Jump to content

ஹே ராம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹே ராம்

காலபைரவன்


பேருந்தில் உடன் பயணிக்கும் ஒருவர் தன்னை, “அயோத்தி ராமர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டால்  நீங்கள் எப்படி உணர்வீர்கள்?. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடல் முழுவதும் மெல்ல நடுக்கம் பரவியது. அவர் கூறியதிலிருந்து சுலபத்தில் மீள முடியவில்லை. “நீங்கள் கூறுவது உண்மைதானா?” எனும்படி அவரை ஆழ்ந்து பார்த்தேன். தனது காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்து, செல்லமாகக் கிள்ளிய போது தான் சுயநினைவுக்கு மீண்டேன். மட்டமான மதுவை அவர் அருந்தி இருக்கக் கூடும் என்பதை அவரிடமிருந்து வந்த நாற்றத்தை வைத்து ஓரளவு யூகிக்க முடிந்தது.

                பேருந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கோடைகால மாதலால் ஒரே உஷ்ணம். வேர்த்துக் கொட்டியது. உறவினர்களைப் பார்ப்பதன் பொருட்டு குஜராத் வந்து போக இதுதானா சரியான நேரம், என என்னையே நொந்து கொண்டேன். நடத்துனர் என் இருக்கை அருகே வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகக்கூடும். ஆனால், இவர் கையில் பணத்தை வைத்துக் கொண்டு நடத்துனருக்காக காத்திருப்பதைக் கண்டு சிரிக்கத்தான் தோன்றியது. காந்தி நகர் மையப் பேருந்து நிலையத்திலிருந்து வெகு தூரம் கடந்து விட்டிருந்தோம். அவரது உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. குளித்து ரொம்ப நாள் ஆகியிருக்கலாம். ஒரு வேளை இராவண யுத்தம் முடிந்ததிலிருந்து கூட இருக்கலாம்.

                என் சிந்தனை சட்டென சீதையின் மேல் குவிந்தது .எவ்வளவு வாளிப்பான உடம்பு. இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டவள் எங்கு இருக்கிறாள்? அவ்வப்போது ஊடகங்களில் ராமர் பற்றிய செய்திகள் மட்டும்தானே வருகிறது? சீதை என்ன வானாள் என எனக்குள்ளேயே கேள்விக் கணைகளை ஏவிக் கொண்டேன்.

                கணைகள் எனும் போது ராமனது “வில்” வேறு ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. மெல்ல அவரைத் திரும்பிப்பார்த்தேன். கழுத்தில் ஒரு நைந்த ஜோல்னா பை மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அவரது சட்டைப் பையில் கசங்கிய நிலையிலிருந்த புகையிலை பொட்டலத்தை நான் பார்த்ததை அவர் பார்த்திருக்கக் கூடும் மெல்லிய புன்னகையோடு அதை கையில் எடுத்து பாலித்தின் பையில் “ராமவிலாஸ் வாசனைப் புகையிலை” என இந்தியில் எழுதியிருந்ததை வாசித்துக் காட்டினார். நான் அதில் அச்சிடப்பட்டிருந்த நீலம் பாரித்த ராமனையும், சீதையையும், அவர்களுக்கு கீழே அமர்ந்திருந்த அனுமனையும் பார்க்க நேரிட்டது. நாடகத்திலும், திரைப்படத்திலும் பார்த்த நீலம் பூசிய ராமனைப் போன்ற மனிதர்களை நிஜ வாழ்க்கையில் சந்திக்காதது எனக்கு சிறுவயதுகளில் பெருத்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது. மேலும், சிறுவயதில் எனக்கும் அந்த வண்ணத்தின் மீது தனியானதொரு ஈடுபாடும் வளர்ந்திருந்தது. அவரும் ஒருமுறை அப்படத்தை ஊன்றி கவனித்து விட்டு, என்னைப் பார்த்து மெல்லச் சிரித்தார்.

                அவரிடம் கேட்க எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆனாலும், அவரைப்பற்றிய சந்தேகம் துளிர்விட்டபடியே இருந்தது. உண்மையில் அறிந்தவரை ராமன் எப்பேர்பட்ட வீரன். தோள் கண்டார் தோளே கண்டார் எனக் கூறுவார்களே, அதுவெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? அவரைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. நீண்ட நாட்களாக பட்டினியால் வாடி, மார்பு சூம்பிக் கிடந்தது. பார்வை கூட மட்டுப்பட்டிருக்கக்கூடும். அவரிடம் எப்படிக் கேட்பது என்று புரியவில்லை. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” எனக் கேட்டால் “அயோத்தியிலிருந்து” என்று மட்டும் கூறும் அவர் வேறொன்றும் கூறுவதில்லை.

