Jump to content

30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி


Recommended Posts

30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி

 

 

 

 

101a.jpgவீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர்.


நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

101c.jpg

செய்முறை: கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும். வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து... உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


இத்தாலியன் சாலட்

தேவையானவை: நறுக்கிய லெட்யூஸ் கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட் - தலா ஒரு கப், நறுக்கிய கலர் குடமிளகாய், வேகவைத்த வேர்க்கடலை, வேகவைத்த கார்ன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா கால் கப், வால்நட் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.

101d.jpg

சாலட் அலங்கரிக்க: ஆலிவ் எண்ணெய் - கால் கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (பொடித்தது), மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: ‘சாலட் அலங்கரிக்க’ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். வேர்க்கடலை, கார்ன் உடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். இதனுடன் லெட்யூஸ் கீரை, வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், கொத்தமல்லித்தழை, வால்நட், எலுமிச்சைச் சாறு  சேர்த்து... சாலட் அலங்கரிப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.


டோர்ட்டில்லா சூப்

தேவையானவை: டோர்ட்டில்லா - 2 (செய்யும் விதம்: அடுத்த பக்கத்தில்), நறுக்கிய கலர் குடமிளகாய் - ஒரு கப், ஸ்வீட் கார்ன் - கால் கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 5 பற்கள், தக்காளி - 3, நறுக்கிய ஜுக்கினி (வெள்ளரி போன்றிருக்கும்) - கால் கப், ராஜ்மா - கால் கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், உப்பு - தேவைக்கேற்ப.

101e.jpg

செய்முறை: டோர்ட்டில்லாக்களை இறுக்கமாக சுற்றி நூடுல்ஸ் போல வெட்டி... ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். அதில் ஒரு பாதியை எடுத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நறுக்கிய குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி வைக்கவும். தக்காளியை வேகவைத்து, தோல் உரித்து மசித்து, வடிகட்டவும்.

வேறு ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளிச் சாறு சேர்க்கவும். அத னுடன் உப்பு, சீரகத்தூள், ஆரிகனோ, மிளகாய்த்தூள், மசித்த ராஜ்மா சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக, வதக்கி வைத்த குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து... ராஜ்மா, டோர்ட்டில்லா, தேவைக் கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கிப் பரிமாறவும்.


டோர்ட்டில்லா

தேவையானவை: மைதா மாவு - முக்கால் கப், கோதுமை மாவு - கால் கப், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

101f.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளக் கட்டையால் மெலிதாக தேய்த்து... சூடான தோசைக்கல்லில் போட்டு (எண்ணெய் விடாமல்) இருபுறமும் சுட்டு எடுக்கவும்.


ஓட்ஸ் - கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸ்

தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகள், சர்க்கரை - தலா கால் கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பால் - தேவையான அளவு.

101g.jpg

செய்முறை: வெறும் வாணலியில் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சூடு செய்யவும். இதனுடன் பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளவும். சிறிய பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, தேன் சேர்த்து நுரை வரும் வரை கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் உப்பு, வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். இதனை ஓட்ஸ் கலவையில் நன்றாகக் கலந்து `மைக்ரோவேவ் அவன்’-ல் 300 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். பரிமாறும் முன் பால் சேர்க்கவும். விருப்பப்பட்டால் நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம்.


ஓட்ஸ் - பனானா ஸ்மூத்தி

தேவையானவை: ஓட்ஸ் - கால் கப், வாழைப்பழம் - ஒன்று, கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்,  தேன் - 2 டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்.

101h.jpg

செய்முறை: வாழைப் பழத்தை தோல் உரித்து துண்டு களாக வெட்டி முதல் நாள் இரவு ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸர் பகுதியில் வைக்கவும். ஓட்ஸ், தேன், கோகோ பவுடர், பட்டைதூள், பால் எல்லாம் கலந்து முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் ஓட்ஸ் கலவை, வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.


சீஸ் ரோல்ஸ்

தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், சீஸ் துண்டுகள் - 4, மிளகுத்தூள், வெண்ணெய் - தேவைக்கேற்ப.

101i.jpg

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை வெட்டி, அப்பளக் குழவியால் மெலிதாக தேய்த்து, சீஸ் துண்டுகளை மேல் வைத்து மிளகுத்தூள் தூவவும். பிறகு, இறுக்கமாக ரோல் செய்யவும். தோசைக்கல்லில் வெண்ணெய் ஊற்றி, ரோல்களைப் போட்டு எல்லா பக்கமும் பொன் நிறமாக ஆனதும் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.


