்போது கடைசியில நான் புகுந்து ஃபினிஷ் பண்ணிக்கிறேன்’’ன்னு சொன்னார். அதுக்குக் காரணம் பிரபுவுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை உயர்த்து வதற்காகவே. இரண்டு ஹீரோக் கள் என்றால் சண்டை வரும். இந்த இரண்டு ஹீரோக்களும் கைகோர்த்துக் கொண்டார்கள்.

மைசூரில் ஷூட்டிங். பிரபுவுக்கு ஜோடி யாக நடித்த சீதா அப்போது தமிழ், தெலுங்கு என்று பிஸியாக இருந்தார். பிரபுவையும், அவரையும் வைத்து மைசூர் பிருந்தாவன் கார்டனில் ‘வா வா வஞ்சி இளமானே…’ பாடலைப் படமாக்க வேண்டும். அந்தப் பாடலை எடுத்தால் ரஜினிக்கு வேலை இருக்காது. ரஜினி யைப் பார்த்து, ‘‘ஒருநாள் முழுக்க பிரபு, சீதா இருவரையும் வைத்து பாடல் ஷூட் டிங்கை முடிச்சிடுறேன். நீ வேணும்னா இந்த ஒரு நாள் மட்டும் சென்னைக்குப் போய்ட்டுத் திரும்பி வந்துடு’’ன்னு சொன் னேன். அதுக்கு ரஜினி, ‘‘முத்துராமன் சார்… உங்களுக்கு நான் கொடுத்தது 25 நாட்கள்தான். அதுக்கு மேல என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது. நான் ஊருக்குப் போனா அப்புறம் இன்னொரு நாள் கேட்டீங்கன்னா என்னால தர முடியாது சார். நான் இங்கேயே இருக்கேன்!’’ன்னு சொன்னார்.

‘‘அதெல்லாம் ஞாபகத்துல இருக்கு ரஜினி. ஒண்ணும் பிரச்சினை இல்லை. சரியா 25 நாட்கள்ல முடிச்சுடுவோம்’’னு சொன்னேன். மறுநாள் பிரபு, சீதா நடனம் ஆட வேண்டிய பாடல் காட்சியை ஷூட் பண்ணிக்கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தால் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து நிற்கிறார். ‘‘ என்ன ரஜினி?’’ன்னு கேட்டேன். ‘‘ரூம்ல இருந்தாலே வேலை செய்யலைன்னு சொல்லிடுவீங்க. அதான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். இன் னைக்கு உங்களோட நான் வேலை செய் யப் போறேன்!’’ என்று சொல்லிவிட்டு, டிராலி தள்ளினார். எனக்கு உதவியாக இருந்து வேலை செய்தார். ஆக மொத்தத்தில் அவர் எங்கள் யூனிட்டில் ஒரு நடிகர் மட்டுமில்லை; தொழில்நுட்பக் கலைஞரும்கூட என்பதை எந்தவித பந்தாவும் இல்லாமல் நிரூபித்தார்.

guru1_3065668a.jpg

இந்தப் படத்தின் கதையே நகைச் சுவை நிறைந்தது. நகைச்சுவை காட்சி கள் எழுதுவதென்றால் பஞ்சு அருணா சலம் அவர்களுக்கு ஐஸ் க்ரீம் சாப்பிடு வது மாதிரி. முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் ரஜினி, பிரபு, மனோரமா, வினுசக்ரவர்த்தி இப்படி பலமான சுவையை தங்களின் நடிப்பின் மூலம் உச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டனர். இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் சிரிப்பு வரும்.

‘குரு சிஷ்யன்’ படத்தினுடைய கிளை மாக்ஸ் சண்டைக் காட்சிகளை ஆந்திரா வில் இருக்கும் அரக்குவாளி குகைகளில் எடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ரஜினியினுடைய கால்ஷீட் நாட்கள் குறைந்துகொண்டே வந்தன. அரக்கு வாளி போய் ஷூட்டிங் பண்ணினால் போய்வரவே 4 நாட்கள் ஆகிவிடும். அதனால் எங்கள் ஆர்ட் டைரக்டரை வைத்து சென்னையில் அரக்குவாளியை உருவாக்கிவிட்டோம். அதில் படப் பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித் தோம். ரஜினி கொடுத்த 25 நாட்களில் 23 நாட்களிலேயே படத்தை முடித்து 2 நாட்களை அவருக்கு திருப்பிக் கொடுத் தோம். அதற்குக் காரணம் யூனிட்டுடைய ஒற்றுமையான திட்டமிட்டச் செயல்பாடு கள்தான். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை இதன் மூலம் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

‘குரு சிஷ்யன்’ எதிர்பார்த்ததைப் போல் அல்ல; எதிர்பார்த்ததையும்விட மிகப் பெரிய வெற்றி பெற்றது. காலத்தினாற் செய்த உதவிக்காக ரஜினிக்கு என்றும் நன்றி சொல்வோம்.

கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் இன்றைக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர். இளைய தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர். ‘கபாலி’ படம் என்றதும் எனக்கு இங்கே இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் ‘குரு சிஷ்யன்’ படத்தை மைசூரில் ஷூட் செய்து கொண்டிருந்தபோது ரஜினி அவர்களைப் பார்க்க தாணு சார் அங்கே வந்தார். ரஜினியிடம், தனக்கொரு படம் நடித்துக்கொடுக்குமாறு கேட்டார். ரஜினி காந்த், ‘‘நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருக் கேன். காலம் கனியும்போது நிச்சயம் பண்ணுவோம்’’ என்று 1988-ல் சொன் னார். காலம் கனிய 27 ஆண்டுகள் ஆகிவிட் டன. 2015-ல் ‘கபாலி’ படத்தில் நடிக்க ஒப் புக்கொண்டார். ‘கபாலி’படம் பா.இரஞ் சித் இயக்கத்தில் சூப்பரோ சூப்பர் ஹிட்! உலகமெங்கும் ‘நெருப்புடா… கபா லிடா…’ என்று முத்திரை பதித்துவிட்டது. இப்படி வெற்றிப் படங்களை எடுத்த தாணு அவர்களை இன்றைக்கு இந்த உயர்நிலையில் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி!

guru11_3065669a.jpg

கலைப்புலி தாணு என்று எல்லோரும் சொன்னாலும் நான் விளம்பரப் புலி தாணு என்றுதான் சொல்வேன். அவர் படங்களுக்கு விளம்பரம் செய்வதில் இருந்து போஸ்டர் அடிப்பது, ப்ளெக்ஸ் பேனர் வைப்பது எல்லாமே பிரம்மாண்டம் தான். எல்லோரும் நாலு போஸ்டர் ஒட்டி னால் இவர் 16 போஸ்டர் ஒட்டுவார். மற்ற படங்களுடைய விளம்பரங்கள் இவர் விளம்பரத்தில் காணாமல் போய்விடும். அந்த அளவுக்கு பிரம்மாண்டம். ரஜினி நடித்த ‘பைரவி’ படத்துக்கு கலைப்புலி தாணுதான் சென்னை விநியோகஸ்தர். ‘பைரவி’ படத்துக்கு பெரிய பெரிய போஸ் டர் அடித்தார். அந்த போஸ்டர்களில்தான் முதன்முதலில் அவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘பைரவி’ என்று விளம்பரப்படுத்தினார். அவர் கொடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம்தான் இன் றைக்கு ரஜினியோடு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது. பட்டம் கொடுத்த அவரை எல்லோரும் பாராட்டுவோம்!

கலைப்புலி தாணு அவர்கள் தயா ரித்த ‘நல்லவன்’ படத்துக்கு நான் இயக்கு நர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கேப்டன் விஜயகாந்த். வளர்ந்து கொண்டிருந்த விஜயகாந்த் அவர்களை ஒருமுறை ஏவி.எம் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘‘நான் இப்போது கதாநாயகனாக நடித் துக்கொண்டிருக்கிறேன். சிறந்த கதா நாயகனாக வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வில்லனாக நடிக்க கூப்பிட்டதற்கு நன்றி. என்னை விட்டு விடுங்கள்!’’ என்று கூறினார். அந்த நம் பிக்கைதான் அவரை தமிழகத்தின் தலை சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக இடம்பிடிக்க வைத்தது. கேப்டனின் நம் பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான் அது!

‘நல்லவன்’ படத்தில் விஜயகாந்த் இரண்டு கதாபாத்திரங்களில் தனது வித்தி யாசமான நடிப்பாற்றலை வெளிக்காட்டி னார். இந்தப் படத்தின் வெளிப்புறக் காட்சிகளைப் பனி சூழ்ந்த காஷ்மீர் பகுதிகளில் எடுத்தோம். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சிகள் இன்னும் என்னை அதிர வைக்கின்றன. எது என்ன?

- இன்னும் படம் பார்ப்போம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-82-பிரபுவுக்கு-விட்டுக்கொடுத்த-ரஜினி/article9294644.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 83: தாணு கொடுத்த பட்டம்!

எஸ்பி.முத்துராமன்

 

 
  • இயக்குநர் எஸ்பி.முத்துராமன், விஜயகாந்த்
    இயக்குநர் எஸ்பி.முத்துராமன், விஜயகாந்த்
  • ‘நல்லவன்’ படத்தில் சண்டைக்காட்சி.
    ‘நல்லவன்’ படத்தில் சண்டைக்காட்சி.
 

பனி சூழ்ந்த மலை அடிவாரத்தின் பின்னணியில் படமாக்குவதை எல் லோருமே விரும்புவோம். விஜய காந்த், ராதிகா நடித்த ‘நல்லவன்’ படத் துக்காக காஷ்மீர் பனி மலைக்கே போய் படம் பிடிக்க வேண்டும் என்று திட்ட மிட்டோம். அந்தப் பகுதியில் இருந்த ஊர்க்காரர்களை விசாரித்தபோது, ‘‘உயரத்தில் முழுதும் பனி சூழ்ந்த மலை கள் இருக்கின்றன. அங்கே வரிக் குதிரை கள் மட்டும்தான் செல்ல முடியும்!’’ என்றனர்.

நானும், ஒளிப்பதிவாளர் விநாய கம் அவர்களும் அந்தப் பனி படர்ந்த மலைக்கு, குதிரைகளின் மீது ஏறிச் சென்றோம். மலை ஓரத்தில் குதிரைகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அருகில் பள்ளம். கரணம் தப்பினால் 600 அடி கீழே விழ வேண்டியதுதான். அப்படி ஒரு ரிஸ்க் நிறைந்த சூழலுக்கு இடையே பனி மலையை அடைந்தோம். அங்கே செல்லும் வரைக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

நெடுந்தூரம் கடலுக்குள் சென்ற பிறகு எப்படி சமுத்திரம் மட்டுமே தெரியுமோ, அந்த மாதிரி பனி மலைக்குள் நுழைந்த தும் சுற்றிலும் பனியாக இருந்தது. யாரும் படப்பிடிப்பு நடத்தாத அந்த இடத்தில் படம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலும் அதிகமானது. இருந்தாலும், இவ் வளவு சிரமத்துக்கு இடையே அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண் டுமா என்ற யோசனையோடு வந்து விஜய காந்தை கேட்டோம். அவரோ உற்சாகத் தோடு, ‘அந்த மாதிரி இடத்துலதான் எடுக்கணும்!’ என்றார். தயாரிப்பாளர் தாணு எப்போதுமே படம் நல்லா வரும் என்றால், கொஞ்சம் கூட மறுப்பு சொல்ல மாட்டார். ‘எத்தனை குதிரைகள் வேண்டு மானாலும் வைத்துகொள்ளுங்கள்!’’ என்று அனுமதி கொடுத்துவிட்டார்.

மொத்த யூனிட் ஆட்களோடும், பொருட்களோடும் குதிரைகள் மீது ஏறி பனி மலையை நோக்கி புறப்பட்டோம். அக்காட்சி குதிரைப் படைகள் போவது போலவே இருந்தது. சண்டைப் பயிற்சி யாளர் சூப்பர் சுப்பராயன். ஜூடோ ரத்தினம் மாஸ்டரோட உதவியாளரான இவர் வித்தியாசமாக வேலை செய்யும் இளைஞராக எங்கள் யூனிட் டில் இணைந்தார். சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கினோம். அப் போது படப்பிடிப்பு நடக்கும் இடத் துக்கு மதிய சாப்பாடு வந்து சேர வில்லை. இந்த மாதிரி சிக்கல்கள் உருவாகும் என்றே எப்போதும் கையில் பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் வைத்திருப்போம். இருந்த ஸ்நாக்ஸை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டு பசியை சமாளித்தோம்.

முதல் நாள் படப்பிடிப்பில் இப்படி ஓர் அனுபவம். அடுத்த நாள் இந்த மலைக்கு கீழ் பகுதியில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாமே என்று விஜயகாந்திடம் கேட்டேன். அதுக்கு அவர், ‘முடியவே முடியாது சார். கஷ்டப்பட்டு எடுத்தால்தான் படம் நல்லா வரும். அங்கேதான் எடுக்க வேண்டும்!’’ என்று பிடிவாதமாக கூறிவிட்டார். அதேபோல அடுத்த நாளும் அங்கே போய் படப்பிடிப்பு நடத்தினோம். அதிர்ச்சியான பாதையில் பயணித்து பல த்ரில்லான அனுபவங்களை சந்தித்து எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி அது. படம் பார்க்கும்போது சிறப்பான காட்சியாக வந்ததோடு, மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.

லாரிகளின் அணிவகுப்பு்

காஷ்மீர் மலைப் பகுதியில் விஜய காந்த், ராதிகா பாடலை படமாக்கினோம். அந்த நேரத்தில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகே வரிசையாக 50-ல் இருந்து 60 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றன. படத்தின் தயா ரிப்பு நிர்வாகி நாகப்பனை அனுப்பி, ‘எதுக்காக லாரிகள் வரிசையா நிக் குது?’ன்னு விசாரிக்கச் சொன்னோம். ‘‘அத்தனை லாரிகளும் லடாக் போகிற தாம். லாரியில் உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் இருக்கின்றன. வெளியே வரமுடியாத அளவுக்கு பெய் யும் பனிக் காலத்தில் லடாக் பகுதியில் வசிக்கிற மக்களுக்கு தேவையான பொருட்கள்தான் அது!’’ என்று வந்து சொன்னார்கள்.

அந்த மலை சூழ்ந்த இடத்தில் அத் தனை லாரிகளையும் வரிசையாக வைத்து படமாக்கினால் நல்லா இருக் குமே என்ற யோசனை எனக்கு வந்தது. விஜயகாந்த், ராதிகா இருவரையும் வைத்து பாடல் படமாக்குவதை அப்படியே நிறுத்திவிட்டு லாரிகளின் பின்னணியில் சண்டைக் காட்சியை படமாக்கினோம். படம் பார்த்த பலரும் இவ்வளவு உயரமான மலையில் எப்படி இத்தனை லாரிகளை வாடகைக்கு எடுத்து ஷூட் செய்தீங்க?’’ என்று வியப்பாக கேட்டாங்க.

சண்டைக் காட்சிகளில் விஜயகாந்த் தனித்து முத்திரை பதிப்பவர். தன்னோடு மோதும் வில்லன்களை அந்த ஐம்பது, அறுபது லாரிகளுக்கு இடையே எதிர் கொண்டு ஒரு கையை உயர்த்தி வில்லன் களை அடிக்கும்போது கை அப்படியே நின்றுவிட்டது. நான் ஓடிப்போய் கையைப் பிடித்து மடக்க முயற்சித்தால் வலியால் துடிக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஓடிவந்து கையை மேலே தூக்கி கீழே இறக்கினார். கை சரியாகிவிட்டது. ‘என்ன சார் இப்படி ஆயிடுசே!’’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இது மாதிரி சில நேரத்துல ஆகிடும் சார். அப்புறம் சரியாயிடும்!’’னு கேஷுவலாக பதில் சொன்னார். இப்படியெல்லாம் காட்சிகளை த்ரில்லோடு எடுத்தோம்.

