Jump to content

அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா?

12239665_966263603437898_482537164423530
படம் | Selvaraja Rajasegar Photo

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன.

பலப் பேராட்டங்கள் அரசியல்வாதிகள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளால் கைவிடப்பட்டன. பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை

முகாம் காவலாளிகளும் காடையர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவே 28 பேர் வரையிலானோர் கொல்லப்பட்டனர். அதேபோன்று 2012இல் வவுனியா சிறையின் அரசியல் கைதிகள் போராட்டம் தொடர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றியதோடு கொழும்பில் இருந்து சென்ற விசேட படைப்பிரிவினர் நடத்திய தாக்குதலால் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலால் அரசியல் சிறைக்கைதிகளான நிமலரூபன் மற்றும் தில்ருக்சன் போன்ற இருவரும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டங்களில் தமிழ்ப் பகுதியிலும் கொழும்பிலும் அரசியல் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய தமிழ் அமைச்சர் ஒருவரும் அப்போராட்டங்களில் கலந்துகொண்டு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார். ஊடகங்களில் அவர் துண்டு பிரசுரம் கொடுக்கும் காட்சி பதிவாகி வெளிவந்தது. அந்த எழுச்சிகளெல்லாம் பல்வேறு காரணங்களால் அடங்கி போய்விட்டன, அரசியல் கைதிகளும் மறக்கப்பட்டவர்களாயினர்.

ஆனால், வட மாகாண சபைத் தேர்தலின்போதும் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மீண்டும் சந்தைக்கு வந்தது. நல்லாட்சியென ஏமாந்தோர் வாக்குகளை அள்ளி வழங்கினர். தேர்தலில் தொடர்ந்து இணக்க அரசியலோடு ஒட்டிப்போனவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவியும் நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப் பதவியும் தாம்பலத்தில் வைத்து கொடுக்கப்பட்டது (தாம்பலத்திற்கு அடியில் அரசியல் கைவிளங்கு இருந்ததை தமிழ் மக்கள் உணர்ந்திருந்தனர்). அதனை வீழ்ந்து வணங்கிப் பெற்றுக்கொண்டதோடு தமிழ் அரசியல் விவகாரம் உத்தியோகபூர்வமாக வீழச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தேவையான சந்தர்ப்பத்தில் மீண்டும் எடுக்க அரசியல் பெட்டகத்தின் அடியில் வைக்கப்பட்டது.

தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் சிவில் சமூகமும் தங்களை கைவிட்டுவிட்டார்கள், அவர்களால் எங்களுக்கு விடுதலை இல்லை என விரக்தி நிலைக்கு தளளப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் முகமாக கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். கொழும்பு, கண்டி, அநுராதபுரமென இது விரிவடைந்தது.

உண்ணாவிரதப் போராட்டம் தாக்கு பிடிக்காது கோரிக்கைகளோடு நிறுத்தி விடுவார்கள் என ஆட்சியாளர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் சிந்தித்தனர். தமிழ் சமூகம் விழிப்பு நிலையை அடைவதற்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக முழுநாள் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தமிழ் சமூகத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குப் படையெடுத்தனர்.

அரசியல் சிறைக்கைதிகளோ, ஜனாதிபதி எங்களுக்கு நேரடியாக பதில் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தமிழ் சமூகத்தினதும் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரி தமது கபட நாடகத்திற்கு இணக்க அரசியல் தலைவர் ஒருவரை கைதிகளைப் பார்க்க தூதுவிட்டார்.

தமது பரிவாரங்களோடு கைதிகளிடம் சென்றவர், “எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும், நீங்கள் விடுதலையாவீர்கள்’’ என்றார். நம்பிக்கை இழந்த கைதிகள் நல்ல செய்தி கிடைக்காவிட்டால் நாங்கள் விடுதலைக்காக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்போம் என சூளுரைத்தனர். உங்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால் மக்களை திரட்டிக்கொண்டு நாங்களும் உங்களோடு சேர்ந்து போராட்டத்தில் இறங்குவோம் எனக் கூறி வெளியில் வந்தார் அவர்.

