Jump to content

பொங்கல்


Recommended Posts

பச்சரிசி பால் பொங்கல்
Paal Pongal Recipe: Pongal Special

 பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

  தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - சிறிது (நெய்யில் வறுத்தது)

பால் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும்.

பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சர்க்கரைப் பொங்கல்

 

 
sarkkarai_2692198f.jpg
 

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - கால் கப்

வெல்லம் - ஒரு கப்

பனங்கல்கண்டு - அரை கப்

பால், தேங்காய்ப் பால் - தலா அரை கப்

முந்திரி, திராட்சை - 15

நெய் - கால் கப்

ஏலக்காய் - 8

குங்குமப்பூ, ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு

பச்சை கற்பூரம் - சிறு துளி

எப்படிச் செய்வது?

அரிசி, பாசிப் பருப்பைத் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு மூடி தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுங்கள். பாலுடன் நான்கரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். அரிசி, பருப்பைக் களைந்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் பொடி செய்த வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, தளதளவென்று கொதிக்கும்போது இறக்கிவையுங்கள்.

நெய்யில் முந்திரி, திராட்சையைத் தனியாக வறுத்து, பொங்கலில் சேருங்கள். பிறகு ஜாதிக்காய்ப் பொடியை நெய்யில் வறுத்துச் சேருங்கள். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்து சேருங்கள். குங்குமப்பூவை சிறுதளவு பாலில் கரைத்து சேருங்கள். மீதமுள்ள நெய்யைக் கொட்டிக் கிளறுங்கள். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article8092143.ece

Link to comment
Share on other sites

தைப் பொங்கலுக்கு உதவியாய் இருக்கும் ...... நன்றி சகோ!

ரதி இந்த முறை தைப்பொங்கலுக்கு இந்த முறையைப் பார்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யுங்கோ

வெல்லம்/சர்க்கரைக்குப் பதிலாக brown sugar போடலாம்.... 

Link to comment
Share on other sites

பொங்கல் படையல்: பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு

 

 
 
ezu_kai_2692196f.jpg
 

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரி, உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்

மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்

அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

மைசூர் பருப்பு- 6 டீஸ்பூன்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

எண்ணை - 6 டேபிள் ஸ்பூன்

நெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

பெருங்காயம் - 1 துண்டு

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்

தனியா - 6 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10 முதல் 15

மிளகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

துருவிய தேங்காய் - அரை கப்

தாளிக்க

கடுகு - 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

நிலக்கடலை - 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, மைசூர் பருப்பை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயில் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரையுங்கள். புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரையுங்கள். பூசணி, பரங்கி, கத்திரி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து, வடிகட்டுங்கள்.

புளிக் கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரி துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளியுங்கள். இதில் சாம்பார் பொடி சேர்க்கக் கூடாது. விருப்பப்பட்டால் சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்ப்பதில்லை. மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக் குழம்பு தயார்.

நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும். மீதியான குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கிச் சேர்த்து கொதிக்கவிட்டுச் சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை எரித்த குழம்பு என்றும் சொல்வதுண்டு.

இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8092112.ece

Link to comment
Share on other sites

சர்க்கரை பொங்கல்

1937061_474761776045815_8772963954198294

 

தேவையானவை:
புதிய பச்சரிசி-200 கிராம்
தண்ணீர் - 3 டம்ளர்
வெல்லம்- 200 கிராம்
தேங்காய்த்துருவல்- கால் கப்
முந்திரிப்பருப்பு, திரட்சை- தலா 10
நெய்- 4 டீஸ்பூன்
ஏலக்காய்-1

செய்முறை:
பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேக வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேக விடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, திரட்சை , ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:
வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம்.

 

பொங்கல் சாதம்

12401960_474761326045860_409206857795458

தேவையானவை:
பச்சரிசி- 200 கிராம்
தண்ணீர்- 4 டம்ளர்

செய்முறை:
பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு- தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 11 months later...

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கல்கண்டு - 400 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10௦
திராட்சை - 10௦
நெய் - 200 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை :

* கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

* இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

* பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

* கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

சத்தான சுவையான காய்கறி பொங்கல்

பொங்கலில் காய்கறிகளை சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இன்று சுவையான காய்கறி பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்தான சுவையான காய்கறி பொங்கல்
 
தேவையான பொருட்கள்  :

பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க :

மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

* அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்த பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கிய பின் காய்கறிக்கலவையைச் சேருங்கள்.

*. அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய்கள் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

* கமகம காய்கறிப்பொங்கல் தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....

