Jump to content

நாவல்: ‘விடமேறிய கனவு’


Recommended Posts

novel_2646905f.jpg
 

நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன்.

ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள்.

ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்க்கை ஊசலாடுகிறது, ராணுவத்துக்கும் புலனாய்வு அமைப்பினருக்கும் இடையே பந்தாடப்படுகிறது. இயற்பெயரையும் இயக்கப் பெயரையும் மாற்றிச் சொல்லித் தப்பிக்க முயல்கிறார்கள். ஒற்றராய் இருக்கக்கூடுமோ என்று தங்களவர்களையே சந்தேகிக்கவும் செய்கிறார்கள்.

எந்த நொடியிலும் மரணம் நிகழக்கூடும் என்றறிந்த பிறகு, மனித மனம் மரணத்தைத் தடுத்துவிட, குறைந்தபட்சம் அதைத் தள்ளிப்போட்டுவிட வாய்ப்புள்ள வழிகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஏதோவொன்றைக் கைக்கொள்ளத் துடிக்கிறது. அதே நேரத்தில், எதிர் நிற்கும் மரணம் தம்மை ஆட்கொண்டு விடுவதற் குள், வாழ்வின் இனிமையையும் துயரையும் உணர்த்திய சகல நினைவுகளையும் மீட்டெடுத்துப் பார்த்துவிடவும் விழை கிறது. விரும்பி ஏற்றுக்கொண்ட மரணம்தான் என்றபோது கலங்காது உவகை கொண்டிருந்த மனம், மரணம் நெருங்கி வரும்போது மாறிநிற்கிறது. எதை அடைவதற்காக உயிரை விலை கொடுக்கும் துணிவு பிறந்ததோ அது கனவாகவே கரைந்துவிட்டது. இப்போது எஞ்சி நிற்பது உயிர் மட்டும்தான்.

இனிமேல் அடைய வாய்ப்பே இல்லாத லட்சியத்திற்காக உயிரை விடுவது விவேகமல்ல. எனினும் இதுவரை பேணிவந்த அறத்தை உயிரின் பொருட்டு இழப்பதிலும் உடன்பாடில்லை. இவ்விரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையிலான போராட்டம்தான் இந்த நாவலின் மையம்.

குணா கவியழகனின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான ‘நஞ்சுண்ட காடு’, விடுதலைக்காகக் கூடுதல் விலை கொடுப்பதே தோல்விதான் என்று முன்னறிவித்தது. இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’, போரின் முடிவு சர்வ நிச்சயமாகப் போராளிகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்ட பிறகும் ஏன் அவர்கள் தொடர்ந்து களத்தில் நின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி, பதிலைத் தேடுகிறது. இந்தப் பதில் அரசியல்ரீதியானதல்ல. மாறாக, தனிமனிதனின் ஆழ்மனதில் குமிழியிடும் நுண்ணுணர்ச்சிகளின் ஆதாரத்தைப் பற்றிய விசாரணை. அதுவே இந்நாவலைப் போர் இலக்கியம் என்பதையும் தாண்டித் தனித்துவம் கொண்ட நாவலாக வெற்றிபெறச் செய்திருக்கிறது.

ஒரே எடுப்பில் படித்து முடித்துவிடுகிற வகையில் மிகச் சரளமான நடை. எனினும் பக்கங் களைப் புரட்டிப் போக நாம் கல்நெஞ்சினராக இருந்தால் மட்டுமே முடியும். நாவல் முழுவதும் தனக்குத்தானே கீறி மருந்திட்டுக்கொள்ளும் துயருற்ற நெஞ்சத்தின் சுய எள்ளலின் கரிப்புச்சுவை இழையோடி நிற்கிறது.