பிணை, புனர்வாழ்வு என்ற விடயம் வெளியில் வந்ததே தவிர ஜனாதிபதி மௌனியாய் இருந்தார். அவருக்குத் தெரியும், இணக்க அரசியலுக்குள் இருப்பவர்கள் சலுகைகளை அனுபவிப்பவர்கள், பேராட்டத்தில் இறங்கமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். நல்ல செய்தி கிடைக்காமையால் 7ஆம் திகதி நள்ளிரவோடு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்.

கைதிகள் உணவைத் தவிர்த்தனர், ஒரு சிலருக்கு சேலைன் ஏற்றப்பட்டாலும் பெரும்பாலானோர் அதனையும் மருத்துவ உதவிகளையும் மறுத்ததோடு, தண்ணீர் அருந்துவதையும் அறுவர் முற்றாகத் தவிர்த்தனர். உடல் பலவீனமடைந்தாலும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. அவர்களை பார்க்கச் சென்ற இன்னுமொரு தமிழ் அரசியல்வாதி, அரசியல் கைதிகள் உடல் பலத்தோடு இருக்கின்றார்கள் எனக் கூறி போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார். இந்நிலையில், புனர்வாழ்வுதான் அவர்களுக்கு விடுதலை என்பதை உணர்த்துவதற்கு பிரதமர் இன்னுமொரு தமிழ் அமைச்சர் ஒருவரை அவர்களிடத்தில் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து அரசியல் கைதிகளும் புனர்வாழ்விற்கு விருப்பின்றி விருப்பை தெரிவித்தனர்.

வட கிழக்கிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பிலும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இப்போராட்டங்கள் எல்லாம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டதே தவிர அரசியல் ரீதியான அடுத்த கட்ட முன்நகர்விற்கு திட்டமிடப்படவில்லை. இது விடுதலை தொடர்பிலும் தமிழ் அரசியல் தொடர்பிலும் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு அடையாளம் எனலாம்.

அரசு கைவிட்டுவிட்டது, தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகமும் கைவிட்டன. ஒழுங்கமைக்கப்படாத, தலைமைத்துவம் இல்லாத போராட்டம் என்பதால் விரக்கியுற்ற அரசியல் கைதிகள் புனர்வாழ்விற்கு முழுமையாக உடன்பட்டனர்.

அரசியல் கைதிகளின் பேராட்டத்தைத் தொடர்ந்து அதனை சிதைப்பதற்காக அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தியதோடு, புனர்வாழ்வு, பிணை என தமிழ் அரசியல்வாதிகள் மூலமே செய்திகளை வெளியிலே உலாவச் செய்ததோடு, அதனையே அரசு இறுதியாக உறுதியும் செய்தது. தொடர்ந்து சாகும் வரையிலான போராட்டம் செத்தது. அதனோடு தமிழர் அரசியலும் கேள்விக்குறியானது.

இனவாதிகளுக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி தனது பதவியை, அரசை தக்கவைப்பதற்கும் இனவாத விஷம் கக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கு பதில்கொடுக்கும் முகமாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது பிணை, புனர்வாழ்வு வழங்க முன்வந்தமை இனவாதத்தின் அடிப்படையிலாகும். அதனால்தான் இவ்வரசின் அமைச்சர்கள், “நாட்டில் பயங்கரவாதிகள் உள்ளனர், அரசியல் சிறைக்கைதிகள் எவரும் இங்கு இல்லை, அவர்களுக்கு நாங்கள் முழுமையான விடுதலையும் கொடுக்கவில்லை” என்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர். இக்கூற்றுகளும் இனவாதத்தின் இன்னுமொரு வடிவமே.

அரசியல் கைதிகளோ தற்போது கையருந்த நிலையில் நிற்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென தெரியாது உள்ளனர். ஆனால், “நம்பிக்கையற்ற நிலையிலே எங்களது விடுதலைக்கான போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். உங்கள் பேராட்டக் களத்தில் வாயிலை திறந்து கொடுத்துள்ளோம். களத்திலே நிற்கப்போகின்றீர்களா களத்தைவிட்டு நீங்கப்போகிறீர்களா அல்லது இரண்டாம் முள்ளிவாய்க்கால் அழிவை அதாவது, அரசியல் ரீதியான அழிவை சந்திக்கப்போகின்றீர்களா?” எனும் கேள்வியை தொடுக்கின்றனர்.