ராதிகா சிறந்த நடிகை மட்டுமல்ல; நல்ல சமையல் கலை நிபுணரும்கூட. மொத்த யூனிட்டுக்கும் பிரெட் ரோஸ்ட், வேர்க்கடலை சாலட் செய்துகொடுப்பார். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், எலுமிச்சைச் சாறு, கொத்துமல்லி எல் லாம் சேர்த்து அப்படி ஒரு பக்குவமாக கமகமவென அதை தயாரித்துக் கொடுப் பார். அந்த மாதிரியான வேர்க்கடலை சாலட்டை நான் எங்கேயுமே சாப்பிட்டது இல்லை. அதுவும் குளிர் சூழ்ந்த அந்த காஷ்மீர் பனியில் சூடான டீ சாப்பிடும் போது, அது எந்த சுவைக்கும் ஈடாக இருக் காது. ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் படக் குழுவினர் ஒரு குடும்பம் மாதிரி சேர்ந்து படப்பிடிப்பை நடத்துவோம் என்பதற்காக இதை சொல்கிறேன்.

கலைப்புலியின் வாழ்த்து

சென்னையில் ‘நல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ஆள் உயர மாலையோடு அங்கு வந்தார். அதைப் பார்த்ததும் நான், ‘என்ன தாணு சார். இன்னைக்கு விஜயகாந்த்துக்கு பிறந்த நாளா!?’’ என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘உங்களுக்குத்தான் பிறந்தநாள்!’’ என்றார். எனக்கு என் பிறந்த நாளே நினைவில் இல்லை. ‘நல்லவன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் தலை மையில் மொத்த யூனிட்டும் என் பிறந்த நாளை மிகப்பெரிய அளவில் கொண்டாடி யது. அதோடு மட்டுமல்ல; அன்று தாணு சார் எனக்கு ஒரு பட்டத்தையும் கொடுத்தார்? அது என்ன பட்டம்?

- இன்னும் சொல்வேன்… |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-83-தாணு-கொடுத்த-பட்டம்/article9323091.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 84: விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்!

எஸ்பி.முத்துராமன்

 

 
விஜயகாந்த், எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த்.
விஜயகாந்த், எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த்.
 
 

‘நல்லவன்’ படத்தில் என் பிறந்த நாளன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் எனக்குக் கொடுத்த பட்டம் ‘மனிதரில் புனிதர்’. ஏன், இந்தப் பட்டத்தை எனக்கு கொடுத்தார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. நான் திரைப்படங்களை இயக்கும்போது என் குழுவினருக்கு சம்பளம் பேசுவேன். எனக்கான சம்பளத்தை பேச மாட்டேன். தயாரிப்பாளர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன். அதில் ரஜினி படம் என் றால் ஒரு சம்பளம் என்றும், கமல் படம் என்றால் ஒரு சம்பளம் என்றும் ஒரு கணக்கு வைத்து என் சம்பளத்தை கொடுப்பார்கள்.

‘நல்லவன்’ பட வேலைகளில் இருந்த போது தாணு அவர்கள் ‘‘இதில் இந்தப் படத்துக்கான உங்கள் சம்பளத்தை வைத் திருக்கிறேன்!’’ என்று கூறி ஒரு தொகையை என்னிடம் கொடுத்தார். அதை பிரித்துப் பார்த்தால் நான் ரஜினி, கமல் படங்களுக்கு வாங் கும் தொகையைவிட இரண்டு, மூன்று பங்கு அதிகமாக இருந்தது. அவரிடம், ‘‘என்ன சார், இவ்வளவு தொகை இருக்கே?’’ என்று கேட்டேன். அதுக்கு அவர், ‘‘உங்க உழைப்புக்கு நான் கொடுக்கும் சம்பளம் சார்!’’ என்றார்.

“ரஜினி படம் என்றால் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும்? கமல் படம் என்றால் எவ்வளவு வாங்க வேண்டும்? விஜயகாந்த் படம் என்றால் எவ்வளவு வாங்க வேண்டும் என்று சம்பளத்தில் நான் ஒரு கணக்குகள் வைத்திருக்கிறேன். எப்போதும், அதைவிட அதிகம் வாங்குவ தில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் தொகை அளவுக்கு அதிகமாக இருக் கிறது. இதில் விஜயகாந்த் படத்துக்கான சம்பளத்தை மட்டும் எடுத்துக்கொள் கிறேன்!’’ என்று கூறிவிட்டு மீதிப் பணத்தை அவரிடமே திரும்பக் கொடுத்து விட்டேன். அதற்கு அவர், ‘‘இப்படி ஒரு மனிதரா?’’ என்று பாராட்டினார். ‘நல்லவன்’ படப்பிடிப்பில் யூனிட்டோடு கொண்டாடிய என் பிறந்தநாளன்று ‘மனிதரில் புனிதர்’ என்ற பட்டத்தை கொடுத்து மகிழ்ந்தார். மகிழ வைத்தார்.

தாணு சார் என்னிடம், ‘‘முத்துராமன் சார் உங்களுக்காக என் ஆபீஸ் கதவும், என் மனசும் எப்போதும் திறந்தே இருக் கும். நம்ம கம்பெனிக்கு நீங்க எப்போ வேணும்னாலும் படம் பண்ணலாம்!’’ என்றார். இன்றளவும் அவரது படத்தின் பூஜை என்றால் சென்டிமெண்டாக வெற்றிக்கு அறிகுறி என்று நினைத்து நானும் அங்கே இருக்க வேண்டும் என விரும்புவார். சமீபத்தில்கூட ‘தெறி’, ‘கபாலி’ மாதிரியான மிகப்பெரிய வெற் றிப் படங்களை கொடுத்த தாணு அவர் களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருடைய சார்பிலும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்து களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே விஜயகாந்த் பற்றி இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய வேண்டும். அவர் நடிக்க முயற்சி செய்துகொண் டிருந்த ஆரம்ப நாட்களில் தி.நகர் ரோகிணி லாட்ஜில் தங்கியிருப்பார். அந்த நாட் களில் இருந்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். இரு வரும் நல்ல நண்பர்கள். மதுரையில் தொடங்கிய நட்பு அது. படக் கம்பெனி தொடங்கி எந்த இடத்துக்கு போவ தென்றாலும் இருவரும் சேர்ந்துதான் போவார்கள். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பக்கபலமாக இருந்தவர், இப்ராகிம் ராவுத்தர். அதை என்றும் விஜயகாந்த் பதிவு செய்து வருகிறார். நல்ல நட்புக்கு இவர்கள் சான்று.

vijayakanth1_3081957a.jpg

விஜயகாந்துடன் அ.செ.இப்ராகிம் ராவுத்தர்.

 

அந்தக் காலகட்டத்தில் ஏவி.எம் ஸ்டுடியோவின் எல்லா ஃப்ளோர்களிலும் ஷூட்டிங் நடக்கும். ஒரு ஃப்ளோரில் ரஜினி இருந்தால், அடுத்த ஃப்ளோரில் ஜெய்சங்கர் படம் நடக்கும். அதற்கு அடுத்த ஃப்ளோரில் அண்ணன் சிவாஜி அவர்களின் படப்பிடிப்பு நடந்துகொண்டி ருக்கும். அண்ணன் சிவாஜி அவர்கள் இருக்கிறார் என்றால் மற்ற இடங்களில் இருக்கும் நடிகர், நடிகைகள் அவரை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வருவோம்.

அதேபோல அடுத்தடுத்த ஃப்ளோரில் நடக்கும் சக நடிகர்களின் படப்பிடிப் புக்கு சென்று பார்த்து ஒவ்வொருவரும் நலம் விசாரிப்பார்கள். ‘நல்லவன்’ படப் பிடிப்பில் விஜயகாந்த் இருந்தபோது அதற்கு அருகே ரஜினிகாந்த் நடித்த படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. ரஜினி அவர்கள், ‘‘என்ன முத்துராமன் சார், விஜயகாந்த் பட ஷூட்டிங்கா?’’ என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். விஜயகாந்தோடும், என்னோடும் மகிழ்ந்து பேசினார்.

நடிகர்களுக்குள் அன்று அப்படி ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவியது. அந்த நட்பு, பாசம், அன்பு இதையெல்லாம் வெளிப்படுத்த இன்று யாருக்கும் நேரமே இல்லை. அதற்கான மனமும் இல்லை. குடும்பங்களில் மட்டும் உறவுமுறை குறைந்துவிட்டது என்றில்லை. இது போன்ற தொழில்களில் இருப்பவர்களிட மும் உறவு, பாசம் குறைந்துவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ் அப் உறவாக மாறி இயந்திரத்தனமாக இருக்கிறது. மனித நேயமுள்ள உறவு வளர வேண்டும், நீடிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப் பில் விஜயகாந்த், ராதிகா நடித்த ‘நல்ல வன்’ படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. தாணு அவர்கள் வழக்கம்போல பிரம்மாண்டமான விழா எடுத்தார். அந்த விழாவுக்கு கலைஞர் அவர்கள் தலைமை வகித்து கேடயங்களை வழங்கினார். அது அனைவருக்கும் பெருமையாக இருந்தது.

vijayakanth11_3081958a.jpg

‘நல்லவன்’ 100-வது நாள் விழாவில் எஸ்.தாணு, கருணாநிதி, எஸ்பி.முத்துராமன், விஜயகாந்த்.

ஒருமுறை விஜயகாந்த் அவர்கள், கலைஞர் அவர்களின் 50 ஆண்டுகால திரை உலக பயணத்தை பொன்விழாவாக கொண்டாட ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். அந்த விழாக் குழுவில் நானும் இருந்து பணியாற்றும் சூழலை விஜயகாந்த் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தார். தினமும் போய் அவருக்கு துணையாக விழா பணிகளை செய்வேன். ஒருநாள் விஜயகாந்த் உதவியாளர் சுப்பையா என் கார் சாவியை கேட்டார். ‘எதுக்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘மற்ற கார்கள் நிறுத்துவதற்கு இடையூறா இருக்கு. கொஞ்சம் தள்ளி நிறுத்துறேன்!’’ என்று சொல்லி கார் சாவியை வாங்கிச் சென்றார்.

மாலையில் நான் காரை எடுத்தால் கார் டேங்கில் பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது. சுப்பையாவிடம், ‘‘என்னப்பா இது!’’ என்று கேட்டேன். அதற்கு அவர், “விஜயகாந்த் சார்தான் நீங்க எதுவுமே வாங்கிக்க மாட்டேங் குறீங்கன்னு பெட்ரோல் டேங்கை ஃபுல் பண்ணிடுப்பான்னு சொன்னார்!’’ என்றார். அதில் விஜயகாந்த் அவர்களின் பெருந்தன்மை தெரிந்தது.

அந்த விழாவில் கலைஞர் அவர் களுக்கு கொடுக்க விஜயகாந்த் தங்கத் தில் ஒரு பெரிய பேனாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை கலைஞர் அவர் களிடம் காட்டிவிட்டு வருவோமே என்று அவரை பார்க்கச் சென்றோம். அந்தப் பேனாவை பார்த்த கலைஞர், ‘‘என் பொன்விழாவுக்கு பொன் பேனா கொடுத்து பாராட்டுகிறீர்கள்’’ என்று மகிழ்ந்தார். நாங்கள் பெருமையோடு புறப்பட்டோம். அப்போது கலைஞர் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள்? அது என்ன கேள்வி?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-84-விஜயகாந்தின்-நண்பர்-இப்ராகிம்-ராவுத்தர்/article9352726.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள்? அது என்ன கேள்வி?

எதிர் காலத்தில் நீங்களும் ஒரு கட்சித்தலைவராய் வருவீர்கள், அப்போது நாம் கூட்டணி வைப்போமா....!  tw_blush:

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 85: ஞாபக மறதி ரஜினி!

எஸ்பி.முத்துராமன்

 

 
‘தர்மத்தின் தலைவன்’ பட போஸ்டர்.
‘தர்மத்தின் தலைவன்’ பட போஸ்டர்.
 
 

கலைஞர் அவர்களின் பொன்விழா நிகழ்வில் அவருக்குப் பரிசு கொடுப்பதற்காக செய்திருந்த 3 அடி உயரமுள்ள தங்கப் பேனாவை அவரிடம் காட்டிவிட்டு நானும் விஜய்காந்தும் புறப்பட்டபோது ‘‘தங்கத் தில் பேனாவைக் கொடுக்க இருக்கிறீர் களே... இதை வைத்து நான் எழுத முடியாதே!’ என்று கேள்வி எழுப்பினார் கலைஞர். விஜயகாந்த் சிரித்தபடியே, ‘‘தங்கப் பேனாவோடு, நீங்கள் எழுத பேனாவையும் விழாவில் கொடுப் போம்!’’ என்று கூறினார். அதைக் கேட் டதும் அவர் முகத்தில் எழுத்தாளருக்கே உரிய பூரிப்பைக் கண்டோம்.

கலைஞருடையச் செயலாளர் சண்முகநாதன் அவர்களிடம், கலைஞர் எழுதும் தடிப்பான ‘குவாலிட்டி’ பேனாவைப் பற்றி விசாரித்து அதைப் போலவே வாங்கினோம். சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் சிறப்புடன் நடந்த விழாவில், கலைஞருக்கு பரிசாக தங்கப் பேனாவுடன், அவர் எழுத ‘குவாலிட்டி’ பேனாவையும் சேர்த்து விஜயகாந்த் வழங்கினார். கலைஞர் அவர்கள், ‘‘தங்கப் பேனாவை கலைஞர் கருவூலத்திலும், எழுதும் பேனாவை நானும் வைத்துக்கொள்கிறேன்’’ என்று பெருமையோடு கூறினார்.

சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் சாண்டோ சின்னப்ப தேவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து அதிக படங்களை எடுத்தவர். தேவர் கடுமையான உழைப் பாளி. வேலை சுறுசுறுப்பாக நடக்க வில்லையானால் அவரின் திட்டுகள் ‘ஏ’ சான்றிதழுக்கு உரியவை. சிறந்த எழுத் தாளர்களைக் கொண்ட ‘கதை இலாகா’-வை தேவர் ஃபிலிம்ஸில் வைத்திருந்தார் தேவர். குறுகிய காலத்தில் குறித்த தேதியில் படங்களை வெளியிடுவார். தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர், நடிகைகள் அவர் கம்பெனியில் நடித்திருக்கிறார். ‘தேவர் ஃபிலிம்ஸ்’ கம்பெனியில் நடிக் கும் கலைஞர்களுக்கெல்லாம் தேவர் முன் பணமாகவே மொத்த பணத்தை யும் கொடுத்துவிடுவார். அதன் மூலமாக நிலமும், வீடும், காரும் வாங்கியவர்கள் அதிகம். குறிப்பாக கவியரசு கண்ண தாசன் அவர்களுக்கு தேவர்தான் பணம் கொட்டிய களஞ்சியம்! அவர் தயாரிக்கும் படங்களை விநியோகஸ்தர்களுக்கு எல்லோரையும் போல ஐந்து வருட ஒப்பந்தத்தில் கொடுக்க மாட்டார். மொத்த படத்தையும் ‘அவுட் ரைட்’முறையில் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்று விடுவார். அதில் வரும் வருமானத்தைத் தனக்கொரு பங்கு, முருகப் பெருமா னுக்கு ஒரு பங்கு, வருமான வரித் துறைக்கு ஒரு பங்கு என்று பிரித்துக் கொள்வார். அந்தந்தப் படத்தின் கணக்கை அவ்வப்போதே உடனுக்கு உடன் முடித்துவிடுவார். இழுவை என் பதே இருக்காது. எம்பெருமான் முருக னுக்கு ஒதுக்கிய பங்கை தமிழகத்தில் உள்ள எல்லா முருகன் கோயிலுக்கும் உபயம் செய்துவிடுவார். அப்போது ‘அவுட் ரைட்’ முறையில் படங்களை விற்காமல் வைத்திருந்தால் இன்றைக்கு தேவர்தான் பெரிய கோடீஸ்வரர். இன்றைக்கும் சின்னப்ப தேவர் மேல் சினிமா உலகில் ஒரு ‘மரியாதை’உண்டு!

