Jump to content

ஒரு சட்ட விவாதம். அரசியல் பேசாமல் விவாதிக்க வாருங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம்.

1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்)

சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார்.

பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன?

2. ஒருவர் குடும்பஸ்தர். கிரெடிட் ஹிஸ்டரி பிரச்னை காரணமாக, தனது பணத்தினை போட்டு, தனது உறவினர் அல்லது நண்பர் பெயரில் ஒரு ஆதனத்தினை வாங்குகிறார்.

சில ஆண்டுகளின் பின்னர், அவராக ஒரு வீட்டினை வாங்கக் கூடிய நிலையில் பெரிய வீடு ஒன்றை வாங்கி குடி பெயர்க்கிறார்.

எந்த நண்பர் அல்லது உறவினர் பெயரில் முதல் வீட்டினை வாங்கினாரோ அவர் தனது குடும்பத்துடன், வாடகையாளராக இவரது முதல் வீட்டில் குடி புகுகிறார்.

ஒழுங்காக வந்து கொண்டிருந்த வாடகை மெதுவாக நின்று, முழுவதுமாக நின்று கடைசியில் உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும் நிலையில் போய் நிற்கிறது.

இப்படி நிலையில் பலர், குய்யோ, முறையோ, இப்படியும் செய்யலாமா என்று உறவை / நட்பை திட்டியவாறு. ஒன்றுமே செய்ய முடியாதே என்று அடங்கிவிடுதலையும் பார்க்கிறோம்.

பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன?

உங்கள் சட்ட நியாயப் பிளப்புகளை எடுத்து விடுங்களேன்.
 

Link to comment
Share on other sites

இதில இருந்து என்ன புரியுதுன்னா நம்ம நாதமுனி நல்லா யாருகிட்டயோ ஏமாந்து இருக்கார் . வசமா மாட்டிகிட்டு முழிக்கிறார் . அதனால நேரடியா ஆலோசனை கேட்காம திரி போட்டு நோன்டுறார் .

முதல் கேள்விக்கு பதில் இல்லை . ஏனெனில் சாட்சிகள் அற்ற ரொக்க பண பரிமாற்றம் மட்டுமே நடந்துள்ளதால் ஒன்னும் செய்ய இயலாது .

இரண்டாவது கேள்விக்கான பதில் 
வாடகை வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் ஓரளவு வழி உண்டு. ஆனா வீடு கட்ட காசு எப்படி வந்துச்சுன்னு கேள்வி வரும் 

பினாமி, கணக்கு காட்ட முடியவில்லை எல்லாம் பழங்காலத்து கதைகள் ஆச்சே ??? எப்படி இவ்வளளவு நல்லவராக இருந்தீர் ???

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம்.

1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்)

சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார்.

பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன?

சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பணம் பாதிக்க பட்டவர்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமானது. அந்த பணத்தை சேர்த்தவர் சட்டத்தின் முன் ஒரு குற்றவாளி. அந்த பணத்தை முதலீடு செய்து பெருக்க உதவியவர் இந்த குற்றத்தை அறிந்தும் அரசுக்கு அறிவிக்காத காரணத்தால் குற்றவாளியை மறைக்க உதவிய குற்றத்தை புரிந்தவர் ஆகிறார். மேலும் சட்டவிரோதமாக பெற்ற பணத்தை பெருக்க உதவி, குற்றம் செய்த குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த குற்றவாளி ஆகிறார்.

ஆகவே இருவருமே குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். இந்த குற்றங்கள் அரசுக்கு அறிவிக்க பட்டால் இருவரிலும் இப்போது ஆதனத்தை வைத்திருப்பவரே பெருமளவில் இழக்க இருக்கிறார். ஆகவே முதல் குற்றம் செய்தவர் தான் அரசிடம் உண்மையை சொல்லி அரச சார்பு சாட்சி ஆகி, அரசு ஆதனத்தை கைப்பற்றவும் தற்போது ஆதனத்தை வைத்திருப்பவரை சிறைப்படுத்தவும் உதவ முன் வந்தால் ஆதனத்தை வைத்திருப்பவர் அதை தடுக்க பின்வரும் ஒரு வழியை அணுகுவார்.