                பேருந்து  சாலையோர உணவு விடுதியில் நின்றது. பயணிகள் சாப்பிட, சிறுநீர், மற்றும் மலம் கழிக்க, இறங்கிக் கொண்டிருந்தனர். அவர் மட்டும் இறங்கவில்லை. பணம் இல்லாமல் இருக்குமோ என்று அவரைக் கேட்டேன்.  “அதுவெல்லாம் பிரச்சினையில்லை”, என்று கூறியபடி துண்டை எடுத்து கழுத்தைத் துடைத்துக்கொண்டார்.  “பின்னர் எதுதான் பிரச்சனை”, என்று கேட்டபோதுதான் ஏற்கனவே  குஜராத்தில் பாதிக்கப்பட்ட கதையைக் கூறத் தொடங்கிவிட்டார்:

                அன்றும் நல்ல வெயில். காந்தி நகர் பேருந்துநிலையத்தில் கால்வைக்கும்போதே உணர்ந்தேன், ஏதோ அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கிறதென. மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்னை இறக்கிவிட்ட பேருந்தைத் தவிர வேறொன்றும் அங்கு இல்லை. சாலைகளில் அங்குமிங்குமாக பேருந்து டயர்கள் எரிந்து கொண்டிருந்தன. காவலர்கள் ரோந்து சுற்றிக் கொண்டு வந்தனர். மனதில் மெல்ல பயம் ஊறியது. கால்கள் துவண்டன. அப்போது கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் என்னை சூழ்ந்து கொண்டது தலையில் காவித்துணி கட்டியிருந்தவன், “நீ யார்?” என என்னைக் கேட்டான். அதே நேரம் சாலையில் ஒரு கும்பல் ஒரு பெண்ணை சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய்தபடி இருந்தது. அவள் ஈன சுரத்தில் கத்தியது என்னை குலைநடுங்க வைத்தது. சாலையென்றும் பாராமல் அவர்கள் அங்கேயே அந்தப் பெண்ணை புணரும் கோரத்தை நானும் பார்க்க வேண்டியிருந்தது. தொடர்ந்த புணர்ச்சியின் காரணமாக அவள் மூர்ச்சையானாள். அருகில் கிடந்த பர்தாவை எடுத்து அவள் யோனிக்குள் செருகிவிட்டு மறைந்தது அந்த கும்பல். பயத்தில் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. இதைப் பார்த்த அவர்கள் கிண்டலும், கேலியுமாக சிரித்தனர். தலையில் காவித்துணி கட்டியிருந்தவன் என்னைப் பார்த்து இவ்வாறு கேட்டான்: நீ இந்துவா? முசல்மானா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் தான் ஓர் இந்துவாக எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா எனும்சிந்தனை என்னுள் ஓடியது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவன், “அவன் வேட்டிய அவுருங்கடா” என்றான். அவன் கூறி முடிக்கும்முன், நான் இவ்வளவு பரந்த உலகில் அம்மணமாக நின்றேன். ஒருவன் தன் கரங்களால் என் குறியைத் தூக்கிப் பார்த்து “சுன்னத் செய்யல, இவன் இந்துதான்” எனக் கூறி, என்  வேஷ்டியை எடுத்துக் கொடுத்தான். எனக்கு ஏதும் புரியவில்லை. இவ்வளவு சர்வசாதாரணமாக ஒருவனை நடத்த முடியுமென்பதை நான் அதுவரை கண்டதில்லை.

                சாலையில் வேறொரு கும்பலிடம் அகப்பட்ட ஒருவன் சத்தமாக  ‘ஹேராம்’எனச் சொல்லிச் செல்வது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எனக்காகவா இதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள், என நினைத்த போது கொஞ்ச நேரத்திற்கு முன்பு நான் அம்மணமாக நின்றிருந்த காட்சி மனதில் தோன்றி மறைந்தது.