நான் ஒருநாள் ஏவி.எம். ஸ்டுடியோ வில் இருந்து வாகிணி ஸ்டுடியோவுக்கு காரில் போய் கொண்டிருந்தேன். எதிரில் வந்த காரில் சின்னப்பத் தேவர் வந்தார். நான் அவரைப் பார்த்ததும் கை கூப்பி கும்பிட்டேன். அதை அவர் கவனிக்க வில்லை. நான் வாகிணி ஸ்டுடியோவுக் குள் சென்று படப்பிடிப்பை ஆரம்பித் தேன்.

அப்போது அங்கே தேவர் அவர்கள் வந்தார். அவரைப் பார்த்து வரவேற்று, ‘‘என்னய்யா?’’ என்று கேட் டேன். அதுக்கு அவர், ‘‘நீ என்னைப் பார்த்து வணக்கம் சொன்னியாம்ல. நான் அதை கவனிக்கலப்பா. கொஞ்ச தூரம் போனதும் என் கார் டிரைவர் சொன் னார். அதை சொல்லத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்!’’ என்றார். ‘‘நீங்க கவ னிக்கலேங்கிறது எனக்குத் தெரியும். அதுக்காக நீங்க வரணுமா!?’’ என்று அவரிடத்தில் கேட்டேன். அதுக்கு அவர், ‘‘நீ வணக்கம் செய்யும்போது நானும் வணக்கம் செஞ்சிருக்கணும்ல. அதுதான் முறை. உனக்கு வணக்கம் சொல்லத்தான் இங்கே வந்தேன்!’’ன்னு சொன்னார். அவரது பண்பை கண்டு பூரித்துப் போனேன்.

சின்னப்ப தேவர் அவர்கள் ஒரு காலகட்டத்தில் ஹிந்தி படமெடுத்தார். தேவருக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது. பம்பாய் போய் எல்லோரிடமும் ‘தமிங்கிலீஷ்’ பேசியே ஹிந்தியிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஒரு ஹிந்தி படத்தை எடுத்து முடித்து, வட நாடு முழுவதும் வெளியிட 400 பிரின்ட்களை எடுத்தார். முதலில் அதை பம்பாயில் வெளியிட்டார். அங்கே அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதனால், மற்ற மாநிலங்களிலும் படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் முன் வரவில்லை. படம் எடுத்ததிலும், 400 பிரின்ட்கள் போட்டதிலும் மிகுந்த நஷ்டம். இந்த சூழ்நிலையில் மன அழுத் தத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சின்னப்ப தேவர் அவர்கள் மரணம் அடைந்தார்கள். திரை உலகமே அழுதது.

poster1_3090043a.jpg

ஒருநாள் ரஜினிகாந்த் என்னிடம் வந்து, ‘‘தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டத் தில் இருக்கிறது. தேவர் மகன் தண்ட பாணி மிகவும் கஷ்டப்படுகிறார். அவர் களுக்கு உதவுவதற்காக படம் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லியிருக் கிறேன். இந்தப் படத்தை நீங்கள் இயக்க வேண்டும்!’’ என்று கேட்டுக் கொண்டார். தேவர் மீது ரஜினி வைத்திருந்த மரியாதைக்கு நன்றி செலுத்தும் விதமாக அது இருந்தது. ‘‘நிச்சயம் செய்வோம் ரஜினி!’’ என்று ஒப்புக்கொண்டேன். அந்தப் படம்தான் ‘தர்மத்தின் தலைவன்’.

அந்தப் படத்தில் ரஜினி, இளைய திலகம் பிரபு, வி.கே.ராமசாமி, நாசர், சுஹாசினி, குஷ்பு ஆகியோர் நடித் தனர். வித்தியாசமான கதை. பஞ்சு அருணாசலம் அவர்கள் திரைக்கதை, வசனம். இசை இளையராஜா, பாடல்கள் வாலி. இந்தப் படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்தன. அதற்கு உதாரணம் ‘தென்மதுரை வைகை நதி; தினம் பாடும் தமிழ் பாட்டு’என்ற பாடல், இன்றும் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினி ஞாபக மறதி உள்ள பேராசிரியராக நடிப்பில் வெளுத்து வாங்குவார். சுஹாசினி ஒளிப்பதிவாளராக படித்து கேமராமேன் அசோக்குமாரிடம் உதவி யாளராக பணியாற்றியவர். நல்ல ஒளிப்பதிவாளராக வர வேண்டியவர் சிறந்த நடிகையாக புகழ்பெற்றார். நான் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார். நாம் எதிர்பார்ப்பதற்கு மேல் நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பார். அதற்கு ஓர் உதாரணம் கே.பாலசந்தர் இயக்கிய ‘சிந்து பைரவி. அந்தப் படத்தில் சிந்துவாக நடித்து தேசிய விருது பெற்றார். தமிழகத்தில் கமல்ஹாசன் குடும்பமே அதிக தேசிய விருதுகள் வாங்கிய குடும்பம். பாராட்டி வாழ்த்துவோம்!

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி, சுஹாசினி, வில்லன்கள் பங்குபெற்ற கிளைமாக்ஸ் காட்சியைப் படப்பை கிராமத்தில் எடுத்துக்கொண்டிருந்தேன். படப்பிடிப்பில் சுஹாசினி எப்போதும் சீக்கிரம் போக வேண்டும் என்று சொல்ல மாட்டார். அன்றைக்கு என்னிடம் வந்து, ‘‘மத்தியானம் 3 மணிக்கு நான் கொஞ்சம் போகணும் சார்!’’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன். பதில் சொல்லவில்லை.

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-85-ஞாபக-மறதி-ரஜினி/article9377271.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 86: சுஹாசினி ஏன் அப்படிச் சொன்னார்?

எஸ்பி.முத்துராமன்

 

 

 
wow_3096894f.jpg
 
 
 

படப்பிடிப்பில் எப்போதுமே தான் சீக்கிரம் போக வேண்டும் என்று சொல்லாத சுஹாசினி, ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது, ‘‘மூணு மணிக்கு கொஞ்சம் போகணும்’’ என்று என்னிடம் சொன்னார். ‘‘ஏன்’’ என்று கேட்டேன். அவர் முகத்தில் புன்னகை கலந்த நாணம்!

‘‘இன்னைக்கு சாயங்காலம் மணிரத்னத்துக்கும் எனக்கும் திருமண நிச்சயதார்த்தம்; வீட்டுல சீக்கிரம் வரச் சொன்னாங்க’’ என்று சொல்லும்போதே வெட்கப்பட்டார். அவர் அப்படி சொன்னதும் யூனிட்டில் இருந்த எங்களுக்கெல்லாம் சந்தோஷ மாக இருந்தது. அவருக்கு வாழ்த்து களைச் சொல்லி, ‘‘ஷூட்டிங்ல இன் னைக்கு வேலை இருந்தாக்கூட அதை அப்புறம் பார்த்துக்கலாம். நீங்க உடனே கிளம்புங்க!’’ என்று சொல்லி, அவரை அனுப்பி வைத்தோம்.

திரையுலகில் இயக்குநர் மணி ரத்னம்… அவரது துறையிலும், சுஹாசினி… அவரது துறையிலும் இன் றைக்கும் தொடர்ந்து உயரத்துக்குச் செல்கிறார்கள். கலையுலகில் சிறப்பாக விளங்குவதைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் இருவரும் சிறந்த தம்பதிகள். திரைப்படத் துறையில் இந்த இரண்டு திறமையானவர்களும் ஒன்றாகச் சேர்ந்து பல நல்ல விஷயங் களைச் செய்து வருகிறார்கள். சென்னை யில் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்களை இருவரும் சேர்ந்து ஒருங் கிணைத்து, அதில் சிறப்பாக தங்களது பணிகளையாற்றி வருகிறார்கள். இந்த வேலைகளுக்காகவே ஒரு குழுவை உருவாக்கி, அதைத் திறம்பட கவனித்து வருகின்றனர், சுஹாசினியும் அவரது குழுவினரும்.

உலகத் திரைப்பட விழா என்றால் அப்போதெல்லாம் நாங்கள் டெல்லி, கோவா போன்ற நகரங்களுக்குச் சென்றுதான் படம் பார்ப்போம். இப்போ தெல்லாம் இங்கேயே அந்தப் படங்களைப் பார்க்கும் சூழல் உரு வாகியுள்ளது. இது, சினிமாக்காரர் களுக்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், மக்களுக்கும் பெரிய உதவியாக உள்ளது. இதை நடத்துகிற ‘இந்தோ சினி அப்ரிஷியேசன்’ அமைப்புக்கும் சுஹாசினி குழுவினருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்!

இப்படி சிறப்பான பணிகளையாற்றி வரும் மணிரத்னம், சுஹாசினி தம் பதிக்கு, நந்தன் என்றொரு மகன். வெளி நாடு சென்று பெரிய அளவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தாத்தா சாரு ஹாசன் அவர்களை நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம், ‘‘என் பேரன் பெரும்புள்ளியாக வருவான்!’’ என்று பெருமையாக சொல்வார். அதை கேட்கும்போது எங்களுக்குப் பெருமை யாக இருக்கும். அந்தக் கலைக் குடும்பத்தில் இருந்து இப்படி திறமை யோடு ஒரு வாரிசு வளர்ந்து வருகிறார் என்பதற்கு நம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்போம்!

wow1_3096895a.jpg

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு சேர்ந்து இளைய திலகம் பிரபு நடித்தார். பிரபுவுக்கு படத்தில் நல்ல ரோல். இதற்கு முன் இருவரும் சேர்ந்து என் இயக்கத்தில் ‘குரு சிஷ்யன்’ என்ற படத்தில் நடித்தனர். அது நகைச்சுவைக் களம். பெரிய அளவில் கலக்கிய படம். ‘தர்மத்தின் தலைவன்’ சென்டிமென்ட் படம். அதில் பிரபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எந்த விஷ யத்தை சொன்னாலும் அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பான பங்களிப்பை ஆற்றுவார். அவரது நடிப்பில் சில இடங்களில் அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களின் சாயல் தெரியும். அவரிடத்தில், ‘‘என்ன பிரபு, அப்பா சாயல் வந்துடுதே!’ என்று சொல்வேன். அதற்கு அவர், ‘‘என்னப் பண்றதுண்ணே… அவர் ரத்தமாச்சே!’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார். அப்படிப்பட்ட பிரபுவுக்கு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ஜோடி குஷ்பு. ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரை, நாங்கள் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினோம்.

புது வரவாக குஷ்பு தமிழுக்கு வரும் போது அவருக்கு தமிழில் ஒரு வார்த் தைக் கூட பேசத் தெரியாது. எந்த வார்த்தைக்கும் அர்த்தமும் புரியாது. எங்கள் படக்குழுவில் துணை இயக்கு நராக பணியாற்றிய லஷ்மி நாராயணன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் சரளமாக தெரியும்.

குஷ்பு பேச வேண்டிய வசனத்தை லஷ்மி நாராயணன் முதலில் ஆங்கி லத்தில் எழுதி கொடுப்பார். அதன் பிறகு ஹிந்தியில் எழுதி, அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கிவிடுவார். கூடவே, அவர் பேச வேண்டியதை தமிழிலும் எழுதி கொடுத்து, அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துவிடுவார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு வேண்டிய மாதிரி குஷ்புவை நடிக்க வைப்பேன். இந்த மாதிரி மூன்று மொழிகளிலும் முறையாக பயிற்சி அளித்ததால், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து பேசி, நடிப்பது அவருக்கு எளிமையாக இருந்தது. பிரபுவோடு சேர்ந்து நடித்த காட்சிகள் சிறந்த முறையிலும் அமைந்தன. குஷ்புவின் இந்தச் சிறப்பான பங்களிப்பு எந்த அளவு புகழ் பெற்றிருக்கிறது என்றால், இன்றைக்கு அரசியல் மேடைகளில் திறம்பட பேசுகிற அளவுக்கு. அதுவும் எப்படிப்பட்ட மேடை என்றால், கலைஞர் அவர்கள் தலைமை தாங்கும் மேடையில் தமிழில் சரளமாக பேசும் அளவுக்கு. இதற்குக் காரணம், அவரது ஈடுபாடு, உழைப்பு, தன்னம்பிக்கைதான்!

குஷ்பு என்னை எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார். நானும் அவரை மனப்பூர்வமாக ஆசீர் வதிப்பேன். நன்றி மறவாத இப்படிப் பட்ட குணம் கொண்ட குஷ்பு, இயக்கு நர் சுந்தர் சி-யைத் திருமணம் செய்து கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தத் தம்பதி களுக்கு இரண்டு பெண் குழந்தை கள். அவர்களது படிப்பு, வளர்ச்சியில் அப்படி ஒரு கவனத்தை செலுத்தி வருகிறார், அம்மா குஷ்பு!

இன்றைக்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை நடிகர்களுக்கு செய்து வரும் நாசர் அவர்களுக்கு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் வில்லன் கதாபாத்திரம். சண்டைக் காட்சியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும்போது முகத்தில் அடிபட்டு விடாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட டைமிங்கில் திரும்பும் லாவகத்தை சண்டைப் பயிற்சியாளரிடம் இருந்து நடிகர்கள் கற்றுக்கொள்வார்கள்.

பிரபுவும், நாசரும் மோதிக்கொள்ளும் ஒரு சண்டைக் காட்சியைப் பட மாக்கிக்கொண்டிருந்தோம். நாசருக்கு ஜூடோ ரத்னம் மாஸ்டர் எல்லாம் சொல்லிக்கொடுத்து, ‘‘ரெடியா?’’ என்று கேட்டார். அவரும், ‘‘ஓ.கே ரெடி!’’ என்று கூறிவிட்டு ஷாட்டுக்குத் தயாரானார். பிரபு வேகமாக கையை ஓங்கி நாசர் முகத்தில் குத்தும் காட்சி. வில்லன் நாசர், அந்த குறிப்பிட்ட டைமிங்கில் முகத்தைத் திருப்பவில்லை. பிரபுவின் குத்து நாசரின் முகத்தில் விழுந்தது. அவரது மூக்கில் இருந்து பொல பொலவென்று ரத்தம் கொட்டியது!

- இன்னும் படம் பார்ப்போம்... |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-86-சுஹாசினி-ஏன்-அப்படிச்-சொன்னார்/article9401427.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 87: எஸ்பி.முத்துராமனை இயக்கச் சொன்ன ஜெ.

எஸ்பி.முத்துராமன்

 

 
 
  • ‘அன்புத் தங்கை’ படத்தில் ஜெயலலிதா, கமல்ஹாசன்.
    ‘அன்புத் தங்கை’ படத்தில் ஜெயலலிதா, கமல்ஹாசன்.
  • ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினி, கவுதமி, சின்னி ஜெயந்த்.
    ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினி, கவுதமி, சின்னி ஜெயந்த்.
 

‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் சண்டைக் காட்சியில் நாசர் முகத் தில் பிரபு குத்தும்போது சரியான டைமிங்கில் நாசர் திரும்பாததால் அவரது மூக்கில் அடிபட்டு ரத்தம் வடிந்தது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஜயா மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம். மருத்துவர்கள், ’சிறிய காயம்தான். ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஒரு நாள் முழுக்க ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறி நாசருக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவர் எங்களிடம், ’படப்பிடிப்பை தொடர்வோம்!’ என்றார். ‘இன்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காட்சியை நாளை எடுத்துக் கொள்வோம்!’ என்று கூறி அடுத்த நாள் சண்டைக் காட்சியை டைமிங்கில் எடுத்து முடித்தோம்.

வில்லனாக அன்று நடித்த நாசர் இன்றைக்கு பலவிதமான கதாபாத்திரத் தில் சிறந்த குணச்சித்திர நடிகராகப் பயணித்து வருகிறார். அவரது நடிப்பில் ‘ஓவர் ஆக்டிங்’ என்பதே பார்க்க முடி யாது. கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ? அதை இயற்கை யாக வெளிப்படுத்தக் கூடியவர். உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிடித்த நடிகர். கமல் வித்தியாசமான முயற்சியில் இறங்கும் படங்களில் எல்லாம் நாசரும் இருப்பார். நாசரின் திரைப் பயணத்துக்கு மிகவும் துணையாக இருப்பவர், அவரது மனைவி கமீலா நாசர்.

ஏவி.எம் நிறுவனத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கால்ஷீட் இருந்தது. எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தைத்தான் கொடுக்க வேண் டும் என்பதில் ஏவி.எம் நிறுவனம் தீர்மான மாக இருக்கும். படத்தின் டிஸ்கஷனுக்கு முன், ‘என்ன கதை பண்ணலாம்? என்பதற்கே ஒரு டிஸ்கஷன் நடக்கும். அப்படி ஒரு விவாதம் நடந்தபோது ஏவி.எம்.சரவணன் சார் அவர்கள், ‘‘என் மனசுல ஒரு அபிப்ராயம் இருக்கு. சொல் லட்டுமா?’’ என்றார். ‘‘என்ன சார்.. சொல் லுங்க?’’ என்று ஆர்வமாக கேட்டோம். அதுக்கு அவர், ‘‘ரஜினி மீது தமிழ்நாட்டு குழந்தைகளுக்கெல்லாம் அளவற்ற பாசம் இருக்கு. குழந்தைகளை சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு படம் எடுக்கலாம். படத்தில் ரஜினியோடு குழந்தைகளையும் நடிக்க வைக்கலாம். அப்படி செய்தால் நிறைய குழந்தைகள் படம் பார்க்க வருவார்கள். குழந்தைகள் வந்தால் உடன் அவர்களுடைய அம்மாக் களும் வருவார்கள். குழந்தைகள், அம்மாக்கள் வந்தால் நிச்சயம் அப்பாக் களும் தியேட்டருக்கு வருவார்கள்!’’ என்றார்.

இந்த யோசனை எங்கள் எல்லோருக் குமே பிடித்திருந்தது. அப்போது எங்களுடன் இருந்த பஞ்சு அருணாசலம் அவர்கள், ‘‘கதை தயார் செய்ய நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன்!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். பஞ்சு அவர்கள் எப்போதுமே என்ன களம் என்று முடிவாகிவிட்டால் ஒரு வாரத்துக்குள் படத்தோட சப்ஜெக்ட் என்ன என் பதை சொல்லிவிடுவார். குழந்தை களையும், ரஜினியையும் இணைத்து எடுக்க திட்டமிட்ட அந்த கதையை ரஜினியிடம் போய் சொன்னோம். அவரும், ‘‘நல்லா இருக்கே. செய்வோம் சார்!’’ என்றார். அப்படி உருவான படம்தான், ‘ராஜா சின்ன ரோஜா’

படத்தில் ரஜினி கிராமவாசி. அதுவும் கலை உணர்வுள்ள கிராமவாசி. அந்த ஊரில் கூத்து நிகழ்ச்சி நடக்கும். ரஜினி அந்த கூத்தில் ‘கள்ளப் பார்ட்’ நடனம் ஆடி பெயர் வாங்குவார். ‘இவ்வளவு நல்லா நடனம் ஆடுறியே!... நீ மட்டும் பட்டணத்துக்கு போனால் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் மாதிரி பெரிய நடிகனா வருவே’’ என்று ஊர் மக்கள் ரஜினிக்கு நடிக்கும் ஆசையைத் திணிப்பார்கள்.

அதை கேட்டதும் ரஜினி, ஊரில் உள்ள டைலரிடம் சென்று ‘‘பேண்ட், ஷர்ட் … தைக்கணும்’’ என்று சொல்வார். டைலரும் அப்படி, இப்படின்னு வேடிக் கையாக அளவெடுத்து பயங்கர லூஸா பேண்ட், ஷர்ட் தைத்து கொடுப் பார். அதைப் போட்டுக்கிட்டு பட்டணத் துக்குப் புறப்படுவார் ரஜினி. அந்த டைலர் கதாபாத்திரத்தில் நடித்தவர், எங்கள் யூனிட் மேக்கப் மேன் முத்தப்பா. அவர் நடித்தால் தனக்கு ராசி என்று, தான் நடிக்கும் படங்களில் எப்படியும் ஒரு கதாபாத்திரம் வாங்கிக் கொடுத்துவிடுவார், ரஜினி.

அப்படி கிராமத்தில் இருந்து சென் னைக்கு வரும் நாயகன் ரஜினிக்கு சினிமாவில் சேரணும்னு சொன்னதும் வாடகைக்கு வீடு கிடைக்காது. சினிமாக்காரர்களுக்கு வீடு கிடைக்காது, திருமணத்துக்கு பெண் கிடைக்காது. பயங்கர தேடலுக்குப் பிறகு நடிகர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுக்கும் ஜெய்கணேஷை சந்திப்பார். அந்த ஸ்டார் ஹவுஸில் வாடகைக்கு தங்குவார் ரஜினி. ஜெய்கணேஷின் மகள் கவுதமி. சினிமா என்றால் கவுதமிக்கு அப்படி ஒரு வெறி. ரஜினியின் சினிமா ஆசையை கேட்டதும் கவுதமிக்கு அவர் மீது காதல் வரும்.

அந்தக் காதல் சூழலுக்கு ஒரு பாடல். ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்!’ என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அந்தப் பாடலின் பல்லவியை ரஜினி கேட்டதும், ‘‘என்ன சார் என்னையே நான் பெருமையா சொல்ற மாதிரி இருக்கே!’’ என்றார். ‘‘இல்லை ரஜினி. நாயகி கற்பனையில் உன்னை நினைத்து பாடுற மாதிரி அமையும் பாட்டு இது!’’ என்று அவரிடம் விஷயத்தை சொல்லி சம்மதிக்க வைத்தேன்.

அந்தப் பாடலில் புதிதாக ஏதாவது செய்யலாம் என்று என் மனதில் தோன்றியது. அப்படி என்ன செய்தோம்? எப்படிச் செய்தோம் என்பதை வரும் வாரம் சொல்கிறேனே.

என்னை இயக்கச் சொன்ன அம்மையார்!

சாதனை செய்து சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்ட மதிப்புக்குரிய ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இயற்கை எய்தியதை எண்ணி அழுதுகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களோடு சேர்ந்து என் கண்ணீரையும் காணிக்கையாக்குகிறேன்!

ஏவி.எம். நிறுவனமும், ஜே.ஆர்.மூவிஸும் தயாரித்து என் குரு ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய படம் ‘எங்க மாமா’. அண் ணன் சிவாஜி அவர்களும், ஜெயலலிதா அம்மையாரும் நடித் தார்கள். அப்படத்தில் உதவி இயக்குநராக நான் பணிபுரிந் தேன். அம்மையார் ஒரே ரிகர்சல், ஒரே டேக்கில் ஓ.கே செய்து விடுவார். படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தொடர்ந்து புத்தகம் படிப்பார். டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களும் புத்தகப் பிரியர் என்பதால், இருவரும் புத்தகங்களைப் பரிமாறிக்கொள் வார்கள். படித்ததினாலேயே இருவரும் மேதையானார்கள்!

அம்மையார் நடிப்பதற்காக வி.சி.குகநாதன் ஒரு கதை யைச் சொன்னார். அதில் நடிக்க ஒப்புகொண்ட அம்மையார் ‘‘அந்தப் படத்தை எஸ்பி.முத்துராமனை இயக்கச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் நடித்த ‘எங்க மாமா’படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றியதை பார்த்திருக்கிறேன். அவரையே டைரக்ட் செய்யச் சொல்லுங்கள்’’ என்று கூறினார். அந்தப் படம் ‘அன்புத் தங்கை’. அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அம்மையார் அவர்கள்தான். அது எனக்குக் கிடைத்த பெருமை. அந்தப் படத்தில் தன் நடிப்பாலும், நட னத்தாலும் ஜெயலலிதா அவர் கள் எல்லோருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தார்கள்.

தஞ்சாவூரில் அம்மையார் நடத்திய உலக தமிழர் மாநாட் டுக்காக தமிழ் இலக்கியங் களில் இருந்து ஐந்து சம்பவங்களை ஐந்து படங்களாக ஐந்து இயக்குநர்கள் இயக்கினார்கள். அந்தப் பணிகளை ஒருங் கிணைக்க ஒரு குழுவை உருவாக்கினார்கள். அதில் ஏவி.எம். சரவணன் சார், ரமேஷ் பிரசாத் ஆகியோரோடு நானும் இருந்தேன். அந்தப் படங்கள் இலக்கியச் சோலை என்ற பெய ரில் மாநாட்டில் வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு எங்களை அழைத்து விருது கொடுத்து பாராட்டினார்கள். ‘ஒரு பெண் ணால் முடியுமா?’ என்று கேட்பவர்களுக்கு ‘என்னால் முடி யும்’ என்று நிரூபித்து காட்டியவர். அவர் இன்று நம்மிடம் இல்லை. ஆனாலும் அவருடைய சாதனைகள் சரித்திரமாகத் தொடரும். அதனை பாடமாக எடுத்துக்கொண்டு அவரைப் போல் சாதனைகள் படைக்க பெண்கள் முயற்சிக்க வேண்டும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு!

- இன்னும் படம் பார்ப்போம்… |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-87-எஸ்பிமுத்துராமனை-இயக்கச்-சொன்ன-ஜெ/article9417200.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 88: அஜித் - நடிகர்களில் தனி ரகம்!

எஸ்பி.முத்துராமன்

 
அஜித்குமார், ஷாலினி
அஜித்குமார், ஷாலினி
 
 

ஒரு துக்கத்துக்கு மேல் இன்னொரு துக்கம் ‘துக்ளக்’ சோ அவர்கள் இறந்தது. அவர் ரஜினிகாந்துக்கும் பஞ்சு அருணாசலத்துக்கும் எனக்கும் நல்ல நண்பர். சிறந்த ஆலோசகர். நான் இயக்கிய பல படங்களில் நடித்திருக் கிறார். படப்பிடிப்பில் எப்போதுமே சத்த மாகத்தான் இருக்கும். அப்போதும்கூட முழு ஈடுபாட்டோடு ‘துக்ளக்’ இதழுக்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பார் சோ. ‘‘இந்த சத்தத்தில் உங்களால் எப்படி எழுத முடிகிறது சார்?’’ என்று கேட்போம். ‘‘முழு கவனத்தையும் எழுதுவதில் செலுத்தும்போது எந்தச் சத்தமும் இடையூறாக இருக்காது’’ என்பார். அவரது வாழ்க்கையே ஒரு தவம். அவரை வணங்குவோம்!

‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’ பாடலை ஊட்டியில் படமாக்க முடிவு செய்தோம். எப்போதும் போல பசுமை சூழ்ந்த மலை, பூங்கா பின்னணியோடு ஏதாவது புதிதாக செய்யலாம் என்று என் மனதில் தோன்றியது. பின்னணியில் கலர்ஃபுல் பாம்களை வெடிக்கச் செய்யலாம் என்கிற யோசனை தோன்றியது.

rajini1_3106789a.jpg

பின்னணியில் கலர் பாம்கள் வெடிக்க ஆடிப் பாடும் ரஜினிகாந்த்

அந்த விஷயத்தில் யார் அப் போது எக்ஸ்பர்ட் என்று விசாரித்த போது, ஹேம்நாக் என்பவரை சொன்னார் கள். அவரை அழைத்து விஷயத்தை சொன்னதும், ‘‘ஓ… தாராளமா, அரு மையா செய்துடுவோம்!’ என்றார். ஊட்டிக்குப் போய் கலர் பாம்களை பாடலுடைய தாளத்துக்கு ஏற்ற மாதிரி வெடிக்க வைத்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தோம். ‘சூப்பர் ஸ்டாரு’பாடல் அவ்வளவு சூப்பராக அமைந்தது. ஹேம்நாக்குக்கு ஒரு சல்யூட்!

ரஜினி, கவுதமி இருவரும் காதலிக்கும் போது அதை இடையூறு செய்யும் கதாபாத்திரத்தில் சின்னி ஜெயந்த் நடித்தார். அவரை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை எல்லாம் திரையில் பார்க்கும்போது மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுமல்லவா. அதே போல் தான் சின்னி ஜெயந்த் நடிப்பு மக்களி டம் போய்ச் சேர்ந்தது. சின்னி ஜெயந்த் நல்ல நகைச்சுவை நடிகர். ரஜினிக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். மைம், மிமிக்ரி என்று தனித்துவமான திறமை கொண்டவர். அவர் சினிமாவில் இன்னும் உயரத்தை அடைய வேண்டும்!

‘ராஜா சின்ன ரோஜா’படத்துக்காக ரோஜா மாதிரி ஐந்து குழந்தைகளைத் தேர்வுசெய்யும் வேலைகளில் இறங்கி னோம். பல கட்டத் தேர்வுக்குப் பிறகு கதைக்குப் பொருத்தமான ஐந்து குழந்தைகளைக் கண்டுபிடித்தோம். அதில், இருவர் குழந்தை வயதுக்குக் கொஞ்சம் பெரியவர்கள். அந்த இருவரில் ஒருவர் ராகவி. என் படங்களில் நடித் திருக்கிறார். ராகவியின் வளர்ச்சியில் அவர் அம்மாவுக்கும் பங்கு உண்டு. இன்னொருவர்தான் ஷாலினி.

இப்படத்திலும் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ஷாலினி பிற்காலத்தில் அஜித் அவர்களைக் காதல் திருமணம் செய்துகொண்டு, இன் றைக்கு குழந்தைகளோடு குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திக் கொண்டிருக்கிறார். ‘தல’ என்று தன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித் அவர்கள் நடிகர்களில் ஒரு தனி ரகம்! துணிச்சலோடு எதிலும் செயல்படு பவர். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். அப்படிப்பட்ட அஜித்தின் மனைவி ஷாலினி நாங்கள் வளர்த்த கமல், தேவி, மீனா வரிசையில் ஒருவராக வளர்ந்தவர் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கிறது. இந்தத் தம்பதிகளை எல்லோரது சார்பாகவும் வாழ்த்துவோம்!