அரசு பிணை, புனர்வாழ்வு என அரசியல் சிறைக்கைதிகளை திறந்தவெளிச் சிறைக்குள் தள்ளி புலனாய்வு முள்வேலிக்குள் அவர்களை அடைக்கத் திட்டமிட்டுள்ளது. (பிணை, புனர்வாழ்வு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளதோடு, அரசியல் சிறைக்கைதிகள் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பமும் அரிதாகவே காணப்படுகின்றது).

பிணை வழங்கி அவர்களைக் குற்றவாளிகளாக வைத்திருப்பது எந்த சந்தர்ப்பத்திலும் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தைத் தருவதாகும். புனர்வாழ்வு என்பதும் பிழை செய்தவர்களுக்கானது, அப்பிழைகளிலிருந்து திருந்துவதற்கானது. இதன் மூலம் அரசியல்கைதிகள் இல்லையென அரசு உறுதிப்படுத்துவதோடு, அவர்கள் பயங்கரவாதிகள், பாரிய குற்றமிழைத்தவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள், புனர்வாழ்விற்கு உட்பட வேண்டியவர்கள் என்பதைத் தெளிவாக முன்வைத்துவிட்டது. வேறு வகையில் கூறினால், சுதந்திரத்திற்குப் பின்னரான அரசுகள் தமிழருக்கு எதிராக நிகழ்த்திய திட்டமிட்ட இனவாத அழிப்புகளையும் அரச பயங்கரவாதத்தையும் மூடிமறைக்கப் பார்க்கிறது என்பது தெளிவு. இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் புனர்வாழ்வை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதாவது, அரசியல் கைதிகள் தாங்கள் குற்றவாளிகள் என ஒப்புக்கொள்கின்றார்கள். தமிழ் சமூகமாக தமிழர் அரசியலில் அக்கறையுள்ள சிவில் சமூகமாக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றோமா? இல்லையெனில் அதற்கான மாற்று கருத்தியல் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளனவா?

அரசு தீர்மானித்துள்ள பிணை, புனர்வாழ்வை அமைதியான முறையில் நாமும் ஏற்றுக்கொள்வதாயின் அரசியல் சிறைக்கைதிகளை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை, கடந்த கால எமது அரசியல் பயணத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியுள்ளோம். அதாவது, இன்னுமொரு அரசியல் ரீதியான முள்ளிவாய்க்கால் அழிவிற்கு எம்மை உட்படுத்தப்போகின்றோம் என்பதே பொருள்படுகின்றது. அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலைக்கான எமது செயற்பாடு எமது அரசியலைத் தக்கவைக்கும். 2009 பொருட்சேதங்களை உயிர் அழிவை தமிழ் சமூகம் சந்தித்தது. ஆனால், கொள்கை ரீதியிலான அரசியல் சித்தாந்தத்தை அழிவிற்கு நாம் உட்படுத்தவில்லை. தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலென தமிழ் சமூகத்தை இணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது.

அருட்தந்தை மா. சத்திவேல்

http://maatram.org/?p=3980

Link to comment
Share on other sites

On 30.11.2015, 21:19:29, கிருபன் said:

 

அரசு தீர்மானித்துள்ள பிணை, புனர்வாழ்வை அமைதியான முறையில் நாமும் ஏற்றுக்கொள்வதாயின் அரசியல் சிறைக்கைதிகளை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை, கடந்த கால எமது அரசியல் பயணத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியுள்ளோம். அதாவது, இன்னுமொரு அரசியல் ரீதியான முள்ளிவாய்க்கால் அழிவிற்கு எம்மை உட்படுத்தப்போகின்றோம் என்பதே பொருள்படுகின்றது. அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலைக்கான எமது செயற்பாடு எமது அரசியலைத் தக்கவைக்கும். 2009 பொருட்சேதங்களை உயிர் அழிவை தமிழ் சமூகம் சந்தித்தது. ஆனால், கொள்கை ரீதியிலான அரசியல் சித்தாந்தத்தை அழிவிற்கு நாம் உட்படுத்தவில்லை. தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலென தமிழ் சமூகத்தை இணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது.

அருட்தந்தை மா. சத்திவேல்

http://maatram.org/?p=3980

தெளிவான கருத்து!

இணைப்பிற்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.