                காவித்துணியைக் கட்டியிருந்தவன் என்னைப் பார்த்து கூறினான். “பார்த்து பதமாக போ”, “நம்மாளே எவனாவது போட்டுத் தள்ளிடப் போறான்”, என்று கூறி தன் காவித்துணியை என்னிடம் கொடுத்து தலையில் கட்டிச் செல்லுமாறு கூறினான். இன்னொருவன் என்னைச் சீண்டி அழைத்து, “ஏதாவது பிரச்சினைன்னா  ‘ஹேராம்’ என வேகமாக கத்தத் தொடங்கிவிடு. ஆபத்து வராது”, என்று கூறினான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் என்னை கடந்து சென்று விட்டார்கள். ஆசுவாசப் படுத்திக்கொள்ள நன்கு காற்றை உள்ளிழுத்து விட்டேன். அவர்கள் என்னையே  ‘ஹேராம்’ எனச்சொல்லச் சொன்னது எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. நான் உயிரோடு மீள்வேன் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அங்கு வன்புணர்ச்சிக்குஆளாக்கப்பட்ட அவள் நிச்சயம் இறந்திருக்கக் கூடும். அதிகமாகன  ஈக்கள் அவள் உடலெங்கும் மொய்த்துக் கொண்டிருந்தன. அருகில் செல்ல எனக்கு பயமாக இருந்தது. அவளைக் கடந்து செல்லும் ஒருசிலர் கூட ஏதும் காணாதது போல சென்று கொண்டிருந்தனர். ஒரு ரோந்து வாகனம் என்னை கடந்து சென்றபோது நான் அதை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டனர். வண்டியில் காவித்துணி கட்டிய வேறொருவனை மீண்டும் பார்த்தபோது என்னுள் பயம் குமிழ் விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின் ஒரு போலீஸ்காரனிடம் தான் இங்கு இறங்கிக் கொள்வதாக கூறி அவன் இறங்கி நடந்தான். காவலர்கள் என்னை பத்திரமாக பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.”

                இந்த சம்பவத்தை அவர் கூறி முடித்தபோது அவரது முகத்தைப் பார்த்தேன். பயம் முகமெங்கும் படர்ந்திருந்தது. கைகால்களில் ரோமங்கள் சிலிர்த்திருந்தன. நெடிய மூச்சை உள்ளிழுத்து விட்டார். தன் பையிலிருந்து புகையிலையை கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி வாயில் அதக்கிக் கொண்டார். பேருந்து கிளம்பியது. அவரிடமிருந்து அதிகப்படியான கற்றாழை நாற்றம் வரத் தொடங்கியபோது என்னால் அவர் அருகில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. என் தலையை வெளிப்பக்கமாக திருப்பிக் கொண்டேன். சிறிது நேரத்தில் என்னை யாரோ தீண்டுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்து, அவர்தான் என்னை கூப்பிட்டது என்று தெரிந்துகொண்டு, “என்ன வேண்டும்” என்று கேட்டேன்.

                “குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்றார்.

                என் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்தேன். வேக வேகமாக அருந்தினார். “மெதுவாக குடியுங்கள்” என்றேன். தண்ணீரை மேலும், கீழும் சிந்தியபடி குடித்து முடித்து நன்றி கூறினார். எப்படி இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே என்றும், இந்த தள்ளாத வயதிலும்ஏன் இப்படி சுற்றித் திரிய வேண்டுமெனவும் எண்ணிக் கொண்டேன்.

                சிறிது இடைவெளி விட்டு நானே அவரிடம் பேசினேன்: “நீங்கள் ஏன் இப்படி இந்த வயதிலும் ஒண்டியாக கஷ்டப்படுகிறீர்கள்?”

                “ரொம்ப காலமாக நான் தனியாகத்தான் இருக்கிறேன்” என்றார் அவர்.

                “ஏன்?” என்றேன்.

                 “அது பெரிய கதை சார்” என்றவரின் மனதில் புகைப்படத்தின் துல்லியத்துடன் இலங்கையில் இருந்து சீதையை மீட்டு வந்த காட்சியும் அதன் பிறகான நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக குமிழிடத் தொடங்கின.

           தூரத்தில் கடல் சீற்றத்தோடு மேலெழும்பிச் சரிந்து கொண்டிருந்தது.ஓங்கி வளர்ந்திருந்த தென்னைகள் காற்றின் போக்கிற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தன.சீதையை மீட்டு வந்த பின்பும் இனம் புரியாத வேதனையில் துடித்துக்கொண்டிருந்தது ராமரின் மனம். ராவணனின் தோட்டத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள்  என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை அவர் மனதை ஒரு முள்ளாக கீரிக் கொண்டிருந்தது. வானரப் படைகள் அவரைச் சுற்றி சூழ்ந்து நின்று கொண்டிருந்தன.

                சீதை தன் மனைவி மட்டும் அல்ல ; அவள் இந்த பரந்த பேரரசின் மகாராணியாகவும் அல்லவா இருக்கிறாள். அடுத்தவன் அரண்மனையில் அடைக்கப்பட்டு இருந்தவள் எப்படி மகாராணி பட்டத்தை சுமந்து கொண்டிருக்க முடியும் என்று யார் மனமாவது எண்ணினால் என்ன செய்வது எனும் யோசனையும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. காலம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.