இப்படத்தில் ரவிச்சந்திரன் பெரிய கோடீஸ்வரர். அந்த ஐந்து குழந்தைகளும் அவருடைய குழந்தைகள். தாயில்லாத அந்தக் குழந்தைகள் அப்பாவுக்கு எதிரில் நல்ல குழந்தைகளாக நடிப்பார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ள வெளி யூரில் இருந்து ஓர் ஆளை வரவழைக்க ஏற்பாடு செய்வார் ரவிச்சந்திரன். அங்கே வேலை பார்க்கும் ரகுவரன், அந்த ஆள் வந்தால் தனக்கு இடையூறாக இருப்பார் என்று அவரை மறைத்துவிட்டு, தன் பேச்சை கேட்கும் ஒருவரை நடிக்க வைப்பார். அவர்தான் ரஜினிகாந்த். தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த வீட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே என்று குழந்தைகளோடு நடிப்பார். அவருக்கு துணையாக கவுதமி.

maram1_3106787a.jpg

ரஜினி நடிக்கும்போது குழந்தை களிடம் உண்மையாகவே பாசத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார். அந்தச் சூழலில் ரஜினி குழந்தைகளோடு சேர்ந்து சந்தோஷமாக ஆடிப் பாடுகிற மாதிரி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது ஏவி.எம்.சரவணன் சார் அவர்கள், ‘‘வழக்கமான ஒரு பாடலாக இது இல்லா மல், குழந்தைகளுக்குப் பிடிக்கிற கார்ட்டூன் சேனலைப் போல கார்ட்டூனில் மிருகங்களை உருவாக்கி, குழந்தை களுடன் நடிக்க வைத்தால் நல்லா இருக்குமே!’’ என்று ஆலோசனை வழங்கினார். அந்த ஐடியா நல்லா இருந்தது. அந்த கார்ட்டூன் வரைகிற டெக்னீஷியன் எங்கே இருப்பார் என்று தேடினோம். மும்பையில் ராம் மோகன் என்கிற ஒருவர் அந்த விஷயத் தில் புகழ்பெற்றவர் என்று தெரிய வந்தது.

சரவணன் சார் என்னிடம், ‘‘நீங்க மும்பைக்கே சென்று ராம் மோகனை சந்தித்துப் பேசி, விஷயத்தை சொல்லி அவரை புக் பண்ணிடுங்க…’’ என்றார். மும்பைக்குச் சென்று நான் ராம் மோகனைச் சந்தித்து ‘‘நடிகர்களுடன் கார்ட்டூன்களை இணைத்து ஒரு பாடல் காட்சி எடுக்கலாம்னு முடிவு பண் ணியிருக்கோம். நீங்க அந்த கார்ட்டூன்க ளை உருவாக்கி நடிகர்களுடன் இணைக் கணும்!’’ என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ, ‘‘நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இது ரொம்ப பெரிய வேலை. என்னால் முடியாது?’’ என்று சொல்லிவிட்டார்.

உடனே நான், ‘‘நான்கு மாதங்கள் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏவி.எம் ஸ்டுடியோவில் எதையும் எப்போதும் திட்டமிட்டுத்தான் செயல்படுவோம். நான் உடனே போய் நடிகர்கள் பகுதியை ஷூட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன். நான் உங்களை அவசரப்படுத்த மாட்டேன்!’’ என்று சொன்னதும்தான் அவர் ஒப்புக்கொண்டார். ‘‘எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக புகழ்பெற்ற ஏவி.எம் நிறுவனத்துக்கு நன்றி!’’ என்றார்.

சென்னைக்கு வந்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் விவரத்தை சொல்லி, பாடல் எழுதச் சொன்னோம். ‘தீமை செய்தால் தீமை விளையும்’ என்ற கருத்தில் ‘ராஜா சின்ன ரோஜா வோடு காட்டுப் பக்கம் வந்தானாம்; கூட ஒரு ரோஜாக் கூட்டம் கூட்டிக்கிட்டு போனானாம்!’ என்ற பாட்டை எழுதி கொடுத்தார். இசையமைப்பாளர் சந்திர போஸ் அந்தக் கார்ட்டூன் காட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு இசை யமைத்தார். கலை இயக்குநர் சலம், கார்ட்டூன்கள் பங்குபெறுகிற காடு போன்ற செட் அமைத்துக் கொடுத்தார்.

அந்தக் காட்டில் ரஜினியும், கவுதமி யும், குழந்தைகளும் வருவார்கள். அவர்களை மிருகங்கள் வரவேற்கும். ஆனால், செட்டில் மிருகங்களே இருக்காது. குழந்தைகள் எல்லாம், ‘‘மிருகங்கள் எங்கே? மிருகங்கள் எங்கே?’’ என்று கேட்டார்கள்.

rajini_3106788a.jpg

’ராஜா சின்ன ரோஜா’ அரங்கத்தை உருவாக்கிய ஆர்ட் டைரக்டர் சலம், நாகன் ஆச்சாரி ஆகியோருடன் இயக்குநர் எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த், பஞ்சு அருணாசலம் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர்.

- இன்னும் படம் பார்ப்போம்... |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-88-அஜித்-நடிகர்களில்-தனி-ரகம்/article9437470.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 89: ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?

எஸ்பி.முத்துராமன்

 

‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினிகாந்த், கவுதமி, குழந்தைகளோடு ‘மிருகங்கள் கார்ட்டு’னை இணைப்பதற்கு முன். (அடுத்தப் படம்) இணைத்த பிறகு.
‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினிகாந்த், கவுதமி, குழந்தைகளோடு ‘மிருகங்கள் கார்ட்டு’னை இணைப்பதற்கு முன். (அடுத்தப் படம்) இணைத்த பிறகு.
 
 

‘ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்’ பாடல் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியோடும், கவுதமியோடும் காட் டுக்கு வந்த குழந்தைகள், ‘மிருகங் கள் எங்கே? மிருகங்கள் எங்கே?’ என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்தனர். ‘மிருகங்கள் எல்லாம் கார்ட்டூன்ல வரும்!’னு விளக்கம் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புரியவில்லை. அவர் களுக்கு புரிந்தால்தானே பாடல் காட்சி நன்றாக அமையும் என்று நடன இயக்குநர் புலியூர் சரோஜாவை முயல் மாதிரி நடிக்க வைத்து குழந்தைகளுக்கு புரிய வைத்தோம்.

உதாரணமாக, ஒரு காட்சியில் ரஜினி காந்தும், கவுதமியும் இருப்பார்கள். முயல் இருக்காது. அந்த இடத்தில் கார்ட்டூனில் வரைந்த முயல், ரஜினிக்கு கைகொடுப்பதை ராம் மோகன் சேர்த்தார். அப்படித்தான் பாடல் முழுக்க கார்ட்டூன் வரும் இடங்களை நடிகர், நடிகைகளோடு இணைத்தோம். இந்த காட்சிகளுக்காக ராம் மோகன் கிட்டத்தட்ட 80 ஆயிரம் கார்டூன்களை வரைந்து எடுத்தார். அவரது உழைப்பு பெருமை படும்படியாக அமைந்தது.

சினிமாவில் ஏவி.எம் நிறுவனம் முன்னுதாரணமாக பல சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வகையில் நடிகர்களை யும், கார்ட்டூன்களையும் இணைத்து இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் பாடல் காட்சி இதுதான். கிராஃபிக்ஸ், மாடர்ன் தொழில்நுட்பம் என்று வளராத அந்த காலகட்டத்தில் மேனுவலாகவே ராம் மோகன் உதவி யோடு செய்திருக்கிறோம் என்பதை பெருமையோடு இங்கே சொல்லிக் கொள்கிறேன். இதில் ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் அவர்களுக்கும் பங்கு உண்டு.

ரகுவரன், தேங்காய் சீனிவாசன், கோவை சரளா மூவரும் சேர்ந்து மளிகை பொருள் வாங்குவதில் தொடங்கி பல ஏமாற்று வேலையிலும், தவறு செய்வதிலும் ஈடுபட்டு பணத்தை கொள்ளை அடிப்பார்கள். இதை ஒவ்வொன்றாக ரஜினி கண்டுபிடிப்பார். இந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு நாள், வீட்டில் யாரும் இல்லை என்று ராகவி தன்னோடு படிக்கும் சக மாணவர்களை அழைத்து வந்து டிரிங்ஸ் பார்ட்டி வைப்பார். ரஜினிகாந்த் இதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டு, ‘பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை..!’ என்ற பாட்டை உருக்கத்தோடு பாடுவார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாட்டு. மாணவ, மாணவிகளுக்கு நல்ல சிந்தனைகளை விதைக்கும் விதையாக இருந்தது. இன்றைய சூழலுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் குழந்தைகள் செய் யும் தவறுகள் ரவிச்சந்திரனுக்கு தெரியவரும். வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் ரஜினிகாந்த் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி வருகிறார், என்பதும் அவருக்குத் தெரியும். கடைசியில் நம் குழந்தைகளுக்கு சரியான காப்பாளர் ரஜினிதான் என்று அவரை நியமிப்பார். ரஜினிகாந்த் மூலம் நல்ல விஷயங்கள் குழந்தைகளுக்கு போய்ச் சேர்கிறது என்ற மகிழ்ச்சி யோடு படத்தை முடித்தோம். படம் வெள்ளிவிழா படமாக பெரிய வெற்றியைப் பெற்றது.

மல்லிகை பதிப்பகம் சங்கர் புதுமுகங் களை வைத்து ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ என்ற படத்தை தயாரித்தார். அதை நான் இயக்கினேன். அந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களாக இருக்கட்டும் என்ற அவரது கோரிக் கையை ஏற்று அதற்கான தேர்வில் இறங்கினோம். அந்த புதுமுக தேர்வுக்கு வந்தவர்களில் ஒருவர் சத்யராஜ். அவரிடம், ‘ஏதாவது நடிச்சுக் காட்டுங்க?’ என்று கேட்டேன். அவர், ‘கட்டபொம்பன்’ படத்தில் வரும் அண்ணன் சிவாஜி கணேசனின் வசனத்தை பேசி நடித்தார்.

அப்போது நான், ‘நல்லா இருக்கு. ரொம்ப சந்தோஷம். இங்கே வரும் எல்லோரும் இந்தக் காட்சியையே நடித்துக் காட்டுறாங்க. அதுல அண்ண னோட சாயல்தான் தெரிகிறது. உங்க ளோட தனித்திறமை தெரியுற மாதிரி வேறெதாவது நடிச்சுக் காட்ட முடியுமா?’ன்னு கேட்டேன். அப்படியே நழுவி போய்விட்டார். அன்றைக்கு அப்படி நழுவிப் போன சத்யராஜ் இன்றைக்கு பல வித்தியாசமான கதா பாத்திரங்களை ஏற்று சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

என் இயக்கத்தில் ஆரம்ப நாட்களில் பல படங்களில் சின்னச் சின்ன ரோலில் நடித்தார். பாலசந்தர் சார் தயாரிப்பில் நான் இயக்கிய ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் கமலுக்கு வில்லனாக நடித் தார். அதேபோல ‘மிஸ்டர் பாரத்’ படத் தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்து அசத்தி னார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?’ பாடல் ரஜினிக்கும், சத்யராஜுக்கும் நடிப்புக்கு சவாலாக அமைந்தது. போட்டி நடனம் போல், இது போட்டிப் பாட்டு!

cart1_3109725a.jpg

‘உலகம் பிறந்தது எனக்காக’ படத்தில் இரு வேடங்களில் சத்யராஜ்.

சத்யராஜ் நடித்தப் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படங்கள், பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’. இன்னொரு படம் ஞானராஜசேகரன் இயக்கிய ‘பெரியார்’. இரண்டு படங்களிலும் வித்தியாசமாக நடித்திருப்பார். அதிலும் பெரியாராக நடித்து தமிழகத்தின் சரித்திரத்தில் இடம்பெற்ற பெருமை அவருக்கு உண்டு.

பொருளாதாரரீதியாகவும், தொழில் ரீதியாகவும் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் தொய்வு ஏற்பட்டது. அந்த நாட்களில்கூட சத்யராஜ் தொடர்ந்து நாயகன், வில்லன், லொள்ளு செய்யும் கதாபாத்திரம் என்று பேதம் பார்க்காமல் நடித்துக்கொண்டிருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடித்ததுதான். அதன்மூலமாக தான் வளர்ந்ததோடு, தொழில் நுணுக்க கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அமையுமாறு சூழலை உருவாக்கினார். அவர் மூலம் நிறைய பேர் தயாரிப்பாளராக திரைத்துறைக்கு வந்தார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் அவரது செயலாளர் ராமநாதன் அவர்கள்.

அப்படிப்பட்ட திறமைசாலியான சத்யராஜை வைத்து ஏவி.எம் நிறுவனம் தயாரிப்பில் நான் இயக்கிய படம், ‘உலகம் பிறந்தது எனக்காக’. இதன் கதை வசனம் சித்ராலயா கோபு. நகைச்சுவை எழுத்தாளர். இயக்குநர் தரின் வலதுகரம். இப்படத்தில் சத்யராஜுக்கு இரண்டு கதாபாத்திரம். ஒன்று நல்லவர். இன்னொன்றில் தில்லு முல்லுக்காரராக வருவார். இரண்டு கதாபாத்திரங்களையுமே நல்ல முறை யில் நடித்து பெயர் வாங்கி னார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருவர் கவுதமி. இன்னொருவர் ரூபிணி.

படத்துக்கு முக்கிய பங்களிப்பாளராக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் இந்தப் படத்துக்கு பணியாற்றினார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குரு என்று சொல்லும் அளவுக்கு இசை யில் வல்லமை கொண்டவர். ஹிந்தி சினிமாவில் பிஸியாக இருந்த அவரை இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர், பின்னணிப் பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம்.

மும்பையில் படு பிஸியாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இப்படத்துக்கான பாடல்களை மிகவும் சிறப்பாக அமைத்துக் கொடுத்தார், ஆர்.டி.பர்மன். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசைக்காக சென்றபோது அவர் மேலும் பிஸியாக இருந்தார். அப்போது அவர், ‘என்னோட பாணி என்னன்னு பாலுவுக்குத் தெரியும். அவரே ரீ ரெக்கார்டிங் செய்யட்டும்!’ என்றார். இப்படித்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் படத் துக்கு பின்னணி இசையமைப்பாளராக ஆனார்.

எஸ்.பி.பி பாடுவதில் மட்டுமல்ல; இசையமைப்பதிலும் தன் திறமையை காட்டினார். ஒரே நேரத்தில் இந்தியா முழுக்க பறந்து பறந்து பாடல் பாடக் கூடியவர். காலையில் ஹைதராபாத் மதியம் பாம்பே, மாலையில் கேரளம் இரவு சென்னை என்று இந்தியா வின் ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டியவர். அவர் பாடிய பாடல்கள் உலகம் முழுவதும் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு புகழை யும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாத பண்பாளர்.

cart12_3109726a.jpg

ஏவி.எம்.சரவணன் சார் அவர் கள், சத்யராஜிடம், ‘படத்தை ஜனவரி யில தொடங்குகிறோம். வர்ற ஏப்ரல்ல ரிலீஸ் செய்யலாம்னு நினைச்சிருக் கோம். அதுக்குள்ள முடிச்சிக் கொடுத் துடுங்க?’ன்னு கேட்டார். அதற்கு சத்யராஜ், ‘நிறைய படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன்.ரொம்ப டைட்டா இருக்கு சார்!’னு தயங்கினார். அதற்கு சரவணன் சார் என்ன சொன்னார்?

- இன்னும் படம் பார்ப்போம். |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-89-என்னம்மா-கண்ணு-சவுக்கியமா/article9447365.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 90: கால்ஷீட் என்றால் என்ன தெரியுமா?

எஸ்பி.முத்துராமன்

 

 
‘உலகம் பிறந்தது எனக்காக’ சத்யராஜ், கவுதமி
‘உலகம் பிறந்தது எனக்காக’ சத்யராஜ், கவுதமி
 
 

ஏவி.எம்.சரவணன் சார், ‘உலகம் பிறந் தது எனக்காக’ படத்தோட வேலை களை ஜனவரியில தொடங்குறோம். ஏப்ரல்ல ரிலீஸ் பண்ணணும்!’ என்றார். அதற்கு சத்யராஜ், ‘நிறைய படங்கள் இருக்கு சார். ஏப்ரல்ல ரிலீஸ் செய்றது கொஞ்சம் கஷ்டம்?’ என்று தயங்கினார். அதற்கு சரவணன் சார், ‘நீங்களும், முத்துராமனும் பேசி ஒரு முடிவு எடுங்க? ’ என்றார்.

