Jump to content

U 19 உலககிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள் கருத்துக்கள்


Recommended Posts

அண்டர் 19 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

நோபாலன்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்த இந்திய அண்டர் 19 அணி. இலங்கையை வீழ்த்தியது. | கெட்டி இமேஜஸ்.
உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்த இந்திய அண்டர் 19 அணி. இலங்கையை வீழ்த்தியது. | கெட்டி இமேஜஸ்.

வங்கதேசத்தில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

திராவிட் பயிற்சியாளராக உள்ள இந்திய அண்டர் 19 அணி உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்தது. அதுவும் தோற்காத அணியாக இதுவரை இருந்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அசலங்கா இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைக்க, இந்திய அண்டர் 19 அணி 27/2 என்ற நிலையிலிருந்து மீண்டு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனையடுத்து நாளை மறுநாள், அதாவது பிப்ரவரி 11-ம் தேதி மோதும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் அணியை இந்திய அணி இறுதிப் போட்டியில் பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிறன்று மோதுகிறது.

அன்மோல்பிரீத் சிங், சர்பராஸ் கான் அபாரம்:

இந்திய அணி முதலில் பேட் செய்த போது, ரிஷப் பண்ட் (14), கேப்டன் இஷான் கிஷன் (7) ஆகியோர் சடுதியில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 9.2 ஓவர்களில் 27/2 என்று இந்திய அணி சற்றே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ன்ஹ்ட அன்மோல்பிரீத் சிங் (72), சர்பராஸ் கான் (59) இணைந்து 21 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 96 ரன்களைச் சேர்த்து மீட்டனர். ரன் எடுப்பது மிகவும் கடினமாக அமைந்ததால் 15 ஓவர்களில் 44/2 என்றுதான் இருந்தது. இந்நிலையில் 19-வது ஓவரில் சர்பாராஸ் கான், 2 பவுண்டரிகளை அடித்தார். ஆட்டத்தின் 28-வது ஓவரில்தான் முதல் சிக்ஸ் வந்தது. சர்பாராஸ் கான், சில்வாவின் பந்தை மேலேறி வந்து லாங் ஆஃப் மீது சிக்ஸ் அடித்தார். 61 பந்துகளில் அரைசதம் கண்டார் சர்பராஸ் கான்.

ஸ்கோர் 123-ஆக இருந்த போது சர்பராஸ் கான், 71 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து புல் ஷாட்டில் பெர்னாண்டோ பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிறகு அன்மோல்பிரீத் சிங், அசலங்கா பந்து ஒன்றை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்து பிறகு ஒரு பவுண்டரி 69 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கண்டார்.

40-வது ஓவரில் இந்திய அணி 173/3 என்று இருந்தது. 43-வது ஓவரின் முதல் பந்தில் 92 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்த அன்மோல்பிரீத் சிங் 72 ரன்களில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு நிமேஷ் பந்தில் திருப்தியில்லாமல் வெளியேறினார்.

வாஷிங்டன் சுந்தரும், அன்மோல்பிரீத் சிங்கும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் 70 ரன்களைச் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஸ்கோர் 218ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார்.

ஆனால் அர்மான் ஜாஃபர் இறங்கி அதிரடி காட்டினார், அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் விளாசியது மிக முக்கியமான பங்களிப்பாக அமைந்தது. குறிப்பாக ஒரு 11 பந்துகளில் 23 ரன்கள் அப்போது வந்தது. லோமோர் 11 ரன்களையும், தாகர் 17 ரன்களையும் எடுத்து பங்களிக்க இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குமாரா, நிமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அவேஷ் கானின் அபார தொடக்கப் பந்து வீச்சு:

இலக்கைத் துரத்த களமிறங்கிய இலங்கை அணி வலது கை வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானின் கட்டுக்கோப்பான லெந்த் மற்றும் 135 கிமீ வேகம் ஆகியவற்றால் திணறினர். முதல் ஓவரின் கடைசி பந்து அருமையான இன்ஸ்விங்கராக அமைய தொடக்க வீரர் பெர்னாண்டோ 4 ரன்களில் எல்.பி. ஆனார். இதே ஓவரில் ஒரு பிளம்ப் எல்.பி. நடுவரால் தவறாக மறுக்கப்பட்டது, ஆனால் அதே ஓவரில் அவரைக் காலி செய்தார் அவேஷ் கான்.

அதோடு பண்டாரா (2) ரன் அவுட்டிலும் அவேஷ் கானின் பங்கு இருந்தது. இலங்கை 13/2 என்று ஆனது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் அகமதுவும் அபாரமாக வீசினார். இலங்கை கேப்டன் அசலங்கா 6 ரன்களில் பாதம் என்பவரிடம் அவுட் ஆக இலங்கை 10-வது ஓவரில் 42/3 என்று சரிவு முகம் காட்டியது.