 
பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உலர் திராட்சை - 1 தேவைக்கு
பாதாம் - 10 (விருப்பப்பட்டால்)
பிஸ்தா - 10 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)

செய்முறை :

* அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

* பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

* பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

* மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

* அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

* எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.

* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

குறிப்பு  :

* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

சர்க்கரை நோயாளிகள் இந்த கோதுமை ரவை பொங்கலை சாப்பிடலாம். பொங்கலுக்கு சூப்பரான கோதுமை ரவை இனிப்பு பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை கப்
நெய் - கால் கப்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  

செய்முறை :

* வாணலியில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

* வறுத்த ரவை, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வடிகட்டிய வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

* ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

* சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான்.

 
 
 
 
பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்
 
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1  
கத்திரிக்காய் - 3
மாங்காய் - 1
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
அவரைக்காய் - 3
பீன்ஸ் - 2  
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
துவரம் பருப்பு - 200 கிராம்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது - கால் கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் பருப்பை கடைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அதில் புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் ரெடி!!!

http://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2017/01/13105411/1061922/pongal-special-kadamba-sambar.vpf

Link to comment
Share on other sites

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

 குதிரைவாலி அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 தூளாக்கிய வெல்லம் - அரை கப் (தலை தட்டியது)
 நெய் - தேவையான அளவு
 ஏலக்காய் - 1
 கிராம்பு - 1
 முந்திரி - 6

p9a.jpg

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துகொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும்.

அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாக தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம்.

நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 

சாமை பொங்கல்

தேவையானவை:

 சாமை அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது
(தட்டி வைக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 2 கப்

தாளிக்க:
 நெய் - 2 டீஸ்பூன்
 மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

p9b.jpg

செய்முறை:

அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கி பரிமாறவும்.

 

வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 பால் - முக்கால் கப்
 தண்ணீர் - இரண்டரை அல்லது 3 கப்
 உப்பு - ஒரு சிட்டிகை

p9c.jpg

செய்முறை:

பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பரிமாறினால் சுவை அள்ளும்.

 

 

கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்

தேவையானவை:

கோதுமை ரவை - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 தண்ணீர் - ஒன்றரை கப் + கால் கப்
 நெய் - 2 டீஸ்பூன் + சிறிது
 முந்திரி - சிறிதளவு

p9h.jpg

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை நிறம் மாற வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து கரையவிட்டு, அப்படியே வெந்து கொண்டிருக்கும் ரவை கலவையில் கலக்கவும். வெல்லக்கரைசலை ரவை உறிஞ்சியதும், 1 டீஸ்பூன் நெய் விட்டு கலக்கவும். பொங்கலில் இருந்து நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.

 

 

Link to comment
Share on other sites

  • 11 months later...

இது ஃப்யூஷன் பொங்கல்!

அகிலா விமல்

 

9p1_1514531030.jpg

பொங்கல் என்றால் பண்டிகை... பொங்கல் என்றால்   இனிக்கும் சர்க்கரைப் பொங்கல்... பொங்கல் என்றால் நெய் சொட்டும் வெண் பொங்கல், பால் பொங்கல்... இவ்வளவுதான் நினைவுக்கு வருகிறதா?

இனி... ஸ்வீட் கார்ன், வரகரசி, மஷ்ரூம், சாக்லேட், பைனாப்பிள், பனீர், பீட்ரூட் போன்றவற்றோடும் பொங்கல் ருசிக்கும்; மணக்கும். இப்படி வித விதமான ஃப்யூஷன் பொங்கல் ரெசிப்பிகளை வீட்டிலேயே செய்யும் வகையில் அழகிய படங்களுடன் வழங்கியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல்.

9p2_1514531055.jpg

கேக் பிரியர்களுக்குப் பிடித்த ரெட் வெல்வெட் டைப்பிலும் உண்டு ஒரு சிறப்புப் பொங்கல்.  இசையில் மட்டுமல்ல... உணவிலும் இனி ஃப்யூஷன் கொண்டாட்டம்தான்!

9p3_1514531463.jpg

ஸ்வீட் கார்ன் - வரகரிசி மசாலா பொங்கல்

தேவையானவை:

 வரகரிசி - ஒரு கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 ஸ்வீட் கார்ன் முத்துகள் - முக்கால் கப்
 வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடியளவு
 தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு வரகரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர், ஸ்வீட் கார்ன், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பாதியளவு வெந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப் போட்டு மிதமான தீயில் மீண்டும் வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு, நெய் சேர்த்துக் கிளறி, சூடாக வெள்ளரி அல்லது வெங்காயத் தயிர் பச்சடியோடு பரிமாறவும். சுவையான இந்தப் பொங்கலைச் சாமை அரிசியிலும் செய்யலாம்!


