Jump to content

மாவீரர் நினைவேந்தல்: சொல்லாத செய்திகள்


Recommended Posts

மாவீரர் நினைவேந்தல்: சொல்லாத செய்திகள்
 
 

article_1448944411-thei.jpgதெய்வீகன்

மாவீரர் வாரம்; உலகெங்கும் இம்முறையும் எழுச்சியுடன் அனுஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தில் அதற்கான தடைகள் அறிவிக்கப்பட்டபோதும் அவற்றையும் மீறி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

 கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் 'மாலை 06.05 மணிக்கு விளக்கேற்றுங்கள்' என்று தலைப்பு செய்தியுடன் ஐந்து முழுப்பக்கங்களில் மாவீரர்நாள் சிறப்பு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியிடுமளவுக்கு - 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் - மிகவும் எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.

 நல்லாட்சி, நல்லிணக்கம் போன்ற ஆபரண சொற்களால் என்னதான் தங்கள் பௌத்த தேசியவாத சிந்தனைகளை மறைத்துக்கொண்டாலும் சிங்கள ஆட்சி இயந்திரம் எனப்படுவது அடிப்படையில் மனமாற்றம் அடையாத பழைய அச்சாணியில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு மாவீரர் வாரம் குறித்த அதன் மனக்கிலேசமே மிகச்சிறந்த சான்றாகியுள்ளது.

 சுமந்திரன் பொப்பி மலர் அணிந்தாலென்ன கூட்டமைப்பின் ஏனையோர் நாடாளுமன்றில் நேசக்கரம் - பாசக்கரம் என்று எந்த கையை நீட்டினாலென்ன சிங்கள ஆட்சியாளர்களின் அடிப்படைசிந்தனை மாற்றம் என்பது தோற்றம் பெறுவதற்கு இன்னும் கனகாலம் உள்ளது என்பதைத்தான் இம்முறை மாவீரர்தினமும் கோடிட்டு காட்டியிருக்கிறது.

 மூன்று தசாப்த காலமாக போர் கனன்ற தமிழர் தேசம் ஆழமான காயங்களாலும் சமூக வடுக்களாலும் ஆறாத புண்களாலும் இன்னமும் சீழ் சிந்திக்கொண்டிருப்பதை எல்லோரும் அறிவர். முக்கியமாக அந்த மக்களுடன் நல்லிணக்கம் பேசப்போவதாக கூறி அவர்களின் ஆதரவை பெற்று ஆட்சி பீட மேறிய நல்லாட்சி அரசு நன்றாகவே அறியும்.

 ஆனால், காயத்துடனிருப்பவர்கள் நேசக்கரம் நீட்டும்போதுகூட காயப்படுத்தியவர்கள் இன்னமும் மாறாத நிலையுடன் காணப்படுவது இந்த ஒட்டுமொத்த நல்லாட்சி படலத்தில் உள்ள பெரிய ஓட்டையைத்தான் வெளிக்காட்டிநிற்கிறது.

 சிங்கள தேசத்தின் மாறாத மனநிலை இப்படியிருக்க, தமிழ் மக்கள் தமது நெஞ்சங்களில் பூஜிக்கும் மாவீரர்கள் குறித்து எவ்வாறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான வித்தியாசமான பரப்பினை ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கம்.

 மாவீரர்களை தமிழ் மக்கள் இனிவரும் காலங்களில் தீப வெளிச்சத்தில் பார்த்து நீர் சொரிந்து போகும் தேசபக்தர்களாக மட்டும் பார்த்துவிட்டு போகப்போகிறார்களா? இல்லை. ஈழத்தமிழினத்தின் ஆதார பண்புகளில் ஒன்றாக கூர்மையடைந்த மாவீரர்களது அர்ப்பணிப்பு-தியாகம் போன்றவற்றை சரியான பாதையில் அடுத்த தலைமுறையிடமும் கையளிக்கும் பொறுப்புடன் பயணிக்கிறார்களா?