சத்யராஜ் என்னிடம் வந்து, ‘சரவணன் சார் சொல்றமாதிரி படத்தை ரிலீஸ் பண்ணணும்னா, நான் கொடுக்குற தேதிகள்ல பகல் நேரத்தோட இரவுலயும் ஷூட் பண்ணாத்தான் சரியா வரும்’ என்றார். அதற்கு நான், ‘உங்களுக்கு நைட் ஷூட் ஓ.கே என்றால் எங்கள் யூனிட்டும் ரெடி’ என்றேன்.

கால்ஷீட்.. கால்ஷீட் என்று சினிமா வில் பேசுகிறோமே? அது என்ன தெரி யுமா? படப்பிடிப்பு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந் தால், அது ஒரு கால்ஷீட். அதேமாதிரி, மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடந்தால் அது ஒரு கால்ஷீட். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடந்தால் அது ஒரு கால்ஷீட். அதுவே, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தால், அது ஒன்றரை கால்ஷீட்.

சத்யராஜ் பகல் ஷூட்டிங் போக, இரவு நேர கால்ஷீட்டிலும் நடிக்க ஒப்புக்கொண்டதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடத்தி, பிறகு இரவுநேர படப்பிடிப்பு தொடங்கி அதிகாலை 2 மணிக்கு முடிப்போம். ஆக மொத்தம் இரண்டரை கால்ஷீட். அப்படி வேலை செய்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தோம்.

படப்பிடிப்பில் இரவு 11 மணி ஆனதும் சாண்ட்விச்சும், டீயும் வரும். அப்படி வந் தால் அன்றைய படப்பிடிப்பை நள்ளிரவு 12 மணிக்கு முடிக்கப்போவதில்லை; அதிகாலை 2 மணி வரை தொடரப் போகிறது என்று அர்த்தம். இரண்டு, மூன்று நாட்கள் சாண்ட்விச், டீ கொடுத்த போது அமைதியாக இருந்த சத்யராஜ் 4-வது நாள் இரவு 11 மணிக்கு சாண்ட் விச், டீ வந்ததைப் பார்த்து , ‘என்னது.. இன்னைக்கும் அதிகாலை 2 மணி வரை படப்பிடிப்பா? ’ என்றார். அதற்கு நான், ‘இரவு ஷூட்டிங் ஐடியாவையே நீங்கதானே கொடுத்தீங்க. ஏப்ரல்ல படத்தை ரிலீஸ் செய்யணும்னா இன்னும் பல நாட்கள் சாண்ட்விச், டீ சாப்பிட்டா கணும்’ என்றேன் சிரித்துக்கொண்டே. அவரும் முக மலர்ச்சியோடு அதை ஏற் றுக்கொண்டு படப்பிடிப்பில் முழு ஒத் துழைப்பு கொடுத்து நடித்தார். உழைக்க அஞ்சாத கடும் உழைப்பாளி, சத்யராஜ்!

sathya1_3112916a.jpg

இரட்டை வேடம் ஏற்ற சத்யராஜுக்கு கவுதமி, ரூபிணி என 2 பேர் ஜோடி. ஆர்.டி.பர்மன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘அடடா வயசுப் புள்ள அடியெடுத்தா ஜல்..ஜல்’ என்ற பாடல் நல்ல தாளக்கட்டோடு அமைந்தது. பாட்டுக்கு சத்யராஜ், கவுதமி இருவரும் நடனம் ஆடினார்கள். நல்ல தாளத்துக்கு நல்ல நடனம் அமைந்து விட்டால் பாட்டு இன்னும் சிறப்பாகிவிடும். நடனம் சிறப்பாக வரவேண்டும் என்று எங்கள் நடன இயக்குநர் புலியூர் சரோஜா, அவர்கள் இருவரையும் பிழிந்து எடுத்துவிட்டார். வாகினி ஸ்டுடியோ வில் கலை இயக்குநர் சலம் அமைத்த செட்டில் நடனம் பிரம்மாண்டமாக அமைந்தது. டி.எஸ்.விநாயகத்தின் ஒளி வண்ணம் அந்தப் பாட்டை பிரகாசமாக்கியது.

தமிழ்த் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை உலகில் தங்களுக்கென்று தனி இடத்தை உரு வாக்கி வைத்திருந்த ‘இரட்டையர்’ கவுண்டமணி, செந்தில். ‘உலகம் பிறந்தது எனக்காக’ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, அவர்கள் இருவருமே உச்சத்தில் இருந்தார்கள். ஒருவரை மற்றவர் ஏமாற்று வதும், நக்கல் அடித்துக் கொள்வதும், அடி வாங்குவதும் என்று அவர்களின் நகைச்சுவைக்கு இன்றைக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கவுண்ட மணி - செந்தில் நகைச்சுவை, ஹாலிவுட் டில் லாரல், ஹார்டி காமெடிபோல சிறந்தது. அப்படிப்பட்ட இரட்டையர்கள், இந்தப் படத்தில் நடித்தது நகைச்சுவைக் காட்சிகளுக்கு மெருகேற்றியது.

படத்தில் கவுண்டமணி, செந்தி லுடன் சேர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத் தில் லலிதகுமாரி நடித்தார். நல்ல கதா பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர். ‘விஜயபுரி வீரன்’ ஆனந்தனின் மகள். ஆனந்தன் எங்கள் ‘வீரத்திருமகன்’ படத் தின் நாயகன். அதனால் எங்கள் குழுவில் லலிதகுமாரி செல்லப் பெண். இவர் டிஸ்கோ சாந்தியின் சகோதரியும்கூட.

சிவப்பான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று இருக்கும் செந்திலை ஏமாற்றி, கருப்பாக இருக்கும் லலிதகுமாரிக்கு சிவப்பு வர்ணம் பூசி திருமணத்தை முடித்து வைத்துவிடுவார் கவுண்டமணி. மறு நாள் அவரது குட்டு வெளிப்பட்டுவிடும். தன் லட்சியத்தைக் கெடுத்துவிட்டானே என்று கவுண்டமணி கத்துவார். ‘முதலிரவு முடிந்துவிட்டது. அவரோடுதான் வாழ்ந் தாக வேண்டும்’ என்று செந்தில் கூலாக பதில் சொல்வார். செந்தில், கவுண்ட மணி, லலிதகுமாரி மூவரும் நடித்த இந்த நகைச்சுவைக் காட்சி வயிறு புண் ணாகும் அளவுக்கு சிரிக்க வைத்ததோடு, மக்களிடம் பெரிய அளவில் பெயரும் வாங்கிக் கொடுத்தது.

sathya11_3112917a.jpg

‘மனிதன்’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ரூபிணி, இப்படத்தில் சத்யராஜுக்கு இன்னொரு ஜோடி. இவர் களோடு சோ, மனோரமா, வித்யா, சரண்யா போன்ற சிறந்த நடிகர், நடிகை கள் நடித்தனர். ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினியின் ஜோடியாக பயந்து கொண்டே நடித்த கவுதமி திறமையான கதாநாயகியாக வளர்ந்து சிறந்த கதா நாயகிகள் வரிசையில் இடம்பிடித்தார். இந்தப் படத்தில் அழகிலும், நடிப்பிலும் உயர்ந்து நின்றார்.

படத்துக்கு நடிகர்களும், டெக்னீஷி யன்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்த தால் திட்டமிட்டபடி படத்தை முடித்து, குறிப்பிட்ட நாளில் வெளியிட்டோம். தயாரிப்பாளர் சரவணன் சாருக்கு முழு திருப்தி!

பூரணசந்திர ராவ் பிரபல தயாரிப் பாளர். ‘லஷ்மி புரொடக்‌ஷன்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெலுங்கில் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்தவர். இந்தியில் அமிதாப் பச்சன், ரேகா இருவரது நடிப்பில் வெற்றிப் படங்களை எடுத்த பெருமைக்குரியவர்.

ஒருமுறை என்னையும், பஞ்சு அருணா சலத்தையும் அழைத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘யமுடிகி மொகுடு’ படத்தை போட்டுக் காண்பித் தார். படம் முடிந்தது. நான் பஞ்சு அருணாசலத்தைப் பார்த்தேன். பஞ்சு என்னைப் பார்த்தார். எங்களுக்குள் ஒரே குழப்பம். ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம். |

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-90-கால்ஷீட்-என்றால்-என்ன-தெரியுமா/article9458568.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 91: உண்மையான ரஜினியும் ஆவி ரஜினியும்!

எஸ்பி.முத்துராமன்

 

 
rajini_3116298f.jpg
 
 
 

தெலுங்கில் வெளியான ‘யமுடிகி மொகுடு’ படத்தை நானும், பஞ்சு அருணாசலம் அவர்களும் பார்த்தோம். கதையில், எமலோகத்துக்கு வர வேண்டிய நபர் வராமல் ஆள் மாறி வந்துவிடுவார். கடைசியில் அவர் இல்லையென்று தெரிந்ததும் மீண்டும் பூலோகத்துக்குத் திரும்பிவிடுவார். ஆவி ஓர் உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறும் காட்சிகள் இருந்தன. இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.

 

தயாரிப்பாளர் பூரண சந்திர ராவ் அவர்கள், ‘‘எந்த சந்தேகமும் வேண்டாம். தெலுங்கில் மாபெரும் வெற்றியோடு வெள்ளி விழா கொண்டாடிய படம். தமிழில் ரஜினிகாந்தை வைத்து எடுத்தால் படம் பிச்சுக்கிட்டு ஓடும்!’’ என்றார். உடனே ரஜினியை சந்தித்தோம். அவர் , ‘‘நான் இப்போ நடிக்கிற படங்கள்ல இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமா இருக்கு. எல்லோரும் ஏத்துக்குற மாதிரி கதையில லாஜிக்கா சில காட்சிகளைச் சேருங்க. ஸ்கிரிப்ட் ரெடியானதும் ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிப்போம்!’’ என்றார். அந்தப் படம்தான் ‘அதிசய பிறவி’.

 

பெரிய பேனர் லட்சுமி புரடொக்‌ஷன்ஸ். சிறந்த தயாரிப்பாளர் பூரண சந்திர ராவ். படத்தை பிரம்மாண்டமாக எடுத்தாங்க. ஆர்ட் டைரக்டர் சலம் அவர்களுக்கு வாய்ப்பும், வசதியும் அமைந்தால் விட்டுவிடுவாரா? எமலோக செட்டை அசத்தலாக வடிவமைத்தார். படத்தில் வினுசக்ரவர்த்தி அவர்கள்தான் எமன். கம்பீரமான தோற்றம். நல்ல கருப்பு நிறம். மேக்கப் போட்டு உடை அலங்காரத்தோடு வந்தபோது எமதர்ம ராஜாவாகவே ஆகிவிட்டார். அப்படிப்பட்ட எமனுக்கு, எல்லாவற்றையும் சரியாக எடுத்துச் சொல்லும் ஒரு உதவியாளர் சித்திரகுப்தன். அதற்கு சோ அவர்கள்தான் சரியாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தோம். இருவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது.

 

சோ அவர்கள், பூலோகத்தில் இருந்து வருவர்களை எமதர்மராஜாவிடம் என்ன தவறு செய்தார் என்ற விவரத்தை சொல்வார். செய்த குற்றங்களுக்கு ஏற்றாற்போல அவருக்கு எமன் தண்டனை கொடுப்பார். சோ அவர்கள் பூலோகத்தில் இருந்து வருபவர்களைப் பற்றி எடுத்துச்சொல்லும் விதம் படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும், அரசியல்வாதிகள் வரும்போது, அவர்கள் செய்த குற்றங்களை நக்கலாகவும், கேலியாகவும் எடுத்துச் சொல்லி எமனிடம் கூடுதல் தண்டனை வாங்கிக் கொடுப்பார். அந்த வசனங்களில் சென்சாரால் கத்திரி போடப்பட்டது. அப்படி வெட்டப்பட்ட பிறகும் வசனங்கள் மக்களிடம் பெரிய அளவுக்கு பாராட்டை பெற்றன. சென்சாரில் வெட்டப்படாமல் முழுதும் வந்திருந்தால் அரசியல்வாதிகளின் கதி அதோகதிதான்!

 

படத்தில் ஒருவர் உண்மையான ரஜினி. இன்னொருவர் ஆவி ரஜினி. இரண்டு பேருக்கும் இரண்டு நாயகிகள். அவரில் ஒருவர் ஷீபா ஆகாஷ்தீக். மும்பை இறக்குமதி. அவருக்கு சுத்தமான தமிழ் தெரியாது. தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசினால் ‘தமிங்கிலிஷ்’ என்று சொல்கிறோமே அந்த மாதிரி தமிழையும், ஹிந்தியையும் கலந்து ‘தமிழிந்தி’யில் பேசினார். அவர் பேசுவது யாருக்கும் புரியாது. அதை சமாளித்து ஷூட்டிங் முடித்து நல்ல தமிழ் பேசும் நடிகையை வைத்து அவருக்கு டப்பிங் பேச வைத்தோம். அதனால் மும்பை நாயகி ஷீபா ஆகாஷ்தீக் காப்பாற்றப்பட்டார். பிற மொழி நடிகைகளைக் காப்பாற்றுவதே சிறந்த டப்பிங் கலைஞர்கள்தான். திறமையான டப்பிங் கலைஞர்கள் முகபாவத்தோடு டப்பிங்கில் பேசுவதால் பிற மொழி நடிகைகள் பெயர் வாங்குகிறார்கள். பாவம்.. டப்பிங் ஆர்ட்டிஸ்டின் முகம் தெரியாது. குரலை மட்டும்தான் கேட்கிறோம். அவர்களின் திறமைகளைப் பாராட்டுவோம்.

 

படத்தில் இரண்டாவது நாயகி கனகா. தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகையாக பயணித்த தேவிகாவின் மகள். அவரைப் போலவே கனகாவும் திறமையாக நடித்தார். ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தும் தொடர்ந்து அவருக்கு எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டால் வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கனகா மன அமைதியோடு வாழ, வாழ்த்துவோம்!

 

இந்தப் படத்துக்கு தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் வாலி, புலமைபித்தன், பிறைசூடன், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தார்கள். அத்தனை பாடல்களுமே ஹிட். நல்ல இசை என்றால் யாராக இருக்க முடியும்? நம் இசைஞானி இளையராஜாதான். ‘தானந்தன கும்மிக்கொட்டி.. கும்மிக்கொட்டி’, ‘உன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெழுதி பாடத் தோணும்’ ஆகிய பாடல்களில் ரஜினி, கனகாவின் நடிப்பும், நடனமும் சிறப்பாக அமைந்தது. அதேபோல மும்பை நாயகி ஷீபா ஆகாஷ்தீக்கோடு, ரஜினிகாந்த் இணைந்து டூயட் பாடும் ‘சிங்காரி பியாரி’ பாடலும் கவனம் பெற்றது. ‘அன்னக்கிளியே சொர்ணக்கிளியே சந்தேகம் உனக்கு ஏனடி’ பாடலில் ரஜினிகாந்த் ஒரு நாயகிக்கு தெரியாமல் இன்னொரு நாயகியோடு மாறி மாறி ஆடும் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனதோடு, மக்கள் வெகுவாக ரசித்தனர். இவ்வளவு நடனங்களுக்கும் எங்கள் குழுவின் சமஸ்தான நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாதான்.

 

இவ்வளவு அம்சங்கள் இருந்தும் தெலுங்கில் பெற்ற வெற்றிபோல் தமிழில் வெற்றி பெறவில்லை. ‘ஆவி உடம்புல போகுதாம். வருதாம். காதுல பூ சுத்துறாங்கப்பா!’ என்று படம் பார்த்தவர்கள் கமாண்ட் அடித்தார்கள். பக்கத்து பக்கத்து மாநிலம், ரசனையில்தான் எவ்வளவு வித்தியாசம்.