அப்போது இருகை பவுலிங் வீரர், ஆல்ரவுண்டர் காமிந்து மெண்டிஸ், ஆஷன் ஆகியோர் இணைந்து ஸ்கோரை தட்டுத் தடுமாறி 91 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 67 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த காமிந்து மெண்டிஸ் தாகர் பந்தில் வெளியேறினார்.

அதன் பிறகு இலங்கை அணியில் ஆஷன் மட்டுமே 38 ரன்கள் எடுத்தார். பிவிஆர் டிசில்வா 28 ரன்களையும், பிஏ டிசில்வா 24 ரன்களையும் எடுத்தாலும் தேவைப்படும் ரன் விகிதம் எகிறிக் கொண்டிருக்க அவேஷ் கான் தனது 2-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். கடைசி 4 விக்கெட்டுகள் 21 ரன்களில் பெவிலியன் திரும்ப இலங்கை அணி 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், தாகர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இடையில் சில ரன் அவுட்கள், மிஸ்பீல்ட்கள், கேட்ச்கள் இந்திய அணியினரால் கோட்டை விடப்பட்டன, ஆனால் இதனை இலங்கை அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை, காரணம் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் எகிறிக் கொண்டேயிருந்ததே.

ஆட்ட நாயகனாக 72 ரன்கள் எடுத்த அன்மோல்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8214161.ece?homepage=true
Link to comment
Share on other sites

இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்
 
11-02-2016 04:43 PM
Comments - 0       Views - 1

article_1455192998-TamilWIfinaU19.jpg19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. இத்தொடரை நடாத்திவரும் பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்தே, இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றது.

மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. 2 ஓட்டங்களுக்கு 27 ஓட்டங்களை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களுடன் தடுமாறியது. அதன் பின்னர், 6ஆவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், 6ஆவது விக்கெட்டின் பின்னர், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டன. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மெஹேடி ஹசன் மிராஸ் 60 (74), மொஹமட் சாய்புடின் 36 (55), ஜோய்ராஸ் ஷேக் 35 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கீமோ போல் 3, ஷமர் ஸ்பிறிங்கர் 2, சேமர் கே.ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

227 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியான ஆரம்பத்தைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 5 ஓவர்களிலேயே 44 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் சமாளித்து ஆடினாலும், 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறியது. எனினும், மத்திய வரிசை வீரரான ஷமர் ஸ்பிறிங்கரின் சிறப்பான ஆட்டத்தால், அவ்வணி வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் ஷமர் ஸ்பிறிங்கர் ஆட்டமிழக்காமல் 62 (88), ஷிம்ரொன் ஹெட்மையர் 60 (59), கிட்ரோன் போப் 38 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சாலே அஹ்மட் ஷவோன் 3, மொஹமட் சாய்புடின் 2, மெஹேடி ஹஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, ஷமர் ஸ்பிறிங்கர் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/165825/%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-#sthash.pKn1cTh8.dpuf
Link to comment
Share on other sites

19 வயதின் கீழ் உலக கிண்ணம்: 3 ஆம் இடத்துக்கான போட்டியில் இலங்கையை வென்றது பங்களாதேஷ்
2016-02-13 16:34:32

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில்  இலங்கை அணியை பங்களாதேஷ் அணி 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

 

14844_bangaladesh-under-19-600.jpg

 


பங்களாதேஷின் பதுல்லா நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  48.5 ஓவர்களில் 214 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


அணித்தலைவர் சரித் அசலன்க 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து  218 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


அணித்தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் 53 ஓட்டங்களையும் நஸ்முல் ஹொஸைன் சான்டோ 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பங்களாதேஷ் அணியின் 3 ஆவது வரிசை வீரர் ஜாகெர் அலி 15 ஆவது ஓவரில் துப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். 19 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவர் மைதானத்திலிருந்து தூக்கிச்செல்லப்பட்டார்.

 

14844_bangaladesh-under-19-2.jpg

 

ஆனால்,  49 ஆவது ஓவரில் அவர் மீண்டும் களமிறங்கி துடுப்பெடுத்தாடினார். 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்ற அவர் தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மெஹ்தி ஹசன் மிராஸ் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14844#sthash.Nr0UnXCv.dpuf
Link to comment
Share on other sites

அண்டர் 19 உலகக் கோப்பை இறுதி: 145 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணி

 

 
தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.
தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.