9p4_1514531477.jpg

மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 வெஜ் ஸ்டாக் - 2 கப்
 தண்ணீர் - 2 கப்
 பொடியாக நறுக்கிய பட்டன் மஷ்ரூம் - 2 கப்
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு -  4 பல் (பொடியாக நறுக்கவும்)
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 கேரட் -  ஒன்று (வட்டமாக நறுக்கவும்)
 குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு) - தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்)
 கடைந்த பாலேடு அல்லது ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய், 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு காயவைத்து வெங்காயம், பூண்டு, மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெஜ் ஸ்டாக், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரிசி சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வேகவிட்டு இறக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெந்த பொங்கலுடன் வதக்கிய காய்கறிகள்,  கடைந்த பாலேடு,  மிளகுத்தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும். புளிப்பு சுவை வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.


9p5_1514531495.jpg

வொயிட் சாக்லேட் அண்டு மிக்ஸ்டு பெர்ரீஸ் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - அரை கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தண்ணீர், பால் - தலா ஒன்றரை கப்
 சர்க்கரை - அரை கப்
 குக்கிங் வொயிட் சாக்லேட் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 உலர்ந்த பெர்ரி பழங்கள் - ஒரு கைப்பிடியளவு
 சாக்லேட் துருவல் (அலங்கரிக்க) - சிறிதளவு
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சிறிதளவு பெர்ரி பழங்களைத் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி அரிசியைச் சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு சர்க்கரை, உப்பு, பெர்ரி பழங்கள், நறுக்கிய சாக்லேட் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். அதன் மேலே சிறிதளவு பெர்ரீஸ்,  சாக்லேட் துருவல் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

பெர்ரி பழங்களுக்குப் பதிலாகப் பேரீச்சை, உலர்திராட்சை, விருப்பமான நட்ஸ் சேர்க்கலாம்.


9p6_1514531521.jpg

ட்ராபிக்கல் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - 2/3 கப்
 பால் - 2 கப்
 தண்ணீர் - 2 கப்
 க்ரீமி தேங்காய்ப்பால் - ஒரு கப்
 பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
 கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
 சர்க்கரை – அரை கப்

அலங்கரிக்க:

 வறுத்த தேங்காய்த் துருவல், செர்ரி – சிறிதளவு 

செய்முறை:

குக்கரில் பச்சரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், பைனாப்பிள் துண்டுகள் சேர்த்துச் சூடாக்கி கலவைக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். மேலே தேங்காய்த்துருவல் தூவி, செர்ரி பழங்களைப் பதித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

ஒரு கப் சூடான பாலில் அரை கப் தேங்காய்த் துருவல் சேர்த்து, கால் மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்தால் ஃக்ரீமி தேங்காய்ப் பால் ரெடி. பைனாப்பிள் துண்டுகள் லேசாகப் புளிப்பு அல்லது கசப்புச் சுவையில் இருந்தால், சிறிது நேரம் சர்க்கரை தண்ணீரில் ஊறவைத்து உபயோகிக்கலாம்.


9p7_1514531539.jpg

பெஸ்டோ - பனீர் பொங்கல்

தேவையானவை - பொங்கல் செய்ய:

 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 1/8 கப்
 வெஜிடபிள் ஸ்டாக் (அ) தண்ணீர் - 4 கப்
 பனீர் - 100 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)

பெஸ்டோ செய்ய:

 கொத்தமல்லித்தழை - 2 கப்
 முந்திரி குருணை - அரை கப்
 எண்ணெய் – கால் கப்
 பச்சை மிளகாய் - ஒன்று (நடுத்தர அளவு)
 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் -  அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியுடன் பருப்பு சேர்த்துக் கழுவவும். அதனுடன் வெஜ் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு பனீர் துண்டுகளை அடுக்கி இருபுறமும்  டோஸ்ட் செய்து எடுக்கவும். வெறும் வாணலியில் முந்திரி குருணையைச் சேர்த்து வறுத்து எடுத்து, பெஸ்டோ செய்ய கொடுத்துள்ள மற்ற பொருள்களுடன் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வெந்த பொங்கலுடன் பனீர் துண்டுகள், அரைத்த விழுது சேர்த்துச் சூடாக்கி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.