 

இந்த காலகட்டத்தில்தான் தொலைக் காட்சிகளில் தொடர்கள் வரத் தொடங்கின. சரவணன் சார் அவர்களிடம் போய், ‘நாமும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கலாம்!’ என்றேன். அவரும், ‘ஓ தாரளமா எடுப்போமே!’ என்று சம்மதம் சொன்னார்.

 

சின்னத்திரை தொடருக்காக கதை தேட ஆரம்பித்தோம். ஒருமுறை நான் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நாடக எழுத்தாளர் வெங்கட் அவர்களை சந்தித்தேன். அவர், ‘முன்ன மாதிரி இப்போ வேலை இல்லை சார். ஏதாவது வாய்ப்புகள் வந்தால் சொல்லுங்க!’ என்று சொன்னார். அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர். பல நாடகங்களுக்கு விருது பெற்றவர். நான் அவருடைய பல நாடகங்களை பார்த்திருக்கிறேன். ‘வாய்ப்பு வரும்போது சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். அது நினைவுக்கு வந்தது. அவரை அழைத்து விவரம் சொல்லி சரவணன் சாரிடம் அழைத்துச் சென்றேன்.

 

மூன்று, நான்கு கதைகள் சொன்னார். அந்த கதைகள் சரவணன் சாருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த நேரத்தில், அமிர்தம் கோபால் தயாரித்த வெங்கட் கதை, வசனம் எழுதிய ‘காசேதான் கணவனடா’ என்ற நாடகத்தை நான் பார்த்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த கதை. ‘அதை சரவணன் சாருக்கு சொல்லுங்கள்’ என்று சொன்னேன். வெங்கட் சொன்னார். அந்தக் கதை சரவணன் சாருக்கு ரொம்ப பிடித்துபோய் விட்டது. ‘அந்த நாடகத்தை சின்னத்திரைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொடுங்கள்!’ என்று கேட்டுக்கொண்டார். அவரும் எழுதத் தொடங்கினார். எப்போதோ பார்த்த வெங்கட் நாடகம் என் நினைவுக்கு வந்தது வெங்கட்டின் எழுத்து திறமைதான். சின்னத்திரை, சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் நடத்தும் நாடகங்களும், எழுதும் நாவல்களும் எங்கள் மனதை தொட்டால் நாங்களே உங்களை அழைப்போம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.

 

வெங்கட் அவர்கள் நாடகத்தை மிக அழகாக சின்னத்திரைக்கு ஏற்றமாதிரி காட்சிகளை அமைத்து சிறப்பாக வசனம் எழுதியிருந்தார். நடிகர், நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்கினோம். அந்தத் தொடர் என்ன?

 

இன்னும் படம் பார்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-91-உண்மையான-ரஜினியும்-ஆவி-ரஜினியும்/article9472623.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 92: எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பவர்கள்!

 
விழா ஒன்றில் எம்.ஜி.ஆருடன் எஸ்பி.முத்துராமன்
விழா ஒன்றில் எம்.ஜி.ஆருடன் எஸ்பி.முத்துராமன்
 
 

நேற்று ஜனவரி 17. புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது பிறந்த நாள். இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. எம்.ஜி.ஆர் அவர்கள் ‘சதிலீலாவதி’ படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம் பித்து பட்டினியோடும், வறுமையோடும் வளர்ந்து புரட்சித் தலைவராக, தமிழக முதலமைச்சராக, சிறந்த அரசியல் வாதியாக, மக்கள் தொண்டராக, வள்ளலாக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்தவர்.

அவர் இறந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும், அவர் பெயரை பயன் படுத்தித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலை சிலருக்கு. அவர் நடித்து ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தை இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் இயக் கும்போது, அதில் நான் உதவி இயக்கு நர். அந்நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. ஏவி.எம்.சரவணன் சாருக்கு இரண்டு முறை ‘செரீஃப்’ பதவி கொடுத்து பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். எனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது, புரட்சித் தலைவரை வைத்து என்னால் படம் இயக்க முடிய வில்லை என்பதுதான். அதற்குக் காரணம், நான் இயக்குநராக ஆனபோது அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘‘நான் நிரந்தரமானவன்; எந்த நிலையிலும் அழிவில்லை!’’ என்று சொல்லியதைப் போல், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என் றைக்கும் மரணமில்லை. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அவரைப் பின்பற்றுவோம்!

இதே நாளில், இன்னொருவரைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகிறேன். இதே 17-ம் தேதி பிறந்தவர்தான் இந்தியாவிலேயே சிறந்த தயாரிப் பாளர்களில், இயக்குநர்களில் ஒருவ ரான எல்.வி.பிரசாத்.

சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்ப வராக உழைத்து முன்னேறியவர். இந் தியாவின் முதல் பேசும் படமான ‘அலெம் அரா’-வில் நடித்தார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார்.

சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். அது பிரபலமாக வளர்ந்தது. நான்கு மாநிலங்களில் கலர் லேபரெட்டரி ஆரம்பித்த பெருமை அவருக்கு உண்டு. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ ஹிந்தி படத்தை தயாரித்தார். அப்படத்தின் வெற்றி விழா மும்பை மராத்தா மந்தீர் தியேட்டரில் நடந்தபோது, பிரசாத் அவர்கள் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்த எல்லோரும் பதறிவிட்டார்கள். அப்போது பிரசாத் அவர்கள் சொன்னார்: ‘‘இந்த தியேட்டரில்தான் ஒரு காலத்தில் நான் வாட்ச்மேனாகவும், டிக்கெட் கிழித்துக் கொடுப்பவனாகவும் வேலை செய்தேன். அதே தியேட்டருக்கு ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளராக வந்தபோது பழைய நினைவுகளெல்லாம் வந்து என்னை நெகிழ வைத்துவிட்டது’’ என்றார்.

இதை இந்த இடத்தில் நான் சொல்லக் காரணம் - பிரசாத் அவர்களின் ஆரம்பத்தையும், அவர் பெற்ற வெற்றிகளையும் அவருடைய பிறந்த நாளில் நாம் நினைவில் கொள்ளத்தான். சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு பிரசாத் அவர்கள் ஒரு பாடம். தமிழில் ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பிரசாத் அவர்கள் இயக்கிய ‘மிஸ்ஸியம்மா’ படத்தை ஹிந்தியில் ‘மிஸ் மேரி’ என்ற பெயரில் ஏவி.எம். தயாரித்தது. ஹிந்திப் படத்தையும் எல்.வி.பிரசாத் அவர்களே இயக்கினார். அந்தப் படத்துக்கு கே.சங்கர் எடிட்டர். நான் உதவி எடிட்டர். இதனால் பிரசாத் அவர்களின் திறமையை நேரில் பார்த்து, கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேன்மக்கள் மேன்மக்களே!

‘அதிசய பிறவி’ படத்தில் இரண் டாவது நாயகி கனகா. இவர், நல்ல குணச்சித்திர நடிகையான தேவிகாவின் மகள். தாயைப் போலவே கனகா வும் திறமையானவர். ரஜினி போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தும்கூட அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு அமையவில்லை. வாழ்க்கை யில் குழப்பம் ஏற்பட்டால் வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கத்தானே செய்யும். அவர் மன அமைதியோடு வாழ, வாழ்த்து வோம்!

mgr1_3119573a.jpg

இப்படத்தில் அனைத்து பாடல் களுமே சூப்பர் ஹிட். நல்ல இசை. அப்படி யென்றால் இசையமைப்பாளர் யாராக இருக்க முடியும்? ‘நம்ம இசைஞானி’ இளையராஜாதான்! ‘தானந்தன கும்மிக் கொட்டி.. கும்மிக் கொட்டி’, ‘உன்னைப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெழுதிப் பாடத் தோணும்’ போன்ற பாடல்களில் ரஜினி, கனகாவின் நடிப்பும், நடனமும் சிறப்பாக அமைந்தது. அதேபோல மும்பை நாயகி ஷீபா ஆகாஷ்தீக்கோடு, ரஜினி இணைந்து டூயட் பாடும் ‘சிங்காரி பியாரி’ பாடலும் கவனம் பெற்றது. ‘அன்னக் கிளியே சொர்ணக் கிளியே சந்தேகம் உனக்கு ஏனடி?’ பாடலில் ரஜினி ஒரு நாயகிக்குத் தெரியாமல் இன்னொரு நாயகியோடு மாறி மாறி ஆடும் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனதோடு, மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இவ்வளவு அம்சங்கள் இருந்தும் தெலுங்கில் வெற்றியடைந்த அளவுக்கு இப்படம் தமிழில் வெற்றிபெறவில்லை. ‘ஆவி’ மாற்றத்தை ‘காதுல பூ சுத்துறாங் கப்பா’ன்னு படம் பார்த்தவர்கள் கமென்ட் அடித்தார்கள். பக்கத்துக்கு பக்கத்து மாநிலம்தான்; ரசனையில்தான் எவ்வளவு வித்தியாசம்!

இந்தக் காலகட்டத்தில்தான் தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர்கள் வரத் தொடங்கின. ஏவி.எம். சரவணன் சாரை சந்தித்து, ‘‘நாமும் தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்க லாம் சார்!’’ என்று என் யோசனையை சொன்னேன். அவரும் அதற்கு, ‘‘ஓ! தாராளமா எடுப்போமே!’’ என்று சம்மதம் சொன்னார். உடனே சின்னத்திரை தொடர் களுக்காக கதைகள் தேட ஆரம் பித்தோம்.

ஒருமுறை ஹோட்டலில் எதேச்சை யாக நாடக எழுத்தாளர் வெங்கட் அவர் களை சந்தித்தபோது அவர், ‘‘முன்னே மாதிரி இப்போ வேலை இல்லை சார். ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க’’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது. வெங்கட் எழுதிய பல மேடை நாடகங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்ததும் என் நினைவுக்கு பலம் சேர்க்க, அவரை அழைத்து தொலைக்காட்சி தொடர் இயக்கும் ஐடியாவை சொல்லி, கதை சொல்ல ஏவி.எம்.சரவணன் சாரிடம் அழைத்துச் சென்றேன்.

மூன்று, நான்கு கதைகள் சொன்னார். அக்கதைகள் சரவணன் சாருக்கு திருப்தி தரவில்லை. உடனே நான் வெங்கட்டிடம், நான் பார்த்து ரசித்த அவரது வேறொரு நாடகத்தின் கதையைச் சொல்லச் சொன்னேன். அந்தக் கதை சரவணன் சாருக்கு ரொம் பவும் பிடித்துப் போனது. அமிர்தம் கோபால் தயாரித்து வெங்கட் கதை - வசனம் எழுதி இயக்கிய ‘காசேதான் கணவனடா’என்ற நாடகக் கதைதான் அது. அந்நாடகத்தை தொலைக்காட்சி தொடருக்கு ஏற்ற வடிவத்தில் வெங்கட் அவர்களை எழுதச் சொன்னோம். அவரும் எழுதினார். அந்தத் தொடர் எந்தத் தொடர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-92-எம்ஜிஆர்-பெயரை-பயன்படுத்தி-ஓட்டு-கேட்பவர்கள்/article9486629.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 93: மெரினா புரட்சி- ’மாணவர்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு’

 
 
‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பில்..
‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பில்..
 
 

ஏவி.எம் தயாரிப்பில் நான் இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் ‘முரட்டுக்காளை’. இந்தப் படத்துக்காக பாகனேரியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஏறுதழுவி, ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவார். மக்கள் அவரை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள். அப்போது இசைஞானி இளைய ராஜா இசையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிய, ‘பொதுவாக எம் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என்ற பாடலை ரஜினிகாந்த் பாடுவார். இந்தப் பாடல் இன்றைக்கும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக உள்ளது. இப்படி தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ‘முரட்டுக்காளை’ படத்தில் வைத்து பெருமைப்படுத்தினோம்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தடை இருந்து வந்தது. இந்த ஆண்டு தடை நீங்கி தைத்திருநாளில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று ஆவலோடு இருந்தோம். ஆனால், ஏமாற்றம். அதன் எதிரொலியாகத்தான் தமிழர்கள் போராட்டம் வெடித்தது. மாணவ, மாணவிகள் முன்னிருந்து மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் களமிறங்கினர். சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்திய அறவழிப் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் வரலாற்று முக்கியத்துவமுள்ள சம்பவமாக சரித்திரம் படைத்துவிட்டது.

தமிழகம் முழுவதும் இளம் காளையர்களும், வீர மங்கைகளும் களத்தில் இறங்கி 7 நாட்கள் குடிநீர், உணவு, தூக்கம் இல்லாமல் பனியிலும், மழையிலும், வெயிலிலும் போராடினார்கள். நம்பிக்கையோடு களத்தில் நின்ற மாணவிகளிடம் ‘இரவிலும் தங்கி போராடுகிறீர்களே, உங்களுக்கு பாதுகாப்பு?’ என்று ஊடகத்தினர் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘மாணவர்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு’ என்றனர். நெஞ்சம் நெகிழ்ந்தது. நம் கலாச்சாரம் தெரிந்தது. மாணவ, மாணவிகளுக்கு கிடைத்த முழு வெற்றிதான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம். அதன்பிறகு நடந்த சூழ்நிலை வருத்தமளிக்கிறது.

‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்’

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான் என்ற வள்ளுவரின் வாக்கை இந்த நேரத்தில் உரியவர்களுக்குச் சொல்கிறேன்.

அதேபோல, புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய,

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு..

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’

- என்றார். நல்ல விஷயத்துக்காக தமிழர்கள் ஒன்றானதைக் கண்டோம்.

‘காசேதான் கணவனடா’ என்ற நாடகத்தை தொலைக்காட்சி தொடருக்கு ஏற்ற மாதிரி வெங்கட் அவர்களை மாற்றி எழுதச் சொன்னோம். வெங்கட் அவர்கள் திறமையான எழுத்தாளர். பல வெற்றி நாடகங்களை கொடுத்தவர். அன்றாடம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கையாக காட்சிப்படுத்தி கருத்துள்ள வசனங்கள் நிறைய சேர்த்து அவர் எழுதிக் கொடுத்த அந்தத் தொடர்தான் ஏவி.எம் தயாரித்த ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’.

இதில் சரத்பாபு, நாகேஷ், ஜெயபாரதி, ஜெய்கணேஷ், பொன்வண்ணன், டி.வி.வரதராஜன், சக்திகுமார், மதுபாலாஜி, வாசுகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தனர். இசை சந்திரபோஸ். பாடல் வைரமுத்து. கலை இயக்குநர் பத்ம தோட்டாதரணி, ஒளிப்பதிவாளராக டி.எஸ்.விநாயகம், கதை, வசனம் வெங்கட், இயக்கம் நான்.

rajini1_3123014a.jpg

இதை ஒரு தொலைக்காட்சி தொடராக அல்லாமல் சினிமாவாகவே எடுத்தோம். சரத்பாபு எங்களின் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்தவர். அதேபோல மலையாளத்தில் நிறைய படங் களில் நடித்த ஜெயபாரதி இந்தத் தொடரில் சரத்பாபுவுக்கு மனைவியாக நடித்தார். சீரியல் முழுக்க கணவனை ‘பாவா.. பாவா’ என்று பாசத்தோடு அவர் அழைப்பதை பார்த்து பெண்கள் பலரும் தங்கள் கணவனை ‘பாவா.. பாவா’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

நகைச்சுவை நடிகர் நாகேஷ் இத்தொடரில் பழம்பெரும் தியாகியாக நடித்தார். தேசத் தலைவர்களின் படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட இடத்தில் ஒரு இளைஞன் சிகரெட் பிடித்துக்கொண்டே அவர்களை கிண்டல் அடிப்பார். அதைக் காணும் நாகேஷ், அந்த இளைஞனிடம் தேசத் தலைவர்கள் செய்த தியாகத்தை சொல்லியவாறே உணர்ச்சி வசப்பட்டு உயிரை விடுவார். நகைச்சுவை நடிகரான நாகேஷ் அவர்களின் நடிப்பு அழுகையை வரவழைத்தது. அதைப்போல மற்ற நட்சத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்கள். மொத்தம் 34 வாரங்கள் ஒளிபரப்பானது.

