Jump to content

இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்?


Recommended Posts

இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்?
 

article_1452086064-TamilSLsoiyjsd.jpgநியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை  இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது.

நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: திலகரட்ண டில்ஷான், தனுஷ்க குணதிலக, டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, சாமர கப்புகெதர, திஸர பெரேரா, நுவான் குலசேகர, சச்சித்திர சேனநாயக்க, துஷ்மந்த சமீர, ஜெப்றி வன்டர்சே

நியூசிலாந்து: கேன் வில்லியம்ஸன், மார்ட்டின் கப்டில், றொஸ் டெய்லர், கொரே அன்டர்சன், கொலின் முன்றோ, மிற்சல் சான்ட்னெர், லூக் றொங்கி, அடம் மில்னி, ட்ரன்ட் போல்ட், மற் ஹென்றி, இஷ் சொதி.

- See more at: http://www.tamilmirror.lk/163223#sthash.DIfeRMut.dpuf
Link to comment
Share on other sites

3 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி!

3 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி!

January 7, 2016  10:54 am

Bookmark and Share
 
இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக Martin Guptill 58 ஓட்டங்களையும் Kane Williamson 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் Nuwan Kulasekara 2 விக்கெட்டுக்களையும் Jeffrey Vandersay 1 விக்கெட்டினையும் பெற்றனர்.

வெற்றிபெற இலங்கை அணிக்கு 183 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக Danushka Gunathilaka 46 ஓட்டங்களையும் Milinda Siriwardana 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Matt Henry மற்றும் Trent Boult ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.
Link to comment
Share on other sites

நியூஸிலாந்து- இலங்கை இரண்டாவது T-20 நாளை

January 09, 2016

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் இரு போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் ஆகிய நடைபெற்று வருகின்றது.

new-zealand-vs-sri-lanka1

இந்நிலையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 2 க்கு 0 என்ற ரீதியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3 க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. அதேவேளை முதலாவது 20 ஓவர் போட்டியையும் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்படி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற நியூஸிலாந்து 20 ஓவர் தொடரையும் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்தில் நாளைய போட்டியில் களமிறங்கும்.

http://www.onlineuthayan.com/sports/?p=7448&cat=2

Link to comment
Share on other sites

14 பந்துகளில் அரைசதம் விளாசி கொலின் மன்ரோ சாதனை; இலங்கையை நாசம் செய்த நியூஸிலாந்து

 

 
  • இலங்கைக்கு எதிராக டி20 கோப்பையைக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எஃப்.பி.
    இலங்கைக்கு எதிராக டி20 கோப்பையைக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எஃப்.பி.
  • மேலேறி வந்து சிக்சர் விளாசிய டி20 2-வது அதிவேக அரைசத நாயகன் கொலின் மன்ரோ. | படம்:ஏ.எஃப்.பி.
    மேலேறி வந்து சிக்சர் விளாசிய டி20 2-வது அதிவேக அரைசத நாயகன் கொலின் மன்ரோ. | படம்:ஏ.எஃப்.பி.

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இலங்கை-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது, கடைசி டி20 போட்டியில் மன்ரோவின் அதிவேக அரைசத சாதனையுடன் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 10 ஓவர்களில் 147 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலங்கையை அடித்து நொறுக்கியது.

இந்தத் தோல்வியினால் டி20 முதலிடத்தை இழந்தது இலங்கை, மே.இ.தீவுகள் முதலிடம் பெற்றது.

நியூஸிலாந்து இடது கை பேட்ஸ்மென் கொலின் மன்ரோ யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கண்ட உலக சாதனையை முறியடிக்கும் நிலை இருந்தது, ஆனால் அவர் 14 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது அதிவேக அரைசதமாகும், இதில் மார்டின் கப்தில் வைத்திருந்த அதிவேக நியூஸிலாந்து சாதனையை முறியடித்தார் மன்ரோ.முன்னதாக மார்டின் கப்தில் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார்.

மார்டின் கப்தில், வில்லியம்சன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 40 பந்துகளில் 89 ரன்களை விளாசி எடுத்தனர். அடுத்த 58 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொலின் மன்ரோ மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து 3.2 ஓவர்களில் எடுத்தனர். இதில் மன்ரோ 14 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 50 எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 147 ரன்கள் 10 ஓவர்களில் விளாசப்பட்டுள்ளது.

7 ஓவர்களில் 89/1 என்ற நிலையில் இறங்கிய மன்ரோ, 2-வது பந்திலேயே திசர பெரேராவை லாங் ஆனில் பெரிய சிக்சர் ஒன்றை அடித்தார்,

8-வது ஓவரை வாண்டர்சே என்ற லெக் ஸ்பின்னர் வீச, முதல் சிக்ஸ் டீப் மிட்விக்கெட்டுக்குப் பறந்தது, அடுத்த சிக்ஸ் லாங் ஆஃப் திசைக்குப் பறந்தது. மூன்றாவது ஃபுல் பந்து டீப் ஸ்கொயர்லெக்கில் காணாமல் போனது. பிறகு உதனாவின் பந்தை மேலேறி வந்து கவர் திசையில் ஒரு சிக்சரை விளாசினார் மன்ரோ.

