Jump to content

அரசியல் கைதிகளுக்கு இனி விடுதலையில்லை : அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்ததாக ராவணா பலய சுட்டிக்காட்டு


Recommended Posts

அரசியல் கைதிகளுக்கு இனி விடுதலையில்லை : அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்ததாக ராவணா பலய சுட்டிக்காட்டு
 
 
அரசியல் கைதிகளுக்கு இனி விடுதலையில்லை  : அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்ததாக ராவணா பலய சுட்டிக்காட்டு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் விடுதலை செய்யப்போவதில்லை என்று அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்துள்ளதாக ராவணா பலய அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் நிலையில் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவினரும், படை அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் ராவணா பலய அமைப்பு முன்வைத்துள்ளது.
 
ஜனாதிபதி செயலாளரை சந்திப்பதற்கான ராவணா பலய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றது.
 
இந்த சந்திப்பில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன், சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
 
இதன்போதே இந்த உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருப்பதாக ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பினேன். இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், சிறு குற்றங்கள் இழைத்த 39 பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக கூறினார். 
 
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இனியும் விடுவிக்கப்படுவார்களா? என்ற கேள்வியை எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அமைச்சர், இனியும் அவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
 
அத்துடன் எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 10ஆம் திகதி விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அமைச்சர் இந்த சந்திப்பின்போது வழங்கினார்.
 
அதேவேளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைப்பெறும் நிலையில் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும்,படை அதிகாரிகளது விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பினேன். அத்தோடு சிங்களப் புலி என்ற காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் விடுதலை குறித்தும் வினா எழுப்பினேன்.
 
அவர்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட்டு நிச்சயம் விடுவிக்கப்படுவார்கள் என்ற பதிலை அதிகாரிகள் வழங்கினார்கள்.
 
திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட இரசகிய முகாம் சம்பந்தமாக ஐ.நா சிறப்பு அதிகாரிகளும் கருத்து வெளியிட்டிருந்தனர். அங்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் கடற்படை சிப்பாய்கள் மூவரை கைது செய்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர், அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும், தனக்கு அதுபற்றி தெரியாது எனவும் பதிலளித்தார்.
 
எனினும் அவ்வாறானதொரு சித்திரவதை முகாம் அங்கு முன்னெடுக்கப்படவில்லை என்றும், நிலக்கீழ் ஆயதக்கிடங்கு ஒன்றே அங்கு காணப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியிருக்கிறார் என்றார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.