விடமேறிய கனவு

குணா கவியழகன்

வெளியீடு: அகல், ராயப்பேட்டை சென்னை-14

தொலைபேசி: 98843 22398

பக்கங்கள்: 256 விலை: ரூ.240

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%

 

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குணா. கவியழகனின் "விடமேறிய கனவு" நாவலை அண்மையில் படித்தேன். புனர்வாழ்வு எனும் போர்வையில் தடுப்பு முகாம்களிலும், இரகசியச் சிறைகளிலும் நடந்த அனுபவங்களோடு போரில் தோற்றதை நம்பமுடியாத போராளிகளின் மனநிலையையும் படம் பிடித்துக்காட்டியது.

இதனை வாசித்த இன்னொரு யாழ்கள உறவு முகாம் அனுபவங்கள் சலிப்பைத் தந்ததாக எழுதியிருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

வீரர்களாக இருந்தவர்கள், இயக்கம் அழிந்த பின்னர் நடத்தப்பட்ட நிலையை நம்பும் மனநிலை பலருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படியானவர்கள் இந்நாவலை வாசிக்க விரும்பமாட்டார்கள்.

..........

 

 

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

பாவண்ணன்

முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது தன்வசம் இருக்கும் அதிகாரத்தை இழந்துவிடும்போதோ, அனைத்தும் தோல்வியின் வரலாறாக மாறிவிடும். உலகம் உருவான காலத்திலிருந்து மீண்டும்மீண்டும் நிகழும் மாறாத உண்மை இது.
வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அரசியல்வழிகளையும் கலைவழிகளையும் கற்றுத் தேர்ந்தால்மட்டுமே ஓரளவு சமநிலையான சித்திரத்தைக் கண்டடைய முடியும். அரசியல் கொள்கைகளால் ஆனவை. கலைகள் மனஎழுச்சிகளால் உருவானவை.
சேரசோழபாண்டியர்களின் வீரத்தையும் வெற்றியையும் பற்றிய ஏராளமான சித்திரங்கள் சங்ககாலச் செய்யுள்களில் தீட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஆட்சிமுறையைப்பற்றிய தகவல்கள், இன்று கண்டெடுக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுகளில் அடங்கியுள்ளன. இவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்னும் பாடலை எப்படி மறக்கமுடியும். எல்லா அறங்களையும் மீறி, தன்னைவிட மிகமிகச்சிறிய ஒரு வேளிர்குலத்தவன்மீது மூவராக இணைந்து போரிட்டுக் கொன்றழித்த கொடுமையின் கண்ணீர்க்கதையை அப்பாடல் முன்வைக்கிறது. எது மூவேந்தர்களின் உண்மையான முகம்? முன்சொன்ன தகவல்களிலிருந்து திரண்டெழும் முகமா? பாரிமகளிரின் கண்ணீர்க்கதையிலிருந்து திரண்டெழும் முகமா? இரண்டுமே உண்மை. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல.
நாம் அனைவரும் சாட்சியாக நின்று பார்க்க, ஓர் இன அழிப்புப்போரை நிகழ்த்திமுடித்துவிட்டது இலங்கை அரசு. நம் சகோதரர்கள் லட்சக்கணக்கில் மாண்டுபோனார்கள். இலங்கை அரசின் தாகம் அப்போதும் அடங்கவில்லை. போர்த்தருணங்களில் கைதிகளாக பிடித்தவர்களையும் அடைக்கலமாக வந்தவர்களையும் வேலிமுகாம், கண்காணிப்பு முகாம், மறுவாழ்வு முகாம், சீர்திருத்த முகாம் என வெவ்வேறு பெயர்களில் ஆண்டுக்கணக்கில் அடைத்தும் வதைத்தும் சிறுகச்சிறுக கொன்றொழித்து தன் தாகத்தைத் தணித்துக்கொள்கிறது. இந்தப் பின்னணியில் விரிகிறது குணா.கவியழகனின் புதிய நாவலான ‘விடமுண்ட கனவு’. ஏற்கனவே ’நஞ்சுண்ட காடு’ நாவலை எழுதியவர். விசாரணைக்காக பிடித்துவரப்பட்டு முகாமில் அடைக்கப்பட்ட முன்னாள் போராளியான உருத்திரன், நேரடி விடுதலை என்பது வெறும் பொய்யுரை என்பதை அனுபவங்களால் உணர்ந்து, நண்பர்களுடன் திட்டம் தீட்டி தப்பித்துச் செல்லும் கதை.