                ஆனால் ராமர் மனம் பலவாராகக் குழம்பிக் கிடைப்பதை உணராமல் அரண்மனைக்குச் சென்று வாழ்க்கையை மீண்டும் புதியதாகத் தொடங்குவது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் சீதை. புல்லினங்கள் சடசடத்துக்கொண்டு திரிந்தன. வண்டின் ரீங்காரம் நெடுந்தொலைவிற்கு பரவியிருந்தது.

                தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட பர்னசாலைக்கு வந்ததிலிருந்தே ஏதோ சிந்தனையில் இருக்கும் ராமரைப் பார்த்தாள். அருகில் வந்து அவரின் கண்களை ஊடுருவினாள். அவர் முகம் கலவரம் அடைந்து காணப்பட்டது. எதுவும் விளங்காமல் அவரிடம் கேட்டாள் :   “யுத்தம் தான் ஜெயமாகிவிட்டதே இன்னும் என்னை யோசனை?” அவள் வார்த்தைகள் அவரின் செவியில் மோதியபோது தான் அவர் சீதையை திரும்பிப் பார்த்தார். தனது மனதை முள்ளாக அறுத்துக் கொண்டிருக்கும் கேள்வியை அவளுக்கு எப்படி புரியவைப்பது  என்று தெரியாமல் துடித்தார். அவர் ஏதோவொரு சங்கடத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டவளாக,  “என்னிடம் சொல்லாமல் மறைக்க உங்களிடம் எதுவும் இருக்கிறதா அன்பே?” என்று வார்த்தைகளில் அன்பை குழைத்தபடிக்  கேட்டாள்.

                இதற்குமேல் அவரால் மறைக்க முடியவில்லை அவர் மனத்திற்கும் தாங்கும் சக்தி இல்லாமல் இருந்தது. சீதையின் முகத்தை மீண்டும் உற்றுப் பார்த்தார். அவள் கண்களைப் பார்த்தார். சீதையை யாராவது ஐயப்பட்டு, மகாராணியாக இருக்கத் தகுதியற்றவள் என்று சொல்லி விடுவார்களோ என்று எண்ணியபோது மறுபடியும் அவருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. அந்த நொடியில் சீதையை நிராகரிப்பதே சரியெனப் பட்டது அவருக்கு. தனது குல கௌரவத்திற்கு அகலாத வடுவாக பிறன் சிறையில் இருந்த சீதை இருந்துவிடுவாளோ என்று எண்ணித்துடித்தார்.

                என்ன தான் நினைக்கிறார் என்பது புரியாமல் அவள் அவரைப் பார்த்து, “போர்தான் முடிந்துவிட்ட்தே அப்புறமும் வில்லை சுமந்து கொண்டே தான் இருக்க வேண்டுமா?”  என்று கேட்டாள். வில்லை எடுத்து அருகில் சார்த்தி விட்டு சீதையைப் பார்த்து உரையாடத் தொடங்கினார்.

                 “பெண்களுக்கு பாதுகாப்பு எது தெரியுமா?”

                சட்டென்று  அவர் இப்படி கேட்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் விழித்தாள். ஆழ்ந்து யோசித்து  “பெண்ணுக்கு பாதுகாப்பு அவள் கணவன் தான்” என்றாள். அவள் கூறிய பதிலில் திருப்பதிவுறாமல் அவர் இல்லை என்பது போல தலையை ஆட்டினார்.

 “அப்ப தந்தைதான் பெண்ணுக்கு பாதுகாப்பா?” என்று கேட்டாள்.

தவறான பதில் என்பதுபோல உதட்டைப் பிதுக்கினார்.

சரியான பதில் எதுவாக இருக்கும் என்று ஆழ்ந்து யோசித்து அவரைப் பார்த்து சொன்னாள்: “ இப்ப சொல்லப்போற பதிலை கேட்டு என்னை கிண்டல் செய்ய மாட்டேன்னு சொல்லுங்க. நான் பதிலை சொல்றேன்”

 “நான் ஒன்னும் சொல்லமாட்டேன். பதிலை சொல்லு”.

 “பெண்ணுக்கு பாதுகாப்பு நாட்டை ஆளும் அரசன் தான்”

அவளின் பதிலைக்கேட்டு அவர் வெடித்துச் சிரித்தார். பின் அவளின் தலையை வருடிக்கொண்டே தன் மனதில் தயாராக வைத்திருந்த பதிலை ஒப்பிக்கத் தொடங்கினார்:

                 “உடுத்தியிருக்கும் உடையோ, இருக்கும் வீடோ, அரண்மனை வாசமோ அரண் போன்ற பாதுகாப்போ அல்ல. இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அவளது நன்னடத்தையே ”.