அடுத்து ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ பாகம் 2 எடுத்தோம். இதற்கு கதை, வசனம் எழுதும் பொறுப்பை ‘வேதம் புதிது’ கண்ணன் அவர்கள் ஏற்றார். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’ இவரது படைப்புதான். பகுத்தறிவு விஷயங்களை படைப்புகளில் புகுத்துவதை கடமையாக கொண்டவர். இந்த தொடரில் மவுனிகா, சேத்தன், தேவதர்ஷினி, தீபா வெங்கட், உஷா ஆகியோர் நடித்தனர். தொழில் நுட்பக் கலைஞர்கள் என் குழுவினர். இந்தத் தொடர் 50 வாரங்கள் ஒளிபரப்பானது.

அடுத்து ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ பாகம் 3. ‘திரிவேணி சங்கமம்’ என்ற துணைத்தலைப்போடு எடுத்தோம். இதில் விஜய் ஆதிராஜ், கவிதா, மோகன்ராம் ஆகியோர் நடித்தனர். இந்தத் தொடருக்கும் ‘வேதம் புதிது’ கண்ணன் கதை எழுதினார். 41 வாரங்கள் ஒளிபரப்பானது.

இதனை அடுத்து ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ 4-வது பாகம். ‘மாவிலைத் தோரணம்’ என்ற துணைத் தலைப்பில் ஒளிபரப்பானது. அந்த நேரத்தில் தேவிபாலா அவர்கள் எழுதி வாராவாரம் ஒரு பாக்கெட் நாவல் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் நல்ல விஷயங்கள் குவிந்திருந்தன. அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்தபோது அம்பத்தூர் என்று தெரிந்தது. உடனே அவரை நேரில் சென்று பார்த்து விஷயத்தை கூறி சரவணன் சாரிடம் அறிமுகப்படுத்தினேன். கதைகளை நீர் வீழ்ச்சிபோல கொட்டினார்.

ஏவி.எம் தயாரித்த இந்த தோரண வாயில் தொடர் சின்னத்திரையில் தேவிபாலாவுக்கும் தோரண வாயிலாக அமைந்தது. இந்தத் தொடர் வழியே சின்னத்திரைக்கு அறிமுகமானார். இன்றைக்கு சின்னத்திரைக்கு அதிக கதைகள் எழுதிய கதாசிரியர் என்ற பெருமையோடு திகழ்கிறார். நிறைய கற்பனையும், கடுமையான உழைப்பும் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது. இதில் சுரேஷ், சினிமா நடிகை யுவராணி உள்ளிட்டவர்கள் நடித்தனர். 53 வாரங்கள் ஒளிபரப்பானது.

அடுத்து, ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ பாகம் 5. ‘தன்னம்பிக்கை’ என்ற துணைத்தலைப்பில் தயாரித்தோம். இதன் கதை, வசனம் தேவிபாலா. இதில் விஜய் ஆதிராஜ், சொர்ணமால்யா, தீபாவெங்கட் ஆகியோர் நடித்தனர். இப்படி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஏவி.எம் தயாரிப்பில் ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ தொடர் வாராவாரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தத் தொடர் மூலம் நல்ல கதாசிரியர்களுக்கு வாய்ப்பும், நல்ல நடிகர்களை அறிமுகப்படுத்துவதும், தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வோடு நல்ல செய்திகளை கொடுத்ததிலும் எங்கள் குழுவுக்கு மகிழ்ச்சி.

ஆண்டுதோறும் ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ‘வள்ளலார் காந்தி விழா’ நடத்துவார். அந்த நிகழ்ச்சிக்கு வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் பெரிய அளவில் வருவார்கள். இதை கவனித்த ஏவி.எம் சரவணன் அவர்கள் ஒரு யோசனை சொன்னார்கள்?

rajini2_3123015a.jpg

‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ தொலைக்காட்சி தொடர் பாராட்டு விழாவில் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன், ஏவி.எம்.ராஜேஸ்வரி அம்மையார் உள்ளிட்டவர்கள்…

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-93-மெரினா-புரட்சி-மாணவர்கள்தான்-எங்களுக்கு-பாதுகாப்பு/article9501111.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 94: அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!

 

 
spm1_3126406f.jpg
 
 
 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளலார் காந்தி விழாவில் ஏவி.எம் சரவணன் அவர்கள் ‘‘முத்துராமன் நாம ஏன் வள்ளலார் வாழ்க்கையை தொலைக்காட்சித் தொடராக எடுக் கக்கூடாது. இதுகுறித்து பொதிகை தொலைக்காட்சி இயக்குநரிடம் பேசுங் களேன்?’’ என்றார். நானும், நல்ல யோசனையாக இருக்கிறதே என பொதிகை தொலைக்காட்சி இயக்கு நரைச் சந்தித்தேன். அவரும், ‘‘கண்டிப்பா பண்ணுவோம். முதலில் 5 எபி சோட்ஸ் எடுத்துக் காட்டுங்கள். அதை பார்த்துவிட்டு ஓ.கே பண்றோம்!’’ என்றார்.

தமிழ்ப் பேரறிஞர் அ.சா.ஞானசம்பந் தன், இலக்கியத்தில் முதன்மையானவர். அவரைச் சந்தித்து வள்ளலார் வாழ்க்கை யைத் தொடராக எடுக்கும் விஷயத்தை சொன்னதும் திரைக்கதை, வசனம் எழுதிக்கொடுக்க மகிழ்ச்சியோடு சம் மதித்தார். நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தும் வேலையில் இறங்கினோம்.

அப்போது சரவணன் சார், ‘‘சென்னை யில் செட் போட்டு எடுக்க வேண்டாம். வள்ளலார் வாழ்ந்த வடலூருக்கே சென்று இயற்கையான சூழ்நிலையில் எடுங்கள். குறிப்பாக தைப்பூச ஜோதியை நல்ல முறையில் படமாக்குங்கள்!’’ என்றார்.

முழு யூனிட்டோடு சென்றோம். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, சன்மார்க்க அறிஞர் ஊரன் அடி களார் ஆகியோரும் எங்களுக்கு ஆதரவு தந்தனர். வள்ளலார் பிறந்த மருதூர், மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி விளாகம் ஆகிய இடங் களில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வடலூர் வந்தோம். தைப்பூச ஜோதி தரிசனம் பார்க்க வந்த லட்சக்கணக்கான பக்தர்களை படம் பிடித்தோம். ஜோதி தரிசனம் எடுப்பதற்காக சத்தியஞான சபைக்குச் சென்றோம். அதன் வாசலில் ஒரு அறிவிப்பு பலகை. அதில், ‘புலை, கொலை தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம்’ என்று போட்டிருந்தது. அதாவது கொலைகள் செய்யாதவர்களும், அசை வம் தவிர்த்தவர்களும் உள்ளே வரலாம் என்று இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

காரணம், மூணு வேளையும் அசைவம் விரும்பி ருசித்து சாப்பிடுபவன் நான். அசைவம் இல்லாமல் எனக்கு சாப்பாடு உள்ளே செல்லாது. நான் யோசித்துக் கொண்டே இருக்கும்போது சத்தியஞான சபை நிர்வாகி என்னிடம் வந்து, ‘‘தந்தை பெரியார் இங்கு வந்திருந்தார்கள். இந்த அறிவிப்பை படித்ததும், ‘என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. வள்ளலாருடைய கொள்கைக்கு மாறாக நான் உள்ளே போக விரும்பவில்லை’ என்று கூறி திரும்பி போய்விட்டார்கள். உங்கள் முடிவு என்ன சார்?’’ என்றார். என்னுடன் இருந்த என் குழுவினர், ‘‘இன் றைக்குதான் நாங்கள் அசைவம் சாப் பிடவில்லையே’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டனர். அந்தக் கருத்து எனக்கு உடன்பாடாக இல்லை. ஒரு மன உறுதியோடு, ‘‘இந்த நிமிஷத்துல இருந்து அசைவம் சாப்பிட மாட்டேன். இது வள்ளலார் மீது ஆணை’’ என்று கூறிவிட்டு உள்ளே போனேன்.

ஏழு திரைகளை விலக்கி தைப்பூச அருட்பெருஞ்ஜோதியை, அந்த கண் கொள்ளாக் காட்சியைப் படமாக்கி னோம். ‘அருட்பெருஞ்ஜோதி... அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்று கூறி வணங்கினோம்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, 2017 பிப்ரவரி 9-ம் தேதி வடலூரில் 146-வது தைப்பூச ஜோதி தரிசனம் என்று எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது வள்ளலார் மேல் எனக்கு ஏற்பட் டிருக்கிற அலைவரிசையாக தெரிகிறது!

நாங்கள் எடுத்த காட்சிகளை எல்லாம் எடிட் செய்து 5 எபிசோடு களாக தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சிக்கு அனுப்பிவைத்தோம். இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் பதில் வரவில்லை. சரவணன் சார், ‘‘தூர்தர்ஷ னுக்கு நேரில் போய் விசாரியுங்கள்’’ என்றார். நானும் போய் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் இனிப்பு, காரம், காபி எல்லாம் கொடுத்து சிறப் பாக உபசரித்தனர். ‘‘சார், உங்க விருந் தோம்பலுக்கு ரொம்ப நன்றி! நாங்கள் அனுப்பிய வள்ளலார் தொடர் ஓ.கே ஆயிடுச்சா?’’ என்று அந்த அதிகாரியிடம் கேட்டேன். அவர் சிரித்து, மழுப்பி சொல்ல முடியாமல் சொன்ன சேதி இதுதான்.. ‘‘வள்ளலார் தொடரைப் பார்ப்பவர்கள் அலங்கார சாதனங்கள், ஆடம்பர ஆடை கள் இவற்றை எல்லாம் வாங்கக்கூடிய வர்களாக இருக்க மாட்டார்கள். அதனால் வள்ளலார் தொடரில் விளம்பரம் செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று ஸ்பான் சர்கள் கூறிவிட்டார்கள்’’ என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். ‘‘ஏன் சார், அவர்கள் விளம்பரம் கொடுக்காவிட்டால் என்ன.. வள்ளலார் வரலாற்றை அரசு செலவிலேயே ஒளிபரப்பலாமே’’ என் றேன். ‘‘அதற்கு முன்அனுமதி வாங்க வேண்டும். பட்ஜெட்டில் இடமில்லை. ஒளிபரப்ப இயலாது!’’ என்று கூறி வருத் தம் தெரிவித்தனர். அதை சரவணன் சாரிடம் சொன்னபோது, ‘‘இதை முன்பே சொல்லிருந்தால் எடுத்திருக்க மாட் டோமே’’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.

வள்ளலாருக்காக ஏவி.எம்முக்கு பணச் செலவு. எங்களுக்கு உழைப்புச் செலவு. ஆனால், தொடர்தான் வரவில் லையே தவிர, இந்தப் பணியால் வள்ள லார் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டேன். அதைவிட முக்கியம்.. அசைவத்தை முழுவதுமாக விட்டுவிட் டேன்! முட்டைகூட சாப்பிடுவ தில்லை. இதுதான் எங்களுக்கு கிடைத்த பலன்!

தேவையான கருத்து களை படமாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ ஏன் எடுப்பதில்லை?’ என்று பலரும் எங்களைக் கேட்கின்றனர். இந்த ‘வள்ளலார் நிகழ்ச்சி’தான் அவர் களுக்கு பதில்!

 

‘மக்களுக்குத் தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் களில் முக்கியமானவர் சிவசங்கரி. எழுத்துலகில் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர் காணல், மொழிபெயர்ப்பு என பல தளங் களில் இயங்கி முன்னிலையில் இருப் பவர். ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற செயல் திட்டத்தை முன் னெடுத்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு ஒரு ஒருமைப்பாட்டுக் களஞ்சியமாக அதைத் தொகுத்து வருகிறார். எழுத்துலகில் இப்படி பல பணிகளைச் செய்யும் ‘சாதனைப் பெண்’ அவர்.

spm_3126407a.jpg

சரவணன் சார், நான் என்கிற நட்புக் குடும்பத்தில் அவரும் ஒருவர். அவரது தோழிகள் லலிதாவும், பிருந்தாவும் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். ஏவி.எம் தயாரித்த பல தொடர்களுக்கு சிவசங்கரிதான் கதை, திரைக்கதை, வசனம். அந்த வரிசையில் அவரது ‘நேற் றைய மனிதர்கள்’ கதையை தொலைக் காட்சித் தொடராக இயக்கினேன். அதில் தியாகியாக, ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் நடித்தார். தியாகிகளுக்கு நாம் காட்டும் மரியாதை13 வாரங்கள்தான் ஒளிபரப்பானது!

சிவசங்கரியின் ‘இவர்களும் அவர் களும்’ கதையை குறுந்தொடராக இயக்கி னேன். ஒரு பெண்ணின் பிறந்தவீடு, புகுந்தவீடு நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வ மான காட்சிகளாக அமைத்திருந்தார். அந்தப் பெண் சம்பாதிக்கிற பணத்தை தாய் வீட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று வாதிடுகிற கணவன், அதன் முடிவு என்ன என்பதுதான் கதை.

இன்று புகழ்பெற்ற இசையமைப் பாளராக இருக்கிற அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திரா, இத்தொடரில் கணவராக நடித்தார். திரைத்துறையில் குணச்சித்திர நடிகையாகவும், வித்தியாச மான படைப்பாளியாகவும் திகழ்கிற ரோகிணி மனைவியாக நடித்தார். பெண் மையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசனங்கள் வெடியாக அமைந்திருந்தன.

spm11_3126405a.jpg

அதேபோல சிவசங்கரியின் மற்றொரு கதை ‘எனக்காகவா’. கணவனும், மனைவியும் வேலைக்குப் போவார்கள். மகனை கவனிக்கமாட்டார்கள். அந்தச் சிறுவன், தாய் தகப்பன் ஏக்கத்தில் அவர் களை வெறுப்பவனாக ஆகிவிடுவான். பக்கத்து வீட்டுக்கு விருந்தாளியாக வருபவர், அந்தப் பையனுடைய கவலையைப் போக்கும் வகையில் ‘உனக்காகத்தான் உன் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள்’ என்று அவனுக்குப் புரியவைப்பார். அந்தப் பையன், ‘எனக்காகவா’ என்று புரிந்துகொண்டு அப்பா, அம்மா மீது அன்பு செலுத்துவான். அப்பாவாக வாகை. சந்திரசேகர், அம்மாவாக தேவி நடித்தார்கள். வேலைக்குப் போகும் பெற் றோரின் வேதனைகளை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தார்கள். அந்தப் பையனைத் திருத்தும் பக்கத்து வீட்டு நண்பராக சிறந்த நாடக, சினிமா நடிகர் பீலி சிவம் நடித்தார். நாடகத்தில் முத்திரை பதித்து சினிமாவுக்கு வந்தவர் பீலி சிவம். அவர், இயக்குநர்கள் விரும் பும் நடிகர். இத்தொடரை பிள்ளைகள் அவசியம் பார்க்க வேண்டும்.

இப்படி தொடர்களை இயக்கிக் கொண்டிருந்த நாங்கள்... ஒரு கால கட்டத்தில் அதை நிறுத்திக்கொண்டோம். ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-94-அருட்-பெருஞ்ஜோதி-தனிப்பெருங்கருணை/article9513974.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.