உருத்திரன் அசைபோடும் பால்யகால நினைவுகள் வழியாக நாவலின் தொடக்கத்தில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. குழந்தைப்பள்ளியில் ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டில் தடுமாறி விழுந்து தோல்சிராய்ப்பால் ரத்தக்கசிவுடன் அழுகிறாள் ஒரு சிறுமி. அவளை அமைதிப்படுத்தி அழுகையை நிறுத்தி வகுப்புக்கு அழைத்துச் செல்கிறான் சிறுவனான உருத்திரன். தற்செயலாக அவர்களைக் காண்கிற ஆசிரியை அவள் அழுகைக்குக் காரணம் அவனே என பிழையாகப் புரிந்துகொண்டு அவன் கன்னத்தில் அடித்துவிடுகிறாள். ஆசிரியை முன்னால் உண்மையைச் சொல்லாத சிறுமி, தனிமையில் அவனுக்கு சாக்லெட்டுகள் கொடுத்து ஆறுதல் சொல்கிறாள். அவள் மனத்தில் தன்னைப்பற்றி உருவாகும் முக்கியத்துவத்தை அவன் மனம் விரும்புகிறது. ஆசிரியையிடம் வாங்கிய அடிகளையும் வசைகளையும் அந்த முக்கியத்துவம் மறக்கவைத்துவிடுகிறது. இப்படி பள்ளிவாழ்விலும் சமூகவாழ்விலும் பல அனுபவங்கள். தனக்கு அருகில் இருப்பவர்களை ஆறுதல்படுத்த, அவர்களுக்கு துணையாக நிற்க, அவர்களைக் காப்பாற்ற என பல காரணங்களுக்காக அடிகளும் வசைகளும் பெற்று, அந்தந்தத் தருணங்கள் வழங்கிய முக்கியத்துவங்களில் திளைத்த இளமையனுபவங்கள் கொஞ்சம்கொஞ்சமாக நாட்டைக் காக்கும் போராட்டத்துடன் அவனை இணைத்துவிடுகின்றன.
விசாரணைமுகாம்களின் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் மனத்தை நடுங்கவைக்கின்றன. தந்திரமான கேள்விகளை மாற்றிமாற்றிக் கேட்டுக் குழப்பி, சொல்லப்படும் பதில்களை ஆய்ந்து, வாய்தவறி விழுந்துவிடும் ஏதேனும் ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு அடித்தும் உதைத்தும் துப்பாக்கியால் மிரட்டியும் மேலும்மேலும் சொல்லென வதைக்கும் விசாரணைமுறைகள் மனமுருகும் வகையில் தீட்டப்பட்டுள்ளன. காவலர்களின் அடிகளால் கைகளும் கால்களும் உடைந்தவர்களாகவும் உடல்காயங்களால் அவதிப்படுகிறவர்களுமே சிறைக்கொட்டடிகளில் நிறைந்திருக்கிறார்கள். சிறுநீர் கழிக்க இயலாமல் வயிற்றுவலியால் துடிப்பவனை நடிப்பதாகச் சொல்லிப் புறக்கணித்து மரணமடைய வைத்துவிடுகிறார்கள். மருத்துவமனைக்கோ, அடுத்தகட்ட விசாரணைக்கோ அழைத்துச் செல்லப்படும் மனிதர்கள் ஒருபோதும் அறைகளுக்குத் திரும்பி வருவதில்லை. பதிவே இல்லாமல் அவர்கள் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். மரணம் ஒரு தினசரிக் காட்சியாக நகர்ந்துபோகிறது.
ஒவ்வொரு நாளும் குடிதண்ணீர் பாட்டில்களும் உணவுப்பொருட்களும் அவர்களைநோக்கி வீசியெறியப்படுகின்றன. சுகாதாரமற்ற அறைகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். பத்து பேர்கள் தங்கும் அறையில் ஐம்பது பேர்கள். எப்போதும் நிரம்பிவழிந்து துர்நாற்றமடிக்கும் கழிப்பறைகள். செத்துப்போன பிரபாகரனின் உருவப்படத்தைக் காட்டி அடையாளம் தெரிகிறதா என தந்திரமாகக் கேட்டு, மாறும் முக உணர்வுகளை உற்றுக் கவனித்து, அதற்குத் தகுந்தபடி தண்டனைமுறைகளை மாற்றும் தந்திரத்துக்கு சிறையில் உள்ள அனைவருமே பலியாகிறார்கள். இயக்கத்துடன் எவ்விதமான தொடர்புமற்றவர்கள் எப்படியாவது உயிர்பிழைத்து வெளியே போனால் போதும் என்று விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள். இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் தம் தொடர்பு விவரங்களை குறைத்தும் மாற்றியும் சொல்லி விடுதலைக்கான வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். பிழைத்திருக்கவேண்டும், உலகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் உயிர்த்திருக்கும் சொந்தபந்தங்களை என்றேனும் ஒருநாள் சந்தித்து ஒன்றுசேர்ந்துவிடவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் கனவுகளில் திளைத்திருக்கிறார்கள். அதன்பொருட்டு ஆபாசமான வசைகளையும் அடிஉதைகளையும் துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்கிறார்கள். ராசு அண்ணர், சுரேன், சஞ்சயன், வர்மன், ரகு, பசீலண்ணை, சீலன், ஜீவா, வெடி பாலன் என ஒரு சிலருக்கு முகமும் பேரும் கொடுத்து நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார் கவியழகன். வதைபடும் லட்சக்கணக்கான மனிதர்களின் அடையாளமாகவே அவர்களை நினைக்கத் தோன்றுகிறது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என நாவலின் பிரதான பாத்திரமான உருத்திரன் அசைபோடும் வரிகள் முன்வைக்கும் ஒரு கேள்வி நாவலின் மையத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் ஒரு வழியாக விரிகிறது. விடுதலை இயக்கம் ஏன் தோற்றது என மாறிமாறி நண்பர்கள் தமக்குள் விவாதித்துக்கொள்ளும் அத்தியாயம் நாவலில் முக்கியமான ஒரு பகுதி. எல்லாவிதமான தரப்புகளையும் இந்த அத்தியாயம் தொகுத்து முன்வைத்திருக்கிறது. ”இயக்கம் என்பது வீட்டைப் பாதுகாக்கும் என்பதற்காகத்தான் நாட்டுக்காக போராளியானோம். ஆனால் கட்டாய ராணுவச்சேவை என்னும் பெயரில் வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் அழைத்துச்சென்ற இயக்கம் எவ்விதமான பயிற்சியுமின்றி அவர்களை போர்முனையில் நிறுத்தி உயிர்துறக்கவைத்துவிட்டது. இயக்கத்தாலேயே வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி களத்தில் போரிடமுடியும்?” என்னும் கேள்வி ஒரு தரப்பு. “போதிய ஆயுதங்களும் ஆட்களும் இல்லாமல் சண்டையைத் தொடங்கியிருக்கக்கூடாது” என்பது மற்றொரு தரப்பு. “நாம் பாதுகாப்புச் சண்டையிலேயே தொடர்ந்து நீடித்தது பெரிய பிழை. நாம் தாக்கும் சண்டையை நிகழ்த்தியிருக்கவேண்டும்” என்பது இன்னொரு தரப்பு. “பலம்தான் வெல்லும் பலம்தான் வெல்லும் என்று நொடிக்கொரு முறை சொல்லும் இயக்கம் நம்மைவிட ஆயிரம் மடங்கு பலமும் பல நாடுகளின் ஆதரவும் கொண்ட சிங்களப்படையை தவறாகக் கணித்தது பெரும்பிழை” என்பது மற்றுமொரு தரப்பு. ”போராட்டம் நியாயமானது. நான் நேர்மையானவன் என்ற எண்ணம் வந்துவிட்டால் நான் எடுக்கும் முடிவை மக்கள்மீது திணிக்க தயங்கவே மாட்டேன். என் நேர்மை மீது நான் கொள்ளும் கர்வம் இது. இது வந்தால் என் தீர்மானம் அவர்களுக்கானதுதானே என்னும் பெருமையுணர்வு தோன்றும். இது பிழையாக என்னை வழிநடத்தும்” என்பது பிறிதொரு தரப்பு. சிங்களக் களப்பணியாளரான றுவான் முற்றிலும் புதிதான ஒரு கோணத்தில் இன்னுமொரு தரப்பைக் கட்டியெழுப்புகிறார். “எப்போதெல்லாம் தெற்கில் சிங்கள அடித்தட்டு மக்கள் அதிகாரத்துக்கு எதிராக குரலெழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம் அதை தமிழர்களைநோக்கி திசைதிருப்புவதில் வெற்றிகொள்கிறது சிங்கள அரசாங்கம். அங்கு தமிழர்கள் நசுக்கப்படும்போது இங்கு சிங்களர்கள் நசுக்கப்படுகிறார்கள். ஆனால் அது செய்தியாகிறது. இது செய்தியாவதில்லை. போர் என்பதே அரசாங்கம் நிகழ்த்தும் ஒரு பெரிய நாடகம்” என்பது அவர் தரப்பு. கலைநேர்த்தி குன்றாமல் எல்லா விமர்சனங்களையும் கச்சிதமான உரையாடல்கள் வழியாக முன்வைத்திருக்கும் கவியழகன் பாராட்டுக்குரியவர்.
