Jump to content

சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் புதிய தரப்படுத்தல்


Recommended Posts

சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் புதிய தரப்படுத்தல் print.png
 
 
 
 
சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் நேற்று புதிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, டெஸ்ட் போட்டிகளின் துடுப்பாட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் இருவர் முதலாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் , மற்றும் அவுஸ்ரேலியாவின் ஸ்டிவன் சுமித் ஆகியோர் 886 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் ஏ.பி.டி விலியர்ஸ் நூறாவது போட்டியில் பங்குகொள்ளும் போது முதலிடத்தில் இருந்த போதிலும், தற்போது அவர் அந்த முதலிடத்தை இழந்துள்ளார்.

புதிய பட்டியலின் படி, டி விலியர்ஸ் மூன்றாம் இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை வீரர் அஞ்சலோ மத்தியூஸ் 6ஆம் இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே, பந்து வீச்சாளர்கள் தரப்படுத்தலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் தடவையாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இது தரவரிசையில் அவர் பெற்றுக்கொள்ளும் தனிப்பட்ட சிறந்த பெறுபேறாக அமைகின்றது. இந்த பட்டியலில் டேல் ஸ்டேன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 8 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், டெஸ்ட் சகல துறை வீரர்கள் பட்டியலில் பங்களாதேஸ் அணி வீரர் சகிபுல் ஹசன் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடிப்படை சம்பளமே அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
    • ஒரு பொய்யை மறைக்க இன்னொரு புரட்டு. ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது.  கூறப்பட்டது புரட்டு என்றாலும், அதில் அன்றிருந்த தமிழரசுக் கட்சி மீதான காழ்ப்புணர்வு கொட்டிக் கிடக்கிறது.  ஆக, தமிழர் கண்ட ஜனநாயகவழி அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான தந்தை செல்வா அன்று ஆரம்பித்த கட்சியும், அதன் செயற்பாடுகளும் உணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்ற முடிவிற்கு வந்தாயிற்று. அன்றிருந்த தமிழர்களுக்க்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் செல்வா. அவரது அரசியலே தவறு என்றால், இக்கருத்தாளர் அன்று எந்தப் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. 
    • என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................
    • சீமான் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌ண்டை காய் அவ‌ருக்கு அர‌சிய‌ல் எப்ப‌டி  செய்ய‌னும் என்று ந‌ங்கு தெரியும் திராவிட‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ல‌ குறுக்க‌ ம‌றுக்க‌ ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டாலும் ச‌ரியான‌ ப‌திலை சொல்ல‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் சீமான்  உங்க‌ளால் அப்ப‌டி ப‌தில் முடியாது?    2009க்கு முத‌ல் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் உங்க‌ளுக்கும்  எந்த‌ வித தொட‌ர்வும் இல்லை என்று உங்க‌ள் எழுத்தே காட்டி கொடுக்கு...................2008க‌ளில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரையும் தூற்றின  ந‌ப‌வ‌ர்க‌ள் சில‌ர் இருந்த‌ன‌ர்  ...........................அவ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ராய் இருக்க‌ கூடும் என்று நினைக்கிறேன் ............................இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என்று கேட்டேன் ஆனால் நீங்க‌ள் மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ போதே தெரிந்து விட்ட‌து நீங்க‌ள் ப‌ழைய‌ காய் என்று............................த‌மிழ் இன‌த்தின் ச‌பாக் கேடு ஒரு த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ந்தால் ம‌ற்ற‌ த‌மிழ‌னுக்கு பிடிக்காது................................ ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி இப்ப‌ யார் கூட‌ இருக்கிறார் க‌ந்தையா அண்ணா😏....................................................  
    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும்.  தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல.. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.