 அதற்கான அவசியம் வந்துவிட்டதை அவர்கள் உணர்ந்துள்ளார்களா?

 ஈழத்தமிழினம் ஏவ்வாறு தனக்கென்ற தனியான தேசம், மொழி, பண்பாடு போன்ற சிறப்பான தேசிய பண்புகளை வெளிப்படுத்தி நிற்கிறதோ அதேபோல பெருமை கொள்ளக்கூடிய மாவீரர்களையும் அவர்களது அர்ப்பணிப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது அந்த இனத்துக்கு கிடைத்த பெரும் கௌரவம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 இந்த யுகத்துடன் தமிழ் இனத்தின் இன்னொரு தனிக்கூறாக இணைத்துக்கொள்ளப்படவேண்டிய மாவீரரின் தியாக வரலாறெனப்படுவது வருங்காலத்தில் போற்றப்படும் ஒப்பற்ற பெருமையாக பார்க்கப்படவுள்ளது.

 ஒரு புனித லட்சியத்துக்காக தம்முயிரை ஈந்த இந்த மாவீரர்களின் மரணங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினரால் பலவாறு விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டாலும் -

 ஈழத்தமிழர்களை பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான அந்த இளைஞர்களின் மரணங்கள் எனப்படுவது என்றைக்குமே போராட்டத்தினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இனத்தின் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயரிய அர்ப்பணிப்பு.

 கடைசி ஈழத் தமிழனின் மூச்சடங்கும்வரை இந்த இளைஞர்களின் மரணங்கள் சமரசம் செய்யப்படமுடியாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே மிளிர்ந்துகொண்டிருக்கப்போகின்றன.

 ஆனால், மாறிவரும் உலக ஒழுங்குகளின் முன்னால் - வல்லரசுகளின் பிரபஞ்ச பொதுவிதிகளுக்கு முன்னால் - இந்த தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் தனித்தனி அளவீடுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. தமக்கேற்ற சட்டம் ஒன்றை சிருஷ்டிப்பதற்காக தயவு தாட்சண்யம் இன்றி எல்லோரையும் களுமரமேற்றி தண்டிப்பதுதான் உலக பொலிஸ்காரர்களின் பொதுவான பாணி.

 இந்த விதிகளின் முன்னால் ஈழத் தமிழினத்தின் விடிவுக்காக உயிர்துறந்த மாவீரர்களும் அவர்களின் அர்ப்பணிப்புக்களும் ஏன் அவர்களுக்கு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகளும்கூட எதிர்காலத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை வரலாம்.

 ஒரே மாதிரியான போராட்ட பாணிகளை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களை அழித்தொழிப்பதே கொள்கையாக கொண்டியங்கி, வல்லரசுகளுக்கு வலிகளை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டியங்கும் பயங்கரவாத இயக்கங்கள் இன்று உலகெங்கும் புற்றெடுத்துப்போயுள்ளன.

 இந்த அமைப்புக்களை அழித்தொழிப்பதற்கு இன்று உலகமே கங்கணம் கட்டிநிற்கிறது. இந்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் தங்களை போராளிகள் என்றும் தாங்கள் மேற்கொள்வது புனிதப்போர் என்றும் இதில் இறந்த தங்கள் உறுப்பினர்களை மாவீரர்கள் என்றே அறிவித்து வருகிறார்கள்.

 இந்த புள்ளியில்தான் பல கேள்விகள் எழுகின்றன.