பாஸ்தா சாஸ்

தேவையானவை: தக்காளி - 5, வெங்காயம் - ஒன்று, நறுக்கிய கலர் குடமிளகாய் - ஒரு கப், பூண்டு - 5 பற்கள், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், இத்தாலிய சீஸனிங் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

101j.jpg

செய்முறை: தக்காளியை வேகவைத்து தோல் உரித்து ஆறியவுடன் மசித்து, வடிகட்டி வைக்கவும். வெங்காயம், பூண்டு, கலர் குடமிளகாய் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இத்தாலிய சீஸனிங் சேர்த்து... உடனே வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து சாஸ் பதம் வரும் வரை கொதிக்கவிடவும். ஆறியபின் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கவும்.

இதை வெஜ் பாஸ்தா தயாரிக்கப் பயன்படுத்தலாம். பீட்ஸா செய்யும்போது, `பீட்ஸா பேஸ்’ மேல் தடவலாம்.


வெஜ் பாஸ்தா

தேவையானவை: பாஸ்தா - ஒரு பாக்கெட், கேரட் - 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் - தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், பாஸ்தா சாஸ் - 2 கப் (செய்யும் விதம்: முன்பக்கத்தில்), ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பற்கள், துருவிய சீஸ் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

101k.jpg

செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும். கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்துக் கிளறி... கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காய், கீரையைப் போட்டு வதக்கவும். வெந்தவுடன் வேகவைத்த பாஸ்தா, பாஸ்தா சாஸ், உப்பு சேர்த்து, பாஸ்தா வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.


சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பற்கள், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

101l.jpg

செய்முறை: கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.


கஸீடியா

தேவையானவை: டோர்ட் டில்லா - 2 (செய்யும் விதம்: 107-ம் பக்கத்தில்), சீஸ் - தேவையான அளவு, வெண்ணெய் - சிறிதளவு.

101m.jpg

செய்முறை: தோசைக்கல்லை சூடு செய்து, வெண்ணெயை சேர்த்து டோர்ட்டில்லாவை போட்டு இருபக்கமும் லேசாக சூடுபடுத்தவும். ஒரு பாதியில் துருவிய சீஸ்
வைத்து அரை நிலா போல் மடிக்கவும். இருபக்கமும் நன்றாக அழுத்தி சூடு செய்யவும். அதை இரண்டாக வெட்டி, சல்சாவுடன் பரிமாறவும்.


ஃபலாஃபெல்

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கலர் குடமிளகாய் - கால் கப், துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,  பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கவும்), எள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பிரெட் - ஒரு ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

101n.jpg

செய்முறை: கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும். அதை தண்ணீர் இல்லாமல் வடித்து, தனியா சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிரெட்டை எலுமிச்சைச் சாற்றில் நனைத்துப் பிழிந்து, உதிர்த்துக்கொள்ளவும். இவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற எல்லாவற்றையும்  (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக்கி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.


பர்கர்

தேவையானவை: பன் - ஒன்று, வெஜ் கட்லெட் - ஒன்று, வட்டமாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய்,  தக்காளி துண்டுகள் - தலா 2, தக்காளி கெச்சப் - சிறிதளவு, சீஸ் ஸ்ப்ரெட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்), ஆலிவ் துண்டுகள் - தேவைக்கேற்ப.

101o.jpg

செய்முறை: பன்னை இருபுறமும் சூடு செய்து, இரண்டு துண்டுகளாக்க வும். ஒரு பாதியில் சீஸ் ஸ்ப்ரெட் தடவவும், இன்னொரு பாதியில் கெச்சப் தடவவும். அதற்கு மேல் கட்லெட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, ஆலிவ் துண்டுகள் வைத்து சீஸ் தடவிய பக்கம் கொண்டு மூடவும். சுவை. சத்துமிக்க பர்கர் தயார்.

குறிப்பு: கட்லெட்டுக்குப் பதில் `ஃபலாஃபெல்’ உபயோகித்தும் பர்கர் தயாரிக்கலாம்.


அவகாடோ டிப்

தேவையானவை: அவகாடோ (பட்டர் ஃப்ரூட்), வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

101p.jpg

செய்முறை: அவகாடோவை நன்றாக மசித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

இது பிரெட் உடன் சாப்பிட உகந்தது.


லெமன் சோடா

தேவையானவை: எலுமிச்சை காய் - ஒன்று, எலுமிச்சை பழம் - 2, சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - ஒரு கப், எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன், சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

101q.jpg

செய்முறை: சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும், ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும். எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து, கொட்டை இல்லாமல், ஆறிய பாகுடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.