  1. முதல் குற்றம் செய்து பணம் கொடுத்தவரை இல்லாமல் செய்வது. இது பின்னர் கொலை குற்றமாகும்.
  2. முதல் குற்றம் செய்தவருடன் உடன்பாட்டுக்கு வந்து சொத்தை பகிர்ந்து கொள்வது.

முதலாவது அணுகுமுறையையே குற்றவாளிகள் பெரும்பாலும் தேர்ந்து எடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒரு இருட்டறை. அதில் கறுப்புப் பூனையைத் தேடி நீதிபதிக்கு காண்பிப்பதே ஒரு வழக்கின் வெற்றி.

நம்மவர்களில் பலர் இந்த இரண்டாவது வகையில் சிக்கி, சட்டம் புரியாமல் அல்லது என்ன செய்வது என்று தெரியாமல் திட்டல், அடிபாடு, உறவினர்களை நியாயம் சொல்ல அழைப்பது என தடுமாறும் நிலையில் இது முக்கியமான ஒரு விடயம்.

ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தப் பக்கம் இன்னும் காணவில்லையே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இது ஒரு சிவில் பிரச்னை. ஆகவே பணம் எவ்வாறு வந்தது என்பது நீதிபதி ஒருவர் கருத்தில் எடுக்கும் பிரச்னை இல்லை.

ஆகவே இரு வழக்குகளும் முக்கியமான ஒரு விடயம் குறித்தே பார்வை செலுத்தும். அதாவது இங்கே 'Partnership' உறவு உருவாக்கி உள்ளதா என்பதே.

பலரும் தவறாக நினைப்பது, ஒன்றும் எழுத்தில் இல்லாவிடில், அவ்வளவு தான் என்று. ஆனால், எழுத்தில் இல்லாமலே, இயல்பாகவே 'partnership at will' உருவாகும் நிலைமைகள் பல நமது வாழ்வில் காண்கிறோம்.

உதாரணமாக, வாடகை வண்டியில் ஏறி அமர்கிறோம். விமான நிலையம் செல்ல வேண்டும் என்கிறோம். அங்கே எழுத்தில் இல்லாமலே 'partnership at will' (contract for services) உருவாகிறது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்டோர் பொதுவான நலன் நோக்கி இயங்குவது. விமான நிலையம் அடையும் போது டிரைவருக்கு பணமும், பயணிக்கு பயண முடிவும் பலனாக கிடைக்கிறது. அத்துடன்  'partnership at will' முடிவுக்கு வருகின்றது.

இங்கே, விமான நிலையம் அடையாவிடில், பயணிக்கு ஆன தனது கடமைப் பாட்டினை டிரைவரும், அடைந்த பின் பணம் கொடுக்கவிடில், தனது கடமைப் பாட்டினை பயணியும் நிறைவு செய்ய வில்லை என்ற வகையில்  'partnership at will' முடிவுக்கு வரவில்லை. தொடர்கிறது. Partnership at will ல் இருந்து ஒருவர் தானாக விலகவோ, விலத்தவோ முடியாது என்பதால் வழக்கு, நீதி நியாயம் என நீள்கிறது.

அதேவேளை, டிரைவர் குடிபோதையில் இருக்கிறார் என்றால், சட்ட ரீதியற்ற காரணத்தாவ், பயணி இடையில் இறங்கினால், Partnership முடிவுக்கு வருகிறது.

முக்கியமாக,  'partnership at will' அதாவது, எழுதாத, வாய் மூலமான உடன்படிக்கைக்கு சட்டம் இன்னுமொரு பாதுகாப்பினை தருகின்றது.