பிறகு சமீரா வீசிய ஃபுல் பந்தை நன்றாக லாங் ஆஃபில் தூக்கி அடித்தார், ரசிகர்களிடையே கேட்ச் ஆனது. ஒரே பவுண்டரியும் இதே ஓவரில் புல்டாஸில் வந்தது. இது ஒரு பவுன்சில் சென்றது. அடுத்ததாக டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு பயங்கர சிக்ஸ் அடிக்க கொலின் மன்ரோ 14 பந்துகளில் 7 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் உலகின் 2-வது அதிவேக டி20 அரைசதம் கண்டதோடு 10-வது ஓவரில் ஆட்டம் முடிந்து போனது.

19 பந்துகளில் அரைசதம் எடுத்து நியூஸிலாந்து டி20 சாதனையை வைத்திருந்த கப்திலைக் கடந்தார் மன்ரோ, கேன் வில்லியம்சன் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஒருமுனையில் சாதுவாக நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மன்ரோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இலங்கை அணியை நியூஸிலாந்து பேட் செய்ய அழைத்தது. நேர் பவுண்டரி மிகவும் அளவு குறைவாக இருந்ததால் இலங்கை பேட்ஸ்மென்கள் அந்த இடத்தை குறிவைத்து அடிக்க முயன்றே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனை உணர்ந்த கேன் வில்லியம்சன் அதற்கேற்றார்போல் களவியூகத்தையும் பந்துவீச்சையும் அமைத்தார். கிராண்ட் எலியட் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஞ்சேலோ மேத்யூஸ் மட்டுமே ஒரு முனையில் இன்னிங்ஸை கட்டமைத்து 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். தில்ஷன் முன்னதாக 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆக இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் ஆடம் மில்ன, சாண்டன்ர், தலா 2 விக்கெட்டுகளையும், கிராண்ட் எலியட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/14-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8088823.ece

Link to comment
Share on other sites

நடப்பு உலக T20 சம்பியன் இலங்கை அணியின் தரப்படுத்தல் முதலாம் இடம் பறிபோனது.

புதிய நம்பர் 1 மேற்கிந்தியத் தீவுகளுக்கு வாழ்த்துக்கள்.

எனினும் சம அளவு புள்ளிகளுடன் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் காணப்படுகின்றன.

12508874_10153151278865870_6281388116057

Link to comment
Share on other sites

சொந்த ஊருக்கே ஓடிடுறோம்... கதறிய சிங்கங்கள் !

 

க்லாந்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் சிங்கத்தை கிவி கொத்தி குதறி எடுத்து விட்டது .  50 ஓவர் ஆட்டத்தையே டி20 போல ஆடிக் காட்டிய இலங்கை அணிக்குதான் இந்த நிலை. இந்த போட்டியில் பல சாதனைகள் அசாத்தியமாக நிகழ்த்தப்பட்டன. அவற்றை பார்ப்போம்.

kivi%20.jpg

                                                                                         நன்றி :ஸ்போர்ட்ஸ் கீடா

இந்தப் போட்டியில் மார்டின் கப்தில், கோலின் மன்றோ இருவருமே 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டனர். இது ஒரு புதிய சாதனையாகும்.

ஒரே போட்டியில் மார்டின் குப்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்து, மிக விரைவாக அரைசதமடித்த நியூசிலாந்து  வீரர் என்ற சாதனையை படைக்க, அதே போட்டியில் அவரது சாதனையை கோலின் 14 பந்துகளில் முறியடித்தது, கிரிக்கெட் உலகில் இதற்கு முன்பு எங்கும் நிகழ்ந்திராதது.  

இதற்கு முன், கடந்த 2009ஆம் ஆண்டு  இந்தியா& இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில்  சங்கக்காரா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே போட்டியில் கவுதம் கம்பிர் 19 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். ஆனால் இருவரும் வேறு வேறு அணியை சேர்ந்தவர்கள். 

kivs.jpg

டி20 வரலாற்றில் 12 பந்துகளில் அரைசதமடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் யுவராஜ்சிங். அடுத்த படியாக 17 பந்துகளில் அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் மற்றும் மைபர்க், கிறிஸ் கெயில் உள்ளனர். 18 பந்துகளில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் அரை சதம் அடித்துள்ளனர்.

கோலின் மன்றோ தனது 50 ரன்களில் 46 ரன்களை ஓடாமலேயே பவுண்டரி, சிக்சர்களில் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் வெற்றியை எட்டியது. அந்த வகையில் இதுவும் ஒரு புதிய சாதனை ஆகும். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு,  தென்ஆப்ரிக்க அணி பாகிஸ்தான் அணி எடுத்த 130 ரன்களை 11. 3 ஓவர்களில் துரத்தி வெற்றி கண்டதே சாதனையாக இருந்தது.

http://www.vikatan.com/news/sports/57483-guptill-sets-fastest-record-munro-breaks.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான இளம் வீரர்களை வைத்துக் கொண்டு இலங்கையணி பலம் மிக்க நியூசிலாந்திடன் இந்தளவிற்கு விளையாடியதே வரவேற்க கூடியது. வருங்காலத்தில் இவ்வணி நிட்சயம் சாதனை படைக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.