பிரெஞ்சு டோஸ்ட்

தேவையானவை: பிரெட் - 6 ஸ்லைஸ், கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், வெண்ணெய்  (அ) நெய்  - தேவைக்கேற்ப.

101r.jpg

செய்முறை: காய்ச்சி ஆற வைத்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, சர்க்கரையும் சேர்த்து, கட்டியில்லாமல்  நன்றாக கலக்கவும். நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் (அ) நெய்யை சூடாக்கி... பிரெட்டை பால் கலவையில் தோய்த்து உடனடியான `பேனில்’ போடவும். இருபுறமும் சிவக்க ரோஸ்ட் செய்யவும்.

குறிப்பு: கஸ்டர்ட் பவுடருக்குப் பதிலாக சோள  மாவும், வெனிலா எசன்ஸும் சேர்க்கலாம்.


லெமன் - கோரியண்டர் ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

101s.jpg

செய்முறை: அரிசியை அரை மணி நேரம்  ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து... பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். தண்ணீரை வடிகட்டி அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் அதிக தீயில் அடிபிடிக்காமல் கிளறவும். பிறகு, தீயைக் குறைத்து எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். இடையில் கிளறவும். அரிசியை மலர வேகவைத்து எடுக்கவும்.


ஃபெட்டுஷினே பாஸ்தா

தேவையானவை: ஃபெட்டுஷினே பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு பாக்கெட், தக்காளி - 6, பூண்டு - 3 பல், பாலக்கீரை - ஒரு கட்டு, தயிர் - ஒன்றரை கப், க்ரீம் - ஒரு கப், தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.  

101t.jpg

செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும் (வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும்). தயிரை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து, க்ரீமுடன் கலந்து தனியாக வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய பூண்டு, தக்காளியை சேர்க்கவும். தக்காளி வதங்கியதும்... தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு தயிர் கலவையை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நறுக்கிய பாலக்கீரையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் பாஸ்தா வேகவைத்த தண்ணீரை சேர்க்கவும்). கீரை சற்று வெந்ததும், பாஸ்தா சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: இதை எல்லா வகை பாஸ்தா பயன்படுத்தியும் செய்யலாம். பாஸ்தாவுக்குப் பதில் ஸ்பெகட்டி பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.


புருஷெட்டா

தேவையானவை: ரஸ்க் - தேவையான அளவு, தக் காளி - ஒன்று, பூண்டு - 2 பற்கள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன், சீஸ் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக் கேற்ப.

101u.jpg

செய்முறை: தக்காளியை விதை நீக்கி நறுக்கவும். பூண்டு, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். கொடுக் கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (ரஸ்க் நீங்கலாக) ஒன்றாக கலந்து, சிறிது நேரம் ஊற விடவும். பரிமாறும்போது இந்தக் கலவையை ரஸ்க் மேல் சிறிதளவு வைத்துப் பரிமாறவும்.


மொகிடோ

தேவையானவை: புதினா இலைகள் - கால் கப், பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன், தண்ணீர், சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

101v.jpg

செய்முறை: புதினா, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் இதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, வடிகட்டவும். பரி மாறும்போது சோடா, ஐஸ் சேர்த்துப் பரிமாறவும்.


சல்சா

தேவையானவை: தக்காளி - 4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, குடமிளகாய் - பாதி அளவு, எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.

101w.jpg

செய்முறை: தக்காளியின் உள்பகுதியை விதையுடன் எடுத்து மிக்ஸியில் போடவும். சதைப் பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். விதைப்பகுதியை அரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்க்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து, குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். பிறகு, சிப்ஸ் உடன் பரிமாறவும்.


வாட்டர் மெலன் ஸ்லஷ்

தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

101x.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை யும் ஒன்றாக சேர்த்து அடித்து, `திக்’காக பரிமாறவும்.


ஆரஞ்சு டீ

தேவையானவை: டீ பை (டீ பேக்) - ஒன்று, ஆரஞ்சு சாறு - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - அரை கப், புதினா இலை - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

102a.jpg

செய்முறை: தண் ணீரைக் கொதிக்க வைத்து... சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆறவைக்கவும். ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு... டீ, ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.


ஸ்ட்ராபெர்ரி யோகர்ட்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 10, தயிர் - 3 கப், சர்க்கரை - முக்கால் கப், தண்ணீர் - முக்கால் கப்.