 1)     ஈழத்தமிழினத்துக்காக உயிர்துறந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பை புனிதமாக பதிவுசெய்துள்ள நிகழ்காலம் அடுத்த தலைமுறைக்கு அதே கனதியுடன் கைமாறுவதற்கு பொறுப்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

 2)     இன்றைய தலைமுறையினர் போரின் கோர முகத்தினை நேரடியாக தரிசித்தவர்கள். அதனை எதிர்த்து களமாடிய மாவீரர்களையும் அவர்களது அர்ப்பணிப்புக்களையும் உணர்பூர்வமாக உள்வாங்கிக்கொள்வதில் அவர்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இது ஒரு வீரகாவியமாகவே கைமாறப்படப்போகிறது. அவர்கள் இதனை தொடர்ந்தும் அதே வீச்சுடன் ஏற்றுக்கொள்வார்களா?

 3)     எல்லா போராளிகளையும் பயங்கரவாதிகளாக கருதும் எதிர்கால உலக ஒழுங்கின் மீது பயணிக்கப்போகும் எமது அடுத்த தலைமுறையினர் - பெரும்பாலும் தாயகத்துக்கு வெளியே - ஏனைய இனத்தவர்களுடன் மாவீரர்களின் பெருமைகளை பேசும்போது எவ்வாறு துணிவாக தங்கள் நாயகர்களை புனிதர்களாக வேறுபடுத்தி காண்பிக்கப்போகிறார்கள்? அதனை தீர்க்கதரிசனத்துடன் அணுகிய நடவடிக்கைகள் ஏதாவது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

 தலைமுறை விளிம்புகளில் விவாதிக்கப்படவேண்டிய மிகத்தேவையான பேசுபொருட்கள்தான் இவை.

 இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் தாயகத்தில் காண்பித்த கனதியும் புலம்பெயர்ந்த மண்ணில் காண்பித்த காத்திரமும் எவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தன என்பதை முன்பு விரிவாக பேசியிருந்தோம்.

 விடுதலைப்புலிகள் அமைப்பை பல நாடுகளின் உதவியுடன் அழித்தொழித்தது சிறிலங்கா அரசு. ஆனால், இன்று அந்த சிறிலங்காவில் மட்டுமல்லாமல் அழிவுக்கு கரம்கொடுத்த அதே வெளிநாடுகளிலும் அலையென திரண்ட மக்கள் அந்த அமைப்பின் மாவீரர்களுக்கு தமது மனப்பூர்வமான ஆதரவையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர். சர்வதேச சதியிற்கும் மக்கள் சக்திக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக கோடு கிழித்துக் காண்பித்திருக்கும் இடம் இதுதான்.

 ஆனால், இந்த ஒருமித்த பலம் தொடரும் என்றோ தொடர்ந்தாலும் அந்த தளத்தில் மாவீரர்களின் அர்ப்பணிப்புக்கு தொடர்ந்து அங்கிகாரம் கிடைத்துவிடும் என்றோ அவ்வாறான சொந்த மக்களின் அங்கிகாரத்துக்குக்கூட தொடர்ச்சியான சர்வதேச அனுமதிகள் கிடைத்துவிடும் என்று எண்ணுதல் தவறு.

 அப்படியானால், ஒட்டுமொத்தமாக தமிழினமும் இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?

 இத்துணை ஆகுதியாகிய பெரும் சேனையொன்றின் தியாகவரலாற்றை சர்வதேச மயப்படுத்தும் ஆவணங்கள் வேற்று மொழிகளிலும் பல்லினத்தவர்களையும் சென்றடையும் நுண்ணிய கலைப்படைப்புக்களாகவும் தோற்றம் பெறவேண்டும்.

வரலாற்று நூல்கள் மாத்திரம் உண்மைகளை ஊடுருவி சொல்லிவிடுவதில் வெற்றி காண்பதில்லை. கவர்ச்சியான படைப்புக்களும் வித்தியாசங்களை உணரவைக்கும் பார்வைகளும்தான் எளிதில் சர்வதேசமயமாகிவிடும் தன்மை கொண்;டவை.