மிர்பூரில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக பந்து வீச இந்திய அணி முதலில் பேட் செய்து 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மயர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோசப் மற்றும் ஹோல்டர் வெறியுடன் வீசினர். பந்தின் தையல் பகுதியை தரையில் படுமாறு வீசி எழும்பச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்தனர்.

தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர். சர்பராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடி இந்த உலகக்கோப்பையில் தனது 7-வது அரைசதத்தை எடுத்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு முனையில் போராடி 8-வது விக்கெட்டாக ஜான் பந்தில் எல்.பி.ஆனார். லோம்ரோர் 19 ரன்களையும், ஆர்.ஆர்.பாதம் 21 ரன்களையும் எடுக்க மொத்தம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 23 ரன்கள் வந்ததால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து சுருண்டது.

மேற்கிந்திய அணியில் ஜோசப் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பால் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பண்ட், ஜோசப் வீசிய பந்தை முன்னால் வந்து, அதாவது கிரீசிற்கு சற்றே வெளியே வந்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் கிரீசிற்குள் காலை வைக்கத் தவறியதால் விக்கெட் கீப்பர் இம்லாக் சாதுரியமாக பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் இதனால் விசித்திரமான முறையில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேரினார் பண்ட்.

அன்மல்பிரீத் சிங் 3 ரன்களில் ஜோசப்பின் எழும்பிய, ஸ்விங் ஆன பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷன் 4 ரன்களில், உள்ளே வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தை கோட்டை விட்டார், நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் ஜான் பந்து ஒன்று சற்றே நின்று வர இவரது டிரைவ் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ஸ்பிர்ங்கர் பந்தில் அர்மான் ஜாஃபர் 5 ரன்களில் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 50/5 என்று ஆனது.

சர்பராஸ் கான் 29 ரன்களில் ஆடிவர லோம்ரோர் 19 ரன்களில் ஹோல்டரின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 87/6 என்று ஆனது. இதன் பிறகு தனது ஏழாவது அரைசதம் கண்ட சர்பராஸ் கான், ஜான் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட எல்.பி.ஆனார். அதன் பிறகு மற்ற விக்கெட்டுகள் சோபிக்கவில்லை இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

காலிறுதி, அரையிறுதிகளில் கடினமான சூழலில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற மே.இ.தீவுகள், இந்த ரன் எண்ணிக்கையை எளிதில் விரட்டும் என்றே எதிர்பாக்கப்படுகிறது, காரணம், பிட்சில் இருந்த ஈரப்பதம் இப்போது காய்ந்து பேட்டிங் சுலபமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் போப் ஒரு அதிரடி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-145-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8236893.ece?homepage=true

Link to comment
Share on other sites

அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று மே.இ.தீவுகள் வரலாறு படைத்தது

 
 
 
  • அருமையாக ஆடி வெற்றிக்கு இட்டுச் சென்ற அரைசத நாயகன் கீஸி கார்ட்டி. | மிர்பூர், அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட், மே.இ.தீவுகள் உலக சாம்பியன். | கெட்டி இமேஜஸ்.
    அருமையாக ஆடி வெற்றிக்கு இட்டுச் சென்ற அரைசத நாயகன் கீஸி கார்ட்டி. | மிர்பூர், அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட், மே.இ.தீவுகள் உலக சாம்பியன். | கெட்டி இமேஜஸ்.
  • தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.
    தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.

மிர்பூரில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதன் முதலாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது மே.இ.தீவுகள்.

முதலில் பிட்சை சரியாகக் கணித்து இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்து துல்லியமாக வீசி இந்திய அணியை 145 ரன்களுக்குச் சுருட்டிய பிறகு, இலக்கை விரட்டும் போது இந்திய அணி கொடுத்த கடும் நெருக்கடியை மன உறுதியுடன் எதிர்கொண்டு கடைசி ஓவரின் 3-வது பந்தில் 146/5 என்று வெற்றி பெற்று அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறையாக கோப்பையை வென்று உலக சாம்பியன்களாகி வரலாறு படைத்தது மே.இ.தீவுகள்.

67/2 என்று நிதானமாக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணியை இந்திய இடது கை ஸ்பின்னர் டாகர் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கடும் சிக்கலுக்குள்ளாக்கினார்.

அதாவது டாகர், முதலில் கேப்டன் ஹெட்மயரை அவரது சொந்த எண்ணிக்கையான 23 ரன்களில் வீழ்த்தினார். பிறகு ஸ்பிரிங்கர், கூலி ஆகியோரையும் வீழ்த்த 77/5 என்று தோல்வி முகம் கண்டது மே.இ.தீவுகள்.