102b.jpg

செய்முறை: தயிரை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூடி, வடிகட்டியின் மேல் வைத்து, கீழே பாத்திரம் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் வடிந்து தயிர் நன்கு கெட்டியாக இருக்கும். சர்க்கரையுடன் தண்ணீரைக் கலந்து காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும் நறுக்கிய ஸ்ட்ரா பெரியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். ஆறிய பின் வடிகட்டி, தயிருடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்து சாப்பிடவும்.


வாட்டர்மெலன் கிரானிட்டா

தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - 7 கப், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று.

102c.jpg

செய்முறை: தர்பூசணியை விதை நீக்கி, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிக்கவும். பிறகு ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு கழித்து அதை போர்க்கால் கீறவும். மீண்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது, அதை போர்க்கால் பொடிப் பொடியாக கீறி, கண்ணாடி கப்பில் போட்டுக் கொடுக்கவும்.


பட்டர்ஸ்காட்ச் புட்டிங்

தேவையானவை: சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், பழுப்பு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், வெண்ணெய் - அரை டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டேபிள் ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

102d.jpg

செய்முறை: ஒரு கிண்ணத்தில் சோள மாவு பாதி பால் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில் மீதியுள்ள பால், பழுப்பு சர்க்கரை, வெண்ணெய், உப்பு மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் சோள மாவு - பால் கலவையை சேர்க்கவும். நன்கு கெட்டியாகி, பளபளப்பாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு அடுப்பை அணைத்து, கலவையை ஆறவிட்டு, வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி வைத்து எடுத்துப் பரிமாறவும்.


ஃப்ரூட் ஸ்கீவர்ஸ்

தேவையானவை: மாம்பழம் - ஒன்று (க்யூப்களாக நறுக்கவும்), கறுப்பு - பச்சை திராட்சை (சேர்த்து) - ஒரு கப், சீஸ் (அ) பனீர் துண்டுகள் - சிறிதளவு, தேன் - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - 3, உப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு

102e.jpg

செய்முறை: புதினாவை மிகவும் பொடியாக நறுக்கி தேன், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். அதில் பழங்களை சேர்த்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு பெரிய குச்சியில் (ஸ்கீவர்) அல்லது பல் குத்தும் குச்சியில் பழம், சீஸ் துண்டு (அல்லது பனீர் துண்டு) என மாற்றி மாற்றி குத்தி சாப்பிடக் கொடுக்கவும்.


பான் கேக்

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பால் - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - தேவையான அளவு.

102f.jpg

செய்முறை: வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். தோசைக்கல்லை சூடுசெய்து, வெண்ணெய் தடவி மாவை ஒரு பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றவும் (தேய்க்க வேண்டாம்). சுற்றிலும் வெண்ணெய் சேர்த்து, இரு பக்கமும் பொன் நிறமானதும் எடுக்கவும்.

இதை தேன் அல்லது `மேபல் சிரப்’புடன் பரிமாறவும்.


இலங்கை ரொட்டி

தேவையானவை: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

102g.jpg

செய்முறை: பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய். உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து, சைட் டிஷ் உடன் பரிமாறவும்.


ஹாட் சாக்லேட்

தேவையானவை: பால் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டைத் தூள் - ஒரு சிட்டிகை, சர்க் கரைத் தூள் - சிறிதளவு.

102h.jpg

செய்முறை: கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும். மீதி பாலை சூடு செய்து, கோகோ - பால் கரைசலை சேர்க்கவும். இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி அலங்கரிக்கவும்.


கோதுமை - எள் ஸ்நாக்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆச்சி இட்லி மிளகாய் பொடி - தேவையான அளவு, எள்  - 2 டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி (பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

102i.jpg

102j.jpgசெய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து, தேவையான நீர் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். அரிசி மாவு, நெய்யைக் குழைத்துத் தனியே வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேல் பாகத்தில் குழைத்த மாவைத் தடவவும். அதன் மேல் ஆச்சி இட்லி மிளகாய் பொடி தூவவும். ஒன்றின்மேல் ஒன்றாக சப்பாத்தியை அடுக்கி ரோல் செய்யவும். ரோலை துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடு செய்து, வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். பொரித்தவற்றைத் தட்டில் வைத்து, எள், கொப்பரைத் துருவல், முந்திரிப்பொடி தூவி சூடாகப் பரிமாறவும்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106486

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பதையும் செய்து பார்க்க ஒரு வருடம் போயிடும்.... ஆயினும் நல்ல அயிட்டங்கள் , பகிர்வுக்கு நன்றி நவீன்...!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.