Jump to content

இந்தியத் தளபதியை எதிர்பார்த்து ஏமாந்த இராணுவத்தினர்! - கடும் மழையால் வடக்கிற்கான பயணம் ரத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹகின் வடமாகாணத்திற்கான இன்றைய  விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத் தளபதி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இராணுவத் தளபதி இரணைமடு வரை வந்ததாகவும், சீரற்ற காலநிலை காரணமாக விஜயத்தை இரத்து செய்ததாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹகின் வடமாகாணத்திற்கான இன்றைய விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத் தளபதி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இராணுவத் தளபதி இரணைமடு வரை வந்ததாகவும், சீரற்ற காலநிலை காரணமாக விஜயத்தை இரத்து செய்ததாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

   

இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கின் முல்லைத்தீவுக்கான இன்றைய பயணமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவரின் வருகைக்காக நேற்று புதுக்குடியிருப்பு பிரதேசம் எங்கும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. விடுதலைப்புலிகளை தேற்கடித்தபின் புதுக்குடியிருப்பு மந்துவிலில் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இராணுவ வெற்றி நினைவு தூபி வளாகத்தில் தான் மேற்படி சந்திப்பு நடைபெற இருந்தது. அதற்காக இராணுவத்தினர் இரவுபகலாக மேடைகள் அமைத்து அலங்காரம் செய்திருந்தனர்.

எனினும் காலையில் ஏற்பட்ட தொடர் மழையினால் குறித்த வளாகம் வெள்ளத்தில் முழ்கியது. அதனால் நிகழ்வு தடைப்பட்டது. குறித்த வளாகத்தில் விடுதலைப்புலிகளின் போர் தளபாடங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

nallur-army-011215-seithy%20(1).jpg

 

 

nallur-army-011215-seithy%20(2).jpg

 

 

nallur-army-011215-seithy%20(3).jpg

 

 

nallur-army-011215-seithy%20(4).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=146042&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்ச உடன சிங்கள இராணுவம் வரும்.. நாங்க கண்ட யாழ்ப்பாணம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

நினைச்ச உடன சிங்கள இராணுவம் வரும்.. நாங்க கண்ட யாழ்ப்பாணம். :rolleyes:

அவையள் அங்க தானே இருக்கினம் ....பிறகு என்ன வாரது....அவையள் மக்களோடு மக்களாக இருக்கினம்  ....ஆயுதத்தை மெளனித்து வைச்சிருப்பினம்....தேவை ஏற்படின் ஆயுதத்தை சத்தம் போடவைப்பினம்.... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.