                இப்போது ஏன் இதுபோன்ற பதிலைச் சொல்லவேண்டும் என்று விளங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதை. சிறிய மான்குட்டி துள்ளிக்குதித்தபடி ஓடிவந்து அவர்களின் ஊடாக நுழைந்து ஓடியது.

                அவர் பார்வை தொலைவில் பதிந்திருந்தது. பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்து மூச்சுவிட்டபடி கிடக்கும் வில்லை அவள் பார்த்தபடி இருந்தாள். தன் மீதான எல்லையற்ற அன்பின் காரணமாகவே ராமர்  இதை செய்திருக்கிறார் என அவள் உணர்ந்தபோது சந்தோஷத்தின் கீற்றுகள் உடம்பு முழுக்க பரவியது. ஊசலாட்டத்தில் உழன்று கொண்டிருக்கும் ராமரின் மனதை என்ன செய்தும் சீதையால் அறியமுடியாமல் துயருற்றாள்.

                 “இப்படி இருப்பது உங்கள் சுபாவமல்லவே” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள்.

                சீதையின் மூலமாக தனது வம்சத்திற்கு இழிவு நேர்ந்து விடுமோ எனும் சிந்தனையே அவர் மனதை  அழுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் மீதான காதலும் அன்பும் அவருள் பெறுக்கெடுத்தபடியே இருந்தாலும் பிறர் அவளைப் பார்த்து விரல் நீட்டிவிடக்கூடாதே என்றும் துடித்தார். இதன் காரணமாக அவளை நிராகரித்துவிடுவதே சரி என்று இரண்டாம் முறையாக எண்ணினார்.

                சாந்தமே உருக்கொண்டு நிற்கும் சீதையை உற்றுப் பார்த்தார். அவள் கண்களில் கலங்கம் துளியும் இருக்கவில்லை. ஆனாலும் சந்திர வம்சம் எனும் பெரும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் தன் கையால் எதையும் செய்ய இயலாதபடி ராமர் அவளைப் பார்த்தார். அவளும் வெறுமையோடு அவரைப் பார்த்தாள். அப்போது ராமர் உறுதியாக சில சொற்களை அசரீரியைப்போல உதிர்த்தார்.  “மனமோ ஆசையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏங்குகிறது. ஆனால் மாற்றான் வீட்டில் தங்கிய பெண்ணை எந்த கௌரவமுள்ள மனிதன்தான் திருப்பி அழைத்துக்கொள்ள விரும்புவான்?”

                அச்சொற்கள் அவள் மனதை நொருங்கச் செய்தன. இதுவரை நடந்ததெல்லாம் வெரும் நாடகம் தானா? அன்பும் காதலும் பீரிட்ட கணங்கள் எல்லாம் பொய்யோ? என நினைத்த சீதையின் உடல் நடுங்கத் தொடங்கியது. நீண்ட மூச்சை இழுத்து விட்டபடி அவர் உதடுகளா இதுபோன்ற வார்த்தைகளை உச்சரித்திருக்கும் என மறுபடியும் ஐயம் தீர அவரது கண்களை உற்றுப் பார்த்தாள். கடல்தாண்டி வந்தது. ராவணனுடன் போர் புரிந்தது ; லட்சோப லட்சம் பேரை கொன்று குவித்தது எல்லாம் திட்டமிட்ட நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகள் தானோ? என பல்வேறு எண்ணங்கள் அவள் மனதில் சுழன்றபடி இருந்தன.  திரும்பி ராமர் முகத்தைப் பார்த்தாள். அவ்வார்த்தைகளை ஆமோதிப்பது போல அவரின் பார்வைகள் இருந்தன. அவ்வார்த்தைகள் கூரிய முட்களைப் போன்று தன் இதயத்தை குத்திக் கிழிப்பதாக உணர்ந்து துடித்தாள். என்ன செய்வதென்று அவளுக்கு பிடிபடவில்லை. தன் மீதான காதலின் பொருட்டே எல்லாம் நடந்திருக்கின்றன எனும் மனக்கோட்டையை அவளே இடித்து நொருக்கினாள். அவள் மனதில் தொடர்ந்து முகிழ்ந்தபடியே இருந்த பல கேள்விகள் அவளை ஊடறுக்கவும் செய்தன. அவள் நிமிர்ந்து மீண்டும் ராமரைப் பார்த்தாள். விழிகளில் சாந்தம் திரும்பியிருப்பதை உற்றுக் கவனித்தவள். சந்திர குலத்தின் கௌரவத்திற்காக  தன்னை ரணமாக்கி விட்டாரோ என நினைத்தபடி நடுங்கிக் கொண்டிருக்கும் பாதங்களை நன்று ஊன்றிக் கொண்டாள்.