ராணுவத்தினர் அனைவரையும் ஒரே வார்ப்பாகக் காட்டவில்லை கவியழகன். வன்னிப்போருக்குப் பிறகு கைக்குக் கிடைத்த தமிழ்ப்பெண்களை கதறக்கதற இழுத்துச் சென்று இன்பம் துய்த்ததை கைப்பேசியில் படம்பிடித்துவைத்துகொண்டு, மதுவிருந்துக்குப் பிறகான இரவுகளில் மீண்டும்மீண்டும் பார்த்து ரசிக்கும் ராணுவத்தினனும் இந்த நாவலில் இடம்பெறுகிறான். மாற்றுமுகாம்களில் வசிக்கும் சொந்தபந்தங்களை வாரத்துக்கு இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசவும் முள்வேலிகளை அகற்றவும் கைதியின் மனைவியோடு கைப்பேசியில் தொடர்புகொண்டு படுக்க வருமாறு அழைப்பு விடுக்கும் போலீஸ்மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்யும் ராணுவத்தினனும் இடம்பெறுகிறான். இறுதிக்காட்சிகளில் கைதிகள் தப்பித்துச் செல்ல உதவும் ஒரு சிங்களப்பெண் போலீஸ்துறையைச் சேர்ந்தவள். பாதுகாப்பாக அவர்களை அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றிவிடுபவன் ஒரு சிங்கள ஆட்டோ டிரைவர். இறுதியாக, அவர்கள் அடைக்கலம் தேடிச் செல்வதுகூட ஒரு சிங்களப்போராளியின் வீட்டைநோக்கி.
கைதிகளில் மூத்தவரான ராசு அண்ணர் இடம்பெறும் காட்சிகள் நாவலின் முக்கியமான சித்தரிப்பு அடங்கிய பகுதியாகும். விவேகம் நிறைந்த அவருடைய பேச்சு எல்லோரையும் கவனிக்கவைக்கத் தூண்டும் தன்மை உடையது. சிங்கள மொழி அறிந்தவர் என்பதால் பல சமயங்களில் அவர் அதிகாரிகளுக்கும் விசாரணை மனிதர்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார். அவருடைய வாதம் ஒருசில நன்மைகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றுத் தருகிறது. இயக்கம் பற்றியும் போர் பற்றியும் அவருக்கும் விமர்சனம் இருக்கிறது. அதிகாரிகள்மீது அவரும் கோபமுற்றவராக இருக்கிறார். ஆயினும், எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டுவது தன் மரணத்தைத் தானே தேடிக்கொள்வதற்குச் சமம் என நினைக்கிறார். எவ்வகையிலேனும் உயிர்த்திருப்பதே இத்தருணத்தில் முக்கியம் என்பது அவர் எண்ணம். முகாமுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் இதையே அவர் திரும்பத்திரும்பச் சொல்லி அமைதிப்படுத்துகிறார். என்றேனும் ஒருநாள் காலத்தின் கட்டாயத்தால் விசாரணைமுகாம் நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. முகாமிலிருந்து தப்பித்துச் செல்பவர்களை அவர் தடுப்பதில்லை. அதே சமயத்தில் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்வதும் இல்லை.
கடுமையான துயரங்களுக்கு நடுவிலும் அவர் காட்டும் ஆழமான விவேகமும் அமைதியும் அவரை மிகப்பெரிய மனிதராக எண்ணவைக்கிறது. துயர்தோய்ந்த இரவுத் தருணங்களில் அவர் பாடும் பாடலைக் கேட்டு சிறைக்கொட்டடியில் எல்லோரும் ஆறுதல் கொள்கிறார்கள். ’தர்மம் ஒரு வாழ்வின் பொய்யோ- சூதே அதன் உள்ளின் மெய்யோ’ என்று தொடங்கும் அந்தப் பாடல் கண்ணீர் வரவழைப்பதாக உள்ளது. ’பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ- இல்லை பொய்யே விதிதானோ‘ என்பது சரணத்தில் இடம்பெறும் ஒரு வரி. பொய்க்காரணங்களுக்காக ஆண்டுக்கணக்கில் நிகழும் விசாரணைகளையும் அவற்றை மேலும்மேலும் நீட்டி உலகத்தை நம்பவைப்பதற்காக அரசாங்கம் கட்டியுரைக்கும் பொய்களையும் மெல்லமெல்ல உயிர்துறக்கும் மனிதர்களையும் தினசரி வரலாற்றுச்சம்பவமாக கையறுநிலையில் நின்றபடி பார்க்கும் நம் மனத்தில் அந்த வரிகள் ஏற்படும் அதிர்வுகள் அளவற்றவை. அதுவே நாவலின் வெற்றி.