ஆனால், அதன் பிறகு இந்திய அணியின் கடும் நெருக்குதலை நிதானத்துடனும், சாதுரியத்துடனும் எதிர்கொண்ட கார்ட்டி (52 நாட் அவுட்), பால் (40 நாட் அவுட்) ஆகியோர் மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று மிகவும் அழுத்தம் தரும் சூழ்நிலையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்று முதன் முதலாக கோப்பையை வென்றனர்.

கடைசியில் 49-வது ஓவரில் பால் என்ற வீரருக்கு அவேஷ் கான் டீப் கவரில் கேட்ச் ஒன்றை விட்டார், அது கடினமான கேட்ச். ஓடி வந்து முன்னால் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயன்று நழுவ விட்டார். அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் மே.இ.தீவுகள் இன்னமும் கூடுதல் நெருக்கடிக்குள்ளாகி ஆட்டம் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம், ஆனால், கார்ட்டி, பால் இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 20.3 ஓவர்கள் கடும் நெருக்கடியில் நின்று 69 ரன்களைச் சேர்த்தனர்.

இந்திய தரப்பில் திருப்பு முனை ஏற்படுத்திய டாகர் 10 ஓவர்களில் 1 மெய்டனுடன் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவேஷ் கான் வழக்கம் போல் அருமையாக வீசி 29 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த இந்திய அணி கடைசியில் போராடி தோல்வி தழுவியது, ஆனாலும் குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுக்கும் திறமையை, இந்த அணியினரிடத்தில் ஒரு கடினமான போராட்ட மனநிலையை ஏற்படுத்திய விதத்தில் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிற்கு இது ஒரு திருப்திகரமான தொடரே.

ஆட்ட நாயகனாக கார்ட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்பராஸ் கானின் தனிமனிதப் போராட்டமும் மே.இ.தீவுகளின் அபாரப் பந்துவீச்சும்!

மிர்பூரில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக பந்து வீச இந்திய அணி முதலில் பேட் செய்து 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மயர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோசப் மற்றும் ஹோல்டர் வெறியுடன் வீசினர். பந்தின் தையல் பகுதியை தரையில் படுமாறு வீசி எழும்பச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்தனர்.

தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர். சர்பராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடி இந்த உலகக்கோப்பையில் தனது 7-வது அரைசதத்தை எடுத்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு முனையில் போராடி 8-வது விக்கெட்டாக ஜான் பந்தில் எல்.பி.ஆனார். லோம்ரோர் 19 ரன்களையும், ஆர்.ஆர்.பாதம் 21 ரன்களையும் எடுக்க மொத்தம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 23 ரன்கள் வந்ததால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து சுருண்டது.

மேற்கிந்திய அணியில் ஜோசப் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பால் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பண்ட், ஜோசப் வீசிய பந்தை முன்னால் வந்து, அதாவது கிரீசிற்கு சற்றே வெளியே வந்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் கிரீசிற்குள் காலை வைக்கத் தவறியதால் விக்கெட் கீப்பர் இம்லாக் சாதுரியமாக பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் இதனால் விசித்திரமான முறையில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேரினார் பண்ட்.

அன்மல்பிரீத் சிங் 3 ரன்களில் ஜோசப்பின் எழும்பிய, ஸ்விங் ஆன பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷன் 4 ரன்களில், உள்ளே வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தை கோட்டை விட்டார், நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் ஜான் பந்து ஒன்று சற்றே நின்று வர இவரது டிரைவ் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ஸ்பிர்ங்கர் பந்தில் அர்மான் ஜாஃபர் 5 ரன்களில் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 50/5 என்று ஆனது.

சர்பராஸ் கான் 29 ரன்களில் ஆடிவர லோம்ரோர் 19 ரன்களில் ஹோல்டரின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 87/6 என்று ஆனது. இதன் பிறகு தனது ஏழாவது அரைசதம் கண்ட சர்பராஸ் கான், ஜான் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட எல்.பி.ஆனார். அதன் பிறகு மற்ற விக்கெட்டுகள் சோபிக்கவில்லை இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

காலிறுதி, அரையிறுதிகளில் கடினமான சூழலில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற மே.இ.தீவுகள், இந்த ரன் எண்ணிக்கையை எளிதாக விரட்ட முடியவில்லை, கார்ட்டி, பால் ஆகிய வீரர்கள் 77/5 என்ற நிலையிலிருந்து 19 வயதுக்குட்பட்ட வீர்ர்களிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் மன உறுதியையும், நல்ல உத்தியையும், பொறுமையையும் கொண்டு வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆடி உலக சாம்பியன்களாக்கியது சரிவுறும் மே.தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய உத்வேகத்தை நிச்சயமாக அளிக்கும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article8236893.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.