அதாவது ஒருவர் தானாக  'partnership at will' ல் இருந்து நீங்கிக் கொள்வதோ, அல்லது அடுத்தவரை நீக்குவதோ முடியாது. ஏனெனில் அங்கே இது குறித்த தெளிவான எழுத்தில் எழுதி கை எழுத்து போடப் பட்ட ஆவணம் இல்லை ஆதலால், ஒருவர் அடுத்தவரை கழுத்து அறுபதை சட்டம் அனுமதிக்காது. மேலும் ஒரு கம்பெனி போன்று,   'partnership in business' என்பது தனியான Legal entity' ஆக கருதப் படுவதில்லை. ஆகவே மிக முக்கியமாக எந்த நோக்கதுக்காக parneship உறவுக்குள் சென்றார்களோ, அந்த நோக்கம் தொடர்பில் வாங்கப் படும் கடனுக்கு சகல பார்ட்னர்களும் பொறுப்பாவர். 

மேலே உள்ள வாடகைக் கார், பயணி விவகாரத்தில், என்னுமொரு பெரிய 'சவாரி' கிடைக்கிறது என்று, நடுவழியில் பயணியை இறக்கி விட்டு சென்று, அதனால் அவர் தனது விமானத்தினை தவற விட்டு, அதனை தொடர்ந்து முக்கியமான வியாபார டீலை இழந்தால், வாடகைக் கார் நிறுவனம் நஷ்ட ஈடு செலுத்த நேரிடும். (breach of contract). அதே போல் பயணி விமான நிலையம் சென்ற பின் குறித்த நேரத்துக்குள் பணம் கொடுத்து அனுப்பாவிடில், நேர இழப்பால் வேறு சவாரியினை இழந்தால் அந்த நஷ்ட ஈடு செலுத்த நேரிடும்.

நமது வீட்டு விசயத்துக்கு வருவோம்.

இங்கே பலர் 'partnership at will' உருவாகி இருப்பதனை அறியாமல் இருகின்றார்கள். ஆகவே ஒன்றுமே செய்ய முடியாது என நினைகின்றனர்.  மேலும் முக்கியமாக, partnership னை உறுதிபடுத்துவது முக்கியமானது. ஏனெனில் பணம் போட்டவர் இதனை அலட்சியப் படுத்தினால், அந்த ஆதனம் தனது பெயரில் இருப்பதால், மேலும் மேலும் கடன் எடுத்து விட்டு (இது மோசடிக் குற்ற சாட்டுக்கு உள்ளாகும் நடவடிக்கை, Breach of trust and fraudulent activities against a partner: ஆனால் பார்ட்னரின் அனுமதியுடன் தான் செய்தேன் என்றால் மோசடிக் குற்ற சாட்டில் இருந்து தப்பலாம்.), partner தான் பொறுப்பு என்று கூறி, partnership னை அவர் உறுதிபடுத்தினால் கதை கந்தல் தான். 

ஆகவே, இன்னொருவர் பெயரில் ஆதனம் வாங்கி, அவர் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டால், இருக்கவே இருக்கிறது சட்ட தீர்வு.

அவர் விற்பனை செய்ததால் கூட, மோசடி குற்ற சாட்டுக்கு உள்ளாகி பணத்தினை இழந்து, முதல் போட்டவருக்கு பணம் சட்டப் படி கிடைக்கும் நிலை உள்ளது. 

அதேவேளை, இன்னொருவர் பெயரை பயன்படுத்தும் நிலை வந்தால், எழுதி வாங்கி வைத்துக் கொண்டே செய்யுங்கள். முடிந்தவரை நியாயமாக, உனக்கு இந்த ஆதனத்தினை விற்பனை செய்கையில் இவ்வளவு தருவேன் என எழுத்து மூலம் சொல்லி விடுங்கள். ஆகவே அவரும் நியாயமாக இருப்பார்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.