                                திருமணமான பொழுதில் உறக்கம் களைந்து எழுந்த காலையில் தன்னை வலிய இழுத்து உதட்டிலும், உள்ளங்கையிலும் முத்தமிட்ட அவரின் முகம் அவள் நினைவில் மின்னலென வந்து சென்றது. அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள். பார்க்க அருவருப்பாக இருந்தது அவளுக்கு. காதலும் காமமும் பீரிட்டு தன்னை வாரிஅனைத்துக்கொண்ட அந்த ராமனா இவன் என  யோசித்தவள், நிச்சயம் இருக்காது என்பது போல எண்ணித் தலையை  ஆட்டிக்கொண்டாள்.

                விருப்பத்திற்கு எதிராக, அநீதியாக ராவணன் இலங்கைக்கு கவர்ந்து சென்று, அங்கே சிறை வைத்தான் என்பதில் தன்னுடைய தவறு என்று ஏதாவது இருக்கிறதா? அதனுடன் சம்பந்தப்படுத்தி தன்னை தண்டிப்பது பேடித்தனமல்லவா என்றும் அவள் தனக்குள்ளாகவே குமுறினாள். கோபம் அவள் மனதில் எந்நேரமும் வெடித்து விடக்கூடிய எரிமலையைப் போல உருக்கொண்டிருந்தது.

                ராமர் அமைதியாக சிறு குன்றின் மீது  அமர்ந்து கொண்டிருந்தார். நடப்பதை எல்லாம் சற்று தொலைவில்  நின்று லஷ்மணன் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களின் நீடித்த அமைதி அவளுக்கு மேலும் மேலும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தின. என்ன தான் காதலையும் அன்பையும் குழைத்து தன்னை கிரங்கடித்திருந்தாலும், சந்தேகம் எனும் கொடிய விஷம் பரவி நீலம் பாரித்து கிடக்கும் ராமருடன் இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று முடிவு செய்தவளாக லஷ்மணனைப் பார்த்து கடுங்கோபத்தோடு வார்த்தைகளை வீசினாள்.

                 “லஷ்மணா, சிதையை ஏற்பாடு செய். இக்கஷ்டங்களுக்கு அதுவே மருந்து. என்னைக் களங்கப்படுத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளால் அடிக்கப்பட்டும், நான் ஜீவித்திருக்க விரும்பவில்லை. உடனே சிதையை மூட்டு”.

          வார்த்தைகளை எறிந்தும்கூட அவளின் சினம் தீராமல் இருந்தது. சிதை நோக்கி நுட்பமாக தன்னை தள்ளிய ராமரின் சாமர்த்தியத்தை நினைத்து அவளுக்கு ஆத்திரம் பீரிட்டுக்கொண்டு வந்தது. எல்லா ஆண்களையும் போல இவரும் சராசரியானவர்தான் என்று யோசித்த கணத்தில் தன் உடலெங்கும் கம்பளிப்பூச்சி ஊர்வதைப்போல உணர்ந்தாள்.

                உஷ்னமேறிய வார்த்தைகள் லஷ்மணனை வாட்டின அவன் துடித்தான். தன் அண்ணன் முகத்தை திரும்பிப்  பார்த்தான். அதில் எந்த சலனத்தையும் அவனால் காணமுடியவில்லை.அவரின் அமைதி அவனுக்கும் எரிச்சலையே ஏற்படுத்தியது.  சிறிது நேரம் அமைதியாக இருந்தான். காலம் ஒரு நத்தையைப் போல மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கூட பரிமாரிக்கொள்ளபடாமல் இறுகிக்கிடந்தது சூழல்.

                உயிரோடு தன்னை புதைத்த மயானத்தைப்போல லஷ்மனன் தயார் செய்திருந்த  சிதை அவளுக்கு தோன்றியது. உள்ளே குமுறிக் கொண்டிருந்த கோபத்தை சிரிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் லஷ்மணனை தலையுயர்த்தி பார்த்தாள். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். ராமரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை அவளுக்கு.

                கனன்று எரிந்து கொண்டிருக்கும் சிதை நோக்கி மெல்ல நடந்தாள். சிதையை நெருங்க நெருங்க அவளுக்கு ஆத்திரம் பீரிட்டு கிளம்பியது. சிரித்து பேசி வருடிக்கொடுத்து தன் கழுத்தை அறுப்பதுபோல அவள் உணர்ந்து துடித்தாள். தன் ரௌத்திரம் முழுவதையும் ஒன்று கூட்டி இடப்பக்கமாகத் திரும்பி காரித்துப்பினாள். சீதையின் வலதுபுறம் நின்று கொண்டிருந்த லஷ்மணனை அவளின் ஆத்திரம் கூனிக்குருகச் செய்தது. பின் அவள் மெல்ல நடந்து சிதையுனுள் புகுந்தாள். தீ நீண்டும் பரவியும் எரிந்து கொண்டிருந்தது.

