Jump to content

இலங்கையில் எச்ஐவி தொற்று தொடர்ந்து அதிகரிக்கிறது


Recommended Posts

இலங்கையில் எச்ஐவி தொற்று தொடர்ந்து அதிகரிக்கிறது

                      எச் ஐ வி தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

 எச் ஐ வி தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொற்றுநோய்த் தடுப்பு திட்ட இயக்குநர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அனைத்துலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் எச். ஐ. வி தொற்றுக்குள்ளான 4 பேர் ரத்தப்பரிசோதனைகளின் மூலம் புதிதாக அடையாளம் காணப்படுவதாகவும் ஆனால் வாரமொன்றுக்கு மேலும் 5 பேர் பரிசோதனைகள் மூலம் தம் நோய்த்தாக்குதலை இனம் காண முன்வருவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 3600 பேர் வரை எச். ஐ. வி தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாகவும், ஆனால் அவர்களில் 2241 பேர் மட்டுமே உரிய மருத்துவ பரிசோதனைகள் மூலம் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் எச் ஐ வி தொற்றுக்குள்ளனவர்களில் பலரும் ரத்தப்பரிசோதனை செய்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

1986 முதல் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 587 எயிட்ஸ் நோயாளர்களில் 357 பேர் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அமைச்சின் பாலியல் தொற்றுநோய்த் தடுப்புதிட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாவட்டரீதியாக கொழும்பு மாவட்டத்தில் கூடுதலான எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் சிசிர லியனகே, தற்போதைய சுமூகநிலை காரணமாக வடகிழக்கு மாகாணங்களிலிருந்தும் எச் ஐ வி தொற்று தொடர்பான விவரங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்களை பாதுகாப்பதற்காக இலவச ரத்தப்பரிசோதனை, மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் 1986ஆம் ஆண்டு முதலாவது எயிட்ஸ் நோயாளியாக வெளிநாட்டவரொருவர் அடையாளம் காணப்பட்டார். 1987ஆம் ஆண்டு இலங்கையரொருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151201_hiv

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச் ஐ வி தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

சரியான ஆக்களிடம் தான் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த சொறீலங்கா குப்பாடி இராணுவம் தான் எச் ஐ வி பெருக்கத்திற்கு முக்கியகாரணம். அது விபச்சாரிகளையும்.. பாலியல்வன்புணர்வை ஒரு ஆயுதமாகவும் பாவிப்பதால். 

Link to comment
Share on other sites

இலங்கையில் முதலாவதாக எயிட்ஸ்நோய் வந்து இறந்தவர் பிரான்ஸில் இருந்து சென்ற புலம்பெயர் யாழ்ப்பாணத்து தமிழன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெயிட்டில் இருந்து எயிடஸ் நோயோடு போன உலகின் முதலாவது இராணுவம் என்றால் அது சொறீலங்கா இராணுவமே ஆகும். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.