(விடமேறிய கனவு. குணா கவியழகன். நாவல். அகல் வெளியீடு, 348-ஏ, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை- 14. விலை. ரூ.240)

http://puthu.thinnai.com/?p=30205

Link to comment
Share on other sites

  • 2 months later...

இன்றுதான் விடமேறிய கனவு படித்து முடித்தேன். முடித்த தறுவாயில் அறிவைக் கொன்று உள்ளிற்குள் ஒரு கிளர்ச்சி. வாகை மரத்தைப் புறோபைல் படமாக உள்வர்களைத் தேடி இணைந்து செயற்படவேண்டும் போன்று தோன்றியது. 

கனடாவின் குமரன் புத்தகசாலையில் 'நஞ்சுண்ட காடு' மற்றும் 'அப்பால் ஒரு நிலம்' கிடைக்கவில்லை. 'விடமேறிய கனவு' மட்டும் கிடைத்தது. விலை 21 டொலர்கள். நிச்சயமாக இந்த விலைக்கேற்ற பங்கு எழுத்தாளரிற்குச் சென்றடையாது என்றது வெறுப்பேற்றியது.

குணா கவியளகனின் நாவல்களை நேரடியாக அவரிடம் பணம் கொடுத்துப் பெறுவதற்கு ஏதாவது வளிகள் உள்ளனவா?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.