 அவரின் சிந்தனையை களைக்கும் விதமாக நான் கேட்டேன்:  “அப்படி என்னதான் ஆழ்ந்த யோசனை?”. வறண்ட குரலில் என்னிடம் பேசினார்.

  “சீதைக்கும், எனக்கும் இல்லறத்தில் அவ்வப்போது பிரச்சனை எழுந்தபடி இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கடி குற்றங்களைக் காண நேர்ந்தது. அவள் எனது இயலாமையை எப்போதும் சுட்டிக் காட்டியபடி இருந்தது , எனது ஆண்மையை உசுப்பேற்றியது. சண்டை வலுத்தது”.

 சீதையை தீயில் இறங்கச் சொன்ன பிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் உறவு அவ்வளவு சுமூகமாக இருந்திருக்காது என்பதை அவர் பேச்சிலிருந்து தெளிவாக உணர முடிந்தது.மறுபடியும் அவரே சுரத்தே இல்லாமல் உரையாடலைத் தொடர்ந்தார்.

                 “ஒரு நாள் திடீரென அவள் வீட்டை விட்டுக் கிளம்பிப்போய் விட்டாள். நான் தடுக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டேன்:  ‘நீ இப்படி வீட்டை விட்டு போனால் ஊர், உலகம் நம்மைப் பற்றி என்ன பேசும் - யோசித்துப்பார்த்தாயா?”

                அதற்கு அவள் கூறினாள்: “என்னை ஏன் பேசப்போகிறார்கள்; உன்னைத்தான் உதவாக்கரை  எனப்பேசுவார்கள் என்று கூறி ஒரு சிறிய பெட்டியுடன் வெளியில் சென்றவள்தான். அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து ஒரு கடிதம் எழுதி இருந்தாள்” என்று, தனது ஜோல்னா பையில் தேடி, ஒரு கடிதத்தை எடுத்து, என்னிடம் கொடுத்து, படிக்குமாறு கூறினார்
.
          மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர பிரபுவுக்கு.
                உங்களால் சீதா என பிரியமாக அழைக்கப்படும் ஜானகி எழுதிக் கொண்டது. தாங்கள் எப்படி உள்ளீர்கள்? இப்பவும் அதே போலத் தான் நடந்து கொள்கிறீர்களா? ஒரு வேகத்தில் தங்களை விட்டு பிரிந்து விட்டேன். இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு காலமும் நீங்கள் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியாதில்லையா? மிகவும் மென்மையாக நடத்தப்படுவதில் எந்தப் பெண்ணுக்குத்தான் உடன்பாடு இருக்க முடியும்? இல்லறத்திற்கு உதாரணமாய் வாழ்ந்தால் மட்டும் போதுமா? எனக்கென்று சுகதுக்கங்கள் உண்டென்பதை எப்படி மறந்து போனீர்கள்? யுகயுகமாக அவதார புருஷன் எனும் சுமையை எப்படி உஙகளால் மட்டும் சுமந்து வரமுடிகிறது?

“கொஞ்சம் சத்தமாக படிங்க. காது மந்தமா இருக்கு” என்று என்னைப் பார்த்து சொன்னார். திரும்ப அந்த வரிகளை கேட்பதில் அவருக்கு என்ன சந்தோஷம் ஏற்பட்டுவிடும் என்பது புரியாமல் சத்தமாக வாசிக்கத்தொடங்கினேன்.

                என்னை நீங்கள் தீயில் இறங்கச் சொன்ன அன்றே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தேன். இந்த ஆள் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று. வந்து போகின்ற ஆட்களின் சந்தேகத்தை எல்லாம் போக்குவதற்கு நான் தானா உங்களுக்கு கிடைத்தேன்? காலம் காலமாக ஏன் எந்த  வண்ணாணும் உங்களை சந்தேகப்படவில்லை என்பதன் மர்மம்தான் புரியவில்லை.

                எனது படர்ந்த ஸ்தனங்கள் உங்களின் இதழ் சுவைப்பிற்காக மட்டுமே இருந்து விடவேண்டுமென நினைததிருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றி போட்டு விடுகிறது. அந்த முடிவு எவ்வளவு மடத்தனமானது என இப்போது நான் அறிந்து கொள்ள முடிகிறது. நான் புதியதாக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். இங்கே எந்தச் சுமைகளையும் நான் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.