9p8_1514531557.jpg

ரெட் வெல்வெட் பொங்கல்

தேவையானவை:

 பச்சரிசி - முக்கால் கப்
 வெங்காயம் -  ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பீட்ரூட் - ஒன்று (தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்கவும்)
 பச்சை மிளகாய் – பாதி
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:

 வடிகட்டிய கெட்டித்தயிர் - ஒரு கப்
 மிளகுத்தூள், பொடித்த முந்திரி - சிறிதளவு
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட், உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் பீட்ரூட்டைத் தனியாக எடுத்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதே தண்ணீரில் பச்சரிசியைச் சேர்த்து, குக்கரில் போட்டு மிதமான தீயில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பிறகு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியபின் குக்கரைத் திறந்து அரைத்த பீட்ரூட் விழுது, பொடித்த முந்திரி சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் ஆறியதும் கெட்டித்தயிர் சேர்த்து மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, முந்திரி தூவிப் பரிமாறவும்.


9p9_1514531574.jpg

சால்டட் கேரமல் பொங்கல்

தேவையானவை:

சால்டட் கேரமல் செய்ய:

 சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் - தலா ஒரு கப்
 வெனிலா எசென்ஸ், உப்பு - தலா அரை டீஸ்பூன்

பொங்கல் செய்ய:

 பச்சரிசி - அரை கப்
 பால், தண்ணீர் - தலா ஒரு கப்

செய்முறை:

அரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சிறிது நேரத்தில்  சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும்.  பிறகு சிறிது சிறிதாக க்ரீமை சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாக வரும்போது இறக்கவும். அதனுடன் உப்பு, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே சால்டட் கேரமல். வெந்த பொங்கலுடன் கேரமல் சேர்த்துக் கலந்து சூடாக்கி, இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். இளம் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: பால் சர்க்கரை பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் விருப்பமான பால் சர்க்கரை பொங்கலை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.

 
 
பொங்கல் ஸ்பெஷல்: பால் சர்க்கரை பொங்கல்
 
தேவையான பொருட்கள் :
 
பச்சரிசி - 1 கப்
பால் - 4 கப்
தண்ணீர் - 4 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
 
201801091506095059_1_milkpongal._L_styvpf.jpg
 
செய்முறை :
 
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
 
அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும். அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
 
அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி வெந்து நன்கு குழையும் வரை வேக விடவும்.
 
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, கொள்ளவும்.
 
அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை கரைசலை ஊற்றி தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போடவும்.
 
சூப்பரான பால் சர்க்கரை பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

 
அ-அ+

அவலில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இன்று அவலை வைத்து எளிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் :
 
அவல் - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
குங்குமப்பூ - சிறிது
பால் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 10
பச்சைப் பயறு - 1/4 கப்
திராட்சை - 10
 
201801121452234026_1_Aval._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
 
அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் வரை வறுத்துக்கொள்ளவும்.
 
பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 
பின்பு கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும். 
சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்கலில் சேர்த்துவிடவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி பொங்கலில் கொட்டிக் கிளறவும்.
 
ஏலக்காயைத் தட்டிப் போடவும்.
 
மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும் பரிமாறவும்.
 
அருமையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

http://www.maalaimalar.com/

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்

 
அ-அ+

கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் பண்டிகைக்கு கருப்பரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் 
 
கருப்பரிசி - ஒரு கப்
உப்பு - துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
பால் - 1/4 கப்
முந்திரி - 10
பாசிப்பருப்பு - 1/4 கப்
ஏலக்காய் - 1 
தேங்காய்ப் துருவல் - சிறிதளவு.
 
201801101512249534_1_blackricepongal._L_styvpf.jpg
 
செய்முறை
 
முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். 
 
வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.
 
ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
 
பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் நன்றாக கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.
 
நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.
 
பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, வெல்லம் கரைந்ததும், மண் - தூசு போக வடிகட்டிவிட்டு, பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.
 
பிறகு தேங்காய் துருவல், பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
 
நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் நன்றாக கிளறி இற‌க்கவும். 
 
இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.
Link to comment
Share on other sites

பொங்கல் குழம்பு

 
அ-அ+

பொங்கல் பண்டிகைக்கு ஏழு வகையான காய்கறிகளை (ஒற்றைப்படையில்) வைத்து குழம்பு செய்வது வழக்கம். இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
நாளைய ஸ்பெஷல் பொங்கல் குழம்பு
 
தேவையான பொருட்கள் :
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 6 தேவையான அளவு
நெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க 
 
பெருங்காயம் - 1 துண்டு
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
 
தாளிக்க
 
கடுகு - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
 
201801131208159729_1_pongalkulambu._L_styvpf.jpg
 
செய்முறை :
 
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். 
 
கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சேர்த்து சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள். 
 
புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும். 
 
பூசணி, பரங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து கொள்ளவும். 
 
புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு,  மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.
 
நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக்குழம்பு தயார்.
 
இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.
 

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலோ பொங்கல்....எல்லா ஆயிட்டங்களும் அருமை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.