 மாவீரர் மாண்மியங்கள் இவ்வகையான மார்க்கங்களின் ஊடாக பேசப்படவேண்டும். இதுவரை தொட்டிராத வித்தியாசமான கோணங்களின் ஊடாக உலகுடன் உரையாடவேண்டும். அதற்கான தகுதியை அடுத்த தலைமுறைக்கு வழங்கி வழிகாட்டுவதில் நிகழ்காலம் வெற்றிபெறவேண்டும்.

 கடந்த மாவீரர் தினத்தன்று - நவம்பர் 27ஆம் திகதி - ஈழத் தமிழ் பாடகி மாயா அருள்பிரகாசம் எனும் உலகப்புகழ் பாடகி தனது புதிய பாடலை வெளியிட்டுவைத்தார். ஐரோப்பாவை தற்போது பி;டரியில் பிடித்து உலுப்புகின்ற அகதிகளை பிரச்சினையை முன்னால் வைத்து, தான் அகதியாக நாட்டை விட்டு பிரிந்து வந்த வலிகளை வித்தியாசமான அலைவரிசையில் கேட்பவர்களுடன் உரையாடும் அற்புதமான பாணியை அவர் கையாண்டிருப்பது உண்மையில் அற்புதம். அந்த பாடல் வெளிவந்த தினமும் இன்னொரு செய்தியை தன்னகத்தே கொணடிருக்கிறது.

 பாடல் வெளியாகி மூன்று நாட்களிலேயே யூ ட்யூபில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பாடலை பார்வையிட்டிருக்கிறார்கள்.

 இவ்வாறான முயற்சிகளில் அடுத்த தலைமுறையினர் பரிபாலனமடையும்போது - மாவீரரது பெருமையையும் - அவர்களை ஏன் தமிழினம் பூஜிக்கிறது என்பதையும் - அவர்கள் ஏன் புனிதமானவர்கள் என்பதையும் - அவர்களுடன் ஏன் தலைமுறை தலைமுறையாக மக்கள் ஆத்மார்த்தமாக இணைந்திருக்கிறார்கள் என்பதையும் வௌ;வேறான ஆவணங்களில் உலகம் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அவற்றின் தொடர்ச்சியாக அவர்களின் வரலாறுகள் உலகின் உள்ளங்களிலும் கரைந்துகொள்ளும்.

 இது மட்டுமே பலமானதும் வளமானதும் முயற்சி - பாதை என்று இந்த பத்தி வாதிட முயற்சிக்கவில்லை. ஆனால், இது போன்ற முயற்சிக்கான களம் வெற்றிடமாகவுள்ளது என்பதையும் அதற்கான அவசியம் பற்றியுமே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

 இன்று ஈழத் தமிழினத்திற்காக போராட புறப்பட்ட ஒரு மாவீரன் போராட்ட வரலாறாவது அல்லது அவனது வாழ்க்கை குறிப்பாவது வேறு மொழியில் வெளிவந்ததாக எந்த அடையாளமும் இல்லை. போர் இலக்கியங்களின் வரட்சிநிலை சற்று தணிந்து இப்போது போர் முடிந்து ஆறு வருடங்களின் பின்னர் தமிழில் பல நூல்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது செழுமையான விடயம். ஆனால், வேற்று மொழிகளிலும் வேற்று படைப்பு ஊடகங்களிலும் இது விசாலம் பெறவேண்டும்.

உலகின் அனுதாப வேர்களையும் அக்கறை கண்களையும் சென்றடையும் வண்ணம் தமிழர்களது போராட்ட வரலாறுகள் பரந்து விரிந்து பேசப்படவேண்டும். அவற்றின் நாயகர்களாக மாவீரர்களது பெருமைகள் உரையாடப்படவேண்டும். அதன் ஊடாக தமிழர்களது போராட்ட நியாயங்களும் தர்க்கிக்கப்படவேண்டும். இவற்றுக்கான பொதுவெளியில் தமிழினம் தயாராக உள்ளதா?

- See more at: http://www.tamilmirror.lk/160341/%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-#sthash.ZO6tBvDU.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.