Jump to content

பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!


Recommended Posts

பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!

 

பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,  உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது,  அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான்.

சென்ற மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலால்,  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே நடைபெறுகிறது இந்த மாநாடு. பேரணி,  பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டதால்,  அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள்,  தங்கள் ஷூக்களை சாலையில் விட்டுச் சென்றனர். ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் போப் ஃப்ரான்சிஸ் ஆகியோரும்,  தங்கள் சார்பாக ஷூக்களை அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் விட்டு சென்ற ஷூக்களின் எடை சுமார் 4 டன் எடை.

francis_3.jpg

1.2 கிலோமீட்டர் தூரம் மக்கள் மனித சங்கிலி அமைத்து,  தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். தீவிரவாத தாக்குதல் நடந்த பேட்டாக்ளான் ஹால் முன் மட்டும் மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஒரு இடைவேளை விடப்பட்டது.

உலகெங்கும் நியூயார்க், லண்டன், கென்யா, ரியோ டி ஜனரியோ  சிட்னி போன்ற இடங்களிலும் மக்கள் திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பனிக்கரடிகள் போலவும் பெங்குவின் போலவும் வேடமிட்ட மக்கள்,  உருகிக் கொண்டிருக்கும் வட துருவத்தின் பனிக்கட்டிகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினர்.

francis_2.jpg

புவி வெப்பமையமாதல்தான் இந்த மாநாட்டின் கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தாலும்,  அதனை நடைமுறைப்படுத்தவது அவ்வளவு எளிதானது அல்ல. அதிகமான வெப்பத்தால் தீவு நாடுகள் பலவும் மூழ்கும் அபாயம் உள்ளது. உலகின் பல இடங்களில் இயற்கை சீற்றங்களும், சீரில்லாத மழை பொழிவும் ஏற்பட்டு விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.

அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்திட்டத்தை கொடுக்க வேண்டும். சீனா 2030க்குள் முழுமையாக கார்பன் அளவை குறைத்துக் கொள்வதாக கூறியிருக்க, இந்தியா நடைமுறைக்கு சாத்தியமான 30 % அளவை குறைத்து கொள்ள ஒப்புகொண்டுள்ளது.

வெறும் சட்டங்கள் இயற்றுவதால் மட்டும் மாற்றத்தை கொண்டு வர இயலாது, தனி மனிதனிடம் தொடங்கி மின்சாரம், எரிவாயு சேமிக்கவும், முடிந்த அளவுக்கு மாசுபடுத்தாத சூரிய சக்தி அல்லது இயற்கை எரிவாயு பயன்படுத்துவது நல்லது.

http://www.vikatan.com/news/world/55810-thousands-protest-ahead-of-paris-climate-talks.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பருவநிலையை கணக்கிலெடுத்து போராட்டம் செய்பவர்களே....முதலில் ஒரு நேர உணவிற்காக / தண்ணீருக்காக அல்லலுறும் மானிடர்க்கு உடனடியாக ஆவன செய்யுங்கள்.

இயற்கை தானாக தன்னை திருத்திக்கொள்ளும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.