                                                                                                                 இப்படிக்கு
                                                                                                                      சீதை


கடிதம் முடிவு பெற்றிருந்த போது பார்த்தேன். அவர் கண்மூடி மௌனித்திருந்தார். நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அப்படியென்றால், சீதை எங்கிருக்கின்றாள் என்ற சிந்தனை தோன்றியது., சீதையை பல்வேறு ரூபங்களில், பல்வேறுபட்ட இடங்களில் வைத்து பொருத்திப் பார்த்து மனம் சந்தோஷப்பட்டது. எவ்வளவு மகோன்னத வாழ்வாக இருந்தாலும் மகிழ்ச்சியை துய்க்காமல் வாழ்ந்துவிட முடியுமா?

                அவர் சலனமற்று அமர்ந்திருந்தார். பேருந்தின் குலுங்களுக்கேற்ப இருவரும் குலுங்க வேண்டியிருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. மனம் கனத்து கிடந்தது. நாட்டில் அவரின் பொருட்டு நடக்கும் நிகழ்வுகளையும் பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.

அவர் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது. தள்ளாடியபடியே நடந்து சென்றார்.  “சீக்கிரம் இறங்குயா சாவு கிராக்கி” என நடத்துனர் திட்டியபடியே அவரை இழுத்து வெளியில் விட்டார். அவர் போகும்போது கண்களைத்தாழ்த்தி என்னை பார்த்தது என்னவோபோல இருந்தது.

                நான் தமிழகத்துக்கு மாற்றலாகி வந்து ஆறேழு மாதங்களாகி இருக்குமென நினைக்கிறேன். என் முகவரியிட்ட கடிதம் ஒன்று அஞ்சலில் கிடைக்கப் பெற்றேன். பிரித்துப் பார்த்தேன். உத்திரப் பிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து ஸ்ரீராமர் எழுதியிருந்தார். சில வினாடிகளுக்குள் அவருடன் பேருந்தில் பயணித்தது, அவருடனான உரையாடல்கள் எல்லாம் மனதில் மின்னி மறைந்தன.

                ஸ்ரீமான்  இளங்கோ அவர்களுக்கு

                ராமச்சந்திரபிரபு எழுதிக்கொண்டது நலமாக இருக்கிறீர்களா? நான் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறுநீரகப் பிரச்சினை. கூடவே சாலேஸ்திரம் வேறு. டாக்டரின் பரிந்துரையின் பேரில் தினமும் நிறைய   மாத்திரைகளை விழுங்க வேண்டியுள்ளது. உங்கள் ஊரிலும் என்னைப் பற்றிய பல வீரதீர சாகசக் கதைகள் உண்டென்று நண்பர் மூலம் தெரிந்துகொண்டேன். உண்மை எவ்வளவு குரூரம் நிறைந்தது பார்த்தீர்களா?

                மேலும், நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருபராயின் ‘AMKAR’ சோப்பு விளம்பரத்தில், குளியலறையில் இருந்து இடுப்பில் சுற்றப்பட்ட துண்டோடு, சோப்பைப் பற்றிக் கூறிக்கொண்டே வரும் பெண்ணாக நடித்திருப்பது சீதைதான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பிறகென்ன, நீங்கள் கடிதம் எழுதுங்கள்.
                                                                                                           ஆசிர்வாதங்களுடன்
                                                                                                                ராமசந்திரபிரபு


கடிதத்தை படித்து முடித்தவுடன் எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஏன் இந்த மனிதன் எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்ற கேள்வி எழுந்தது. அவர்பால் எந்தப் பரிவும் எனக்குத் தோன்றவில்லை. சீதையின் நினைவுகளால் மனம் நிரம்பிக் கிடந்தது. அவசரப்பட்டு அவருக்கு முகவரியை தந்திருக்கக் கூடாதெனவும் நொந்து கொண்டேன்.

                கூடத்திற்கு திரும்புகையில் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டியிருந்தது. மிகச்சரியாக இடுப்பில் சுற்றப்பட்ட துண்டுடன் ஒரு பெண் கையில் சோப்பைப் பிடித்தபடி குளியலறையிலிருந்து வெளியில் வந்தாள்.

                நடப்பதெல்லாம் நிஜம்தானா என, என்னை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். வலிக்கத்தான் செய்தது.
 

http://kalabairavan.blogspot.co.uk/2016/01/blog-post_42.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் இணைப்பிற்க்குஇமற்றும் சுஜாதாவின் குத்துசி கதைகள் எங்கு கிடைக்கும் என்று தொியுமா.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை. இணையத்தில் காணவில்லை. copyrights காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2016 at 5:54 PM, கிருபன் said:

தெரியவில்லை. இணையத்தில் காணவில்லை. copyrights காரணமாக இருக்கலாம்.

நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.