Jump to content

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்


Recommended Posts

பல்லிக்கு 
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!

^^^

ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!

^^^

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

^^^

தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!

^^^

தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

 

Link to comment
Share on other sites

எப்போது தோற்பவன் ....
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!

^^^

மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!

^^^

எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!

^^^

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாமிர்தம் .... சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லா அமிர்தம் ....தொடருங்கள் இனியவன்....!!  :)

Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

பஞ்சாமிர்தம் .... சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லா அமிர்தம் ....தொடருங்கள் இனியவன்....!!  :)

நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

குரு குலத்தில் பிறந்தவர்...
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!

^

சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!

^

ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
 

Link to comment
Share on other sites

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை 
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து  இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது 
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!

வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!

ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே .....
கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!

 

 

*****************

கனி என்றால் க(ன்)னி 

-------------

கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!

வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!

புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!

சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா 
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா 
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால 
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!


.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
Link to comment
Share on other sites

  • 1 month later...

எமக்கு 
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல் 
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!

இவை எல்லாவற்ரையும் விட ....?

என் தேசத்தின் ஒரே 
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!

கவிப்புயல் இனியவன் 
ஈழக்கவிதைகள்

 

Link to comment
Share on other sites

என் 
புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?

காதலும்  விஷம் ....
உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!

-----

இதயங்கள் கண்ணீரால் 
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!

இதயங்கள் சிரித்துக்கொண்டு 
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!

ஒரு 
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால் 
ஒருதலைக்காதல் ...!!!

 

Link to comment
Share on other sites

நீ 
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என் 
இதய அறைக்குள் ..
அழகாய் இருகிறாய் ...!!!

சிறு மழைதுளி
தான் முத்தாக மாறும் 
உன் ஓரக்கண் பார்வையால் 
இதயத்துக்குள் 
முத்தானாய் .......................!!!

முத்துக்குழிப்பது 
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம் உன்னை 
அறிந்து கொள்வது ..?

 

******************

 

காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து...
கொண்டு கூத்தாடி ...
போல்நின்றேன் -நீ ...
பார்த்த பார்வையில் ...
உறைந்து போனேன் -.....
அந்த கணமே....
அரும்பியது காதல் ...
மொட்டு உன் மீது ....
^
ஊமை காதல் ....!!!

காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது 
சந்திப்போம் மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி 
நாட்கள் கூட வருடம் போல் 
நகர்ந்தது ............!
^
காதல் ஏக்கத்தோடு ....!!

காதல் மலர்வு
***********************
காதல் 
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் .....
ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை 
வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு 
அல்ல உறுதி ...!
^
மலர்ந்தது காதல் 

காதல் வாழ்க்கை
**************************
தினம் 
தோறும் தனியே 
உணவு அருந்தியதில்லை
தனியே உறங்கியதில்லை
தனியே வெளியே 
செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது 
என் கற்பனையில் .........!

Link to comment
Share on other sites

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் 
சறுக்கினால் சண்டை 
சற்று நேரம் ஊமையாகி 
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி 
கடிகாரத்தில் ஓடுவதுபோல் 
உனக்கும் விளங்கும் 
காதல் வலி....!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.